Monday, September 11, 2006

முரட்டு விரல்கள்


எப்போதும் மடியில்
அமர்த்திக் கொள்வார்
ரமேஷ் மாமா

அழுத்தமாகவும், அதிஉஷ்ணத்துடனும்
முத்தம் பதிப்பார்
னந்த் அண்ணா

முதுகு தொடங்கி
புட்டம் தொட்டு நிற்கும்
சித்தப்பாவின்
முரட்டு விரல்கள்

நல்லா இருக்கடி
என்று புட்டம் உரசுவார்
முருகன் வாத்தியார்

ஓ...க வாரியா?
ஊ....புடி! என்றே பேசுவான்
பள்ளித்தோழன் பழனி

என்னடி இது
எலுமிச்சம் பழமா? என
முலை தடவுவார்
மைக்கேல் தாத்தா

இடுப்புத் துணியை
நழுவ விடுவார்
முதுகு தேய்த்துவிடச் சொல்லும்
முகமதலி மாமா

முத்தம் பெற வேண்டி
மிட்டாய் தருவார்கள்
பெற்றோரின் நண்பர்கள்

இன்றும் என்
தள்ர்ந்த முலைகள் கசக்கி
யோனி கிழிக்கிறார்கள்

( தலைநகர் டெல்லியில் ஜூன் 19, 2005ல் கற்பழிக்கப் பட்டு, இரண்டு நாட்களுக்குப் பின் உயிரிழ்ந்த 83 வயது பானுவுக்கு)

1 comment:

கார்த்திக் பிரபு said...

whats this..is this ur own poem?

can u tel me abt the women banu..wat happened actually?


and if u have time ..read my story for the thenkoodu context and vote ,comments for my story.thanks