Thursday, December 07, 2006

சிட்டுக் குருவி

இந்தியில்: ரவிந்திர காலியா
தமிழில்: மதியழகன் சுப்பையா


கோடை காலத்தின் பிகாஷமான மதியப் பொழுது. இலை கூட அசையவில்லை. வெயிலின் கடுமை, அடர்ந்த காடுகளையும் தாண்டி உடலில் நெருப்பு நாக்குகளால் நக்கிக் கொண்டிருந்தது. இந்த கொடுமையான சீதோஷ்ணநிலையில் றுதலான விஷயம் சிட்டுக் குருவியின் மதூரமான குரல் மட்டும்தான். மதியத்தின் இந்த பேரமைதியில் அதன் குரல் மரம், செடி- கொடிகள் மீது பட்டாம்பூச்சியாய் தாவிக் கொண்டிருந்தது.
அந்தக் குரலின் இனிமையை பற்றிக் கொண்டே நான் வெளியில் தோட்டத்திற்கு கிளம்பினேன். மரத்திற்கு கீழே போடப் பட்டிருந்த கட்டிலில் படர்ந்தேன். குருவி அமைதியாகி விட்டாள், சுற்றுசூழல் கொழுந்து விட்டு எரிவது போல் இருக்கும். இப்பொழுது எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். குருவி பேசியது என்றால் பிரலயம் இன்னும் வெகு தூரம் இருப்பது போல் இருக்கும். பூமியில் வாழ்வின் சின்னம் மிச்சமிருக்கிறது.
குருவி என்ன சொல்கிறாள் என்று எப்பொழுதும் ஒரு தெளிவின்மை இருந்து கொண்டே இருக்கும். பூமியில் உள்ள மற்ற ஜீவராசிகளைப் போல் குருவி ஏன் ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்? அவள் சொல்வதை எழுத்து வடிவமாக்க நினைத்திருதேன். னால் எழுத்தேட்டில் இவற்றை எழுத எழுத்துகள் இல்லை. நீண்ட காலமாக இந்த முயற்சியில் இருந்தேன். னால் எதுவும் காது என்று தெரிந்ததும் இந்த முயற்சியை கை விட்டு விட்டேன். னால் அவள் என்ன சொல்கிறாள் என்பது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன். குருவி 'ஹர் ஹர் மகாதேவ்' என்று சொல்கிறது என்றும் காயத்திரி மந்திரத்தை பாடிக் கொண்டிருக்கிறது என்றும் வேத நூலின் ஏதோ ஒரு பாடலை படிக்கிறது என்றும் நான் விளங்கிக் கொண்டேன். இல்லை இது வெறும்பேச்சு உனக்கு உள்ளே இருக்கும் இந்துத்துவம் உன்னை இவ்வாறு சொல்ல வைக்கிறது. னால் குருவி 'அல்லா- ஓ- அக்பர், ' ஹே குதா-ரஹிம்' என்றல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறது. குருவி அல்லா, அல்லா என்றுதானே முனங்கிக் கொண்டிருக்கிறது? இல்லை குருவி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இல்லை காலிஸ்தானுக்கு தனியாட்சி கேட்கிறது. இப்படியெல்லாம் சொல்வது நிஜத்தை திசை திருப்பும் வேலையாகும்.
உண்மையில் அது தனது காதலனின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவனை ஒவ்வொரு ஒவ்வொரு இலையிலும் கிளையிலும் தேடித் தேடி கலைத்துப் போய் விட்டது. மிகுந்த மனக் கஷ்ட்டத்துடன் மரத்தின் ஏதோ ஒரு கிளையில் அமர்ந்தபடி அவனை அழைத்துக் கொண்டிருக்கிறது. எதாவது சாப்பிட்டதா என்று தெரியாது. ஒருவேளை இந்த குருவி பசியுடன் இருக்கிறதோ? காத்திருக்கா அமர்ந்தவள் பட்டினிப் போராட்டத்தை துவங்கி விட்டதோ? அவள் தற்கொலை முயற்சியில் ஏதும் இருக்கிறதோ என்னவோ? கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே இங்கே பறந்து கொண்டிருக்கும் போது கள்ளப்பருந்தின் பெயரைக் கேட்டுக் கொண்டாதோ? மனிதனின் மனதில் பலப்பல குழப்பங்கள் எழும்போது மரம், செடி பறவை பூச்சிகள் கியவை அதை விட்டு எப்படி விலக்கி வைக்க முடியும்? இவைகளும் இந்த சுற்றுச் சூழலின் அங்கம் தானே. சூறாவளியை விடவும் வேகமாய் சுழன்று அழிக்கிறது கலாச்சார சூழல். ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கடைகளின் வாசலிலும் பண்பாட்டுச் சின்னங்கள் பறந்து கொண்டிருந்தது. சம்பிரதாயங்கள் சுவரொட்டிகளைப் போல் சுவற்றில் ஒட்டப் பட்டு விட்டன. இப்படிப் பட்ட விஷமயமான உலகச் சூழலில் இந்தச் சிறிய சிட்டுக் குருவி மட்டும் எப்படி கலங்கம் இல்லாமல் இருக்க முடியும். அதனுடைய குரலைக் கேட்கும் போது அது இவ்விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறது என்றே படுகிறது.
கொஞ்ச நேரத்திற்கு குருவியின் குரல் கேட்கவில்லை. உடனே எனது பார்வை மரத்தின் உச்சிக்குப் போனது. குருவியைத் தேடியது. னால் குருவி கீழே கிளையில் அமர்ந்து இருந்தது. பாவம் அது மிக நீண்ட காலமாக ஒரு கூடு கட்டிவிட முழு முயற்சியில் இருக்கிறது. இந்த நேரம் கூட அதன் வாயில் ஒரு காய்ந்த புல் இருந்தது.
அது புல் அல்ல, அது ராமக்கல். அது கட்டப் போவது கூடு அல்ல ராமர் கோயில். ராமனின் மகிமை உலகம் அறிந்த ஒன்றாகும். திடீரென மசூதியிலிருந்து பாடல் ஒலி கேட்டதும் எனது கவனம் கலைந்தது. நானும் கற்பனையில் என்னென்னமோ எண்ணி விட்டேன். எனக்கு நினைவு இருக்கிறது இந்த கட்டிடத்தின் மிகச் சரியாகப் பின்னால் மசூதி இருக்கிறது. அதற்கு முன்னால் லமரத்தடியில் ஹனுமான் கோயில் இருக்கிறது. இந்நேரம் நான் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருந்து பார்க்கையில், கோயிலின் மேல் கலசமும் அதன் பின்னால் மசூதியின் கூம்பு வடிவக் கூறையும் தெரிந்தது. நான் கிழக்கு நோக்கி முகம் காட்டி அமர்ந்து விட்டாள் வலதுபுறம் கோயிலும் இடதுபுறம் மசூதியும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியும். இவைகளுக்கு இடையில்தான் எனது வீடு இருக்கிறது.
குருவி தனது அறிவினை வெளிப் படுத்தும் வகையில் கோயிலுக்கும் மசூதிக்கும் இடையில் தனது கூட்டினை கட்ட இடம் தேர்ந்து இருந்தது. கோயிலின் ஒரு பொந்தில் தனது கூட்டினை கட்டுவதிலிருந்தும் மசூதியின் கலைவேலைபாட்டு ஜன்னல்களிலும் று இன்ச் இடத்தில் தனது கூட்டினை கட்டிக்கொள்வதிலிருந்தும் குருவியை யார் தடுத்திருக்க முடியும். னால் குருவி இவ்வாறான மத விஷயங்களில் விழுந்துவிட விரும்பவில்லை.
குருவி தனது கூட்டை கட்டும் கடும் முயற்சியினை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது புல்-மெல்லி குச்சிகளை தேடிக் கொண்டுவரும். சிறிது நேரம் இளைப்பாரும். இரண்டு மூன்று முறை தனது குயில் போன்ற குரலால் அங்கு உரைந்திருக்கும் அமைதியை உடைக்கும். பின் மெல்லிய குச்சிகள் தேடி மாயமாகி விடும். இந்தக் குருவி எதற்காக இத்தனை அழகான ஒரு கூட்டினை கட்டுகிறது என்றுத் தெரியுமா? இதற்கு முன் இந்தக் குருவி எங்கே இருந்திருக்கும். தனக்காக ஒரு இல்லம் அமைத்துக் கொள்ளப் போகிறதா? இல்லைதான் தங்கிக் கொள்ள ஒரு இடம் அமைத்துக் கொள்ளப் போகிறதா? இப்படியாக பலக் கேள்விகள் என்னுள் எழுந்தது.
மறுநாள் காலையில் பார்த்தேன். கூடு முழுமையடைந்து இருந்தது. இதோ அந்தக் குருவி இந்தக் கூட்டின் அங்கத்தினர் கி விட்டது. குருவிக்கு முகவரி கிடைத்து விட்டது. எனது முகவரியும் குருவியின் முகவரியும் ஒன்றாகவே இருந்தது. இனி குருவி தனது காதலனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். தனக்கு ரேஷன்கார்டு செய்து கொள்ளலாம். தனக்காக ஓட்டுரிமை பெற்றுக் கொள்ளலாம். தனது அடையாள அட்டைக் கூட செய்து கொள்ள முடியும்.
கொஞ்ச நாட்களிலேயே எனக்கும் குருவிக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டது. ஒருநாள் வீட்டின் ஒலித்துளையில் வந்து அமர்ந்து கொண்டு என்னோடு வினா விடை பழகிக் கொண்டிருந்தது. இன்று ஏன் நீங்கள் வெளியில் வரவில்லை? கேட்டது குருவி. எனக்கு முன்னால் உட்கார்ந்தபடி சிகரெட் புகைக்கவில்லையே ஏன்? கேள்விகள் அடுக்கப் பட்டது.
''வருகிறேன்! வருகிறேன். நீ உனது ராகத்தினை துவங்கு நான் வந்து விடுகிறேன்'' என்றேன்.
அதனுடன் நட்பு உண்டானதிலிருந்து எனது பொழுது மிக நன்றாக கழிகிறது. இந்த ஒரு வார நட்பின் ழத்தில் குருவியானது பைரவி ராகத்திலிருந்து ஜை ஜைவந்தி ராகம் வரை எல்லாவகை ராகங்களையும் பாடிக் காட்டி விட்டது.
குருவியின் ஊர் சுற்றல் கொஞ்சம் குறைந்து போயிருந்ததை நான் உணர்ந்தேன். எப்பொழுதும் தனது கூட்டிலேயே காணப் பட்டது. ஒருநாள் காலை நான் மகிழ்ச்சியால் பைய்த்தியமாகி விட்டேன். அதன் அக்கம்பக்கத்தில் மேலும் இரண்டு சின்னச் சின்னக் குருவிகள் உட்கார்ந்து இருந்தது. புதிய அங்கத்திருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. வீடு மகிழ்ச்சிப் பாடல் பாடத் துவங்கியது. புதியக் குருவிகள் மிகப் பாதுகாப்பாக வளர்க்கப் பட்டது. அவைகளின் மிகச் சின்னச் சின்ன அசைவுகள் குறித்தும் வெகு நேரம் விவாதிக்கப் பட்டது.
ஒருநாள் திடேரென குருவியைக் காணவில்லை. குஞ்சிக் குருவிகள் தனியாகக் கிடக்கிறது. மதியம் வெளியில் வந்து பார்த்தபோதும் குருவியைக் காணவில்லை.
குஞ்சிக் குருவிகள் இரண்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அவை தனது தாய் குறித்து என்னிடம் புகார் சொல்வது போல் இருந்தது. நான் அவைகளுக்கு உதவலாம் என்று எண்ணினேன். னால் இந்த நேரம் அவர்களுக்கு என்னத் தேவையாக இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாதே. மாலையாகி விட்டது குருவி இன்னும் திரும்பவில்லை. எனது கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்தக் சின்னக் குருவிகளின் நிலை என்னவாகும்?. இந்தக் குருவிகளுக்கு யார் உணவு கொடுப்பார்கள்? இவைகள் இன்னும் ஒழுங்காய் பறக்கப் பழகிக் கொள்ளவில்லையே. நல்ல விஷயம் என்னவென்றால் குருவி தனது கூட்டை மரத்தின் உச்சிக் கிளையில் கட்டியிருந்தது. இல்லையெனில் இதற்குள் பூனை அந்தக் குருவிக் குஞ்சுகளை ஏப்பம் விட்டிருக்கும். பலமுறை அந்தப் பூனை குருவிக் குஞ்சுகளை எச்சில் ஊறியபடி ஏக்கப் பார்வை பார்ப்பதை நான் பாத்திருக்கிறேன். பூனௌ கொஞ்ச நேரத்திற்கு அங்குமிங்கும் துள்ளிக் குதித்து வெறிகொண்டு உற்சாகமாகும். னால் குருவிக் குஞ்சுகள் பூனைக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. கலைத்துப் போய் பூனை திரும்பி விடும்.
குருவி இன்னும் திரும்பவில்லை, திரும்பக் கூடாது என இருக்கிறதோ. நான் இரவில் டார்ச் எரித்து பார்த்தேன். இரண்டு குஞ்சுகளும் அமைதியாய் உட்கார்ந்திருந்தன. தனது அம்மா எங்கே இருக்கிறாளோ? வழி தவறி விட்டாளோ? அவை எவ்வளவு நேரம்தான் பசியோடு இருக்கும்? அந்தக் குஞ்சுகள் பாவம் என்ன நினைத்துக் கொண்டிருக்குமோ?
நேற்று வரை எனக்கு குருவியின் மீது நிறைய அன்பு இருந்தது. னால் இன்று நான் அதன் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நான் அதனை ஒரு தாய்மை நிறைந்த தாயகத்தான் கண்டு உணர்ந்திருக்கிறேன். தனது இந்தக் பிஞ்சுக் குழந்தைகளுடன் அது இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ளும் என்று கற்பனைக் கூட செய்ததில்லை. நான் இருந்த கோபத்திற்கு அது மட்டும் என் முன்னால் வந்து நின்றால் ஓங்கி நான்கைந்து அரைகள் விட்டிருப்பேன். சமாதானப் படுத்திக் கொண்டு குஞ்சுக் குருவிகளை அழைத்தேன். இருளில் இருந்து வந்த அழைப்பொலியைக் கேட்டுக் குஞ்சுகள் இரண்டும் தனது இறக்கைகளை படபடத்தது. நான் கொண்டு வந்திருந்த கடலைகளை கூட்டில் எரிந்து விட்டு கனத்த மனதுடன் வந்து படுத்துக் கொண்டேன்.
''இப்பொழுது பேசாமல் படுத்துத் தூங்குங்கள். ஒரு குருவிப் பின்னால் இப்படியா பைய்த்தியம் பிடித்து அலைவது'' மனைவி கடிந்து கொண்டாள். ''ஒருவேளை அது இடையில் எப்பொழுதாவது வந்து தனது குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து விட்டுப் போயிருக்கலாம் இல்லையா'' என்று என்னை சமாதானப் படுத்தினாள்.
''இல்லை, அது வரவேயில்லை. குஞ்சுகள் இரண்டும் பட்டினியால் வாடிக் கிடக்கின்றன. கூட்டில் கடலைகளை போட்டுவிட்டு வந்திருக்கிறேன் கொறித்துக் கொள்ளட்டும்'' என்று மனைவிக்கு பதிலளித்தேன்.
'' போங்க, போய் பாட்டிலில் பால் நிரப்பி கொடுத்து விட்டு வாருங்கள்'' மனைவி விஷமமாகச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
''பெண்கள் அனைவரும் சுயநலக்காரர்கள். அந்தக் குருவியைப் போல'' நான் அனலாகி பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டேன்.
காலையில் தூக்கம் கலைந்ததும் எரிகின்ற கண்களை கசக்கிக் கொண்டு கூட்டினைப் பார்த்தேன். குருவியைக் கூண்டில் பார்த்து மகிழ்ச்சி கரைபுரண்டது. தாய்க் குருவி தனது இரண்டு குஞ்சுக் குருவிகளுக்கு நடுவில் கர்வமும் புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தாயைப் போல் அமர்ந்திருந்தது. பிள்ளைகளுக்கு தனது அலகால் மாறிமாறி எதையோ ஊட்டிக் கொண்டிருந்தது. நானும் நாற்காளியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். தாய் பிள்ளைகளின் பாசப் பரிமாறல்களையும் கொஞ்சல்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். மதியம் னதும் குருவி பரபரத்தது. அந்த தோட்டத்தையே தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டது போல் கம்பீரமானது. மதியத்திற்குப் பின் வேறு ஒரு செய்தி கிடைக்கப் போகிறது என்று நான் கொஞ்சமும் உணரவில்லை.
மாலையில் வெளியில் வந்ததும் கூண்டில் குருவி மட்டுமல்ல குஞ்சுகளில் ஒன்றைக் காணவில்லை. ஒரேயொரு குஞ்சு மட்டும் தனியாக இருந்தது. ஒருவேளை பருந்து எதாவது ஒரு குருவிக் குஞ்சை தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? என்று எனக்கு அச்சமாக இருந்தது. னால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. கூட்டுக்கு மேலு பாதுகாப்பு கவசம் இருக்கிறதே. பருந்தின் பார்வை இந்தக் கூட்டில் பட வாய்ப்பே இல்லையே. அப்படியானால் தாய்க் குருவியும் ஒரு குஞ்சுக் குருவியும் எங்கே போய் விட்டன. நான் அதிக நேரம் கவலைப் படும்படியாக இல்லை. சின்னக் குருவி ரப்பர் மரச்செடியின் கீழ் உட்கார்ந்திருந்தது. நான் அதை நோக்கிப் போகையில் அது பறந்தோடி அடுத்த கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து பறந்து சீதாப்பழ மரக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தாவித் தாவிப் பறந்தது. அது பறக்கும் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாய் விளங்கியது. தனது முயற்சியைக் கண்டு தானே புலங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை பறக்கும் போது ஒரு சிறிய தொலைவை நிச்சயித்து கடந்து வெற்றிக் காண்கிறது. பின் அது குருவிகள் கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டது. அவைகளின் மத்தியில் அது ராஜகுமாரியைப் போல் காணப் பட்டது. குருவிகள் அனைத்தும் இரை பொறுக்கிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு மத்தியில் இந்தச் சின்னக் குருவி தனது கழுத்தை நிமிர்த்தி மிக கம்பீரமாக உட்கார்ந்திருந்தது. மற்றக் குருவிகள் அதன் பாதுகாவலர்களைப் போலும் சேவகர்களைப் போலும் காட்சியத்தன.
''நீயும் எதையாவது பொறுக்கிக் கொள். உனக்கு உணவு பொறுக்கத் தெரியாதா?'' நான் கேட்டேன். மேலும் '' நீயும் சாப்பிட்டுக் கொள் உனது தங்கைக்கும் கொண்டு கொடு'' என்றேன்.
குருவி எனது பேச்சைக் கேட்கவில்லை. கூட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. இப்பொழுது இரண்டு குஞ்சுக் குருவிகளும் கூட்டில் உட்கார்ந்து ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தது. பெரியக் குருவி தனது முதல் பறத்தல் அனுபவத்தை ஒப்புவித்துக் கொண்டிருந்தது. பறக்கக் கற்றுக் கொண்ட பிறகு கூட்டிலா தங்கும் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டது. இப்பொழுதும் தாயையும் மகளையும் காணவில்லை. நான் நீண்ட நேரம் அவர்கள் இருவருக்காக காத்திருந்தேன் னால் அவர்கள் திரும்பவில்லை.
''ஊர் சுற்றிங்க ரெண்டும் கிளம்பிட்டுங்க'' என்று கூட்டில் தனியாக இருந்த குஞ்சுக் குருவியிடம் சொன்னேன். '' உன்னுடைய தாயும் சகோதரியும் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார்கள். அவர்களுக்கு யார் குறித்தும் எந்த பயமும் இல்லை. அவர்கள் திரும்பி வந்தால் அவர்களுடன் பேசாதே. அவர்களுடன் 'கா' விட்டு விடு. அவர்களை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்'' என்று குருவியை சமாதானப் படுத்தினேன்.
இரவு வெகு நேரம்வரை அவை இரண்டும் திரும்பவேயில்லை. மனைவியையும் பிள்ளையையும் காணாது தவிப்பதைப் போல் நான் தவிப்பும் கவலையும் கொண்டேன். தாய் குருவியின் இந்த பொறுப்பற்ற ஊர்சுற்றல் விவகாரம் ஒரு நாள் முன்னமே தெரிந்து போன விஷயம்தான். அந்த சின்னக் குருவியின் இவ்வாறான செயலால் தான் நான் இத்தனை கோபமும் கவலையும் கொண்டுள்ளேன். பிறந்து இன்னும் நான்கு நாட்கள் கூட கவில்லை அதற்குள்.......
''இதுக்கு பெயர்தான் இறக்கை முளைப்பது என்பது. புதிதாக முளைத்திருக்கிறது இல்லையா அதனால் தான் இப்படி அலைகிறது'' நான் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் வெளியில் போய் சின்னக் குருவியைக் கூட பார்க்கவில்லை. சிட்டுக் குருவியின் குடும்பத்துடன் எனக்கு உறவு அறுந்து போனது.
மறுநாள் காலைக்குள் மீதமிருந்த அந்தக் குருவிக்கும் இறக்கை முளைத்து விட்டது. அது தனது தனிமையின் காரணமாக கவலை கொண்டதாக தெரியவில்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தது போலவே பட்டது. அது மீண்டும் மீண்டும் கூட்டிலிருந்து பறந்து தாவி ரப்பர் மரச் செடியின் இலையில் அமர்ந்து போகும். அவ்வாறு அமரும் போது இலை தாழ்ந்து போகவே கீழே வழுக்கி விழும். ஒவ்வொரு முறையும் அது விழுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும். கொஞ்ச நேரத்திற்கு கூட்டில் அமைதியாக இளைப்பாரும் பின் மீண்டும் இந்த விளையாட்டிற்கு சென்று விடும்.
'' அட முட்டாளே! இலையில் இல்லை. கிளையில் உட்கார்.'' நான் கத்தினேன். குருவி எனது எச்சரிக்கையையும் அக்கரையையும் கண்டு கொள்ளாது வழுக்கி விழும் விளைட்டை தொடர்ந்தது. மதியத்திற்குள் இந்த சின்னக் குருவியும் கொஞ்சம் தேறி விட்டது.
'' போச்சுடா, இதற்கும் இறக்கை முளைத்து விட்டது போல'' என்றேன் நான்.
அந்தக் சின்னக் குருவி அங்குமிங்கும் பறந்து மரத்தின் அடிக்கு வந்து போவது எனக்குள் பயத்தை ஏற்படுத்தியது. இது நிச்சயமாய் பூனைக்கு இரையாகிப் போகப் போகிறது. நான் மிக நீண்ட நேரமாக அதற்கு காவலாய் இருந்தேன். இந்தக் குருவிக்கு தன்னைப் பற்றியக் கவலை இல்லை. இதன் தாய் மற்றும் சகோதரி குருவிக்கு இதனை பற்றியக் கவலை இல்லை. இந்தக் குருவிகளுக்குத்தான் இலவசமாக காவல்காரன் கிடைத்து உள்ளானே. நான் முனுமுனுத்துக் கொண்டேன். அது கூட்டுக்கு வரும் வரை நான் தோட்டத்திலேயே உட்கார்ந்து இருந்தேன்.
மிகக் கடுமையான அதிருப்தியுடன் இனி இந்தக் குருவிகளுக்காக நான் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன். குழந்தைத்தனமும் துரோகமும் இவைகளின் உடலெங்கும் நிறைந்து உள்ளது. முதலில் இவைகள் தன் இனிமையான குரலால் வசப் படுத்தும், வேடிக்கையான செயல்களால் கவர்ந்து கொள்ளும் பின் இறக்கை முளைத்தவுடன் பறந்து காணாமல் போய் விடும். நான் இனி மதிய நேரத்தில் தோட்டத்திற்குப் போக மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
மாலையில் நான் உற்சாகமாக புன்னகைத்துக் கொண்டே வெளியில் வந்தேன். கூட்டைப் பார்த்தேன் கூடு வெறுமையாகக் கிடந்தது. அதில் யாரும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளமும் இல்லை. நான் அங்கிருந்த அனைத்து மரங்களின் கிளைகள் இலைகள் என்று எனது பார்வையை படபடவென ஓட விட்டேன். னால் குருவிக் குடும்பத்தின் ஒரு சின்ன அடையாளமும் அங்கு தென் படவில்லை. எனக்கு பெரிதாக அதிர்ச்சி ஏற்படவில்லைதான் காரணம் நான் என்னை இந்த நிலைக்காக கொஞ்ச கொஞ்சமாக தயாராகி விட்டிருந்தேன். எனக்குத் தெரியும் இந்த கடைசிக் குருவியும் என்னை விட்டு போய் விடும் என்பது நிச்சயமாகத் தெரியும்.
நான் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பசும் இலைகளிலும் வண்ணப் பூக்களிலும் தாவிக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளின் நடனத்தை கண்டு ரசிக்கலானேன். இதற்கிடையில் மரக் கிளைகளில் எங்காவது குருவிகள் என்னுடன் கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எனது பார்வை கோயில் கலசத்தில் பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன். குருவியின் குடும்பம் அங்கு உட்கார்ந்திருந்தது. கவலையில்லாமல், வருத்தமில்லாமல், மிக்க மகிழ்ச்சியாக. சின்னச் சின்ன இடைவேளையில் குருவிகளின் அலகுகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் பின் பிரிந்து விடும். அவைகளின் சுதந்திரத்தை கண்டு நான் மிகு மகிழ்ச்சி கொண்டேன். அவை மூன்றும் அங்கு உல்லாசமாய் சுற்றுலாப் பிரயாணிகளைப் போல் மகிழ்ந்து கொண்டிருந்தன.
மனைவி எனக்கு மிக அருகில் இருந்து நகர்ந்த அவளை நிறுத்தினேன். '' அங்கே பார். சின்னக் குடும்பம் மகிழ்வான குடும்பம். அவை மூன்றும் எத்தனை உல்லாசமாகவும் மகிழ்ச்சியாகவும் கோயில் கலசத்தில் உட்கார்ந்து இருக்கின்றன'' நான் மனைவியை பார்க்கச் செய்தேன்.
''அவை மூன்றையும் ஒன்றாகப் பார்ப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. அவை கோயில் கலசத்தில் ஏன் உட்கார்ந்து இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா?'' நான் கேட்டேன்.
''ஏன் அப்படி உட்கார்ந்து இருக்கின்றன?'' மனைவி கேட்டாள்.
'' ஏனென்றால் இவை அனைத்தும் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்து உள்ளன. சில பழக்கங்களுக்கு பிறப்பு காரணமாக இருக்கிறது. அவை ஓய்வு எடுத்துக் கொள்ளத்தான் கோயில் கலசத்தில் உட்கார்ந்து இருக்கின்றன என்பது சும்மா விஷயம்.'' என்றேன் நான்.
''உங்க மூளையில் அழுக்கு படிந்து போய் விட்டது'' மனைவி சிடுசிடுத்தாள். ''கொஞ்ச நேரம் முந்தான் அவைகள் மசூதியின் உச்சியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தேன். மசூதியில் தொழுகை அழைப்புப் பாடல் சத்தம் கேட்டதும் அவைப் பறந்து வந்து கோயில் கலசத்தில் உட்கார்ந்து கொண்டன. இதெல்லாம் ஒலிப்பெருக்கியின் வேலைதான் வேறொன்றுமில்லை'' என்றாள் மனைவி.
நான் உடைந்து போய் விட்டேன். கோயிலில் ரத்தி பூசை துவங்கியதும். அவை மூன்றும் வெவ்வேறு திசைகளில் பறக்கத் துவங்கியது. கொஞ்ச நேரத்தில் அவை மூன்றும் தோட்டத்தில் வந்து இறங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை அவை கூட்டைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
உண்மை என்னவென்றாள். குருவி என்னை முற்றிலும் மறந்தே போனது. பகலில் எப்போதாவது தோட்டத்தில் காணப் படும். தனித்தனியாக அல்லது மொத்தம் மூன்றுமாக. பிறந்த இடத்தின் ஈர்ப்பு இவர்களை இங்கு இழுத்து வருகிறதோ என்று நினைத்துக் கொள்வேன். பிறப்பிடம் என்ற வார்த்தையையே நான் வெறுக்கத் துவங்கினேன். னால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக என்னால் சொல்லவும் முடியும். ஏனென்றால் இங்கு ஒரு குருவிதான் பிறந்தது, கடவுள் இல்லை.
------------------------------------------------------------------------------
ரவிந்திர காலியா: இவர் இந்தி இலக்கிய உலகில் மிகவும் அறியப் பட்ட எழுத்தாளர். இவரது மனைவி மம்தா காலியாவும் இந்தி இலக்கிய உலகில் பிரபலமான நாவல் எழுத்தாளர் மற்றும் கதாசிரியர். ரவிந்திர காலியா மிகவும் உயிர்ப்பான மனிதர். தனது எழுத்தில் எப்பவும் ஜீவனை வைத்து எழுதுபவர்.
இவர் கடந்த ண்டுகளில் தனது படைப்புகள் மூலம் இலக்கிய உலகில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் கடும் விவாதங்களையும் துவக்கி வைத்தார்.
இவரது எழுத்தில் புதுமையும் புரட்சி எண்ணங்களும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் தைரியமும் அடங்கி உள்ளது. இவரது கதைகள் முதுகெழும்போடு நிமிர்ந்து நிற்கிறது. விவாதங்களை துவக்கி வைக்கிறது.
கதைகளில் மட்டுமல்ல தனது சொந்த வாழ்க்கையிலும் ரவிந்திர காலிய ஏற்ற இறக்கங்களையும் பல வண்ண மாற்றங்களையும் கண்டு கடந்து உள்ளார்.
இவர் இதுவரை சுமார் இருபத்நான்கு புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது 'குதா கி சலாமத்'' என்ற நாவல் குறிப்பிடும்படியானது. ''நவ் சால் கி சோட்டி பத்னி', 'காலா ரஜிஸ்டர்', ' கரிபி ஹட்டாவோ', 'பாங்கே லால்'' 'கலி-கூச்'', 'சகை யா நீம்'' மற்றும் 'சத்தாயிஸ் சால் கி உமர் தக்'' போன்ற புத்தகங்கள் குறிப்பிடும் படியானவை.

