Tuesday, April 24, 2007

' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்'

அன்புள்ள எழுத்தாள நண்பர்களுக்கு,
வணக்கத்துடன் பாண்டித்துரை நான் பல்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே கேள்வி கேட்டு அதன் பதிலை அறிந்து தொகுப்பாக வெளியிடும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களிடமிருந்தும் பதிலை எதிர்நோக்குகிறேன்.

கேள்வி
1. நவின இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?
2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?
3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யுனிகோடு வடிவில் எமுதிடவும்உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்இந்த சிறுவனின் முயற்சிக்கு உங்கள் பேனாவும் செவிசாய்க்கும் எனும் நம்பிக்கையில்
ப்ரியமுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
006597345497
------------------------------------------------------------------------------
அன்பு சிறுவன் பாண்டித்துரைக்கு,
வணக்கம். உங்களின் ஆர்வமும் பணிவும் பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதில்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.திருப்தியாயின் மகிழ்வேன்.

1. நவீன இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?

நவீன இலக்கியம் என்று எதைக் குறிப்பிடலாம். இல்லக்கண மரபுப் படி செய்யுள்கள் இயற்றப் பட்டு வந்த கால கட்டத்தில் புதுக் கவிதைகள் நவீன எழுத்து வடிவமாக கருத்தப் பட்டது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நம் அனைவரின் கண்கூடு. தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை அல்லது தான் சொல்ல வந்த விஷயத்தை தனக்கான மொழியில் பதிவு செய்து விடுதல் படைப்பாகி விடுகிறது. கவிதை என்று தலைப்பிட்டு இரண்டு வார்த்தைகள் வீதம் வரிகளை ஒன்றுக்கு கீழ் ஒன்றாக அமைத்து விட்டாள் அது கவிதை. பத்தியாக்கி விட்டாள் கட்டுரை. சிறிய இடைவெளிகளில் வசனம் எழுதி விட்டால் சிறுகதை எதுமை மோனை போட்டு விட்டால் பாட்டு இப்படி படிப்புகள் வடிவம் கொள்கிறது. ஆனால் அவை நவீன இலக்கியம் நவீன படைப்பு என்று அடையாளம் காண்பது எப்படி? புரியாமல் ஒரு படைப்பை படைத்து விட்டு இதை புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் பக்குவப் படவில்லை என்று பதில் சொல்லிக் கொள்வது நவீன படைப்பின் அடையாளமா? வெள்ளைத்தாளில் ஓவியர் ஒருவர் ஒரு கரும்பொட்டு வைத்து அதை சட்டமிட்ட கண்காட்சியில் வைத்து விடுகிறார். என்னப்பா ஒரு கருப்பு பொட்டு மட்டும் வச்சிருக்க, இதுவா ஓவியம் என்று கேட்டால். உங்களுக்கு கருப்பு பொட்டாகத் தெரிகிறது எனக்கு அது வானத்தில் பறக்கும் காக்கையாகத் தெரிகிறது அவருக்கு வேறு எதுவாகவும் தெரியலாம் என விளக்கம் தருகிறான். என்ன செய்ய? இது தான் நவீன படைப்பு அவரவர் அறிவிக்கு தகுந்த படி புரிந்து கொள்ள வேண்டியதுதான். இது இன்னும் எதை நோக்கிப் பயணப் படும் என்பது குறித்து நீங்களே முடிவுக்கு வரலாம். மாங்காய் புளிக்கும்
மரகதம் ஜொலிக்கும்
பலூனில் தண்ணீர்
சொட்டுகிறது.
பறக்கிறான் மனிதன்

இது ஒரு நவீன கவிதை.
யார் எழுதினார்கள் என்பது வேண்டாம். ஆனால் படித்து முடித்தவுடன். இதை ஏன் எழுதினார் என்று தான் கேட்கத் தோன்றியது. எழுதியவரிடம் கேட்டால். பீயை பார்ப்பது போல் பார்ப்பார். விளக்கமா தருவார். இன்று தமிழ் இலக்கியத்தின் நவீன படைப்பாளிகள் இப்படித்தான். நவீன படைப்புகளும் இப்படித்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் :

நவீன இலக்கியங்கள் எண்ணிக்கையில் முந்த ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நல்ல படைப்பு என்று குறிப்பிட நூற்றாண்டுகளுக்கும் ஒன்றும் இல்லாமல் போகும் நிலையை உருவாக்கப் போய் கொண்டிருக்கின்றன.

2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?

பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளின் வருகை மிகச் சிறப்பானது, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆதிக்க ஆண் வர்க்கம் அதனை பிரபலமாகமல் தனது பலத்தால் தடுத்து வருகின்றன. மிக நுணுக்கமான விஷயங்களை எளிமையாக குழப்பமில்லாமல் சொல்லும் ஆற்றல் பெண்களுக்கு இயல்பாக உள்ளது. எங்கே இவர்கள் நம்பை முந்தி விடுவார்களோ என்ற பேரச்சத்தின் காரணமாக ஆண் வர்க்கம் அதை முடக்கி வைத்து உள்ளது. பெண்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கும் அமைப்புகள் முன் வந்தால் பெண்ணெழுத்து ஒரு புதிய சாதனைப் பாதையை உண்டாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கேள்விக்கு பதில்:

மிக மோசமாக வரவேற்கப் பட்டு. முடிக்கி வைக்கப் பட்டுள்ளது.

3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யார் சொன்ன தகவல் இது. மிகக் கசப்பான உண்மை. இன்று பாரதியையும் பாரதிதாசனையும் மிஞ்சும் அளவுக்கு சமூக எழுச்சித் தரக்கூடிய கவிஞர்கள் படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் யார் ஏற்றுக் கொள்வது. இவர்களின் கவிதைகளை போகட்டுமே! என்று தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வரும் சிறு பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இந்தப் பத்திரிக்கைகளை படிப்பது யார். ஒரு சிறு வட்டம். அந்த வட்டமும் இவர் மீதான் அன்பு மிகுதியால் இவரை படைப்புகளை மேலோட்டமாகப் பார்த்து பாரட்டி விட்டு விலகி விடுகின்றன. அல்லது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். சரக்கு உள்ளே வேலை செய்யும் வரை ' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்' இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் நிறைய குட்டிப் பாரதிகள் உள்ளனர். இவர்களின் படைப்புகள் அந்தந்த வட்டத்தில் சிறப்பானதாக கொள்ளப் படுகிறது. ஒரு வட்டம் இன்னொரு வட்டத்திற்கு வாசகராகவும் இல்லை ஒரு வட்டத்தில் உள்ளவர் இன்னொரு வட்டத்தவரை மதித்து ஏற்றுக் கொள்வதும் இல்லை.


உங்கள் கேள்விக்குப் பதில்:

பாரதியும், பாரதிதாசனையும் விடவும் சமூக அக்கரை கொண்டு எழுச்சி மிக்க படைப்புகளைத் தரும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். வாருங்கள் அவர்களை நேரில் காட்டுகிறேன்.

Monday, April 23, 2007

என்னுள்

இருக்கை அபகரித்தவனை
திட்டித் தீர்க்கிறேன்
உரசிச் செல்பவனை
ஓங்கி அரையத் துடிக்கிறேன்
சிறப்பு வாகன ஏற்பாடு
குறித்துப் பேசுகிறேன்
டை மறைக்காத
வயிற்றிலும்
விம்மி புடைத்த
மார்பிலும்
பதிந்த கண்களை
பறித்துவிட துடிக்கிறேன்
இத்தனையும்
நிகழ்ந்து விடுகிறது
எதிர் நிற்பவளின்
புட்டம் உரச
நீளும் முழங்கையை
கட்டுப் படுத்த முடியாத
என்னுள்.


