Saturday, December 27, 2003

அவளும் மல்லிகையும்- 5,6

5
உன் மீது
சவாரி செய்ய
ந்ன் வாங்கி வரும்
பயணச் சீட்டுதான்

மல்லிகைச் சரம்
எனக் கிண்டல் செய்வாய்
என் இடுப்பில் அமர்ந்த படி.


6.
கட்டிலெங்கும்
மல்லிகை பரப்பி
மல்லாந்திருந்த உன்
யோனி முகர்ந்து
முத்தமிடுகையில்
மல்லிகைக் காடானது
மனசு.

அவளும் மல்லிகையும்- 4


இன்றைக்கு
வேண்டாமென
உதட்டில் பூசிய
என் எச்சிலை துடைத்தாய்
காரணம் கேட்டதற்கு
தலையில் கொத்தாய்
மல்லிகை காட்டினாய்
வீட்டிற்கு தூரமென
என்னையும்
தூரம் வைத்தாய்.

அவளும் மல்லிகையும்- III

3
ஒரு முறை
தலை மணக்க
மல்லிகை சுமந்து வந்தாய்
கை கனக்க
மல்லிகை சுமந்து நானும்

இன்னொரு முறை
வெறுங்கூந்தலோடு
வந்திருந்தாய்
கையும் பையும்
வெறுமையாய் நான்.

அவளும் மல்லிகையும்-II


ஜாக்கெட் ஊக்கை
மாட்டிக் கொண்டிருந்த
உன் கைகள்
உதிர்ந்த மல்லிகைகளை
பொறுக்கிய என் கைகளை
தட்டி விட்டது
காரணம் சொல்லாமல்
அப்படி செய்யக் கூடாது என்றாய்
பாவாடை நாடாவை இறுக்கியபடி
ஆனாலும்
வாசனை மூளையிலும்
மல்லிகை புத்தகத்திலும்
பத்திரமாய் இருக்கிறது.

அவளும் மல்லிகையும்


வாங்கிச் சென்ற
மல்லிகைப் பூவை
வேண்டாம் என்ற போது

ஏன் ? என்று கேட்க வில்லை

வீசி எறிந்து
கோபப் படவில்லை

கசங்காமல் வீட்டிற்கு
எடுத்து செல்வது பற்றி
சிந்தித்திருந்தேன்

அடுத்த சந்திப்பின் போதும்
மல்லிகையுடன் வருவேன்.

Friday, December 05, 2003

நான்........

காட்சிகள் பற்றியே
கவிதைகள் தந்தவன்
கண்கள் இல்லாதவன்

உன்னத உணர்ச்சிகளை
ஓவியமாக்கியவன்
வண்ணங்கள் இல்லாதவன்

உலகின் தூரங்களை
ஓடிக் கடந்தவன்
கால்கள் இல்லாதவன்

ஒப்பில்லாத உயர்ந்த
கருத்துகள் உரைத்தவன்
பேச்சு இல்லாதவன்

மங்கயர் மே னியின்
மகத்துவம் சொ ன்ன வ ன்
மன ங களை தெ ரயாதவ ன்

இ ம ய ச் சிகரங்களை
எட்டித் தொ டுபவ ன்
இ தயம் தொ ட ா த வ ன்

காதல் சுவைப் பட
காவியம் செய்தவன்
காதல் தெரியாதவன்

வாழும் முறைகளை
எழுதி வைத்தவன்
வாழத் தெரியாதவன்.