Friday, December 01, 2006

பரதேசி

இந்தியில்: மம்தா காலியா
தமிழில்: மதியழகன் சுப்பையா

எங்கள் குடும்பம் வித்தியாசமானது. மூன்று சகோதர-சகோதரிகளும் மூன்று நாடுகளில் வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். பிரிவு துயரம் அதிகமாக வாட்டும் போது தொலை பேசிகளில் அழைத்து நீண்ட நேரம் பேசி றுதலடைவார்கள். அன்பு நிறைந்த வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொள்வார்கள். அடுத்த ண்டு கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று உறுதி சொல்வார்கள். கொஞ்ச நாட்களுக்கு மனது அமைதியாகிக் கிடக்கும் மீண்டும் இதே கதை தொடரும்.
முதலில் அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். லக்பத்கோட்டின் பெரிய வீடும் சிரியதாகப் பட்டது. அங்கேதான் அனைவருக்கும் திருமணம் னது. அனைவரும் வேலை வாங்கிக் கொண்டது அங்கிருந்ததான். அண்ணன் அங்குள்ள பெரிய பள்ளியில் சிரியராக பணியாற்றி வந்தார். சகோதரி பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் பணியில் இருந்தார். நீரத் கபூர்தாலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தான்.
அண்ணன் பத்திரிக்கைகளை மிக கவனமாக வாசிப்பார். அமர்ஜித் பத்திரிக்கைகளை புரட்டிக்கூடப் பார்க்க மாட்டாள். நீரத் கல்லூரி சென்று பல பத்திரிக்கைகளை வாசித்து விடுவான். அவனுக்கு இலக்கியத்தில் அதிக ர்வம் இருந்தது.
அண்ணனுக்கு கனடா செல்லும் வாய்ப்பு தெரிந்தது. பத்திரிக்கைகளில் கனடாவில் பள்ளிகளில் பல பொறுப்புகளுக்காக ட்கள் தேவை என்ற விளம்பரங்கள் அவரது பார்வையில் பட்டது. அண்ணனும் அண்ணியும் நான்கு படிவங்களை வாங்கி வரச் சொன்னார்கள். வீட்டில் இது குறித்து கடுமையான விவாதம் ஏற்பட்டது.
'' அண்ணன் தம்பி இரண்டு பேரும் போய் விட்டால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்.'' என்று அம்மாவும் அப்பாவும் கேட்டார்கள். ''அமர்ஜீத் இருக்கிறான், பங்கஜ் இருக்கிறான் மற்றும் உங்கள் சொந்தம்பந்தம் எல்லாம் இங்கேதான் இருக்கிறது. உங்களுக்கு என்ன கவலை'' என்று அண்ணன் சொன்னார்.
''பிள்ளைகளின் கைகள் படவில்லை என்றாள் சொர்க்கம் எப்படி கிடைக்கும்?'' அம்மா அழத் துவங்கினாள்.
'' நாங்கள் அங்கு சென்றதும் உங்கள் இருவரையும் அழைத்துக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் அமர் மற்றும் பங்கஜ்க்கும் அங்கேயே வேலை பார்த்துக் கொள்ளலாம்'' என்றார் அண்ணன் தனது முடிவில் உறுதியாகவும் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பாமலும்.
மாலையில் நீரத் கபுர்தாலாவிலிருந்து திரும்பியதும் ''நீ சரியான சுயநலக்காரனாகி விட்டாய். யாரிடமும் சொல்லாமல் வெளிநாடு போக திட்டம் போட்டு விட்டாய், அப்படித்தானே!'' என்று அப்பா கேட்டார்.
நீரத் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். விஷயத்தை கேட்டவுடன் கடுமையாக கோபம் கொண்டான். ''எனக்காக முடிவெடுக்க இங்கு யாருக்கும் உரிமையில்லை. அது கனடாவாக இருந்தாலும் சரி டிம்பகண்டாக இருந்தாலும் சரி, நான் போக மாட்டேன்'' என்றான் உரக்க. அண்ணன் விட வில்லை ''இங்கு நீ வாங்குவதை விட நாற்பது மடங்கு அதிகம் அங்கு சம்பளம் கிடைக்கும் நம் வீட்டின் தரித்திரம் காணாமல் போய் விடும்'' என்றார்.
''நம் வீட்டின் தரித்திரத்தை நீங்கள் கழுவுங்கள். எனக்காக யாரும் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டாம்'' என்று உறுதியாக மறுத்தான்.
'' அட! முட்டாள் பயலே! நீ கையெழுத்துப் போட்டால்தான் படிவத்தை அனுப்ப முடியும்'' என்றான் அண்ணன்.
''படிவம் எங்கே இருக்கிறது, கொடுங்கள் அதை கிழித்து விடுகிறேன்'' நீரத் எழுந்தான்.
படிவத்தை அவனது கையிலிருந்து அமர்ஜித் படிவத்தை பிடுங்கிக் கொண்டான். பங்கஜும் அங்குதான் இருந்தான்.
'' உனக்கு போக வேண்டாம் என்றால் கொடுத்து விடு. நாங்களாவது இந்த நரகத்திலிருந்து வெளியேறிப் பார்க்கிறோம்'' அண்ணி த்திரப் பட்டாள்.
நீரத்துக்கு கோபம் தலைக்கேறியது ''எதை நரகம் என்கிறீர்கள்?. இந்த வீட்டையா இல்லை அந்த வீட்டையா இல்லை தனது வேலையையா? கனடா மோகம் உங்களுக்கு இந்த வீட்டை நரகமாக்கி விட்டதா?'' என்றான்.
'' இங்கே என்ன இருக்கிறது? பகல் முழுவதும் மாட்டைவிட கேவலமாய் உழைத்த பின்னும் எண்ணிக் கொடுத்தது போல் அற்பமாக கிடைக்கும் பணத்தை கொண்டு என்னதான் செய்ய முடிகிறது. நாலுபேருக்கு டியுஷன் எடுத்தாதான் வீட்டு செலவுகளை கொஞ்சமாவது சமாளிக்க முடிகிறது. இப்ப ஏதோ நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று நினைத்தேன் னால்...'' என்று அண்ணி கோபபெருமூச்சு விட்டாள்.
'' போங்க பிள்ளைகளா, போங்க, நீங்கள் வெள்ளக்காரங்க ஊருக்கு போய் பாருங்க'' என்று அம்மா சிர்வாதம் கொடுத்தாள்.
இப்படியாக ஒவ்வொருவராக நான்கு பேரும் போய் விட்டார்கள். எங்களாலும் பஞ்சாப்பில் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. நீரத்துக்கு அலஹாபாத் பல்கலைக் கழக்கத்தில் வேலை கிடைத்து விட்டது. அதன்பின் நாங்கள் அனைவருமே அலஹாபாத்வாசியாகி விட்டோம்.
இதற்கிடையில் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். அண்ணனின் மூன்று குழந்தைகள் மற்றும் அமரோவின் பிள்ளைகள் சீனு-மீனு கியோர் புகைப்படமாக சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி செய்திகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. சைன்டி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறாளாம். நீதா சொஷியல் வர்க் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறாளாம் மற்றும் பாவனாவின் திருமணம் அங்கேயே ஒரு பணக்காரப் பையனுடன் நிச்சயிக்கப் பட்டுள்ளதாம். எங்கள் நினைவுகளில் அவர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருந்தார்கள். இங்கிருந்து போகையில் '' நாங்கள் போகமாட்டோம், எப்படியாவது திரும்பி வந்து விடுவோம்'' என்று அழுதது நினைவுக்கு வந்தது.
இந்த முறை அண்ணி போனில் பேசுகையில் ''பாவனா, எங்களின் மிக நெருங்கிய நண்பர் ரிச்சர்ட் இந்தியா வருகிறார். ஒரு வாரம் ராஜஸ்தான் சுற்றிவிட்டு அலஹாபாத் வருவார். ஒரு வாரம் அங்கேயும் தங்குவார். அவர் தங்குவதற்கு நல்ல ஏற்பாடு செய்யுங்கள். வீட்டை சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள். குப்பைகள் இல்லாமல், கொசு, பல்லி என எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரிச்சர்ட் ஒரு டாக்டர். உங்கள் அண்ணன் அவருடன் வருவதாக இருந்தது னால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் வருகையில் எங்களை எப்படி உபசரித்து கவனிக்கிறீர்களோ அப்படியே அவரையும் கவனியுங்கள்.'' என்று சொன்னார்.
இந்த போன் வந்தபின் வேலைகள் தாம் தூமென ஜோராக நடந்தது. நான் சக்கரத்தைப் போல் சுழன்று கொண்டிருந்தேன். வீட்டையும் குடும்பத்தையும் உற்றுப் பார்த்தேன். இரண்டிலும் கோளாறு இருந்தது. வீடு முற்றிலும் அருங்காட்சியத்தைப் போல் இருந்தது.
சாப்பாட்டு அறையில் அம்மாவின் படுக்கை விரிக்கப் பட்டிருந்தது. வரவேற்பரையில் பிளாஸ்டர் பெயர்ந்து இருந்தது. உள்ளே இருந்த அறையை பிள்ளைகள் தங்களின் கம்யூட்டர் அறையாக மாற்றி வைத்திருந்தார்கள். படிக்கும் அறையில் துணிகள் இறைந்து கிடந்தது. அலங்காரப்பெட்டி படிகளில் வைக்கப் பட்டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் குப்பைகளைப் போல் கிடந்தது. என்னால் தேவையான பாத்திரங்களை எடுத்துக் கொள்ள சிரமமாக இருந்தது. இந்த சிறிய வீட்டில் அன்பின் காரணமாகவும் நிர்பந்தத்தாலுமே நாங்கள் வாழ்ந்து வருகிறோம் வேறு சிறப்பான காரணங்கள் எதுவும் இல்லை.
''அண்ணியின் விருந்தாளி மூன்று நாட்கள் கழித்து வர இருக்கிறார். நீங்கள் உங்கள் அறையை சுத்தப் படுத்துங்கள். உங்கள் அறைக்கு பக்கத்து அறையில் அவரை தங்க வைக்கலாம் என்றிருக்கிறோம். உங்கள் அறையைப் பார்த்தால் என்ன நினைப்பார்.'' என்று பிள்ளைகளைப் பார்த்து சொன்னேன்.
பிள்ளைகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இரண்டாவது முறை அவர்களிடம் கொஞ்சம் அதட்டலாக சொன்னதும் மன்னு தனது அறையில் கிடந்த புத்தகங்கள் மற்றும் சி.டி.க்களை எங்கள் அறையில் வந்து எறிந்து விட்டுப் போனான்.
வீடு முழுவதும் சிதரிக் கிடந்தவைகளை பரண் மேல் போட்டேன். அலமாரிகளின் மேல் அடுக்கினேன். தொட்டிச் செடிகளை தேர்வு செய்து வரிசையாக வைத்தேன். ஒரு பைய்த்தைப் போல் வீடு முழுக்க குனிந்து நிமிர்ந்து ஓடி டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தேன்.
நீரத் கொஞ்சம் கோபப்பட்டான் ''ஏன் இப்படி சிரமப்படவேண்டும். வீடு எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டுமே. அப்படி அந்த வெளிநாட்டுக்காரனுக்கு கஷ்டமாக இருந்தால் தானகவே ஹோட்டலில் போய் தங்கி விடுவான்'' என்று சிடுசிடுத்தான்.
எனக்கு இந்த தர்க்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் இப்படித்தான் குடும்பம் நடத்துகிறார்களோ என்று அவன் நினைத்து விட்டால். அதுமட்டுமில்லாமல் கனடாவில் இருக்கும்அண்ணிக்கும் வருத்தமாக இருக்கும்.
மூன்று நாட்கள் முழுமையாக கடுமையான போராட்டம் செய்து சாதாரண அறையை சிறப்பு அறையாக மாற்றி விட்டேன். வீடு முழுவதிலும் இருந்து பொறுக்கி எடுத்து நல்ல சுத்தமான பொருட்களை அந்த அறையில் வைத்தாயிற்று.
படுக்கையில் நான்கு இஞ்ச் போம் மெத்தை போட்டாச்சு. சுவற்றில் பிகாசோ மற்றும் டா வின்சி ஓவியங்களின் போட்டோபிரின்ட் தொங்க விட்டாயிற்று. புதிய டர்க்கிஷ் பைகள், மேற்கத்திய நாட்டு மாடலில் கழிப்பறை, புதிய ஜக், மற்றும் குட்டையான ஒரு பிரிட்ஜ்ஜும் அறைக்குள் வைத்தாயிற்று.
இத்தனை ஏற்பாடுகளையும் பார்த்த அன்னு ''வாஹ! மம்மி! இந்த அறை உண்மையில் வெளிநாட்டு அறையைப் போல் இருக்கிறது. இங்கே ஒரு மேம் மட்டும் இல்லை அவ்வளவுதான்'' என்று சிரித்துக் கொண்டான்.
'' அன்னு, ப்ளிஜ், உன்னுடைய மியுசிக் சிஸ்டத்தை இங்கு கொண்டு வந்து வை. ஒரு வாரம் மட்டும்தானே. அடுத்த வாரம் வரைக்கும்தான் சரியா'' என்றேன். நான் அவனை கேட்டேனா கட்டாயப் படுத்தினேனா தெரியவில்லை.
கொஞ்சமும் தயங்காமல் முனுமுனுக்காமல் எனது இரு பிள்ளைகளும் தங்கள் உயிருக்கும் மேலாக கருதும் மியுசிக் சிஸ்டத்தை சிறப்பு அறையில் பொறுத்தி விட்டனர். நான் அங்குமிங்கும் தேடித்தேடி பாக், பித்தோவன் மற்றும் மோஜார்ட் போன்றவர்களின் கேசட்களை மேஜையில் வைத்தேன். '' நாங்கள் கொஞ்சம் பாப் வைத்து விடுகிறோம் இல்லையென்றால் அவனது மண்டனை சூடானாலும் கி விடும்.'' என்று பிள்ளைகள் தெரிவித்தனர். அவ்வாறு செய்தனர்.
றரை அடி உயர ரிச்சர்ட் பார்க்கர் வீட்டிற்குள் நுழைந்ததும் அறையே நிறைந்தது போல் இருந்தது. அவன் வந்தது அறையில் ஒரு உயிர்ப்பு தெரிந்தது. அவன் எல்லோருடனும் உற்சாகமாக அறிமுகமாயினான். அம்மாவுக்கு அவன் கைகளை குப்பி ''நமஸ்டே'' என்றான்.
நான் அவனுக்காக சீஸ் சான்ட்விச் ஏற்கனவே செய்து வைத்திருந்தேன். மிகச் சுருக்கமாக சாயா தயார் செய்தேன். பழைய வேலைக்காரி மாலதிக்கு மனம் நிறைவாயில்லை. இவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கும் விருந்தாளிக்கு வெறும் சீஸ் சான்ட்விச் மற்றும் சாயா போதுமா? அவள் உடனடியாக உருளைக்கிழங்கு- வெங்காயம் பிசைந்து பக்கோடா செய்து விட்டாள். மேலும் பப்படம் பொறித்து விட்டாள். இத்தனையும் பார்த்து ரிச்சர்ட் அசந்து போய் விட்டான். அவன் கபக்கென்று ஒரு பக்கோடாவை வாயில் வைத்தான் உடனே '' ஊ.... ஓ....... '' எனக் கத்தினான்.
பக்கோடா கடும் சூடாக இருந்தது. ரிச்சர்ட் நாற்காளியிலிருந்து குதித்தான். வாயிலிருந்த பக்கோடாவை வெளியில் எடுத்தான். பிள்ளைகளைப் பார்த்து '' ஸாரி'' என்று சிரித்தான். பின் பக்கோடாக்களை ஊதி ஊதி வாயில் போட்டு மென்றான்.
''டெலிஷியஸ்'' என்றபடி பக்கோடா தட்டில் நான்கில் மூன்று பங்கை காலி செய்து விட்டான். அவனுக்கு சாயாவும் பிடித்திருந்தது. எங்களின் உபசரிப்பும் உழைப்பும் அவனை மகிவித்துக் கொண்டிருக்கிறதா இல்லை அவனுடைய மூட் நன்றாக இருக்கிறதா என்று சொல்ல முடியவில்லை.