மதியழகன் சுப்பையா,மும்பை

பதிவாகும் தாராவி வணச் சித்திரம்

உலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின் சொத்து எனலாம். வணங்கள் ஒரு நாட்டின் காலப் பதிவுகள் எனலாம். அவை மிகச் சிறப்பாக செய்யப் படவேண்டும். செய்யப் பட்டும் வருகின்றன.
னால் இன்று வணப் படுத்துதலில் ஈடு பட்டுள்ளவர்கள் அரசு அமைப்புகள் , அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள். இதில் அரசு தனக்கு சாதகமானவற்றை செய்கின்றன அல்லது அரசு சார்பாக நியமிக்கப் பட்டவர் தனக்கு சவுகரியமானவற்றை வணப் படுத்துகிறார். தனியார் அமைப்புகள் அவர்களுக்கு நிதி திரட்டும் எண்ணத்தில் அதற்கு தகுந்தார்போல் செய்கின்றன. விதிவிலக்குகளும் உண்டு. இறுதியாக தனி நபர்கள் பெயரும்-புகழும் பணமும் பெறவேண்டி வணப் படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் உண்மைகள் பதிவு செய்யப் படாமல் போய் விடுகின்றன. மேலும் நல்ல பல விஷயங்கள் சரியாக பதிவு செய்யப் படாமல் இருக்கின்றன. மேல் நாட்டு வணப் பட உத்திகளை பார்த்து காப்பி அடித்து இங்கு செய்யப் பட்டு வருவது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். மேலும் இந்திய நாட்டின் மிக முக்கிய விஷயங்கள் குறித்த பல வணப் படங்களை வெளிநாட்டவர்கள் உருவாக்கி உள்ளனர். வெளிநாட்டவர்களின் படக்குழு இங்குள்ள சுற்றுலா கைடுகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் கொடுக்கும் விபரங்களை கொண்டு வணப் படங்களை தயாரித்து இதுதான் இந்தியாவின் நிலை பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி.
தாராவி குடிசைப் பகுதி குறித்தும் இவ்வாறு பல வணப் படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. னால் அவை அனைத்தும் தாராவியின் உண்மை நிலையை வெளிக்காட்டவில்லை.
மும்பை மாநகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதி தாராவி என்று அறிமுகப் படுத்த அவசியமில்லை. இந்தக் குடிசை பகுதி குறித்து பலருக்கும் பலவிதமான தனித்தனி கருத்துகள் உண்டு. னால் இங்கு வாழும் மக்களுக்குத்தான் தாராவியின் உண்மையான உருவம் தெரியும். மும்பையின் பிற எந்த குடிசைப் பகுதியிலும் இல்லாத பல விஷயங்கள் இங்கு உண்டு. பதினைந்து நிமிடங்கள் தொலைவில் மும்பையின் முக்கிய மூன்று ரயில்பாதையின் ரயில் நிலையங்களான மாஹிம், சயான், குருதேக்பஹாதூர், கிங் சர்கிள், மாட்டுங்கா மற்றும் பாந்திரா கிய ரயில் நிலையங்களை அடையலாம்.
குடிசைப் பகுதி வாழ்க்கை குறித்தும் அங்கு வாழும் மக்கள் குறித்தும் குறை மதிப்பீடு செய்து விட முடியாது. குடிசைப் பகுதியில் இருக்கும் பல கொண்டாட்டங்கள் வேறு எந்த மக்கள் இருப்பிட அமைப்பிலும் காண முடியாது. தாராவி குடிசை பகுதி தனித்துவம் மிக்கது. மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. பல்வேறு வகை மக்கள் விரவிய சமுதாயத்தை உடையது. பெரிய அளவில் நடக்கும் வியாபாரங்களுக்கான உற்பத்தி பொருட்கள் தயாராகும் சிறு தொழில் நகரமாகும்.
புறாக் கூண்டுகளில் மனித வாழ்க்கை சாத்தியம் என நிறுபிக்க தாராவி மக்களின் வீடுகளைக் காட்ட முடியும். துணிமணிகளை மட்டுமல்ல சமையல் பாத்திரங்கள் அடுப்பு முதலியன உட்பட அனைத்தையும் மேலே தொங்க விடுவதனால் வீட்டின் உட்பகுதியில் உண்டாகும் பரப்பில் படுத்துக் கொள்ளும் மக்களின் வாழ்க்கை முறை புதுமை அல்ல. அதுவே அவர்களின் நாகரீகமாகி விட்டது.
அப்பளங்கள் உருட்டுவது, ஈக்கம் மாறுகள், பூ விளக்குமாறுகள் செய்வது, பூசணி விதைகள் உடைப்பது, வளையல்கள், காதணிகள், கழுத்துச் சங்கிலிகள். ஸ்டிக்கர் பொட்டுகள் கியவைகளில் வண்ணம் நிரப்புவது (மீனா), சேலைகளுக்கு பால் தைப்பது, ரெடிமேட் டைகளுக்கு பட்டன் தைப்பது, ஜிகினா தைப்பது ஊறுகாய் தயாரிப்பது, இப்படி சிறு பணிகள் பலவற்றை வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்கள் மதிய வேளைகளில் செய்து கொண்டிருப்பதை குறுகிய தாராவி குடிசைப் பகுதியின் முடுக்குகளில் (கல்லி) காண முடியும்.
இவை தவிர பயந்தர் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஸ்டீல் வீட்டு உபயோகப் பொருட்களை பளபளப்பாக்க பாலீஸ் செய்ய பயன் படும் துணி சக்கரங்கள் (ப·ப்) தாராவி குடிசைகளில் தான் தயாராகின்றன. இன்று மும்பை மட்டுமல்லாது உலகெங்கும் இருக்கும் மால் எனப்படும் நவீன அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப் படும் உயர்ரக யத்த டைகள் (ரெடிமேட்) தயாராவது தாராவியின் தகர வீடுகளில் தான். கம்யூட்டரின் மிக நுண்ணிய பாகங்களையும் மொபைல் போன்ற நவீன தொலைபேசி சாதங்களிலும் பயன் படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஜப்பான் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு கண்டெய்னர்களில் நிரப்பி கழிவு பிளாஸ்டிக்களை அனுப்புவது தாராவியின் குப்பை வியாபாரிகள் தான்.
அறுபது ண்டுகளுக்கும் முன்னதாக குஜராத் மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த பானைகள் மற்றும் மண் பாண்டங்கள் செய்யும் 'கும்பார்' எனப் படும் இனத்தினர் மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து தோல் பதனிடும் லைகளை நிறுவிய முஸ்லீம் மக்களும் இப்பகுதியின் பூர்வகுடி மக்களான கோலி எனப் படும் மீனவ இன மக்களும் தாராவியின் பல வண்ண மாற்றங்களைக் கண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நவநாகரீக யுகத்தின் இளைஞர்கள் கொஞ்சமும் சலித்துக் கொள்ளாது தங்களின் பிறப்பிடங்களை விட்டு விலக எண்ணாமல் இங்கிருந்தபடியே மேதமைப் படிப்புகளைப் படித்தும் தாங்கள் வசிப்பது அழுக்கும் சாக்கடையும் புடை சூழ்ந்த ஒரு மாபெரும் குடிசைப் பகுதி என்ற கூச்சமோ தாழ்வுமனப்பாண்மையோ இல்லாது வாழ்ந்து வருவதும் வியக்கத்தக்கது. இங்கு இருந்து கொண்டு மேன்மைக் கனவுகளை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கு தலைமை அலுவலகங்களும் தமிழகத்தின் அனைத்து பொருட்களையும் கிடைக்கும் படி வசதி செய்யப் பட்டு ஒரு குட்டி தமிழ்நாடு போலவே காட்சியும் அளிக்கிறது. தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பை வருபவர்கள் குறைந்த செலவில் தங்கி உண்டு உறங்க வசதியாக பொங்கள் வீடுகள் என்ற பெயரில் இயங்கி வருபவற்றை என்ன வென்று சொல்வது. மும்பையில் தமிழர்களைத் தவிர வேறு எந்த மொழியினரும் ஏற்படுத்தாத ஒரு சேவை இது.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என விரவி கிடக்கும் தாராவியில் கூடவே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பின்னித்தான் கிடக்கிறது. இந்து மதத்தினர் ஊர்வலம் வருகையில் தங்கள் கடைகளின் வெளியில் இருக்கும் அசைவ உணவுகளை மூடி வைக்கும் முஸ்லீம்களின் நாகரீகத்தை தாராவியில் காணலாம்.
வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட சர்ச்கள், மசூதிகள் மற்றும் கோயில்களையும் காணலாம்.
இவ்வாறான கொண்டாட்டங்களை படச்சுருளில் பதிவு செய்யப் பட வேண்டும். இதற்கு முன் பலரும் தாராவியை பல்வேறு வகையில் வணப் படுத்த முயற்சி செய்துள்ளனர். னால் யாரும் தாராவியை முழுமையாக வணப் படுத்த வில்லை. பல திரைப்படங்களில் தாராவியின் குடிசை அமைப்புகள் காட்டப் பட்டுள்ளதே தவிர மக்களின் வாழ்நிலை காட்டப் படவில்லை.
இங்குள்ள மக்கள் அழுக்கானவர்கள் என்றும் சாக்கடைகளில் வசிப்பவர்கள் என்று மட்டுமே வெளியுலகுக்கு காட்டப் பட்டுள்ளது. இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் தான் னால் உழைப்பாளிகள். குடிசைகளில் வாழ்பவர்கள்தான் னால் வாழ்வை கொண்டாடுபவர்கள். இவர்களின் உண்மையான வாழ்வையும் பிரச்சனைகளையும் பதிவு செய்ய வேண்டியது அதியவசியமானது.
இவ்வாறு இன்னும் ஏராளமாக எழுதி குவிக்கலாம். இவற்றை மிகுந்த அக்கரையோடு வணப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மதியழகன் சுப்பையா மற்றும் இதன் தயாரிப்பாளர் முருகானந்தம் கியோர் ஈடு பட்டுள்ளனர்.
மும்பையின் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் அடுக்குமாடிக் கட்டிடங்களாக கி வருகிறது. குடிசை வாழ் மக்களின் சையும் அதுதான். னால் அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்து கொண்டு இப்பொழுது கிடைக்கும் வருமானம் கொண்டு இந்த மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தி விட முடியும். சாலையில் கூறு வைக்கப் பட்ட காய்கறிகளை வாங்கி வந்து சமைத்து உண்ணும் மக்கள் அடுக்கு மாடி கட்டிடங்கள் கி விட்டால் செலவுகளை எங்கனம் சமாளிப்பார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டியது அவசியம் தான் னால் அதனுடன் அவர்களின் பொறுளாதார நிலையும் உயர்ந்தால் மட்டுமே இது சாத்தியம் இல்லையெனில் மீண்டும் இந்த மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்து புதிய தாராவி ஒன்றை உருவாக்க நேரிடும்.
'தாராவி- எ சிட்டி வித்தின் எ சிட்டி' என்ற பெயரில் உருவாகும் இந்த வணப் படத்தின் மூலம் மக்களின் வாழ்நிலையும் தாராவியின் உண்மையான வண்ணமும் காட்சி படுத்தப் படும் என்று இப்படத்தின் இயக்குனர் தெரிவித்து உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச்-25 முதல் துவங்கியது. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். இப்படத்திற்கு மக்களின் தவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. னால் இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது. னால் தாராவி குறித்து மிகச் சரியான வணப் படம் ஒன்று அவசியம் அதற்காகவேனும் நாம் இந்த படக்குழுவினருடன் கை குளுக்கி அவர்களுக்கு தேவையான விபரங்களை கொடுத்து தரவளிக்கலாம்.