மாலையில் நாங்கள் ரிச்சர்டை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றோம். அவனுக்கு ஒவ்வொரு பொருளைப் பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கமிருந்தது.
''அந்தப் படிக்கட்டுகளை யார் செய்தார்கள், எந்த நூற்றாண்டு?''
''இந்த சிலையகள் எந்தக் கடவுளுடையது''
''இத்தனை கடவுள்கள் இருக்கிறார்களே, நீங்கள் கன்பியூஸ் கி விட மாட்டீர்களா?''
'' இந்த படகோட்டி எப்பொழுதிலிருந்து படகோட்டுகிறான்?, அவனுக்கு என்ன வயது இருக்கும்?''
உண்மை என்னவென்றால், ரிச்சர்ட்டின் அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு வந்ததும் நம் ஊரையும் சுற்றத்தையும் பற்றி எவ்வளவு குறைவாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்று உணர்ந்தோம்.
'' நீரத், ரிச்சர்ட்டை டவுசர் மற்றும் பனியன் மாட்டிக் கொண்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல், துணி மாட்டிக் கொண்டு வெளியில் போகச்சொல்'' என்றாள் அம்மா முகத்தை இருக்கிக் கொண்டு.
னால் ரிச்சர்டுக்கு கடும் சூடாக இருந்தது. அவன் கனடாவின் எல்பர்டோ பகுதியைச் சேர்ந்தவன். அங்கே சீதோஷ்ணநிலை பூஜியத்திற்கும் கீழ் பல டிகிரி குறைவாக இருக்கும்.
எங்கள் அனைவருக்கும் ங்கிலம் தெரிந்திருந்தாலும் அவனது உச்சரிப்பை புரிந்து கொள்ள சிரமமாய் இருந்தது. எப்படியாவது சமாளிக்கலாம் என்ற ரீதியில்தான் பேச்சு நடந்து கொண்டிருந்தது. அம்மா மற்றும் பிள்ளைகளுக்கு எந்த சிரமமும் இல்லாமால் இருந்ததை கண்டேன். அவர்கள் அனைவரும் ஒன்றாக ரிச்சர்ட்டுடன் அமர்ந்து டீவி பார்த்தனர். அண்ணி தனது கனடா அலுவலகம் மற்றும் வீட்டின் படப்பிடிப்பு அடங்கிய வீடியோ கேசட் அனுப்பி இருந்தார்கள். அதை வீ.சி.ரில் போட்டு ரிச்சர்ட் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் உச்சரிக்கும் வார்த்தைகளால் நாங்கள் புரிந்து கொள்ள இயலாததை அவனது செய்கையால் புரிய வைத்தான். அனைவரும் சிரித்து மகிழ்வோம். மொழியை பயண் படுத்தாமல் அம்மாவுக்கும் அவனால் விளக்கம் சொல்ல முடிந்தது. துவக்கத்தில் அம்மாவுக்கும் ரிச்சர்ட்க்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தேன், இப்பொழுது அம்மாவுக்கு எனது உதவி தேவையில்லை.
'' அவன் பேசுறது நல்ல புரியுது'' என்றாள் அம்மா.
ரிச்சர்ட்க்கு ஒதுக்கப் பட்ட அறையில் பல்லிகள் மற்றும் எலிகள் வழக்கம் போல் வந்துவிடக் கூடாது என்று முதல்நாள் இரவு இறைவனை வேண்டிக் கொண்டேன். கொசுக்களை விரட்ட ஏற்கனவே பல ஏற்பாடுகளை செய்து வைத்தாயிற்று.
சாப்பிடும் போதும் பயம் நிலவியது. முழுக்க முழுக்க சைவ உணவுகளை வைத்திருந்தோம். ரிச்சர்ட்டுக்கு உணவு பிடித்திருந்தது. தண்ணீர் கொதிக்க வைத்ததுதான் னாலும் ரிச்சர்ட் அதை குடிக்கவில்லை. அவன் மாலதியிடம் ''சாயா'' கேட்டான்.
கனடாவிலிருந்து அவன் இந்தியின் இரண்டு மூன்று வார்த்தைகளை கற்று வந்திருந்தான். '' அச்சா!, ஹாங்! நஹி! '' கிய வார்த்தைகளின் உச்சரிப்பும் அவற்றின் அர்த்தத்தையும் தெரிந்து வைத்திருந்தான்.
ஒவ்வொரு வெளிநாட்டவரும் கஜுராகோ பார்க்க சைப் படுவார்கள் என்று நாங்கள் ஒரு டூரிஷ்ட் பஸ்சில் இருக்கை பதிவு செய்து இருந்தோம். அவனிடம் அதை தெரிவித்தோம். அவன் தலையை ட்டியபடி ''நோ, ஐ பிளான் டு கோ டு சார்நாத்'' ( இல்லை, நான் சார்நாத் போக திட்டமிட்டு இருக்கிறேன்). ''சார்நாத்க்கு நாம் அனைவரும் மற்றொருநாள் காரில் போகலாம்'' என்றான் நீரத் மேலும் '' நீங்கள் இந்தியாவில் பார்க்க வேண்டி வந்த இடங்களை முதலில் பார்த்து விடுங்கள்'' என்று முடித்தான்.
டிரி ப் நாலேட்ஜ் அதாவது போதி விருட்சத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னான். ரிச்சர்ட்டின் சகோதரி அவனிடம் புத்தரின் போதனைகள் மற்றும் அவர் குறித்த விபரப் புத்தங்களை வாங்கி வரும்படி சொல்லியிருக்கிறாளாம் அவற்றை வாங்க வேண்டும் என்று சொன்னான்.
நாங்கள் வேலைக்கு விடுப்பு எடுப்பது காத காரியமாக இருந்தது. '' நான் தனியாக போய் விடுவேன். நீங்கள் என்னை வண்டியில் மட்டும் உட்கார வைத்து விடுங்கள்'' என்றான் ரிச்சர்ட்.
''இப்ப என்ன அவசரம். வந்து நான்கு நாட்கள் கூட தங்கவில்லை'' நல்ல உபசரிப்பாளர்களைப் போல் நாங்கள் அவனிடம் கேட்டுக் கொண்டோம்.
அவன் தனது டயரியை எடுத்து ஒருமாதம் அவனது பயணக் கால அட்டவனையைக் காட்டினான்.
''புதிய இடங்களில் போக உனக்கு பயமாக இருக்காதா?'' நான் கேட்டேன்.
'' உங்களுக்கு என்னிடம் பயமாக இருக்கிறதா? இல்லைதானே! பின் நான் ஏன் உங்களிடம் பயப்பட வேண்டும்? உலகம் முழுவதும் மனிதன் ஒரேமாதிரியாகத் தானே இருக்கிறான்'' என்றான் ரிச்சர்ட் புன்னகை பூத்தபடி.
''னால் உன்னிடம் எங்கள் மொழி இல்லையே, உனது தேவைகளை எப்படி தெரிவிப்பாய்?''
''எப்படியோ சமாளித்து விடுகிறேன்'' என்றான் நம்பிக்கை குறைக்காமல்.
'' இந்த நாட்டில் எவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களோ அத்தனை கெட்டவர்களும் இருக்கிறார்கள். யாராவது கெட்டவர்கள் கையில் சிக்கிக் கொண்டால், அப்பொழுது...?'' என்று நீரத் பயம் தெரிவித்தான்.
'' இந்தியாவில் தண்ணீரைவிட மோசமான எதிரி இந்தியாவில் உனக்கு கிடைக்காது என்று கனடாவில் உனது அண்ணன் சொல்லயிருக்கிறார்'' என்றான் ரிச்சர்ட் பூரிப்போடு.
கஜுராகோவுக்கான முன்பதிவை ரத்து செய்து விட்டோம். அடுத்த இரண்டு நாட்களை அவன் பெரும்பாலும் வீட்டிலேயே கழித்தான். மதியம் அவன் னந்த் பவன் பார்த்து வந்தான். இரவு சாப்பாட்டின் போது நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
ரிச்சர்ட்டுடன் பரிச்சயமாகி பழகி விட்ட காரணத்தால் அன்னு-மன்னு மிக இயல்பாக இருந்தனர். மன்னு தண்ணீரை கிளாசில் ஊற்றும் நேரம் தடுமாறி மேஜையில் சிந்தி விட்டான்.. எனக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது.
'' எத்தனை முறை சொல்வது, நீங்கள் இருவரும் சின்ன மேஜையில் சாப்பிட்டிருக்கலாம் இல்லையா?'' நான் முனுமுனுத்துக் கொண்டே துணியை தேடிக் கொண்டிருந்தேன். அது கிடைத்தபாடில்லை.
''உங்களுக்கு துளிர் விட்டுப்போச்சு, பெரியவர்கள் மத்தியில் புகுந்து உட்கார்ந்து கொள்வது பிள்ளைகளுக்கு அழகா சொல்லுங்கள்?'' என்றேன் நான். இன்னும் பேச வேண்டும் போல் இருந்தது. பகல் முழுவதும் கடுமையான வேலைக் கடுப்பையும் அவர்கள் மேல் கொட்டியிருப்பேன். அடக்கிக் கொண்டேன். குடும்ப சுமை காரணமாக நான் திட்டத் துவங்கினால் எனக்கு போதை தலைக்கேறி என்னை நானே கட்டுப் படுத்த முடியாமல் கிவிடும். கோபத்தில் ஜன்ம ஜன்ம குற்றங்களை பட்டியலிடத் துவங்கி விடுவேன். வருத்தத்துடன் மன்னு சாப்பாட்டை விட்டு எழுந்து விட்டான். '' மன்னு, நான் உனது நண்பன் தானே, நான் சொல்வதை கேட்பாய்தானே. ப்ளிஸ், சாப்பிட்டுக் கொள்'' என்று ரிச்சர்ட் கெஞ்சினான்.
''எனக்கு பசியில்லை'' மன்னு கோபமாய் பதில் சொன்னான்.
மன்னு எழுந்ததும் அன்னுவும் தனது சாப்பாடை விட்டு '' நானும் சாப்பிட மாட்டேன்'' என்று எழுந்து கொண்டாள்.
அப்போது அம்மா அவர்களை அழைத்து '' என் குட்டிப் பிள்ளைகளா இங்கே வாங்க நான் உங்களுக்கு சாப்பாடு ஊட்டுகிறேன். அதோடு அந்த புத்திசாலிப் பூனையின் கதையும் சொல்கிறேன் வாங்க! வாங்கடா '' என கரம் நீட்டி அழைத்தாள்.
இவர்கள் இருவரும் சின்னப் பிள்ளைகளாக இருக்கும்போது பாட்டியிடம் கதைகள் கேட்டுக் கொண்டே அவர் கையால் தான் சாப்பிடுவார்கள். னால் இப்பொழுது பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள். னால் சாப்பிடுகையில் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
இருவர் முகமும் ஊதிப் போய் விட்டிருந்து.
அம்மா அவர்களைப் பார்த்து '' யார் என்னிடம் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு ரூபாய் தருவேன்'' என்றாள்.
இருவரும் அம்மாவின் படுக்கையில் ஒரே துள்ளலில் ஏறிக் கொண்டார்கள். மாலதி ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்து அம்மாவிடம் கொடுத்தாள். அம்மாவின் பேச்சின் இனிமையில் லயித்து அவர்கள் இருவரும் அத்தனை ரொட்டிகளையும் சாப்பிட்டி முடித்தார்கள்.
எனது மூட் இன்னமும் சரியாகவில்லை. எங்கள் வீட்டில் ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்து விட முடியாது. குழந்தைகளுக்கு அறிவுரை கூறி அவர்களை திருத்தினால் பெரியவர்கள் கெட்டு விடுகிறார்கள். இதனால்தான் என்னவோ ரிச்சர்ட் இங்கிருந்து சீக்கிரமாக கிளம்புகிறானோ, என நான் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.
சாப்பாட்டுக்குப் பின் சாயா குடித்தபடி ரிச்சர்ட், ''உங்கள் விருது உபசரனைகளையும் என்னை நீங்கள் வரவேற்று கவனித்த முறையையும் நான் என்றும் மறக்கவே மாட்டேன். உங்கள் குடும்பத்தில் எனக்கு மிகுந்த அன்பு கிடைத்தது'' என்றான்.
'' இங்கு நடந்த குளருபடிகளையும் சேட்டைகளையும் கூட மறக்கமாட்டீர்கள் அப்படித்தானே'' நான் கேட்டேன்.
'' அய்யோ, இதையா சேட்டைகள் என்கிறீர்கள், இவைகளுக்காக எங்கள் நாட்டில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தின் அநாகரீகம் என்று குறிப்பிடும் இந்த குதுகலமும் கும்மாளும் சந்தோஷமும் எங்கு கிடைக்கும். என்னைப் பாருங்கள் எனது பனிரெண்டு வயதிலிருந்து நான் தனியாக இருக்கிறேன். அம்மா அப்பா விவாகரத்து செய்து கொண்டார்கள். நான் அம்மாவுடன் இருந்தேன். இரண்டு வருடங்கள் சென்றதும் அம்மா வேறு திருமணம் செய்து கொண்டார். பின் நான் அப்பாவுடன் இருந்தேன். அதற்குப் பின் ஓராண்டு சென்று அப்பாவும் திருமணம் செய்து கொண்டார். எனக்கு எங்கும் இடமில்லை.'' என்றான் ரிச்சர்ட் அவனது முகத்தில் கவலை மற்றும் ஏக்க ரேகைகள் புடைத்தன.
''இப்பொழுதுதான் நீங்கள் பெரியவராகி விட்டீர்களே'' என்றேன் நான்.
'' னால் நான் எவ்வளவு தனிமையாக இருக்கிறேன், ஒரு விஷயம் சொல்லட்டுமா!, அங்கே அல்பர்ட்டாவில் நாங்கள் அனைவரும் தனியாக இருக்கிறோம் தீவுகளைப் போல் மிகத் தனியாக. நீரத் குடும்பத்தை விட்டு கனடா வராதது மிகச் சரியானது என்று உனது அண்ணனும் அடிக்கடி சொல்லுவார்.'' என்று ரிச்சர்ட் மூச்சிழுத்தான்.
நீரத்க்கு தன் மேல் பெருமையாக இருந்தது. '' ரிச்சர்ட், நான் எனது ரொட்டிக்காக எனது தாய் மண்ணை விட விரும்பவில்லை. அதில் உறுதியாக இருந்தேன். எனது வேலை எழுதுவதும் படிப்பதும் தான். பணம், பாராட்டு, அவமானம் என எது கிடைத்தாலும் இங்கேயே கிடைக்கட்டும் என்று இருந்து விட்டேன். ஏழு கடல் தாண்டி சென்று விட்டால் என் குரலை யார் கேட்பார்கள். எனது வார்த்தைகளில் இருந்த வாசனை போய் விடும்'' என்று தனது பெருமையை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான்.
'' ராயிட்'' ரிச்சர்ட் உணர்ச்சிவசப் பட்டான். '' உனது அண்ணனுக்கு இந்த வருத்தம் இருக்கிறது. உங்கள் வீட்டில் சாப்பாட்டு நேரத்தில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கள். இது எங்கும் கிடைக்காத பெருஞ்சுகம். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்தவர்களாகப் பார்த்து எனக்கு பல ண்டுகள் கி விட்டது. மூன்று தலைமுறைகள் ஒரு கூறையின் கீழ் மிக அன்பாகவும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் இருப்பது வியப்புக்குறிய விஷயம். உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சரியான அளவில் அன்பும் அரவனைப்பும் கிடைக்கிறது. அவர்கள் வாழ்வில் ஓங்கி வளர இதுவே காரணமாக இருக்கும். இது மிகப் பெரிய விஷயம். இதை எப்பொழுதும் தாழ்வாக நினைக்காதீர்கள். நீங்கள் நல்வரம் பெற்றவர்கள். சந்தோஷப் படுங்கள்'' என்று ரிச்சர்ட் கண் கலங்கினான்.
ரிச்சர்ட் காலையில் பனாரஸ் கிளம்பி விட்டான். னால் எனக்கு வாழ்க்கை முழுமைக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனான். அந்த பரதேசி வெறும் பயணி மட்டுமல்ல.
------------------------------------------------------------------------------

மம்தா காலியா: கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் எழுத்தாளர் மம்தா காலியா தனது எழுத்துப் பயணத்தை துவங்கினார். கதை -நாவல் துறைகளில் பெண்கள் சொற்பமாகவும் கட்டுப்பாட்டு வளையங்களுக்குள் சிக்கியபடியும் எழுதி வந்தார்கள். னால் அதையும் மீறி பல பெண் படைப்பாளர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களுள் மம்தா காலியா குறிப்பிடத்தக்கவர்.
மம்தா காலியா தனது படைப்புகளில் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார். மேலும் போராட்டமய வாழ்க்கையில் ணும் பெண்ணும் சம போராளிகள் என்று தனது படைப்புகளில் வலியுறுத்தி வருகிறார்
வீடு குறித்த பிரக்ஞை மட்டுமல்லாமல் சமூக உணர்வும் அதன் மேம்பாடு குறித்தும் பெண்கள் சிந்தித்து வந்துள்ளனர் என்பது இவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.
1940ல் நவம்பர் 2ம் தேதி பிருந்தாவனத்தில் பிறந்தார். டெல்லி, மும்பை, பூனே, நாக்பூர் மற்றும் இந்தோர் கிய நகரங்களில் சுற்றிச்சுற்றி தனது கல்வியை கற்றுத் தேர்தார். இவரது தந்தை விதாபூஷன் அகர்வால் துவக்கத்தில் கல்வித்துறையிலும் பின் வானொலியிலும் பணியாற்றினார். இந்தி மற்றும் ங்கில இலக்கியத்தில் மேதையாக விளங்கினார். தந்தையின் ளுமை மம்தாவையும் முழுமையாக க்ரமித்துக் கொண்டது.
'அன்பு என்ற வார்த்தை தேய்ந்து தேய்ந்து சப்பையாகி விட்டது. இப்பொழுது அந்த வார்த்தையின் புரிதல் கூட நமக்கில்லை' என ழமாகவும் கூர்மையாகவும் தனது மொழியை பயன் படுத்தி கவிதைகள் எழுதத் துவங்கினார். துவக்ககாலத்தில் நிறைய கவிதைகளை எழுதிய இவர் திடீரென கதை இலக்கியத்திற்கு தாவி விட்டார்.
தனது கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் எந்தப் புனைவும் இல்லாமல் எதார்த்தமாகவும் அவர்களின் உறுதியும் அறிவும் வெளிப்படும் விதத்தில் படைத்தார். வாழ்வின் மேடு பள்ளங்களை பயமின்றி தனது இலக்கு நோக்கி நகரும் க்ரோஷமான மற்றும் எந்நிலையிலும் பின் வாங்காத பெண்களின் இயல்பு குணத்தை வார்த்தைகளில் செதுக்கினார். எதுவானாலும் சத்தியத்தையும் பண்பாட்டையும் கைவிடாத பெண்களின் குணத்தை தனது கதைகளில் வெளிப்படுத்தினார்.
மம்தா காலியா கடந்த முப்பத்மூன்று ண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். பெண்களின் முன்னேற்ற அமைப்பு பணி மற்றும் அலகாபாத் பட்டப்படிப்பு கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
மம்தா பிரபல எழுத்தாளர் ரவீந்திர காலியாவின் மனைவியாவார். இந்த இலக்கிய தம்பதிகளுக்கு அனிருத் மற்றும் பிரபுத் என்ற மகள்கள் உண்டு.
இவரது படைப்புகளில் 'சுட்காரா' 'உஸ்கா யவ்வன்' 'ஜாஞ்ச் அபி ஜாரி ஹை'' 'பிரதிதின்' மற்றும் ' சர்சித் கஹானியான்'' போன்ற கதைத் தொகுப்புகள் பிரபலமானவை.
மேலும் 'பேகர்' ' நரக் தர் நரக்' 'பிரேம் கஹானி' மற்றும் 'ஏக் பத்னி கே நோட்ஸ்' கிய நாவல்களும் பிரசித்தம். இவரது ' தோட்' என்ற நாவல் தற்போது சர்ச்சையில் உள்ளது.
இவர் தனது கதைகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக சர்ஸ்வதி சம்மான் விருது, உத்திரப் பிரதேச மாநில இலக்கிய விருது, யஷ்வந்த் சம்மான் விருது மற்றும் கொல்கத்தாவின் அபினவ் பாரதி விருது கியவை குறிப்பிடத்தக்கவை.