Saturday, April 21, 2007

டிவைன் லுனாடிக் மிஷன் (தெய்வீக பைத்தியங்களின் மிஷன்)





இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி
தமிழில்: மதியழகன் சுப்பையா


இனி அமெரிக்காவுக்கு என்ன அனுப்புவது? என்ற மிகப் பெரிய கேள்வி இந்திய நாட்டின் முன் நின்றது. காமசாத்திரத்தை அவர்கள் படித்து விட்டார்கள். யோகிகளை அவர்கள் பார்த்து விட்டார்கள். புனிதர்களையும் பார்த்து விட்டார்கள். சாதுக்களையும் பார்த்து விட்டார்கள். கஞ்சா மற்றும் சரஸ் அங்குள்ள இளைஞர்கள் குடித்து விட்டார்கள். இந்தியாவின் நாகப்பாம்பை அவர்கள் பார்த்து விட்டார்கள். இந்திய சிங்கத்தைப் பார்த்து விட்டார்கள். நடைபாதையில் புராதன சிலைகளையும் வாங்கி விட்டார்கள். ன்மீகம் மற்றும் தெய்வீகங்களையும் அவர்கள் தேவைக்கு அதிகமாகவே பெற்று வழிபட்டு வருகிறார்கள் அதற்குப் பதிலாக கோதுமை தந்து கொண்டிருக்கிறார்கள். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா என்றும் தொண்டை கிழித்தாயிற்று.
மகேஷ் யோகி, பால் யோகேஷ்வர், பால் போகேஷ்வர் போன்றவர்களுக்குப் பின் இனி என்ன? நான் ஒரு தேச பக்தன். னால் அமெரிக்காவின் குடிமக்களையும் அறிவேன். அவர்கள் கடுமையாக '' போர்'' கி விட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதாவது அதிகம் போரானா மனிதர்கள். பங்கு சந்தைகள் அவர்களுக்கு தேடி வந்து டாலர்களை கொடுத்துவிட்டுப் போகிறது. வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது, மதுபான பாட்டில்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாலையும் அவர்கள் குறைந்தது பத்து பதினைந்து பேர்களுடன் ''ஹவ் டு யு டூ'' செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களின் போரடிப்பு போய் விடுவதில்லை. பிறநாடுகள் மீது அமெரிக்கா எவ்வளவுதான் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினாலும் அது உற்சாகம் கொள்ளவில்லை. அதற்கு எதே தேவையாய் இருக்கிறது. அதுவும் இந்தியாவிலிருந்துதான் எதே தேவையாய் இருக்கிறது.
எனக்கு அமெரிக்கா குறித்து எவ்வளவு கவலை உண்டானதோ அதே அளவில் இந்தியர்கள் குறித்தும் ஏற்பட்டது. இந்தியர்களுக்கும் ஏதே தேவையாய் இருந்தது.
நமத இந்திய சகோதரர்கள் அங்கு டாலருக்காகவும் இங்கு ரூபாய்களுக்காகவும் எதை கொண்டுச் செல்வது.? ரவிசங்கரிடமும் அவர்கள் போராகி விட்டார்கள். யோகிகள், புனிதர்கள் போன்றவர்களிடமும் அவர்கள் கடும் போராகி விட்டார்கள். இனி அவர்களுக்கு புதிதாக எதாவது தேவைப் படுகிறது. போரடிப்பை முடித்துக் கொள்வதற்கும் உற்சாகப் பட்டுக் கொள்வதற்கும். இவைகளுக்குப் பதிலாய் அவர்கள் டாலர்கள் தர தயாராய் இருக்கிறார்கள்.
இந்த முறை இந்தியாவிலிருந்து ''டிவைன் லுனடிக் மிஷன்'' அழைத்துச் செல்லலாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் கும். இப்படியொரு மிஷன் இன்றுவரை போகவில்லை. 'டிவைன் லுனாடிக் மிஷன்' அதாவது 'தெய்வீக பைத்தியங்களின் மிஷன்' என்பது இந்தியாவிலிருந்து இது புது விஷயமாக இருக்கும்.
எனக்குத் தெரியும். அமெரிக்கர்கள் கண்டிப்பாக ''வீ ஹேவ் சீன் வன். ஹிஜ் நேம் இஸ் கிருஷ்ண மேனன்.'' (நாங்கள் ஒரு பைத்தியத்தைப் பார்த்திருக்கிறோம். அவருடையப் பெயர் கிருஷ்ண மேனன்) என்று சொல்வார்கள். அப்பொழுது நமது ஏஜென்ட் நீங்கள் பார்த்தவர் ''டிவைன்'' (தெய்வீகமானவர்) இல்லை. மேலும் அவர் பைத்தியமாகவும் இல்லை. அதனால் இந்த முறை உண்மையாக தெய்வீக பைத்தியங்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.
தெய்வீக அமைப்புகள் ஸ்மகலிங் (கள்ளக் கடத்தல்) செய்து கொண்டிருக்கின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியும். னால் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் ' சொர்கத்தில்' கூட ஸ்மகலிங் ( கள்ளக் கடத்தல்) செய்ய முடியும் என்பது தெரியாது தான்.
இது தெய்வீக துறையின் மூலமாக நடக்கக் கூடியது. இந்த பவித்திரமான இந்திய தேசத்தில் குஜராத் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒருவன் புனித நீரைக் கொடுத்து ஊரையே அழித்து விட்டான். இப்படிப்பட்ட ஒருவன் அமெரிக்கரை சொர்க்கத்திற்கு கடத்திச் செல்ல முடியாதா?
பொருட்களை திருடுவது மட்டுமல்ல திருட்டு, தெய்வீக திருட்டும் இருக்கிறது. ஒருவன் நீளமாக தாடி வளர்த்துக் கொண்டு தன்னுடன் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போய் '' எனது வயது யிரம் ண்டுகள். நான் யிரம் காலமாக இமய மலையில் நான் தவம் செய்து கொண்டிருந்தேன். ஈஷ்வரனுடன் நன் மூன்று முறை பேசியிருக்கிறேன்.'' என்று முகத்தில் பிரகாஷம் காட்டினார். இதனை நம்பத் தயங்கிய கூடியிருந்த அமெரிக்கரில் ஒருவர் சீடனிடம் ''ஏனப்பா, உனது குரு உண்மையைச் சொல்கிறாரா? அவரது வயது உண்மையிலேயே யிரம் ண்டுகள் தானா? '' என்று கேட்டான். அதற்கு சீடன் ''என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. காரணம் நான் இவருடன் கடந்த ஐநூறு ண்டுகளாகத்தான் இருக்கிறேன்'' என்றான்.
சீடனுக்கு ஐநூறு ண்டுகள் ஏற்கனவே கி விட்ட காரணத்தால் அவர் தனது தனி கம்பெனியை திறக்கலாம். னால் காமசாத்திரம், தெய்வீகம், யோகிகள், மற்றும் சாதுக்கள் என இந்தியாவின் அனைத்து சிறப்புகளும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி விட்டது. இனி நாம் ஒரேயொரு பொருளைத்தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதுதான் இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷன்- டிவைன் லுனாடிக் மிஷன்.
எனது அவசரமான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் 'இந்தியன் டிவைன் லுனாடிக் மிஷனை' உடனடியாக அமைக்க வேண்டும். என்னைவிட பெரியவர்கள் இந்த நாட்டில் உள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். னால் நான் இந்திய நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன். மேலாக அமெரிக்க சகோதரர்களின் போரடிப்பை போக்க கண்டிப்பாய் எதையாவது செய்ய விருப்பப் படுகிறேன்.
எனக்குத் தெரியும் யிரம் ண்டுகளாய் ' ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா' என்று சதா ஜெபித்தப் பின்னாரும் ரேஷன் கடையில் சர்க்கரை கிடைக்காமல் பிளாக்கில் வாங்க வேண்டிய நிலையாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்கர்கள் ''ராமா! கிருஷ்ணா!'' என்று பஜனை செய்து கொண்டிருப்பதால் என்ன கிடைத்து விடப் போகிறது? னாலும் செல்வம் மற்றும் அதிகாரம் கொண்ட மனிதர்கள் நிரைந்த வல்லரசு நாட்டு மக்கள் அமைதிக்கான வழிகள் கொஞ்சம் வித்தியாசமானதுதான். இந்த அமைதி இந்தியாவிலிருந்து கிடைத்து விட்டால் இந்தியாவுக்கும் பெரு¨மைதானே. இந்தியாவின் கௌரவம் கூடிவிடுமே.
''அமெரிக்க நாடு அடித்தளத்திலிருந்து காய முன்னேற்றத்திற்கு ஒரே தாவலில் சென்று விட்டது. அது இடையில் பண்பாட்டு நிலை வழியாக கடக்கவில்லை'' என்று பெட்டரண்ட் ரஸ்ஸல் தெரிவித்து உள்ளார். ஒரு நிலையை மறந்து விட்டுள்ளது. எனக்கு ரஸ்ஸலுடன் என்ன பேச்சு இருக்கிறது? 'டிவைன் லுனாடிக் மிஷன்' என்ற சர்வதேசிய வியாபாரத்தை துவக்க இருக்கிறேன். உலகத்தின் பைத்தியங்கள் சுத்தமான பைத்தியங்கள். னால் இந்திய பைத்தியங்களோ தெய்வீக பைத்தியங்கள்.
நான் 'டிவைன் லுனாடிக் மிஷன்' அமைப்பை ஏற்படுத்த நினைக்கிறேன். இதன் உறுப்பினர்களாக பைத்தியக்கார விடுதியில் சேர்க்கப் படாதவர்கள் மட்டுமே இருக்க முடியும். எங்களுக்கு பைத்தியக்கார விடுதிக்கு வெளியே இருக்கும் பைத்தியங்கள் வேண்டும் அவர்கள் தான் உண்மையான பைத்தியங்களைப் போல் நடிக்க முடியும். யோகிகளைப் போல் நடிப்பது மிகவும் எளிது. கடவுளைப் போல் நடிப்பது மிக மிக எளிது. னால் பைத்தியங்களைப் போல் நடிப்பதுதான் மிகக் கடினம். அதனால் மிகச் சரியானவர்களைத் தேடி வருகிறேன். எனது நண்பர்களான இரண்டொரு பேராசிரியர்கள் கண்ணில் பட்டார்கள். இவர்களை இந்த மிஷனுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.
மிஷன் உருவாகும், கண்டிப்பாய் உருவாகும். அமெரிக்காவில் நமது ஏஜென்சி இது குறித்து பிரச்சாரம் செய்யும். ''சீ ரியல் இண்டியன் டிவைன் லுனாடிக்ஸ்' (இந்திய தெய்வீக பைத்தியங்களைப் பாருங்கள்) நாங்கள் நியுயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் நாங்கள் இறங்கும் விபரம் செய்தித்தாள்களில் அச்சாகும். தொலைக்காட்சிகள் தயாராய் இருக்கும்.
திருமதி ராபர்ட் திருமதி சிம்ஷனிடம் ' நீங்கள் உண்மையில் இந்திய தெய்வீக பைத்தியங்களைப் பார்த்தீர்களா?'' என்று கேட்பார்.
திருமதி சிம்ஷன் ''நோ!, இஸ் தேர் வன் இன் திஸ் கன்டரி, 'அண்டர் காட்?'' என்று சொல்வார்.
திருமதி ராபர்ட் ''மாம். நாளை இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷன் நியுயார்க் வருகிறது. வாருங்கள் நாம் பார்க்கலாம். 'இட் வில் பி எ ரியல் ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பிரியன்ஸ். (அது ஒரு நல்ல தெய்வீக அனுபவமாக இருக்கும்)''
நியாயார்க் விமான நிலையத்தில் யிரக்கணக்கில் ண்களும் பெண்களும் இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷனை காண கூடி நிற்பார்கள். அவர்களுக்கு வாழ்கையின் போரடிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். எங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும். மாலைகள் அணிவிக்கப் படும். நாங்கள் தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் படும்.
நாங்கள் தெய்வீக பைத்தியங்களின் நிகழ்ச்சியை வழங்குவோம். பைத்தியமல்லாத ஒவ்வொருவரும் உண்மையான பைத்தியங்களைப் போல் எப்படி நடிப்பது என்று ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கும். நுழைவுக் கட்டணம் ஐம்பது டாலர்களாக இருக்கும். அமெரிக்கர்கள் யிரக்கணக்கில் பனம் செலவு செய்து 'இந்திய தெய்வீக பைத்தியங்களை' தரிஷனம் செய்ய வருவார்கள்.
எங்கள் வியாபாரம் மிகச் சிறப்பாக நடக்கும். மிஷனின் தலைவனான நான் உரையாற்றுவேன். '' வி ர் ரியல் இந்தியன் டிவைன் லுனாடிக்ஸ். அவர் ரிஷிகல்ஸ் என்ட் முனிவர்ஸ் தவுசன்ட் இயர்ஸ் அகோ செட் தேட் தி வேய் டு ரியல் இண்டர்னல் பீஸ் என்ட் சால்வேஷன் லாயிஸ் துரு லுனான்சி''. (நாங்க உண்மையான இந்திய தெய்வீக பைத்தியங்கள். நமக்குள் அமைதியும் விடுதலையும் பைத்தியக்கார நிலையில் தான் இருக்கிறது என்று நமது ரிஷிகளும் முனிவர்களும் யிரம் ண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டிருக்கிறார்கள்.
அதன் பின் எனது தோழர்கள் விதவிதமான பைத்தியக்கார வித்தைகளை செய்து காட்டுவார்கள் டாலர் மழை பொழியும்.
இந்த மிஷனில் பங்கு பெற விரும்புவோர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். அவர்கள் உண்மையான பைத்தியமாக இருக்கக் கூடாது என்பதுதான் நிபந்தனை. உண்மையான சாதுக்களை சாதுக்கள் குழுவில் எப்படி சேர்த்துக் கொள்ள மாட்டர்களோ அதே போல் உண்மையான பைத்தியங்களை இந்த மிஷனில் சேர்த்துக் கொள்ள இயலாது.
அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் டெல்லியின் ராம்லீலா மைதானம் அல்லது செங்கோட்டை மைதானத்தில் மிகச் சிறப்பாகவும் பிரமான்டமாகவும் வரவேற்பு கொடுக்கப் படும். பிரதம மந்திரியை இதற்கு தலைமை தாங்க அழைத்துவர முயற்சி செய்வேன்.
அப்படி பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் அரசியல் வனவாசத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலர் கிடைத்து விடுவார்கள்.
டெல்லியில் உள்ள ''கடத்தல்காரர்கள்' எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள்.
கஸ்டம் மற்றும் என்போர்ஸ் துறையினருடனும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு எங்கள் மிஷனுக்கு தரவளிப்பார்கள் என நம்புகிறோம்.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது ''இது இந்திய தெய்வீகத்தன்மைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும். நமது தெய்வீக பைத்தியங்கள் உலக மக்களுக்கு அமைதியையும் மோட்சத்தையும் பற்றிய செய்திகளை கொடுத்து விட்டு வருகின்றனர். நமது நாட்டில் இந்த தெய்வீக பைத்தியங்களின் இயக்கம் மேன்மேலும் வளரும் ''என்று உரையாற்றுவேன்.
''டிவைன் லுனாடிக் மிஷன்'' கண்டிப்பாய் அமெரிக்கா போக வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அரசியல் உறவு பலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த பைத்தியங்களின் மிஷன் கண்டிப்பாய் போயாக வேண்டும்.