Thursday, November 23, 2006

புதன்கிழமை

இந்தியில்: குருமித் பேடி
தமிழில்: மதியழகன் சுப்பையா

டெலிபோன் மணி ஒலித்ததும் மிக அதீரத்தோடு ரிசிவரை எடுத்தாள். யார் போன் செய்திருப்பார்கள் என்று அவளுக்கு முன்னதாகவே தெரிந்து இருந்தது. ''சாரி, சர்! நீங்கள் எனக்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். னால் நான் இங்கு கடுமையான வேலையில் சிக்கிக் கொண்டேன். நீங்கள் மாலை எத்தனை மணி வரை அலுவலகத்தில் இருப்பீர்கள்? என்னால் மாலை நாலரை மணிக்கு வர இயலும்.'' என்று ரிசிவரில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
''நான் மாலை ஐந்தேகால் ஐந்தரை மணி வரை அலுவலகத்தில் தான் இருப்பேன். இதற்கிடையில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.'' என்றபடி ரிசிவரை வைக்கையில் அவனது உதடுகளில் புன்னகை பூத்துக் கொண்டது. அவன் சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். அப்பொழுது மதியம் இரண்டு மணியாக இருந்தது. நாலரை மணிக்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது. அவள் வேலைப் பார்க்கும் இடத்திலிருந்து அவனது அலுவலகத்திற்கு நடந்து வருவதென்றால் அதிகப்பட்சமாக பத்து நிமிடங்கள் கலாம். 'அவளது அலுவலகத்திலிருந்து நாலரை மணிக்கு கிளம்பினாலும் இங்கே நான்கே முக்கால் மணிக்கு வந்து சேர்ந்து விடலாம்.' அவன் மணிக் கணக்குகளை மனதில் பார்த்துக் கொண்டான்.
அவன் மணியடித்து பியுன் ஹெம்ராஜ்ஜை அழைத்தான். அவனிடம் நூறு ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு ''என்னைச் சந்திக்க ஒருவர் வருகிறார். நீ நாலரை மணிக்குப் போய் கோல்டிரிங்க் வாங்கி வா, அப்படியே நல்ல பிஸ்கட்டும் வாங்கி வா'' என்றான். ''சர்! என்ன கோல்டிரிங்க் வாங்கி வரட்டும்?'' அவன் ரூபாயை கையில் வாங்கிக் கொண்டு கேட்டான். ''பெப்சி வாங்கிக்கோ இல்லையென்றால் லிம்கா வாங்கிக்கொள். அதைக் குடிச்சதும் தொண்டையில் இருந்து புகை கிளம்ப வேண்டாமா?'' பியுனை உற்சாகப் படுத்த வேடிக்கை பேசினான்.
ஹெம்ராஜ் வெளியே போனதும் கேஷியர் உள்ளே நுழைந்தார். ''சர்! நான் திங்கள் கிழமை லீவு எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த பில்களில் கையெழுத்து போட்டுத் தந்தால் கஷ்மிரா திங்களன்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வான். டேக்சிகாரனுக்கும் பேமென்ட் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களது போனும் வரத் துவங்கி விட்டது. உங்களுக்கும் கொஞ்சம் பேமென்ட் இருக்கிறது'' என்றபடி பில்கள் அடங்கிய பைலை அவன் முன் வைத்தான்.
அவன் கண்களை மூடிக் கொண்டு பில்களில் கையெழுத்திட துவங்கினான். இன்று அவன் அனைத்து வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக் கொள்ள விரும்பினான். காரணம் மாலை நாலரை மணிக்குள் அவன் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சுமையின்றி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவனுக்கு முன் எந்த பைலும் கொண்டுவரப் பட்டுவிடக் கூடாது என எண்ணினான். இதற்கிடையில் தொலைபேசியின் மணி இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. அதிகமாக பத்திரிக்கைகாரர்களின் அழைப்பாக இருந்தது. அவர்கள் அனைவரும் இன்று பிரஸ்நோட் என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பதே கேள்வியாக இருந்தது. சில போன் அழைப்புகள் ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. சில அழைப்புகளின் போது இவன் ''ஹலோ'' என்று சொன்னதும் எதிர்முனையில் தொடர்பை துண்டித்துக் கொள்ளப் பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பெண் இவனது குரலைக் கேட்பதற்காக மட்டுமே இவனுக்கு போன் செய்வதாக சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அது முதல் அலுவலகத்திற்கு வரும் பிளாங்க் கால்கள் அனைத்தும் அவள் செய்வதாகவே பட்டது. அந்தப்பெண் இதனை எத்தனைத் தெளிவாக சொல்லி விட்டாள். அவனது குரலை கேட்பதற்காக மட்டுமே அவனுக்கு போன் செய்வதாக மிக அழுத்தம் திருத்தமாகச் சொன்னாலே. இந்த விஷயத்தை நினைத்து அவன் பலமுறை மண்டை உடைத்திருக்கிறான். னால் இன்று கேள்விச் சூறாவளியில் சிக்க அவன் விரும்பவில்லை.
இன்று அவன் கடிகார முட்கள் நாலரை மணியை எப்பொழுது தொடும் என்ற கடுமையான எதிர்பார்ப்பு இருந்தது. மிகச் சின்னச் சின்ன இடைவெளியில் சுவற்றில் தொங்கும் கடிகாரத்தினை நோக்கி அவன் பார்வை எழுந்து விடும். இன்று வினாடி காட்டும் முள் மெதுவாக சுற்றுவது போல் அவனுக்கு சந்தேகமாக இருந்தது. இவ்வாறு சந்தேகம் எழும் போதெல்லாம் சுவர் கடிகாரத்துடன் தனது கைக் கடிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வான். இரண்டிலும் ஒரே மாதிரியான நேரத்தைப் பார்த்து அவனது கவலை இன்னும் அதிகரித்து விடும்.
கடிகாரம் நாலரை மணியைக் காட்டியதும் அவன் சுழல் நாற்காலியில் சுழன்று தனது அறையின் கதவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்தான். ஜன்னல் திரையை விலக்கி விட்டு எதிரே தெரியும் குன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த குன்றைக் கடந்துதான் அவன் தனது அலுவலகத்திற்கு வர வேண்டும். அவளும் இந்த குன்றைத் தாண்டித்தான் இந்த அலுவலகத்தை வந்தடைய வேண்டும். நாலரையிலிருந்து ஐந்தேகால் மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அவள் வரலாம். இந்தக் கணக்கை அவன் ஏற்கனவே போட்டு வைத்திருந்தான். னால் அவன் கணக்கிட்ட நேரத்தை கடந்து நேரமாகிக் கொண்டிருந்தது. அவன் பொறுமை இழந்து கொண்டிருந்தான்.
''கோல்டிரிங்க்ஸ் வாங்கி வரட்டுமா சார்?'' பியுன் கேட்டான்.
அவன் அந்த குன்றையேப் பார்த்தபடியே '' கொஞ்சம் பொறு'' என்றான். பியுன் அறையை விட்டு வெளியே போய் விட்டான்.
கடிகாரத்தின் முட்கள் ஐந்து மணியாகிறது என்று சாட்சியம் சொல்லியது. அவனது பொறுமையின்மை தற்போது கவலையாக மாறி விட்டது. அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவறாக தங்கள் சாப்பாட்டு டப்பாக்களை மற்றும் பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அவன் தனது அறையை விட்டு எழுந்து ஹாலில் அங்குமிங்கும் நடைப் பழகிக் கொண்டிருந்தான். அவனுக்கு இங்கே குன்று மட்டுமல்ல அந்த குன்றினை இணைக்கும் சாலையும் தெரிந்தது. அவனது கண்கள் குன்றினைப் பார்க்காமல் சாலையில் அவளைத் தேடியது.
கவலை கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பாகவும் கோபமாகவும் மாறிக் கொண்டிருந்தது. '' இனி நான் அவளுடன் எப்பொழுதும் பேசவே மாட்டேன். அவள் என்னைப் பற்றி என்னத்தான் நினைத்திருக்கிறாள். அவளுக்காக நான் இங்கே இரவு முழுவதும் காத்திருப்பேன் என்று நினைத்தாலா? அவள் வேண்டுமென்றே இப்படி செய்கிறாளா இல்லை மறந்து விட்டாளா?'' இதை நினைத்து நினைத்து அவன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
அந்தேகால் மணிக்கு ஹாலிலிருந்து கிளம்பி தனது அறைக்குள் வந்தான். நாற்காலியில் உட்கார்ந்து நிமிர்ந்தான். கடிகாரத்தின் முட்கள் அவனைப் பார்த்து கேலி செய்வது போல் இருந்தது. சற்று நேரத்திற்கு முன் ஸ்டெனோவால் டைப் செய்யப் பட்டு மேஜையில் வைக்கப் பட்டிருந்த காகிதங்கள் மேல் அவனது பார்வை பதிந்தது. அருகே கண்ணாடிக் குடுவை ஒன்றும் கிடந்தது. இந்தக் காகிதங்களில் அவனது கதை டைப் செய்யப் பட்டிருந்தது. இந்தக் கதையை அவன் இன்றுதான் எழுதி முடித்திருந்தான். அவன் இந்தக் கதையை இன்று நாலரை மணிக்கு வருவதாய் இருந்த அந்தப் பெண்ணிடம் படித்துக் காட்ட விரும்பினான். னால் அவள் வரவில்லை. அவன் மீண்டும் மீண்டும் காகிதங்களின் பக்கங்களை அப்படி இப்படி புரட்டிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது காலடி சத்தத்தால் அலுவலகத்தின் அமைதி உடைந்தது கூடவே நீண்டு கொண்டிருந்த அந்த காத்திருப்பு கயிறும்தான். கோபம், வெறுப்பு, படபடப்பு எனது இதுவரை அவனைப் அப்பிக் கொண்டிருந்த அனைத்தும் எந்த சவக்குழிக்குள் போய் புதைந்து கொண்டதோ தெரியவில்லை. அவள் முன்னால் நின்றபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.
''சாரி. சர்! கொஞ்சம் லேட்டாகி விட்டது. கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது'' தாமதமாக வந்ததற்கான வெட்கவுணர்வு அவளது வார்த்தைகளில் இருந்தது. அத்தோடு சமாளிப்பும் தெரிந்தது.
'' எனக்கு உங்கள் மேல் கடுமையாக கோபமாக இருந்தது'' என்று சொன்னபடி அவன் புன்னகைத்தான்.
அவள் அவனையே நிலை குத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். அறையில் காற்று வீச மறந்து விட்டது போலவும் நேரம் நகராமல் அப்படியே நின்று போனதைப் போலவும் பட்டது. கொஞ்ச நேரத்திற்கு அங்கு எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. இயற்கை வண்ணங்களுக்கு மத்தியில் அவனது புன்னகைப் பூ வண்ணத்தையும் அவள் ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த வண்ணம் அழகாகவும், கவர்ச்சியாகவும் சுண்டியிழுக்கும்படியாகவும் இருந்தது. எந்த வண்ணமும் குறைவாக இல்லை. எல்லா வண்ணங்களிலும் வாழ்வின் கனவுகள் இருந்தது. அவன் அவளது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையின் வண்ணம் அவளது முகத்தில் பூரித்து தெரிந்தது. அந்த அறை முழுவதும் அந்த வண்ணங்களின் ஒலி பரவி பிரகாசித்தது போல் இருந்தது. அந்த பிரகாசத்தில் மிக மெல்லிய வாசனையும் உணர முடிந்தது. இந்த வாசனை எந்த மலருடையதாக இருக்கும் அவன் யோசிக்கலானான். ஹெம்ராஜ் கோல்டிரிங்க்ஸ் வைத்து விட்டுச் சென்றான். கூடவே ஒரு தட்டில் உப்புசுவையுடைய பிஸ்கெட்டும் வைத்திருந்தான்.
''கோல்டிரிங்க்ஸ் குடியுங்கள்'' அவன் பேச்சற்ற நிலையை உடைத்தான். அவள் உரிஞ்சத் துவங்கினாள். அவள் எதுவும் பேசவில்லை. அவள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மிகவும் வர்புறுத்திய நிலையில் இரண்டு முறை ஒவ்வொன்றாக உப்புச்சுவை பிஸ்கெட்களை எடுத்துக் கொண்டாள். மூன்றாவது முறை தட்டை அவளிடம் நீட்டுகையில் '' நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்னை மட்டும் சாப்பிட வற்புறுத்துகிறீர்கள்'' என்றாள். அவன் அதிர்ந்து விட்டான்.
பற்களால் பிஸ்கெட்டை கடிக்கும் சத்ததால் அறையின் அமைதி கிழிந்து கொண்டிருந்தது. '' எனது வாழ்வில் மிகச் சிலரால்தான் நான் கவரப் பட்டிருக்கிறேன். அப்படி என்னைக் கவர்ந்த சிலருள் நீங்களும் ஒருவர். உங்களின் உருவம், உங்கள் எளிமை, உங்கள் மரியாதை குணம் போன்றவைகள் என்னை வசியப் படுத்தி விட்டன. எனக்கு நீங்கள் ஒரு திறந்த புத்தகமாகப் படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.'' என்று அவன் அறையின் அமைதி கிழிய பேசத் துவங்கியவன் பேசிக் கொண்டே போனான்.
அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் எந்தவிதத்திலும் எதிர்விணை புரியவில்லை. ''நான் ஒரு நாவல் எழுத எண்ணியிருக்கிறேன். அந்த நாவலின் ஒரு பாத்திரமாக நீங்களும் இருப்பீர்கள். சொல்லப் போனால் நாவலின் முக்கியப் பாத்திரமாக இருப்பீர்கள். சில ண்டுகளில் உங்களுக்கு அந்த நாவல் படிக்கக் கிடைக்கலாம்.'' அவன் பேசுவதைத் தொடர்ந்தான்.
அவளது கண்களில் குழப்ப ரேகைகள் துளிர்த்தன.
''கடந்த வாரம் நீங்கள் படித்த கதையில் எனது கல்லூரி வாழ்க்கையை வரிவரியாக வடித்து வைத்திருந்தேன். கதையில் சும்மி என்ற பெயரில் வரும் பெண்ணின் உண்மையாக பெயர் சுனிதா என்பதாகும். கல்லூரி நாட்களில் அவளிடம் நீண்ட உரையாடல் நடந்திருக்கவில்லை, சின்னதாக ஒரு அறிமுகப் பேச்சு அல்லது ஏதேச்சையாக என்று கூட எதுவும் நடந்திருக்கவில்லை. னால் அவள் பற்றிய நிறைய நினைவுகள் மட்டும் என்னுடன் உள்ளது. அந்த நினைவுகளில் மழைச்சாரலின் குளுமை உள்ளது. நான் இப்பொழுது எழுத உள்ள நாவலில் பாரதி என்ற பெயரில் ஒரு பெண் பாத்திரம் இருக்கிறது. ''' என்றபடி அவன் பேச்சை பாதியில் நிறுத்திக் கொண்டான்.
அவளது கண்களில் கற்பனையின் அருவி வழிந்து கொண்டிருந்தது. அந்த அருவியின் ஓசை அறையில் தவழும் காற்றில் உணர முடிந்தது. ''நீங்கள் எதுவும் பேச மாட்டேன் என்கிறீர்கள்? வெறுமனே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் எதாவது கேள்வி கூடவா இல்லை?'' அவன் அவளது கண்களைப் பார்த்தபடி கேட்டான்.
''நான் கேட்பதையே அதிகம் விரும்புகிறேன். நல்ல வாசகி இல்லையா அதனால்தான்'' என்று அவள் சிரித்து விட்டாள்.
''இல்லை. எதாவது விஷயம் இருக்குமில்லையா?'' அவன் கிண்டினான்.
''இன்று புதன் கிழமைதானே! புதன் கிழமை எனக்கு அதிர்ஷ்ட நாள். எனது மாமியார் வீட்டார் என்னை பெண் பார்க்க புதன் கிழமைதான் வந்திருந்தார்கள். எனது நிச்சயதார்த்தமும் புதன்கிழமைதான் நடந்தது. இந்தமுறை எனது பிறந்தநாளும் புதன்கிழமையில் தான் வருகிறது.'' என்றபடி அவள் அமைதியாகி விட்டாள்.
இனி பேச்சை எப்படித் தொடர்வது என்று அவனுக்கும் குழப்பமாகவே இருந்தது. கடிகார முட்கள் மாலை றரை மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.அவள் வந்து ஒன்னேகால் மணி நேரமாகி விட்டிருந்தது. ''நான் கிளம்ப வேண்டும்'' என்றபடி அவள் அவனைப் பார்த்தாள். '' மாம். நாம் கிளம்பலாம்'' என்று அவனும் உடன்பட்டான்.
கேட்டுக்கு வெளியே வந்தபடி கடுமையான தயக்கத்துடன் '' நீங்கள் என்னுடன் வர விருப்பப் படுகிறீர்களா இல்லை தனியாக போகப் போகிறீர்களா?'' என்று எச்சில் விழுங்கினான்.
''நான் டெப்போ வரை உங்களுடன் வருகிறேன். அதற்கு முன் எனது அலுவலகத்தில் இருந்து என் பையை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று அவள் மிக இயல்பாய் பதிலளித்தாள்.
அவளது பேச்சைக் கேட்டு அவனுக்கு வியப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. அவள் அவனுடன் வண்டியில் செல்ல ஒத்துக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையில்லை. ''சார்! நீங்கள் போங்கள். எனக்கு மார்க்கெட்டில் கொஞ்சம் பொருட்கள் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது'' என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வாளோ என்றும் எண்ணினான். னால் அவள் அப்படி எதுவும் சமாளிக்கவும் இல்லை. அவள் மரியாதைக்காக வண்டியில் வருகிறாளோ இல்லை மறுப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு வருகிறாளோ என்று வண்டி போய்க் கொண்டிருக்கையில் அவன் யோசிக்கலானான். ஒருவேலை அவள் உண்மையான நண்பனாக நினைக்கிறாளோ. னால் நண்பனை ''சார்'' என்று ஏன் அழைக்கவேண்டும். அவன் தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டான். ஒருவேலை அவள் அவனை ''சார்'' என்று மரியாதைக்காக அழைக்கலாம் இல்லையா. மேலும் வயது வித்தியாசமும் இருக்கிறது இல்லையா. அதுமட்டுமில்லாமல் அவனை ஒரு பெரிய எழுத்தாளனாக அவள் நினைக்கிறாள் இல்லையா. அவன் தனக்குத்தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொல்வதை தொடர்ந்து கொண்டிருந்தான்.
அவளை பஸ் ஸ்டாப்பில் விட்டுத் திரும்புகையில் வண்டியை ஓட்டிக் கொண்டே அவன் மீண்டும் கேள்வி பதில் சூறாவளியில் சிக்கினான். 'அவள் தனது அலுவலத்திற்கு வருகிறாள் என்று தெரிந்ததும் ஏன் அப்படி மகிழ்ந்தான்.? அவள் வருவதற்கு தாமதமாகிய போது அவன் ஏன் கவலை கொண்டான்? கவலை கோபமாகவும் த்திரமாகவும் மாறியது ஏன்? நாவலில் அவளைப் பற்றி ஏன் எழுத விரும்பினான். அப்படியே எழுதுவதாய் இருந்தாலும் முன்னதாகவே அவளிடம் ஏன் தெரிவிக்க வேண்டும். இறுதியாக அவன் அவளிடம் என்னதான் எதிர்பார்க்கிறான்?'
கேள்விகளின் இந்த சூறாவளியில் சிக்கிய ஒரு துறும்பை போல அவன் சுழன்று கொண்டே எப்பொழுது வீடு வந்து சேர்ந்தான் என்பதை உணரவேயில்லை. கேள்விக்குறிபோல் அமைந்த கொக்கியில் தனது டைகளை தொங்கவிட்டு பின் படுக்கையில் படுத்துக் கொள்கிறான். சுவரெங்கும் கேள்விக் குறிகளாய் தெரிந்தது. 'உண்மையில் அவள் இவனை மிக நல்ல நண்பனாக கொண்டிருக்கிறாளோ? இதற்கானத்தான் அவள் காத்திருந்தாளோ? ஒருவேளை அவள் எனது தோற்றத்தால் கவரப் பட்டிருப்பாளோ? ஒருவேளை அவனது வாழ்வின் வெறுமையான மூலையை நோக்கி அவனது கற்பனை அவனை இழுத்துக் கொண்டு போகிறதோ? இல்லை அவன் தன்னிடமே ஏமாந்து கொண்டிருக்கிறானோ?' சுவற்றில் ஒவ்வொரு கேள்விக் குறியும் மின்னிக் கொண்டிருந்தது. அவற்றிடையே புகை எழும்பிக் கொண்டிருந்தது. அவன் புரண்டு படுத்தான். தலையனையை தனது நெஞ்சோடு வைத்துக் கொண்டு படுத்தான். அவனது மூச்சு பேரிரைச்சலைப் போல் வந்து கொண்டிருந்தது. வியர்வைத் துளிகள் அவனது நெற்றியில் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அப்பொழுது டெலிபோன் ஒலித்தது. அவன் துள்ளிக் குதித்து ரிசிவரை பிடுங்கினான். ''சார்! நான் ரிது பேசுகிறேன். புதன்கிழமை எனக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியை அள்ளிக் கொண்டு வந்துள்ளது. கடந்தவாரம் நான் ஒரு கதை எழுதினேன். அந்தக் கதை திருப்பி அனுப்பப் படவில்லை மாறாக அதனை தேர்வு செய்து கொண்டதாக சிரியரின் கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கதையை நான் இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் படித்துக் காட்டவில்லை. அந்தக் கதை வெளியானதும் உங்களுக்கு ச்சரியம் கொடுக்க எண்ணியிருந்தேன். திரும்ப வந்திருந்தால் உங்களிடம் அதனை திருத்தி வாங்கலாம் என்றிருந்தேன். நான் ஒரு நாவல் எழுதப் போகிறேன். அதில் முக்கியப் பாத்திரமாக ஒரு எழுத்தாளன் இருப்பான். அவன் தனது வாசகி ஒருத்திக்குள் இருக்கும் எழுத்தார்வத்தை உசுப்பி அவளை எழுத்தாளர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தி விடுவதாக எழுத இருக்கிறேன். '' உணர்ச்சியின் வசப் பட்டு அவள் பேசிக் கொண்டே போனாள்.
''சரி! தேர்வாகி இருக்கிறதே அந்தக் கதையின் கரு என்ன?'' அவன் மிகுந்த ர்வத்துடன் கேட்டான்.
''ஒன்றுமில்லை சார்! கதை அப்படியே நகர்ந்து கொண்டிருக்கும் அவ்வளவுதான்'' என்றாள்.
''கதையின் முடிவு என்ன?'' அவன் கொஞ்சம் பொறுமையிழந்து கேட்டான்.
''சார்! அதைக் கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். கதையின் முடிவு எப்படியென்றால் கதை இப்பொழுதுதான் துவங்கியது போல் இருக்கிறது'' என்றபடி அவள் கலகலவென சிரித்தாள்.
தொலைபேசியில் வெகுநேரமாக அவளது சிரிப்பொலி கேட்டுக் கொண்டே இருந்தது. சிரிப்பின் அந்த ஒலியதிர்வு அவனது அறையெங்கும் பரவி விடுகிறது. சுவற்றில் இதுவரை தெரிந்த கேள்விக் குறிகள் இதற்கு முன் எப்பொழுதும் தோன்றியது இல்லை என்பது போல் மறைந்து போய் விட்டது.
-------------------------------------------------------------------------------