Friday, April 20, 2007

காமப் புரவி








கண்ணில் உருத்துகிறது
சிறு துரும்பு

உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை

செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை

உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல

புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல

நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.

விணை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்

விணை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்

தரிகெட்டோடுகிறது
காமப் புரவி

Wednesday, April 18, 2007

மூக்குக்கண்ணாடி





இந்தியில்: பேடப் பனாரசி
தமிழில்: மதியழகன் சுப்பையா

இருபதாம் நூற்றாண்டின் அணிகலன், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கான சான்றிதழ், படிப்பறிவு பெற்ற பெண்களின் உடலை அலங்கரிக்கும் அழகு சாதனம். குறைவாக படித்தவர்கள் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள பயன் படுத்தும் சாதனம், செல்வந்தர்களின் அவசிய நோய்க்கு மருந்து மற்றும் கடைகளில் நூறு சதம் லாபத்திற்கான பொருள்தான் மூக்குக்கண்ணாடி. இன்று மூக்குக்கண்ணாடியின் உற்பத்தி பாரத்தில் மிக பரபரப்பாக கிக் கொண்டிருக்கிறது. கணக்கெடுப்பும் புள்ளி விபரங்களுக்கான இந்த கால கட்டத்தில் இது சாத்தியமில்லைதான். மக்கள் என் பேச்சை நம்ப மாட்டார்கள்தான். னால் அரசு சார்பாக இது குறித்து கணக்கெடுப்பு (சென்செஸ்) எடுத்தால் நகரத்தில் மூக்குக்கண்ணாடியை ஒருவர் கூட பயன்படுத்தாக குடும்பம், வீடு இதுவென ஒன்றைக் கூட காட்டி விட முடியாது. கிராமத்தில் மூக்குக்கண்ணாடி இன்னும் அதிகம் பிரபலமாகவில்லைதான். னால் கிராமங்கள் முன்னேற்றப் பாதையில் இன்னும் பின் தங்கிதானே இருக்கிறது.
ஒரு தனி மனிதனின் ளுமையை ஏத்திக் காட்ட மூன்று பொருட்கள் உள்ளன. அவை கைக்கடிகாரம், பவுண்டன்பேனா மற்றும் கண்களில் கண்ணாடி. யாரிடமெல்லாம் இந்த மூன்றும் இருக்கிறதோ அவர்கள் பர்ஸ்ட் கிளாஸ், யாரிடமெல்லாம் இதில் இரண்டு மட்டும் இருக்கிறதோ அவர்கள் செகண்ட் கிளாஸ், யாரிடமெல்லாம் இதில் எதாவது ஒன்று மட்டும் இருக்கிறதோ அவர்கள் தர்டு கிளாஸ் மனிதனாக மதிக்கப் படுகிறான். இதிலும் பல கிளைகள் உள்ளன வாசகர்களை இன்னும் ழமாக அழைத்துச் செல்ல விரும்பவில்லை. அப்படியானல் நீங்கள் கேட்கலாம். இந்த மூன்றும் இல்லாத ஒருவன் எந்தக் கிளாஸ்? என்று. நாகரீக சமூகம் அவரை மனிதனாகவே மதிக்காது. இதில் கிளாஸ் எப்படி கிடைக்கும். கையில் ரிஸ்ட்வாட்ச் கட்டிக் கொண்டு வயலில் உழுகின்றார்களோ அல்லது மூக்குக்கண்ணாடியை மாட்டிக் கொண்டு எந்தப் புல் நல்ல புல் என்று தேர்ந்து அறுத்துக் கொள்கிறார்களோ அல்லது பாமரர்கள் சாதாரண எழுதுகோலை தவிர்த்து பவுண்டன் பேனா மூலம் சித்திரகுப்தனைப் போல் செல்வந்தர்கள் மற்றும் ஜமீன்தார்களின் தலைவிதியை எழுதுகிறார்களோ அன்றுதான் கிராமத்தில் நாகரீகத்தின் காற்று வீசத் துவங்கும்.
மூக்குக்கண்ணாடி இந்தியாவிற்கு எப்பொழுது வந்தது? யாரால் சொல்ல முடியும்? ரிக் வேதத்தில் இது குறித்த குறிப்பு இல்லை. ரண்ய காலத்தில் ரிஷிகள் மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டு சோமரஷம் குடித்திருப்பார்களோ இல்லை ஹோமம் வளர்த்திருப்பார்களோ என்பது குறித்து எதுவும் விபரம் இல்லை. ஸ்வாமி தயானந்த் இது குறித்து எதுவும் சொல்லி கருணை காட்டவில்லை. சயானாச்சார்யரும் இது குறித்து சுட்டிக்காட்டவில்லை. பிதாமகர் பந்த்ஜலி இது குறித்து மகாபாஷ்யாவில் எந்த விளக்கமும் தரவில்லை. மேக்ஸ்முல்லருக்கும் இது கூளர் மலர் போன்றுதான் இருந்திருக்கிறது. அந்தக்காலத்தில் படிப்பது என்பது கிடையாதே. எல்லாம் பாடல்களாகவே இருந்தது. னால் வேதங்களில் விமானத்தின் பூர்வீகம் மற்றும் உலகின் அனைத்து ஞான-விஞ்ஞான பொருட்களின் குறிப்புகள் குறிக்கப் பட்டுள்ளது. னால் மூக்குக்கண்ணாடி பற்றித்தான் எந்தக் குறிப்பும் இல்லை. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஒருவேளை மூக்குக்கண்ணாடி பக்கம் யாருக்கும் கவனம் போகவில்லையா இல்லை இது குறித்து அறிவில்லையா.
இந்தி இலக்கியவாதி துளசிதாஸ் மூக்குக்கண்ணாடி பயன்படுத்தவில்லை. இன்னும் விபரமாகச் சொன்னால் அவர் மூக்குக்கண்ணாடி என்ற வார்த்தையையே பயன் படுத்தவில்லை. இந்தி மொழியின் பிரபல கவிஞர் பிகாரிலால் இந்த வார்த்தையை தனது 'தோஹே' எனப்படும் ஈரடிக் கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த கால கட்டத்திலேயே இந்தியர்கள் மூக்குக்கண்ணாடியை பயன் படுத்தத் துவங்கி விட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் சூரியனின் கதிர்கள் பிரகாஷ தேஷத்தில் துவங்கியது.அதே போல் மூக்குக்கண்ணாடியின் துவக்கம் பாரதத்தில் துவங்கி இருக்கலாமோ. ஒருவேளை அந்த காலத்தில் மூக்குக்கண்ணாடிக்கும் அதிக முக்கியத்துவம் இருந்திருக்கலாம். வாகனங்கள் இல்லாமல் மனிதனால் வாழ்க்கை நடத்திவிட முடியும். எதுவும் முடியவில்லை என்றால் அவனால் நடந்தே கூட போக முடியும். கடிகாரம் இல்லையென்றால் வெயிலின் துணையால் நேரத்தை அறிந்து கொள்ள முடியும். டைப்ரைட்டர் இல்லையென்றால் பிறரின் உதவி கொண்டு எழுதிக் கொள்ளலாம். னால் மூக்குக்கண்ணாடி இல்லையென்றால் பிறருடைய கண்களால் பார்ப்பதில் என்ன மஜா இருந்து விடப் போகிறது.
மூக்குக்கண்ணாடியால் எத்தனை நன்மைகள் உள்ளது. அதற்கு நல்லதொரு எதிர்காலமும் உள்ளது. எதுவரை என்பது குறித்து கணக்கிட்டுக் கொள்ளலாம். உங்கள் கண்களில் யாராவது மண்தூவ நினைத்தால் மூக்குக்கண்ணாடி உங்கள் கண்களை காப்பாற்றிவிடும். தொலைவிலிருக்கும் பொருட்களை பார்க்க வேண்டுமனால் அது துல்லியமாக காட்டிவிடும். அப்படியானால் அது உங்கள் எதிர்காலத்தை காட்டுவதாக கி விடுகிறது இல்லையா. கண்கள் எழ நினைத்தால் விடாது. அதே நேரத்தில் சரியாக பயன்படுத்தினால் உட்காரவும் விடாது. கண்நோயை வர விடாது வந்துவிட்டால் போக விடாது. நீங்கள் இப்பொழுதாவது தப்பானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் உங்களை மறைத்துக் காக்கும் திரைபோல மூக்குக்கண்ணாடி விளங்கும். உங்களை யாராலும் கண்டு பிடித்து விட முடியாது. சாதாரண மூக்குக்கண்ணாடியால் பல சமயங்கள் கஷ்டங்கள் ஏற்படலாம். அதனால்தான் வெளிநாட்டின் விஞ்ஞான மேதைகள் ய்வுகளை செய்து வண்ணங்களில் கண்ணாடியை கண்டு பிடித்துக் கொடுத்து உள்ளனர். பெரிய அவைகளில், மாநாடுகளில், ரயில்களில், விழாக்களில், கேளிகை நிகழ்ச்சிகளில் என அனைத்து இடங்களிலும் நீங்கள் வண்ண மூக்குக்கண்ணாடிகளை அணிந்து கொண்டு யாரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப் படுகிறீர்களோ அவர்களை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருங்கள். உங்கள் கண்களை யார் மீது போகஸ் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்கள் மீது போகஸ் செய்யுங்கள். அவர்களால் உங்களை கண்டு பிடிக்கவே முடியாது. னால் வெறுங்கண்ணால் இப்படிப் பார்த்தால் சரியான உதை கிடைக்கும் நிலையாகி விடும். உண்மையிலேயே வண்ண மூக்குக்கண்ணாடிகளை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் உலக மனிதர்கள் அனைவருடைய நன்றிக்கும் பாத்திரமாக விளங்குகின்றனர்.
மனித சமூகத்திற்கு மூக்குக்கண்ணாடி எத்தனை பிரியமானதாக இருக்கிறது என்ற விஷயத்தில் யாருடைய கவனமும் போகவில்லை போல. இதில் சிலர் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்பவர்களைப் பார்த்து கேலி செய்வதும் உண்டு. நீங்கள் உங்கள் மூக்கின் மேல் ஈயை உட்கார அனுமதிக்க மாட்டீர்கள் னால் மூக்குக்கண்ணாடி உங்கள் மூக்கின் மேல் குதிரையின் மேல் அமர்ந்திருப்பவரைப் போல் அல்லது எருதின் முதுகில் உட்கார்ந்திருக்கும் காக்கையைப் போல் உட்கார்ந்து இருக்கும். தங்கள் மனைவிகளைக் கூட விட்டு விடுவார்கள். உலகில் விவாகரத்து என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. னால் மூக்குக்கண்ணாடியை யாரும் விட்டுவிட்டதாக கேள்வி பட்டதில்லை. இது யாருடைய கண்ணகளிலாவது மாட்டி விட்டால் வாழ்க்கை முழுவதும் மாட்டிக் கொள்ளும். உட்கார-எழ, எழுத-படிக்க, படுக்க - எழ என மூக்குக்கண்ணாடி பிரிக்கமுடியாததாகி விடும். என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது னால் யாருக்கெல்லாம் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டு விடுகிறதோ அவர்கள் மூக்குக்கண்ணாடி இல்லாமல் தூங்கும்போது அவர்களுக்கு கனவு மங்கலாகத்தான் தெரியுமாம். அப்படித்தானே தெரிந்தாக வேண்டும்?
பொழுதுகளில் மூக்குக்கண்ணாடி நமக்கு நன்மை செய்து விட்டுப் போகிறது. நண்பர் ஒருவர் மிகவும் மிடுக்காக இருப்பவர். னால் அவருக்கு ங்கிலம் வாசிக்கத் தெரியாது. ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒருவன்நீதிமன்ற வழக்குத் தொடர்பாக எங்கோ போய்க் கொண்டிருந்தான். அவன் தனது பையிலிருந்து ஒரு காகித்ததை எடுத்தான். அது நீதிபதியின் தீர்ப்பாக இருக்கக் கூடும். அதை டிப்-டாப் நண்பரிடம் கொடுத்து '' இதில் என்ன எழுதியிருக்குன்னு கொஞ்சம் படிச்சி சொல்லுங்களேன்.'' என்றான். நண்பரோ அந்தக் காகிதத்தை தலைகீழாக பிடித்துக் கொண்டு தனது சட்டைப்பையில் கைகளை விட்டு அப்படியும் இப்படியும் துழாவினார். பின் '' ஐய்யோ! மூக்குக் கண்ணாடியை வீட்டிலேயே மறந்து விட்டு வந்து விட்டேனே.என்னால் படிக்க முடியாதே'' என்றார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மூக்குக்கண்ணாடி மட்டும் இருந்திருந்தால் அவரது மரியாதை என்னவாகியிருக்கும்?
நீங்கள் சிரியர் பணி செய்பவராக இருந்தால் உங்கள் மாணவர்களில் ஒருவர் திடீரென உங்களிடம் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை என்றால் படாரென கண்ணாடியைக் கழற்றி விட்டு அதை துடைக்கத் துவங்குங்கள் அதைத் துடைக்கும் இடைவேளையில் பதிலை யோசித்துக் கொள்ளுங்கள். இப்படியாக உங்களின் பழகீனத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. வியாக்யானம் பேசித் திரிபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளப் பொருளாக இருக்கும். எப்பொழுதாவது எதையாவது மறந்து விட நேர்கையில் கண்ணாடியை கழற்றிக் கொள்ள வேண்டும் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு பின் கண்ணாடியை அணிந்து கொண்டு உரையை துவங்கி விட வேண்டும் அவ்வளவுதான்.
இப்படியாக பல காரணங்களால் மூக்குக்கண்ணாடி மிகவும் பயனுள்ள பொருளாகி விட்டது. வியக்கும் விஷயம் என்னவென்றால் இன்று பாரதம் முழுவதும் ஏன் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறது என்பதுதான். மூக்குக்கண்ணாடியால் இன்னுமொரு நன்மையும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன் படுத்தும்படியாக ஒரு பொருள் இல்லவே இல்லை. சிலர் கோட் அணிகிறார்கள், சிலர் வேட்டி, சிலர் குள்ளாய், சிலர் கோமனம், சிலர் சூட்டு, இன்னும் சிலர் சிலவற்றை. தலைப்பாகை மற்றும் தொப்பிகளில் கூட வேறுபாடு உள்ளது. காந்தி தொப்பியையும் எல்லோரும் அணிந்து கொள்ளவதில்லை. அனைவரும் பயன் படுத்திக் கொள்ளும்படியாக ஒரு பொருளும் இல்லை.
முக்குக்கண்ணாடி ஒரு அற்புதமான பொருள். இதனை ஏழை-பணக்காரன், தொழிலாளி-முதலாளி, ண்கள்-பெண்கள், சிறுவர்-முதியோர், இந்து- முஸ்லீம், பெளத்தர்-ஜைனர் இப்படி அனைவரும் அணிந்து கொள்ளலாம். பாரத மக்கள் முழுவதும் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொண்டு திரியும் அந்த நாளைக் கடவுள் சீக்கிறமாகவே காட்டுவான். அப்பொழுது பாருங்கள் நம் நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வு படரும். அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் கண்ணாடி கண்களால் பார்க்க மாட்டார்கள்.

------------------------------------------------------------------------

எழுத்தாளர் பேடப் பனாரசியின் இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ணதேவ் கவுட் கும். இவர் காசியில் டி.எ.வி கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இவர் நகைச்சுவை நையாண்டி கட்டுரைகள் எழுதுவதில் பிரபலமானவர். இந்தி எழுத்துலகில் இவரை 'ஹாஸ்யரசாவதார்' என்று அழைப்பதுண்டு. இவரது கட்டுரைகளில் நகைச்சுவை மட்டுமல்லாமல் மொழிச் செலுமையும் இருக்கிறது.
இவரது படைப்புகளில் 'பேடப் கி பெஹக்', 'காவ்ய-கமல்', பனாரசி இக்கா' கிய கட்டுரைத் தொகுப்புகளும் 'டனாடன்' என்ற கதை தொகுப்பும் ' அபினேத்தா' என்ற நாடகத் தொகுப்பும் பிரபலமானவை.

Monday, April 16, 2007

கவிதைத் தோழி




















கூட்டத்திற்கு வரும்
அவளைச் சுற்றியே
கூட்டம்

அவளது தும்மலுக்கும்
மாம் சொல்லி
பல் இழிக்கும்
ஜிப்பா ஜீன்ஸ்கள்

இலக்கியமாய்
பேசுவாள் இலக்கியம்
அவளது பேச்சுக்கு
மறுப்பு எதிர்ப்பு
கிடையாது கிடையாது

அவளைத் 'தோழி' என்றே
விளிக்கிறார்கள்
மைக் பிடிக்கும்
பஞ்சுத் தலையர்கள்

மின்னலாய் சிரித்து
மேகமாய் உலவி
கவிதை சுனையில்
ஈரம் கசிக்கிறாள்

மதியழகன் சுப்பையா
,
மும்பை

Wednesday, April 11, 2007

நீர் வாழ்வு













பளிங்கில் தெரியும்
நீரின் குளிர்ச்சி

ஜன்னல் நுழைகிறது
குளுமைச் சாரல்

வாளி நீர் வழிகிறது
கழுத்து வழி காலுக்கு

உடல்தொடும் நீரால்
உன்னத சுகம்

உடல் பிரியும்
சிறுநீரும் அப்படியே

வெளிநிறையும்
மழை நீர் சிலிர்ப்பு

கடல் தேங்கும்
பெருநீர் வியப்பு

இடம்கொண்ட
தெளிநீர் வாழ்க்கை

மலை பொங்கும்
வளிநீர் மருந்து

மலர் தங்கும்
பொடிநீர் மதுநீர்

விழி ஊறும்
சுடுநீர் வீணே

உடல் நுழையும்
துளிநீர் உயிரே.

மதியழகன் சுப்பையா
மும்பை

Tuesday, April 10, 2007

கழிவறை நாற்றம்





விலகிப் போவதின்
விபரம் தெரியவில்லை

புதிய வருகைகளும்
போய்விடுவது புதிர்தான்

உடன்பிறப்பும், உறவுகளும்
தூரம் காக்கின்றன

மிருகங்கள் மட்டும்
முகர்ந்து நக்கும்
சில முகம் சுழிக்கும்

நெருங்குவாரில்லை
நெருங்குகையில்
விலகாதவரில்லை

நாசியற்றவர்களை
நானெங்குத் தேட

நாதியற்றுப் போனேன்
நாற்றத்தால்

போயிருக்கக் கூடாது
நீயும் கூட.

மதியழகன் சுப்பையாமும்பை

Saturday, April 07, 2007

வகைவகையாய்....

பாலாமணிக்கு ரொம்ப நீளம்
குண்டிக்கு கீழே தொங்கும்

மல்லிகாவுக்கு மோதிரம் மாதிரி
சுருள் சுருளாயிருக்கும்

எஸ்தருக்கு பப்பு கட்டு
டவுசர் சட்டைக்காரிக்கு
அதான் சரி

மீனாவுக்கு நல்ல அடர்த்தி
சடை போட்டானா
அட! போடலாம்

ராணிக்கு குதிரவாலு
ஒன்னுக்கும் உதவாது

கீதாவுக்கு ரெட்டைச் சடை
முடியருவி போல முலைதட்டும்

இசக்கிப் பாட்டிக்கு
எழுவது வயசு
ஒத்தமுடி உதிரல
பத்துக்கு ஒன்னுல மட்டும் நரை

கோவிந்திக்கு சிக்கு முடி
அத்துப்போட ள்தேடுவா

பார்வதிக்கு பஞ்சுமுடி
கோதி விட கை துடிக்கும்

கவிதாவுக்கு செம்பட்டை

பாத்திமாவுக்கு எப்படியோ?
மூடிக்கிட்டுத்தான்
வலம்-இடம் வருவா.