குருமித் பேடி: பிரபல எழுத்தாளர் குருமித் பேடி இந்தி இலக்கிய உலகில் மிகவும் அறியப்பட்டவர். இவர் ஹரியானா மாநிலம் ஷஹாபாத் மார்கன்புராவில் டிசம்பர் மாதம் 21ம் தேதி 1963ம் ண்டு பிறந்தார். இமாச்சலப் பிரதேச பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பு துறையில் பட்டம் பெற்றார்.
இவர் 1983 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் ஜலந்தரில் இருந்து வெளியான ''வீர்பிரதாப்'' என்ற இந்தி மொழி தினசரியின் துணை சிரியராகவும் தொகுப்பாளராகவும் இருந்தார்.
1991ல் இமாச்சலப் பிரதேசத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக பணியாற்றினார். 1996 முதல் 1998 வரை இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகள் இடையேயான திட்ட அதிகாரியாகவும் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றினார். 2000ம் ண்டு முதல் இமாச்சலப் பிரதேச மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது படைப்புகளில் '' மைசம் கா தகஜா'' என்ற கவிதைத் தொகுதியும் ''குஹசே மேய்ன் ஏக் செகரா'' என்ற சிறுகதைத் தொகுப்பும் பிரபலமானவை. மேலும் ''ஸ்ரதா வ சவுந்தர்ய கா சங்கம் பைஜ்நாத்'' என்ற நூலும் '' நக்ஷத்திர கே கேரே மேய்ன்'' '' சர்ஹத் கே உஸ் பார்'' மற்றும் '' காலே சஸ்மா வாலா தமி'' கிய நாவல்களும் வெளியாகி உள்ளது.
பலதரப்பட்ட தலைப்புகளில் இவருடைய படைப்புகள் நாட்டின் பல்வேறு முக்கிய செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சாகித்திய அகதமி விருது இவரது ''மோசம் கா தகாஜா'' என்ற கவிதை தொகுதிக்கு கிடைத்துள்ளது. மேலும் பஞ்சாப்பின் கலா சாஹித்திய அகதமி விருது, ராஜஸ்தான் பத்திரிக்கை அமைப்பின் இலக்கிய விருது, இமாச்சல கேசரி விருது, ஹிம்மோத்கர்ஷ் விருது என பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் வாங்கி குவித்து உள்ளார்.
இவரது எழுத்தில் ஒரு புதுமையைக் காணலாம். வார்த்தையும் வாக்கியமும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வை மிகச் சரியாக வெளிப்படுத்தி வாசிப்போரை அவ்வுணர்ச்சிக்குள் சிக்க வைத்துவிடும் இயல்பை தன் எழுத்தில் தர வல்லவர். இவரது இந்த தனிப்பட்ட மொழி நடைக்காக பெரும்பாலான வாசகர்களை கொண்டுள்ளார்.
சம்பவங்களின் மிகச் சிறிய இடை வெளியையும் அவர் பக்கம் பக்கமாய் விவரிப்பது மிகச் சிறப்பான ஒன்று எனலாம்.

Friday, November 10, 2006

அணி-3 ( கவிதைக்கான இதழ்)

மக்களின் கைகள்
கவிதையில் காணப்படவேண்டுமென்று
நான் எப்போதும் விரும்பினேன்
விரலடையாளங்கள் தென்படும்
கவிதையே என் விருப்பம்.
நீரின் பாடல் ஒலிக்கும்
பச்சைமண்ணின் கவிதை
எல்லாரும் உண்ணக்கூடிய அப்பத்தின் கவிதை
பாப்லோ நெரூடா

------------------------------------------------------------------------

ருசி பல வென்றுணர்
தமிழ் கூறும் நல்லுலகின் படைப்பாளிகளிடமிருந்து அணிக்கு கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும் ஊக்க உற்சாகமூட்டுவன.

ஜீவஜோதி, ஜோதிகா திருமணம் முடிந்து விட்டது இனி யாருக்கு கல்யாணம் செய்யும் வணிக இதழ்கள்? பாவந்தான்!

சில படைப்பாளிகளின் "ஒரே படைப்பு' வேறு வேறு இதழ்களில் வெளியாகியிருப்பது குறித்து எழுந்த சிந்தனை இது. படைப்பாளியின் ஒரே படைப்பை, வெளியிட இணைய இதழ்கள் ஏற்கும் போது அச்சு ஊடகங்களும் ஏற்கலாகாதா...?

படைப்பாளிகளுக்கும் தனது படைப்பு வேறு வேறு இதழ்கள் வழியாக விரிவான வாசக தளத்தை சென்றடையும் ஆசை இருக்காதா?

"நன்றியுடன்' சில படைப்புகள் எடுத்தாளப்படும் போது ஒரே படைப்பு ஏன் இரு வேறு இதழ்களில் வெளியிடப்படக் கூடாது?

சிற்றிதழ்களும் படைப்பின் ஏற்பை / இயலாமையை உடனடியாக தெரிவித்தல் நலமன்றோ.

அணியின் படைப்பாளிகள், படைப்புகளோடு அஞ்சலட்டை இணைத்து அனுப்பினால், உங்கள் படைப்புகளின் "கதிமோட்சம்' உடனடியாய் தெரியவரும். இது உறுதி.

இராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது மற்றும் கவிக்கோ விருது பெற்றிருக்கும் கவிஞர் சிற்பி கவிதையின் சமகாலத்தில் இயங்குபவர்.

கிராம பெண்கள் ஊக்ககம் போளூர் வழங்கிய
"தலித் பெண்ணியச் சிந்தனையாளர்' விருது பெற்றிருக்கும் முனைவர் அரங்க. மல்லிகா
தலித் பெண்ணியம், தலித் விடுதலை குறித்து சிந்திப்பவர், தொடர்ந்து இயங்குபவர்.

"சங்கு' வளவ துரையனின், "தேரு பிறந்த கதை' சிறுகதை நூலுக்கு ஒரே நேரத்தில் மூன்று விருதுகள்.

விருதுகள், மற்றவர்களை நம் பக்கம் திரும்ப வைப்பவை தொடர்ந்து கவனிக்க வைப்பவை. இனிமேலும் சிறப்பாக இயங்க ஊக்குவிப்பவை.

விருதாளர்களை, வாசகர்களோடும், படைப்பாளிகளோடும் அணியும்
மனதார பாராட்டி மகிழ்கிறது.

எதிர்வரும் அணி 4,
பெண் கவிஞர்கள் சிறப்பிதழ்.
படைப்புகளை வரவேற்கிறோம

அன்புடன்,

அன்பாதவன் மதியழகன் சுப்பையா


--------------------------------------------------------------------------------

கிழக்கும் கிழிந்த காகிதச் சுருளே

கிழிசல்ளோடு
பேச்சு வார்த்தைக் நடத்திக் கொண்டிருக்கும்
பழஞ் சாக்குப்பை முதுகில்,
வாழ்க்கையோட சேர்ந்து பாரமாக

இறக்கை முறிந்து விழுந்த
காக்கையைப் போல வாசல் வாசலாய்க்
கொத்திக் கொண்டே போக,

கசங்கிய உறைகள் கடிதச் சிதலங்கள்
பொட்டலக் கிழிவுகள் கண்ட கண்ட காகிதங்கள்

சலவைக்கடை, தையல்,
துணிக்கடைச் சேதாரப் பைகள் எதிலும்
சேகரம் ஆகவில்லை அவனுக்கு
ஒருவேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதம்

அவன் கைக்கு வந்த காகிதங்களில்
இருந்தன
பதவியேற்ற பதவி இழந்த தலைவர்கள் படங்கள்
இருந்தன
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
இருந்தன
கூட்டணி உடைப்புகள் உருவாக்கங்கள்
இருந்தன
காவிகளின் காமத்தீயில் கருகிய பெண்கள் படங்கள்
இருந்தன
கோலிவுட் பாலிவுட் கிசு கிசுப்புகள்

அவன் கைக்கு வராத
காகிதம் எதிலேனும் இருக்கலாம் ஒளிந்து கொண்டு
ஒளிரும் பாரதத்தில் அவனது எதிர்காலம்

வறுமை போட்ட உத்தரவு
பதிவாகியிருந்த
காகிதம் ஒவ்வொன்றிலும்

அரசாங்கம்
இலவசப் பிண எரிப்புக்கு
வாய்ப்பில்லை என்பதையும்
முன்பக்கம் பின்பக்கம் அல்லாத
மூன்றாம் பக்கத்தில் குறித்திருந்தது.

அவன் அந்த மூட்டையைத் தலைக்கு வைத்துக்
களைத்துக் கண்களை மூடும்போது
எல்லாக் காகிதங்களும்
இமை திறந்துப் பார்க்கும்; தென்படும்

அவனுக்கான இருளில்
திகைத்து இமை மூடும்
கனாவில்
மனிதர்கள் காகிதங்களாக
அவன் மூட்டைக்குள் அடைபட
விழிக்கும் வேளை அவனுக்குக்
கிழக்கும் ஒரு கிழிந்த
காகிதச் சுருளே.

தமிழன்பன்
-----------------------------------------------------------------------------

ஹைபுன்கள் அன்பாதவன்


ஓயாதப் பெருமழைக்காய் வீட்டுக்குள்
ஒதுங்கும் புறாக்கள்
சாலை நீரை அளந்த படி ஆடைநனைய
நகரும் மாநகரர்கள்
பேருந்தின் புழுக்கத்தில் தலைவீழ்ந்த
மழை மீறி வியர்த் தொழுகும்
புகையிலைத் தூள் கசக்கி கடைவாய்த் திணித்து
தாமத ரயில் பிடிக்க யத்தனிக்கும் பெருங்கூட்டம்
எதிர்ப்பாதை மூழ்கியதறியாமல்
கண்ணாடி நீர்ப்படிமத்தில் காதலி பெயர்
கிறுக்கு வானொரு விடலை கைபேசி பார்த்த படி
கலந்த பாஷைகள் ஒரு கணத்தில்
அடங்கி மவுனமாகும் மழைத் தீவிரத்தில்
காவி தரித்தவன் காற்றோடு பேசியபடியிருக்க
அஷ்டக் கோணலாய் மாறுகிறது
நடுப்பாதையில் போவதறியாமல் நிற்கிற
ரயிலில் வெளிக்கிருந்தவன் முகம்
எல்லோருக்குமாய்ப் பெய்கிறது இடைவிடாப் பெருமழை.

ரயிலை நிறுத்திப் பார்க்க வைத்து
மழையில் மூழ்கி குளிக்கின்றன
தண்டவாளங்கள்.

மழைவிட்டவுடன் செடிதூவும் சிறுமழையாய்
சிலிர்க்கிறது மனசு
கடுமையானச் சொற்களில் பலரும்
விமர்சித்த கவிதைகளை புரிந்துணர்ந்தாய்
மிகச் சரியாய்
தவமிருந்தேன் இத்தனைக் காலம்
இந்தப் புரிதல், பகிர்தல் உணர்தலுக்காய்
ஒருமையில் அழைக்க ப்ரியப்படும்
சட்டென மலரும் மனநெருக்கம்
மிகக் கொடுமையானது புரிதலில்லா வாழ்வு
நெடிய உறவாயினும்
பயண நட்பெனினும் உணர்தல் உற்சாக மூட்டுவது
புதியப் புரிதல்களோடு
தொடரட்டுமே தோழமை

உஷ்ண வெளிப்பாடுகளோடு நீள்பயணம்
புழுக்கம் தணிக்கும்
புதியக் காற்று.