ராஜத்துக்கு சவுரிதான்
குளிக்கவே மாட்ட ஊத்தநாறி

மாலாவுக்கு கம்பிமுடி
எப்படியும் நிக்கும்

கோமதிக்குத்தான் கச்சிதம்
குளிச்சி முடிச்சி
சைடு முடியெடுத்து
பின்னிக்கிட்டான்னா
அம்மன்சாமி அசந்திடுமில்ல



மதியழகன் சுப்பையா

மும்பை

Thursday, April 05, 2007

ரஷாபிஷேகம்












மிளகுரசம் இல்லையென்றால்
சாப்பிடமாட்டாய்

குறைதலும் மிகுதலும்
குற்றமே உன்னகராதியில்

அடுப்பு தெய்வத்தை
அன்றாடம் வேண்டியே
சமைக்கத் துவங்குவேன்

குறைசொல்லிக் கொண்டே
கும்பி நிறைக்கிறாய்
கையை நக்குகிறாய்

ரசம் தெளித்து
வசை மொழிவாய்
தினம் தினம்

ஊறுகாய் தொட்டு
உண்டு படுக்குமென்
கால் நக்கி களிப்பாய்

மதியழகன் சுப்பையா
மும்பை

Wednesday, April 04, 2007

எது லாபம்?

ங்கிலத்தில்: பிரெட். ஐ. கென்ட் தமிழில்: மதியழகன் சுப்பையா

அமெரிக்க வாழ்வு முறையின் மைய காரணமாக இருந்த லாப முறை குறித்துப் பேசுவது பேஷனாக இருந்தது கண்டு பெரிதும் அதிருப்தியில் இருந்த பள்ளி மாணவன் ஒருவன் தனது தாத்தாவுக்கு 'அடுத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தாமல் லாபத்தை பெறுவது எப்படி, விளக்கம் கொடுக்கவும்' என்று கடிதம் ஒன்று எழுதினான். அவனது தாத்தா பிரெட்.ஐ . கென்ட், எல்.எல்.டி, நியு யார்க் பல்கலைக் கழக கவுன்சிலின் தலைவராக இருந்தார். மேலும் அவர் பெடரல் ரிசர்வ் போர்டின் முன்னால் இயக்குனராகவும் இருந்தார். முனைவர் கென்ட் தனது பேரனின் கேள்விக்கு பதில் எழுதினார்.

அன்பு பேரனுக்கு,
உனது கேள்விக்கு என்னால் முடிந்த அளவு எளிமையாக பதில் சொல்ல முயற்சிக்கிறேன். லாபம் என்பது, அமைக்கப் பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து அடுத்தவர்களுக்கும் நிறுவன உரிமையாளருக்கும் கிடைக்கும் வருவாய் என்பதாகும். பண்டைய காலத்தில் இந்த லாபத் திட்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்து பார்க்கலாம். நூறு பேர் கொண்ட ஒரு சமுகம் குறித்து சொல்கிறேன். அவர்கள் அனைவரும் நாள் முழுவதும் கடுமையாக வேலை பார்த்தப் பின்னும் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள இயலாதவர்கள்.
இந்த பண்டைய சமுகம் ஒரு மலையடிவாரத்தில் அமைந்து இருந்தது. இவர்களுக்கு தண்ணீர் மிக அத்தியவசிமானது. அந்த மலையின் உச்சியில் உள்ள ஒரு பொய்கையைத் தவிர வேறு எங்கும் நீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் அந்து நூறு பேரும் தினமும் மலை உச்சிக்கு ஏறி நீர் கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை. இவ்வாறு மலை உச்சிக்கு ஏறி நீர் கொண்டுவர ஒருவருக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். இது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. ஒருமுறை அந்த நூறு பேர்களில் ஒருவன் தாங்கள் மலைக்கு மேலிருந்து இறங்கும் திசையில்தான் நீரின் ஓட்டம் இருப்பதை உணர்ந்தான். மலையடிவாரத்தில் தனது வீடுவரை மேலிருந்து கீழாக ழமான ஒரு ஓடையை வெட்டினான். அது முடியும் இடத்தில், தன் வீட்டருகே ழமாக ஒரு தொட்டியையும் கட்டினான். இந்தப் பணிகளில் அவன் தினமும் முழுமையாக ஈடுபட்டான். மற்ற தொன்னூற்றொன்பது பேர்களும் இவனது செயல்களை வினோதமாகப் பார்த்தனர். அவர்களுக்கு இவன் செய்யும் வேலை பற்றிய எந்த அக்கரையும் இல்லை.
ஒரு நாள் அந்த நூறாவது மனிதன் தனது வீட்டருகே கட்டிய தொட்டிக்கு மலை உச்சியிலிருந்து நீர் கொண்டுவரும் முயற்சியில் வெற்றி கண்டான். மலை உச்சியிலிருந்து நீர் அவனது வீட்டருகே கட்டிய தொட்டியில் நிறைந்தது. கூடி நின்று வேடிக்கைப் பார்த்த அந்த மலையடிவார மக்களிடம் ஒரு யோசனை சொன்னான். நாளுக்கு ஒரு மணி நேரம் செலவு செய்து நீர் கொண்டு வரும் மற்ற தொன்னூற்றொன்பது பேரிடமும் தனது உற்பத்திக்காக தினமும் ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் ஒதுக்கினால் தனது தொட்டியிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தான் அந்த நூறாவது மனிதன். இவ்வாறாக அந்த நூறாவது மனிதன் நாளுக்கு தொள்ளாயிரத்து தொன்னூறு நிமிடங்களை மற்றவர்களிடமிருந்து பெருகிறான். தனது தேவைகளுக்காக நாளுக்கு பதினாறு மணி நேரங்கள் அவன் இனி செலவு செய்ய வேண்டியதில்லை. அவன் மிகப் பெரிய லாபத்தை பெற்றுக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் மற்ற தொன்னூற்றொன்பது பேர்களுக்கும் அவனது இந்த திட்டத்தின் மூலம் நாளுக்கு ஐம்பது நிமிடங்கள் அதிகம் கிடைத்தது.
அந்த நூறாவது மனிதனுக்கு தனது இந்த நீர் வியாபாரத்தின் காரணமாக நாளுக்கு பதினாறு மணி நேரம் கிடைத்தது. அவன் தனது இந்த பொழுதை மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் பாயும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நீர் தன்னுடன் கற்களையும் மரத் துண்டுகளையும் அடித்து வந்தது. இதனை கூர்ந்து கவனித்து வந்த அவன் ஒரு நீர்ச்சக்கரத்தை உருவாக்கினான். நீருக்கு சக்தி உள்ளது என்பதை முழுவதும் அறிந்து கொண்ட அவன் கடுமையான சிந்தனை மற்றும் உழைப்பிற்குப் பின் நீர்ச்சக்கரத்தை இயங்கும்படிச் செய்தான். இந்தச் சக்கரத்தின் மூலம் தனக்கான சோளங்களை அரைக்கும்படியான இயந்திரத்தை செய்து விட்டான்.
அந்த நூறாவது மனிதன் மற்ற தொன்னூற்றொன்பது பேர்களுக்கும் சோளங்களை அரைத்துக் கொடுக்கும் அளவுக்கு தனது இயந்திரம் சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்தான். உடனடியாக அந்த நூறாவது மனிதன் மற்றவர்களிடம் '' நான் உங்களை எனது இந்த அரவை இயந்திரத்தில் சோளம் அரைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் னால் இதனால் உங்களுக்கும் மிச்சமாகப் போகும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரத்தை மட்டும் எனக்கு கொடுத்து விட வேண்டும்'' என்று அறிவித்தான். அந்த தொன்னூற்று ஒன்பது பேரும் அதற்கு ஒத்துக் கொண்டனர். இவ்வாறாக அந்த நூறாவது மனிதன் கூடுதல் லாபத்தைப் பெற்றான்.
தொன்னூற்றொன்பது மனிதர்களும் கொடுத்த நேரத்தை பயன்படுத்தி தனக்காக மிகச் சிறப்பான ஒரு வீட்டைக் கட்டினான். தனது வீட்டில் வெளிச்சம் வர ஜன்னல்கள், இருக்க சவுகரியமான பெஞ்ச்கள் மற்றும் குளிரைக் கட்டுப் படுத்தவும் பாதுகாப்பளிக்கும் படியாகவும் நல்ல கதவுகளை செய்து கொண்டான். இப்படியாக அந்த நூறாவது மனிதன் தனது சிந்தனையால் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளை செய்து மற்ற தொன்னூற்று ஒன்பது பேர்களிடமிருந்தும் அவர்களுக்கு மீதமாகும் நேரத்தில் பத்தில் ஒரு பகுதியை தனக்காக செலவு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தான். இவ்வாறாக நூறாவது மனிதன் லாபத்தையும் மற்ற தொன்னூற்றொன்பது பேர்களும் சவுகரியங்களை பெற்று வந்தனர்.
இப்படியாக அந்த நூறாவது மனிதன் அத்தனை நேரமும் தான் விருப்பப் பட்டதை செய்ய மீதமாகிப் போனது. அவனாக விரும்பினால் எதாவது வேலை செய்து கொள்ளலாம் என்றாகி விட்டது. அவனது உணவு, உடை மற்றும் வீட்டுப் பராமரிப்பு என அனைத்தும் மற்றவர்களால் செய்யப் பட்டு வந்தது. அவனது மூளை தீவிர சிந்தனையில் இருந்தது. மற்ற தொன்னூற்றொன்பது பேர்களும் மேலும் அதிகபட்சமாக நேரத்தை மிச்சம் பிடித்து வந்தார்கள். இவை அனைத்தும் அந்த நூறாவது மனிதனின் சிந்தனையாலும் திட்டத்தாலும் தான் சாத்தியமானது.