---------------------------------------------------------------

உலகக் கவிஞர் வரிசை
ஜெரார்டு மான்லே ஹாப்கின்ஸ் ( 1844-1889 )

கிறிஸ்துவ பாதிரியாராகவும் சிறந்தகவிஞராகவும் விளங்கிய ஜி. எம். ஹாப்கின்ஸ் எசெக்ஸின் ஸ்டிராட்பார்டில் எட்டுக்குழந்தைகளுக்கு மூத்தவராக பிறந்தார். இவரது தந்தை லண்டன் நகரில் கடல் பயணக் காப்பீட்டுத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இவரதுகுடும்பம் 1852ல் ஹாம்ப்ஸ்டெட்க்கு குடிபெயர்ந்தது. ஹாப்கின்ஸ் ஹைகேட் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் கலைத் திறமையைப் பெற்றார். தனது "தி எஸ்கோரியஸ்' என்ற முதல் கவிதைக்காக பரிசு பெற்றார். 1863ல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பிரபல மேதை வால்டர் பீட்டரிடம் மாணவனாக பயின்றார் இந்தக் காலக் கட்டங்களில் "ஹெவன் ஹெவன்' மற்றும் "தி ஹாபிட் ஆப் பர்பெக்ஷன்' போன்ற புகழ்பெற்ற கவிதைகள் உட்பட பல்வேறுக் கவிதைகளை எழுதினார்.
தனது பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1866ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். தனது பட்டப் படிப்பு முடிந்தவுடன் ரோய்ஹம்டன்னில் 1870 வரை இருந்தார். பின் ஸ்டோனிஹர்ஸ்டில் (18701873) மறைக்கல்வி கற்றார். 1877ல் கத்தோலிக்க பாதிரியாராக பட்டம் பெற்றார். 1875, டிசம்பர் மாதம், டெவுட்ஸ்லாந்தில் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பயணிகளிடம் மத போதனைகள் செய்ய வேண்டி பணிக்கப்ட்ட பிரான்ஸ்சிய கன்னியாஸ்திரிகள் ஏழு பேர் பலியாகினர். இந்த செய்தி ஹாப்கின்ஸ்க்கு கடுமையான மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. இதன் பாதிப்பில் "த ரெக் ஆப் தி டெவுட்ஸ்லாந்து (1876)' என்ற அமரத்துவமான கவிதையை எழுதினார். இந்தக் கவிதையை கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வெளியிட மறுத்து விட்டன. வாசிப்பவர்களுக்கு இது மேலும் மனக் கஷ்டத்தை அளிக்கும் என்று காரணம் தெரிவிக்கப் பட்டது.
1877ல் அவர் புனிதக் கட்டளை வழங்கும் படிப்புகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த காலங்களில் அவர் கவிதைகளில் சிறந்த மற்றும் அவரது திறமை வெளிப்பட்ட கவிதைகளை எழுதினார் அவைகளுள் "தி விண்டோவர்' மற்றும் "பையிட் பியுட்டி' குறிப்பிடத்தக்கவை. 1884ல் டப்ளின் நகரில் கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் பேராசிரியராக பல்கலைக் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார். இங்கு கடுமையான பணிச் சுமையாலும் நிர்வாகப் பொறுப்புகளாலும் மனச் சோர்வும் உடல் நலக்கேடும் எற்பட்டது. இந்தப் பொழுதுகளில் பயங்கரமான கவிதைகள் என்று குறிப்பிடப் பட்ட "டெரிபல் சோனெட்ஸ்' களை எழுதினார். அவைகளுள் "காரியன் கம்பர்ட்' மற்றும் "நோ வர்ஸ்ட், தேர் இஸ் நன்' போன்றவைகள் உச்சமாக கருதப்பட்டது. தனது கடைசி காலங்களில் "ஹாரி புளாப்மேன் தி நேச்சர் இஸ் அ ஹெராக்கிளிட்டியன் பயர்' மற்றும் "தோ ஆர்ட் இன்டீட் ஜஸ்ட லார்டு' (மார்ச் 1889 ) ஆகியக் கவிதைகளை எழுதினார்.
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு ஜூன் மாதம்1889ம் ஆண்டு மரணம் அடைந்தார் தனது இறுதி காலம் வரை இவர் தனது கவிதைகளை புத்தகமாக்கி வெளியிடவே இல்லை. ஆனால் இன்றும் அவரது கவிதைகள் உலகக் கவிஞர்களின் இதயப் புத்தகங்களில் அழிக்க முடியாதபடி அச்சாகி உள்ளது.
சொர்க்கம் துறைமுகம்

வசந்தங்கள் தவறாத
கடுமை கூர்மையற்ற
ஆலங்கட்டிகள் பறக்காத
லில்லி பூத்திருக்கும்
பசுமை வயல்வெளிகளுக்கு
போக ஆசைகொண்டிருந்தேன்

பனிப்புயல்கள் வராத
பசுமை பொங்கிய
துறைமுக அமைதியில்
கடலின் பேரிரைச்சல் கடந்த
நிலைக்கு வேண்டினேன்.

அந்தக் குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்

அந்தக் குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்
அவன் எப்படி தந்தையாக முடியும்
அவனது வார்த்தைகளில் வன்மம் இருக்கிறது.
மழலையை பறிப்பது அவனது குணமாகிறது
அதனால் குழந்தை அந்த மனிதனுக்கு
தந்தையாகிறது இல்லையா;
கவிஞன் எதையாவது எழுதிவிட முடியுமா?
மனிதன் அந்தக் குழந்தைக்கு தந்தையாவானா
வார்த்தைகளின் வன்மம் இருக்கிறதே
குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்

தமிழில் : ஆனந்த செல்வி
-----------------------------------------------------------------

நூல் மதிப்புரை கடவுள்களின் கலக அரசியல்


கவிஞர் கோசின்ராவின் "என் கடவுளும் என்னைப் போல கறுப்பு' கவிதை நூலில் இரட்டையர் என்ற கவிதை அண்மையில் வாசித்தேன்.

சற்று உற்றுப்பார்த்தேன்
நிதானமாய்..
சாத்தானின் முதுகுப்பக்கம்
கடவுளின் முகம்
கடவுளின் முதுகுப்பக்கம்
சாத்தானின் முகம்

இவர்களை
தனித்தனியே பிரித்து
சாத்தானைக்
கொன்றுவிட வேண்டும்
அதுதான் பூமிக்கு நல்லது.

ஒருவேளை
அறுவைச் சிகிச்சை
தோல்வியடைந்தால்..?
கடவுள் இறந்து
சாத்தான் பிழைத்துவிட்டால்..
(பக் 93 )

அறுந்துப்போன பாவாடை நாடாவாக, தங்கை சாந்தியின் தூக்குமாட்டி கயிறாக இருக்கும் கயிறு கடவுளை உட்கார வைத்து தேரிழுக்கும்போது மரியாதைக்கு உரியதாகிவிடுகிறது என்ற கயிறு பற்றி எழுதும்போதும் கடவுள் வருகிறார்.. ஏன் சிறுவர்களின் கைகளில் ஊதப்பட்ட நிரோத்தைப் பார்க்கும்போது அதையும் கடவுளுடன் முடிச்சுப் போடுகிறது இவர் கவிதைகள்.

கடவுளின் தலங்களிலும்
நிரோத்
கிடக்கிறது
யார் எறிந்திருப்பார்கள்?

கடவுளின் குடும்பத்தில்
நேற்றுவரைக்கும்
புதுவரவு இல்லை

என்று கவலைப்படும் போது கடவுளின் குடும்பத்தைக் கட்டுப்படுத்துவது நிரோத் என்றால் இங்கே கடவுள் யார்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
மதமாற்றம் சிலரால் ஏன் மிகப்பெரிய குற்றமாக சித்தரிக்கப்படுகிறது என்பதையும் அதன் மூல காரணத்தையும் மதமாற்றம் என்ற கவிதையில் தெள்ளத்தெளிவாக எழுதுகிறார்

நம் கடவுள்கள்
யானைகளாகவும்
காளைகளாகவும்
பறவைகளாகவும்
வந்திருக்கின்றனர்
அவன் ஒரு சண்டாளனாக
ஒரு தலித்தாக ஏன்
பிறக்கவில்லையென்று
கேட்கிறீர்கள்?
நீங்கள் சிந்திக்கிறீர்கள்
அது உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிடும்.
மதம் மாறாதீர்கள்
உங்களையே நீங்கள்
சிலுவைக்குள் அறைந்து
கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு நீங்களே
குல்லாய் மாட்டி விடாதீர்கள்

நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது? (பக் 54 )

இப்படியாக கடவுள்களைப் பற்றிய பல்வேறு தளங்களில் விடைகாணமுடியாத வெளியில் நின்று கொண்டு மனிதம், மனித நேயத்தை மட்டுமே முன்னிலைப் படுத்தி தன்கவிதைகளில் பயணிக்கிறார் கோசின்ரா. இவருடைய கடவுள் பாதையில் போப்பாண்டவரும் தப்பவில்லை.

கடவுள்கள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புடைய மறுபிறப்பு,சொர்க்கம், நகரம் எல்லாம் கோசின்ராவின் பார்வையில் கவிதைக்கான தளமாக விரிகிறது. இக்கவிதை தொகுப்பின் தலைப்பு கவிதையான என்னுடைய கடவுள் கவிதையில் சில கருத்தியல் முரண்கள் வாசிக்கும் அனைவருக்கும் ஒரு கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்கவிதையின் முதல்வரியில் சொல்லுகிறார்...

என்னுடைய கடவுளும்
கறுப்புத்தான்
தமிழ்தான் தாய்மொழி..

இனி தமிழனின் கறுப்புநிறக்கடவுளை அறிமுகப்படுத்தும்போது கடவுளுக்கு கோவில்தான் உலகம் என்கிறார், வெளிச்சத்தின் கைகள் தீண்டாத அறையில், தவறி விழுந்த பல்லிகள் பயமுறுத்த போலியோ கால்களுடன் தமிழனைப் போலவே நோஞ்சானாய் இருப்பதாக சித்தரிக்கிறார்.

தமிழின வரலாற்றில் கறுப்பு கடவுள் கோப ஆவேசத்துடன், மேற்கூரையும் இல்லாத வெட்டவெளியில் கையில் அரிவாள், வேல் ஆயுதங்களுடன் முறுக்கிய மீசையுடன் திடகாத்திரமான தோள்களுடன் கண்டவருக்கு அச்சம் தரும் தோற்றத்தில் காட்சி அளிப்பவராகவே இருக்க கவிஞர் சித்தரிக்கும் நோஞ்சான் கடவுளின் சித்தரிப்பு கவிதைக்கான கருப்பொருளை வலுவிழக்கச் செய்துவிடுகிறது.

கலைஇலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது போல இக்கவிதைகளின் மூலம் கவிஞர் கோசின்ரா "ஒரு கலக அரசியலைச் சாதிக்கிறார்'.

புதியமாதவி

என் கடவுள் என்னைப்போல் கறுப்பு
கோசின்ரா
குமரன் பதிப்பகம், சென்னை 17.
பக் : 96, விலை : ரூ 50/



-------------------------------------------------------------------


நூல் மதிப்புரை மலை ஒரு பார்வை

கவிதைத் தடத்தில் ஒரு புதிய தளத்தில், ஒரு புதிய மொழியில் இயங்குபவரே இலக்கியத்தின் ஆளுமையாக கருதப்படுகின்றன். கவிதைக்கு சாயல் இருக்கலாம். கவிஞருக்கு சாயல் கூடாது.
""முற்றிய முதுமையில்
முதிர்ந்த மரத்தில் எங்கெங்கும்
உறவு கொண்டோடும்
எனக்கான கவிதை மொழி''
என சாயல் அற்று சிலரே கவிதைப் பிரவேசம் செய்து வருகின்ற சிலரில் ஆர். ரத்தினசாமி ஒருவர். இரண்டாம் படைப்பாக அவரின் தொகுப்பு "மலை'.
முன்னுரை மலை குறித்தானாலும் தொகுப்பில் மலை பற்றியவை இல்லை.
""ஒரு பறவை
தனியே பறப்பது போல
நீண்டு போய்க் கொண்டுள்ளது
அந்த மலைப்பாதை'' என ஒரேயொரு சிறுகவிதை.
அப்பாவின் ஆளுமை கவிஞரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை அப்பா பற்றியதானவை உறுதிப்படுத்துகின்றன் முதிர்வுமுலம் மரியாதையை வெளிப்படுத்துகிறார்.
அப்பா அளவிற்கு அம்மா புகழும் கவிஞர் பாடியுள்ளார். வீடெல்லாம் புகழ் மணக்கும் மூலம் அம்மாவின் நேர்மையை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
""யாவும் நினைவில் நெருக்கமாய்
உள்ளது போலவே
அம்மாவின் அந்த கடைசிப் பெருமூச்சும்
சாகாது உள்ளது''
என "இருப்பு' பெருமூச்சு விடச் செய்கிறது. வீடும் ஒரு பாடு பொருளாக பாடப்பட்டுள்ளது. பெற்றோரைத் தொடர்ந்து மகள் குறித்தும் கவிதைப் பாடி உள்ளார்.
""உன் வார்த்தைகள் யாவும்
எழுதப்படுமுன் பேசப்படுமுன்
கழுவப்பட வேண்டும்
நெஞ்சம் நேர்மையைச் சுரக்க வேண்டும்''
என அறிவுரைத்துள்ளார். மகளின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக உள்ளது இக்கவிதை.
கந்தா...யீ என்னும் கவிதை ஒர் ஆசிரியர் என்னும் நிலையில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதையாகும். ஒரு மாணவன் சீரழியக்கூடாது என்னும் ஆசிரியரின் நற்குணம் பாராட்டுக்குரியது. ஒரு கவிஞரை விட ஒர் ஆசிரியரையே இக்கவிதை மூலம்அறியமுடிகிறது "வானம் என் கண்கள்' மூலம் ஒரு கவிஞராக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

நகரத்தின் குரல் எத்தனையோ இருந்தாலும் கிராமத்துக் குரல்கள் காண்பதரிது. "காணக் கிடைக்காத குரல்கள்' மூலம் பல குரல்களை வாசகருக்கு அடையாளப் படுத்துகிறார்.
""எப்படித்தான் வார்த்தைகள்
இவர்களுக்குகெல்லாம் இயல்பாய்க் கிடைக்கிறதோ
வாய் திறந்தால் வார்த்தை ஜாலந்தான்'' என கிராமத்தவர் மொழி கொண்டு பிரமிக்கிறார்.

மனிதர்க்கு பயம் ஏற்படுவது இயல்பு கவிஞரும் சில பயங்களை கவிதை மூலம் பட்டியலிட்டுள்ளார் :

""குரூப் ரீடிங்களுக்குப் போய் வருகிறேன்
மகள் தினமும் சொல்லிப் போகையில்
லவ் இருக்கலாமோ? என பயங்கொள்வது அர்த்தமற்றது சராசரியானது ஆயினும் "தீமைகளைத் தொலைந்திடும்' நாள் மூலம் பெண்ணியம் பேசியுள்ளார் பெண்களுக்காக நேரடியாகவே குரல் கொடுத்துள்ளார்.

ஊரில் பலர் இருந்தாலும் ஒரு சிலரே மனதளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துவர் அவ்வாறு கவிஞரை பாதித்தவர் சிக்கணப்ப கவுடர். கவுடர் என்பவர் மலையில் வாழ்வபர். வெறும் உருவமாய் என்னுள் பதிந்தவரில்லை என கவுடர் குறித்த பதிவுடன் தொடர்கிறது கவிதை.

தொகுப்பு நெடுக கவிஞர் சந்தித்த மனிதர்களைக் காண முடிகிறது. உறவுகளை குறித்து பேசும் போது உணர்வுகள் கூடுதலாகவே வெளிப்படுத்தபட்டுள்ளது. ஓர் எதார்த்தமான கவிஞராக தொகுப்பின் வழி அறியப்பட்டாலும் சமூக அக்கறையுள்ளவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிச் செய்துள்ளார் என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன

இயல்பாகவே ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இது கவிஞரின் குற்றமாகக் கூற முடியாது இன்று மக்களின் போக்கே அவ்வாறுதான் உள்ளது. மலை மக்களின் பண்புகள், குணங்களை எடுத்துக்காட்டியதற்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் மலை குறித்தும் மலை மக்கள் பற்றியும் எழுத கவிஞருக்கு ஏராளமான வாய்ப்புண்டு அடுத்தத் தொகுப்பில் அவைகளை எதிர்பார்க்க வைக்கிறது மலை.

பொன்.குமார்
மலை
ஆர். ரத்தினசாமி
வெளியீடுதேவி பதிப்பகம்
விலைரு40.00/
பாரதியைக் காத்த களமே
பாரதிதாசனால் புகழடைந்த ஊரே
சங்கரதாசு சுவாமிகள் வாழ்ந்த மண்ணே
தமிழ் ஒளி, புதுவைச்சிவம்,
வாணிதாசனை ஈன்ற தாயகமே
அரவிந்தரை மாற்றிய புண்ணிய பூமியே

ஓலைச் சுவடிகள்
பைரவி
வெளியீடு : வி. பிரகாஷ்
ஞி/ணி. ராஜன் புத்தக நிலையம்
46 தரைத்தளம், நகராட்சி வளாகம்,
ஜவஹர்லால் நேரு வீதி, புதுச்சேரி 1.

---------------------------------------------------------
ஐக்கூ....ஐக்கூ....ஐக்கூ....

பனையோலை நுங்கு


கொந்தளிக்கும் கடலிலும்
மையம் கொள்ளும்
புயல்

எண்ணெய் இல்லாவிடில்
திரியையே தின்னும்
விளக்கு

நன்கொடை எனும்போது
நம்பெயர் அதிலெதற்கு
விலாசமற்றது பூவின்தேன்

தேவைப்படுகிறது எதிர்முனைகள்
ஒளியின் பெருமையறிய
உதவுகிறது இருள்

நாணைவிட்டு வெளியேறி
தைக்கும் இடமறியாமல்
தருமாறும் அம்பு

ஒட்டுவது கடினம்
வேகவேறுபாடுள்ள
மாடுகள் பூட்டிய வண்டி

ஒதுங்கிக்கொள்ள
இடம் கொடுத்தேன்
உள் நுழைந்தாய் ஒட்டகமாய்

அதேகுரல் அதேமொழி
அலுக்காத உணவாய்
அன்பு

நிறமும் வடிவுமா நிர்ணயிருக்கும்
கருப்பாய் கணுக்களோடிருப்பினும்
இனிப்பாய் கரும்பு

நீ. ண். ட தொலைவிலிருந்தும்
நீந்தி வந்து கதவு தட்டும்
நினைவலைகள்

முரட்டுத்தனம் மோசமோ?
பனையோலைக்குள்
பத்திரமாய் நுங்கு

இரா தமிழரசி.