அவனுக்கு ஒரு யோசனை, அந்த தொன்னூற்றொன்பது பேர்களில் ஒருவன் மட்டும் மற்றவர்களை விட மிகச் சிறப்பான ஷ¥க்களை செய்து வந்தான். தனக்கு கிடைத்த லாபத்தின் மூலம் அவனுக்கு உணவு, உடை மற்றும் சவுகரியங்களை செய்து கொடுத்து முழுநேரமும் மிகச் சிறப்பான ஷ¥க்களை செய்யும் படி நூறாவது மனிதன் ஏற்பாடு செய்தான். இனி மீதமிருக்கும் தொன்னூற்றெட்டுப் பேர்களும் தங்களுக்கான ஷ¥க்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது அந்த தொன்னூற்றொன்பதாவது மனிதனுக்காக மற்ற தொன்னூற்றெட்டு பேரும் தங்களின் நேரத்தில் சிறிது ஒதுக்கும்படி நூறாவது மனிதன் ஏற்பாடு செய்தான்.
நாட்கள் நகர்ந்தது, மற்றொரு மனிதன் மிக சிறப்பான முறையில் டைகளை செய்து வருவதை நூறாவது மனிதன் பார்த்தான். உடனடியாக அவனது முழு நேரத்தையும் டைகள் செய்வதற்கென்றே ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். இப்படியே போய்க் கொண்டிருந்தது.
நூறாவது மனிதனின் தூரதிருஷ்டியின் காரணமாக உழைப்பாளர்கள் மத்தியில் திறமையானவர்களின் ஒரு குழு உருவானது. அந்த நூறு பேர் கொண்ட சமுதாயத்தில் சிலரின் திறமைகளுக்கு தகுந்தவாறு மிகச் சிறப்பான பொருட்களை உருவாக்கும் பணியை செம்மைபட செய்தனர். இவ்வாறு சிறப்பாக தொழில் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்காக பணிகள் செய்யத்துவங்கியதும் அனைவருக்கும் மிகையான நேரம் மிச்சமாகி வந்தது. ஒவ்வொருத்தரும் இதில் ர்வம் காட்டத் துவங்கினார்கள். சோம்பேரிகளான ஒரு சிலரைத் தவிர. இவ்வாறு மற்றவர்களுக்கான பணிகளை செய்து தான் எப்படி சௌகரியப் படுவது என்று அனைவரும் சிந்திக்கத் துவங்கினார்கள். இவ்வாறாக அந்த புத்திசாலித்தனமான சமுகத்தில் ஒவ்¦ வாருத்தரும் தங்களுக்கான சிறப்பான இடத்தை பிடிக்க முனைந்தனர்.
னால் இப்படியல்லாமல், அந்த நூறாவது மனிதன் மலையடிவாரத்தில் நீர்த்தொட்டி செய்து மற்றவர்களிடம் ''நீங்கள் இதிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம் னால் பத்து நிமிடத்தில் நீங்கள் செய்யும் உற்பத்திகளை எனக்குத் தந்துவிட வேண்டும்'' என்று மட்டும் சொல்லியிருந்தால் அவர்கள் திரும்பி ''நாங்கள் தொன்னூற்றோன்பது பேர்கள் நீயோ ஒருத்தன், நாங்கள் நினைத்தால் தண்ணீர் எடுத்துக் கொண்டு பதிலுக்கு உனக்கு எதுவும் தரமாட்டோம் '' என்று சொல்லியிருப்பார்கள். இப்படியாகியிருந்தால் தனது புத்திசாலித்தனத்தால் லாபம் ஈட்ட நினத்த அவனின் திட்டங்கள் என்னவாகியிருக்கும்? அவன் தனது தினப்பிரச்சனைகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கவேண்டியதுதான். அவன் விழித்திருக்கும் அத்தனை மணி நேரத்தையும் தனக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே செலவு செய்ய வேண்டியதாயிருந்திருக்கும். அந்த சமுகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போயிருக்கும். அன்றுவரை கடைபிடிக்கப் பட்டு வந்த முட்டாள்தனம் தொடர்ந்திருக்கும். வாழ்க்கை என்பது ஒவ்வொருத்தருக்கும் சுமையாகிப் போயிருக்கும். வாழ்க்கையை தொடர வேண்டி நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதாயிருந்திருக்கும். வேலையைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்திக்கக் கூட முடியாததாயிருந்திருக்கும்.
னால் அந்த தொன்னூற்றொன்பது பேர்களும் நூறாவது மனிதன் சிந்திப்பதை தடுக்க முடியாது. அதனால்தான் இந்த சமூகமே முன்னேற்றம் கண்டது. அங்கு மேலும் ஒரு நூறு குடும்பங்கள் உருவாக உள்ளது. குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கும் இவ்வாறான வாழ்வுமுறை கற்றுக் கொடுக்கப் பட்டுவிடும். அங்கு போதுமான அளவு உற்பத்திகள் இருந்தது. அதனால் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு ஊதியமும் கொடுத்து இளையவர்களுக்கு கற்றுத்தரும்படி பணி கொடுக்கலாம்.
புத்திக்கூர்மை கூடுகையில் இயற்கையை பயன்பாடாக மட்டுமல்லாமல் ரசிக்கும்படியாகவும் கொள்ளச் செய்கிறது. மனிதர்கள் இயற்கையின் அழகு காட்சிகளையும் மிருகங்களையும் ஓவியங்களாக தீட்டும் கலை பிறக்க வழி செய்தனர். இயற்கையில் கேட்ட ஓசைகள் மற்றும் மனிதனின் பேச்சொலிகள் கியன இசை உருவாக காரணமாய் இருந்தது. இவ்வாறான கலைகளில் ர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள் தங்களின் முழு நேரத்தையும் கலைகள் படைக்கவே செலவு செய்தனர். மக்களை மகிழ்விக்கும் தங்களின் கலைப் படைப்புகளுக்குப் பதிலாக சமூகத்திடமிருந்து உற்பத்திகளைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறு இந்த முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும் சமூகத்தின் ஒவ்வொருத்தரும் தங்கள் உற்பத்தியிலிருந்து எதையாவது பிறருக்கு கொடுத்தாலும் தானும் கட்டாயம் பிறரிடமிருந்து எதையாவது பெற்றே கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பகை மற்றும் பொறாமை உணர்ச்சியின் காரணமாக தப்பான சட்டங்கள் பின்பற்றப் படும்வரை நேர்மையான உற்பத்தியாளர்களின் முன்னேற்றம் என்பது நிலையாகவே இருந்தது.
மற்றவர்களிடமிருந்து எதையும் பெறாமல் பிறருக்கு உற்பத்திகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் லாபம் என்று எதை குறிப்பிட்டுக் கொள்ளும்?
இந்தக் கொள்கைகள் தான் நமது கற்பனை சமூகத்தினைப் போல் அமெரிக்க நாட்டிலும் உள்ளது. லாபத்தினை எதிர்க்கும் சட்டங்கள் உற்பத்தியாளனின் முன்னேற்றைத்தை தடுக்கும் நடவடிக்கையாகும். அதனால் லாபம் என்பது பயப்படும் விஷயமல்ல. அதில்தான் அனைவரின் முன்னேற்றமும் அடங்கி உள்ளது.
இப்படி பிறர் நமக்காக உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுள்ள இந்த இயக்கத்தை தொடர வேண்டும் அதனை அழிக்க நினைக்கக் கூடாது. நாம் மற்ற மனிதர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும் இல்லையெனில் இந்த உலகம் நமக்கு நன்மை நினைக்காது.

அன்புடன்,

தாத்தா.

Tuesday, April 03, 2007

புழுக்கம்




அக்குள் வாடையில்
முகம் புதைக்கச் சொல்கிறாய்

எச்சில் சுவைத்து
மெய்மறக்கச் சொல்கிறாய்

உடலால் உடல் தடவி
ஒத்தடம் கொடுக்கச் சொல்கிறாய்

மூச்சுத் திணறுகிறேன்
மோகச் சுவாசம் என
தப்பாய் புரிகிறாய்

வார்த்தைகளால் நிலை
சொன்னேன் புரியவில்லை
உணர்வாயென்பது பொய்

கதவடைத்துப் போகிறாய்
வந்ததும் கதவடைக்கிறாய்

வீடெங்கும் மனக்கூடெங்கும்
புழுக்கம் புழுக்கம் புழுக்கம்

மதியழகன் சுப்பையா
மும்பை