------------------------------------------------------

பாடலொன்றை இசைக்கிறேன்
பாடல் முழுவதும் பயணித்துப்
போகிறாய்...

நிறுத்திய பின்னும்
முடிவற்ற வார்த்தைகள்
உனது முகவரி
தேடுகின்றன...

எண்ணற்றப்ப
பாடல்களிலும்
எங்காவதொரு வரிகளில்
புகுந்து விடுகிறாய்

பாடாத போதிலும்
எங்கிருந்தோ
வளரும் பாடல்
உன்னை நினைவூட்டுகிறது!

பாரதிகிருஷ்ணன்


-----------------------------------------------------------
புதையல்
தொழில்
எழில் எடுத்த மலர்க்கமல ஏந்திழையாள் சன்னதிக்கு
தொழில் அடுத்து நல்ல கவி சொல்லணுமாம் அழல் அடுத்த
கண்ணுலதான் தன் மகனே! காய்சினத்து வேலுடையாய்!
வண்ணத் தமிழ் எனக்கு தா.

கந்தா, கடம்பா, கதிர்வேலா கட்டழகா
சந்தார் தடந்தோளா சட்டுணுவாஇந்தவூர்
ரேடியோக் காரரெனை நெருக்குகிறார் லேட் டாச்சாம்
ஒடியா, ஒடியா வா

வந்தாலும் போதாது வாகைபுனை வேலவனே
சொந்தமாய்க் கவியேதும் தோணுதிலைசெந்தமிழில்
பாட்டு ரெடிமேடாய்ப் பண்ணிவச்சால் கொண்டு வந்து
லேட்டேதும் பண்ணாமற் தா

கும்பிடுவார், குழைவார், கூத்தாடிப் பல்லிளிப்பார்,
வம்பிடுவார் பின்னால் வழக்கிடுவார்அம்புவியில்
அன்னார் தொழிலை அழகாகப் பண்ணிவச்சேன்
என்னமோ காணாமல் போச்சு.

காப்பியடித் திட்டேன் கயிறு திரித்து வச்சேன்
எப்படியோ பாட்டென் றெழுதினேன் அப்படியும்
வாகையடி முக்கிலது வந்து குடி போட்டதடா
தோகை மயில் ஏறி வா

நாலே வினாடி தான், நல்லதாய் ஒன்று சொலு
ஏலே முருகையா எத்தாதேவாலே
வந்து இருந்திங்கே வக்கணையாயப் பாட்டெழுது
தெந்தனங்கள் பண்ணாதே வா

துருப்பிடித்த வேலைத் தூர எறி இங்கே வா
உருப்படியாய்ப் பாட்டொன்று சொல்லு விருப்புடனே
கவியரங்கம் கூட்டிக் கன்னித் தமிழ் வளர்ப்பார்
செவிக்கமுதமாய் ஒன்று சொல்லு.

வேலன் உரைக்கின்றான் வேளுரா இன்னமு நீ
காலம் கலி என்றறியாயோ? ஆலம்
உண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்
அண்டி வந்து கேட்பவரார் சொல்?

பண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்
கண்ணைச் சொருகிச் கவி என்பார் அண்ணாந்து
கொட்டாவி விட்ட தெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

உழைப்புக்குப் பாட்டென்றேன் ஓங்கும் சினம் எடுத்து
பிழைப்புக்கே ஆபத்தாய்ப் பண்ணிவிட்டான் அழைத்த
நல்லவரே தமிழின் நயங்கள் வளர்ப்பவரே
கொல்லாதீர் என்னை விடும்.


---------------------------------------------

பயணம்


பயணம் எனில்
சிலவு தான்!

செலவு இல்லா
பயண மேது?

நேர செலவு
பொருட் செலவு

செல்லும் போது
சன்னலோரம்
இருக்கை தேடும்
திரும்புகையில்
நிற்க இடம்
கிடைக்குமா? என
ஏங்கும்

முந்நூறு செலவில்
பயணம் சென்று
திரும்பு கையில்
கிடைத்த
மூன்று கவிதையில்
திருப்தியுறும் மனம்.

சோலை. இசைக்குயில்

--------------------------------------------

ஆறுதல்


அப்பாவின் சம்பளம்
அவர் குடிக்கே இரையாகும்
அம்மாவின் கூலிதான்
அரைவயிற்றுப் பசியாற்றும்
இதற்கு நடுவே
எனது படிப்புக்கு
யாரை எதிர் பார்ப்பேன்?
ஆறாம் வகுப்பில் சேர
அண்ணனுக்காக காத்திருக்கேன்.

வெளியூரிலிருந்து அவன்
விடுப்பெடுத்து வரும் போது
வீட்டில் அடுப்பெரியும்
கொஞ்சம் பணமும்
நிறைய அன்பும் கொண்டுவருவான்
எனக்குப் பாவாடை சட்டையும் தான்

கண்ணீரைத் துடைத்தெறிந்து
கன்னத்தில் முத்த மிட்டுக்
கஷ்டத்தை நினையாதே
என்றொரு ஆறுதலும் தருபவனாய்

எப்போதும்
அவனிருப்பான்
படிக்கிற வயசில்
பட்டணத்து ஒட்டலில்
பாத்திரங்கள் தேய்த்துத்
தானும் தேய்வானே
அவனை அணைத்துக்கொண்டு
ஆறுதல் தருவார் யார்?

வடுவூர், சிவ.முரளி


----------------------------------------------

எங்கள் ஊர் சிவன் கோயில்

சுவரோரம்
சிறுநீர் கழிப்பதைத்
தடுக்க
தன் முயற்சியில்
சற்றும் மனம் தளராமல்
பதினெட்டாவது
தென்னங்கன்றை நடுகிறார்
தலையாரி சுப்ரமணி

சிதிலமடைந்த
மடப்பள்ளிக்குள்
பசித்த எறும்புகளும்
கொழுத்த எலிகளும்
குடியிருக்கின்றன

குதிரை வாகனத்தின்
குறியை அசைத்து
சிரிக்கும் சிறுவர்கள்

செவ்வரளிச் செடிகளின்
நிழல் மறைவில்
திருட்டுப் புகையூதும்
இளவட்டங்கள்

பாத்திரங்களில் விழுந்த
துளை அடைக்கும் பொருட்டு
சிலைகளின்
எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட
அபூர்வமாய் வரும் பெண்கள்

எதிர்க்கடையிலிருந்து
தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து
நந்திக்குப் பின்புறம்
வட்டமிட்டு சீட்டாடும்
ஆண்கள் என
எப்போதும்
ஆள் நடமாட்டமுள்ள
எங்கள் ஊர்
சிவன் கோயிலில்
இப்போதும்
மறக்க முடியாதது
என்னவெனில்...
பிரதோஷம் தோறும்
பிரசாதமாக
குருக்கள் தரும் சுண்டலை
எல்லோரும்
அங்கேயே தின்று முடித்து
கால் சட்டையில்
கை துடைத்துக் கொள்ள
மாப்பிள்ளை பென்ச்சு
முருகேசன் மட்டும்
பத்திரமாக வீட்டுக்கு
எடுத்துப் போவான்
அப்பா அருந்தும்
சாராயத்திற்கு
தொட்டுக் கொள்ளவென

லலிதானந்த்

-------------------------------------------------
அணிச் சேர்க்கை
அம்ருதா சென்னை
பெண்ணியம் சென்னை
சிறகு சென்னை
கிழக்கு வாசல் திருத்துறை பூண்டி
சௌந்திர சுகன் தஞ்சை
பொதிகை மின்னல் சென்னை
நாளை விடியும் திருச்சி

------------------------------------------

பித்து

உங்கள் யந்திர வாகனத்திற்கு
சவால் விடுவது போல சாலையின் குறுக்கே
எதிர்பாரா அவளின் கடப்பு
உங்கள் படபடப்பை கணிசமாய் கூட்டி
"சடன் பிரேக்'கிட வைக்கிறது
(இது போன்ற நிகழ்வுகளுக்குத்தானே அது இருக்கிறது)
டயரின் தேய்ந்த கிரீச்சிடல்...
திரும்புகிறாள் உங்கள் புறம்

அழுக்கேறிய கிழிந்த ஆடைகள்
அவளின் இளமையை காட்சி படுத்துகின்றன
சடைத்த கூந்தலுக்குள் தெற்றென புலப்படா முகம்
தீட் சண்யம் மிகுந்த பித்தேறிய
கண்களின் உக்கிரங்க கண்டு
வசைபொழிய தயாரான உங்கள்
வாயடைத்துப் போகிறது

கெஞ்சுகிற பாவனையுடன் நீளும் கையில்
பிரக்ஞையற்று நீங்கள் வைத்த சில்லறையுடன்
செல்கிறாள் குழந்தை சிரிப்புடன்
உன்மத்தம் கொண்ட விழிகளை
உங்களிடம் விட்டு விட்டு

சக்தி அருளானந்தம்

--------------------------------------------------

குறுங்கவிதைகள்
வனத்தினுள் நீளும்
ஒற்றையடிப் பாதையில்
தொலைந்து விடுவதாய் கனவு
விடியாமலிருந்தால் நல்லது

எல்லா வார்த்தைகளாலும்
பிடிபாடமல் நழுவுகிறது
அப்பூவின் வாசனை

அடுத்த அலையில்
காணாமல் போகும்
என் காலடித் தடம்

இந்த இடம்
இந்த ஒளி
இந்த நிகழ்வு
இந்த மௌனம்
இல்லையெனில்
இல்லை இக்கவிதை
பிறகேன் கீழே
என் பெயர் மட்டும்...

உதிர்ந்த இலைகள்
கிளைத்த கொழுந்துகள்
குறித்து குறிப்பேதுமில்லை
இப்பெருமரத்தில்...

பா. திருச்செந்தாழை


----------------------------------------------------------

தெரிகிறது
புல்வளர்ந்த இடம் மாட்டுக்கு
எங்கெங்கென்றாலும் உடன் பசியும்

தெரிகிறது
விரைவு வண்டியோட்டிக்கு
தண்டவாள மாடுகள்
தப்ப இயலாது என்ஜினிலிருந்து

தெரிகிறது
மேலும் விரைவு வண்டி
கட்டுப்படாது என
வண்டியுயிர்கள் காக்கப்பட

தெரிகிறது
மோதும் அக்கணம் கையிரண்டை
தூக்கி கண்களைத் தாழ்த்திக் கொள்ள

தெரிகிறது
பார்வையாளருக்கு கணத்தில்
அரைத்து, சிதறி, இறைத்து
தண்டவாளத்தின் நடுவிலும் அருகிலும்
சதைத் துண்டுகளும் பாகங்களும்

தெரிகிறது
இரைப்பையில் அசைபோடப்படாதபுல்
பசுமை, அரைத்த கூழ்,
மொத்தையாகவும் நாடாவாகவும்
கணிசமான அளவு கூழாகாத
பிளாஸ்டிக் பைகள்

தெரிகிறது
உடன் நடந்த ஒரு மாட்டுக்கு
ஏதோ சோகம்
கண்கள் வழிய கதற மட்டும்

தெரிகிறது
மற்றொன்றுக்கு வாயில் நுரைதள்ள
தண்டவாளத்தைப் பார்த்து
தலை ஆட்டி ஆட்டி
மிரண்ட கண்களுடன் ஏதோ சொல்ல

தெரிகிறது
கூட்டமாக வந்தடைந்த
காகங்களுக்கும், மேயும் நாய்களுக்கும்
சிதறுண்டு கிடக்கிறது இரை

தெரிகிறது
மாட்டுடையோனுக்கும்
பசு பால் கொடுக்கும்
காளை வண்டியிழுக்கும்
சதை சாப்பிட இயலும்

தெரிகிறது
எனக்கோ அடுத்தடுத்த
வண்டிகளுக்கு எது எதுவோ?
யார் யாரோ? என்று.
க்ருஷாங்கினி

----------------------------------------------------------------------------
நூல் மதிப்புரை தனிமை கவிந்த அறை நான்கு பார்வைகள்

1. மதிய வெயிலில் மௌனமாய் தலை கவிழ்ந்து கிடக்கிற ரோஜா நிற செம்பருத்திப் பூக்களைப் பார்க்கிறேன். காலையில் இதேப் பூக்கள் ஆரவாரமாய் மலர்ந்து சூரியனை வரவேற்றிருந்தது. இப்போது இதைப் பார்க்கும் போது மனதில் தோன்றும் பிரிவு தனிமை கவிந்த அறை தொகுப்பில் நம்முடன் பயணம் செய்கிறது. தலைப்புக்கு வஞ்சகம் செய்யாத கவிதைகள் புத்தகம் முழுவதும். காதலோ, நட்போ, பிரிவோ, பாசமோ, ஊடலோ, கூடலோ எந்த உணர்வையும் மலினப்படுத்தாத கவிதை மொழி தொகுப்பு முழுவது உள்ளது. மும்பை மழையின் தாண்டவநேரங்களை பல ஊடகங்கள் வழியாக ஒரு நிமிஷம் அடடா சொல்லி அடுத்த சேனல் பார்க்கப் போன கூட்டம் நம்முடையது. கவிஞர் இத்தொகுப்பில் தவிக்க தவிக்க பதிவு பண்ணியதை ஒரு கதம்பமலர் கொத்துகளாக மழைக் கொத்து தந்திருக்கிறார். மனசைப் பதைக்கச் செய்யும் மழை நேர மாலைப்பொழுதுகள் மாநகர மரணங்கள் தற்காலிக உறவுகளின் முகமூடி தரித்த புன்னகைகள் என நமக்கு ஆவணப்படம் பார்க்கிற உணர்வில் கவிதைகள்.

"சீதை ஜெயத்தில்' தெளிவது கவிஞரின் ஜெயமா? இல்லை காதலா என்று கேட்க தோன்றுகிறது. சொல்ல இயலாத பெரும் மௌனத்துக்குள் சிக்கித்தவிக்கிறது மனசு. கம்பி வழி கசிகிறது காதல். பண்படுத்தப்பட்ட சுகமான எழுத்து வார்த்தை தூண்டில்கள் மாட்டிக் கொள்ளாத மரபு மீன்கள் கவிதையாய் வெளியே சுற்றுகிறது. கவிஞரின் எழுதுகோல் நம்முடன் கை கோர்த்து தொகுப்பு முழுவதும் தனிமையை உணரும் இன்னொரு தனிமையாக.

இதுவரை வாழ்ந்திருந்த சொந்த ஊரின் பிடிமண் அற்றுப் போகிற ஏக்கம் கண்ணாடித் தொட்டிக்குள் மூழ்கிய ஆகாயத் தாமரை வேராய் வெறுத்துப் போன அலைச்சல் வாழ்வின் நிமித்தங்கள் மாநகரப் பிரவாகத்தின் வேகச் சுழலில் சிக்கிய நிமிடங்கள் கவிஞரின் ஆழ்மனசு தியானிப்பது மரபு கூறும் அக ஒழுங்குகளை உண்மை உணரும் மனசுக்கு நெருக்கமான பழகிய மொழிநடை. இது நடுமய்யச் சுழலின் வீர்யத்தில் சிக்கித் தவித்து பீரிடும் கவிதை தானா இல்லை இரவு முழுதும் விழித்திருக்கும் திசைவிளக்காய் தூரத்தில் சுற்றியலைகிற ஒளிக்கீற்றோ எப்படி இருப்பினும் இதமான அந்தி சூரியனின் மிச்சங்கள் மாலையை இனிதாக்குகின்றன குழப்பங்கள் ஏதுமற்று.
கீதாஞ்சலி பிரியதர்சினி 

2. "தனிமை கவிந்த அறை' நேற்று பயணத்திலேயே வாசித்து விட்டேன். நூல் தயாரிப்பும் சில கவிதைகளும் அபாரம். கவிதைகள் முழுக்க தனிமையும், தனிமையில் ததும்பும் காமமும் ஊடாடுகின்றன மும்பை வாழ்வின் தனிமைத் தாக்கம் என்பதை என்னால் உணர முடிகிறது.

கவிதை நூல் என எடுத்து படிப்பவருக்கு இது மட்டும் போதுமா என்கிற கேள்வியும் உடன் எழுகிறதே கவிதை மொழி பல இடங்களில் ரகிக்கும்படி உள்ளது. முந்தைய தொகுப்பை விட (நெருப்பில் காய்ச்சியப் பறை) இத் தொகுப்பை பாராட்டத்தக்க அம்சம் இதுவெனில், சமூகத் தாக்கமும், நிகழ்வுகளும் விடுபட்டுப் போயுள்ளது சரியெனப் படவில்லை. யாரின் விருப்பத்திற்காகவும் நாம் தொகுப்பு வெளியிடுவதில்லை என்ற போதிலும், நமது விருப்பம் சார்ந்து சமூக அக்கறை சார்ந்ததுமான படைப்புகளை முன்னிலைப் படுத்துவதில் நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம் தானே... சமீபத்தில் வாசித்த சில கவிதை நூல்களும் உணர்வு தளத்திலேயே இயங்குகின்றன. வாசித்த நமக்கு வெறும் அயர்ச்சியை மட்டுமே தருவதாய் உள்ளன. இந்நூல் அப்படி அல்ல ஆயினும், இன்னும் செறிவாய் தர முயன்றிருக்காலம்.


மு. முருகேஷ் 

3. அடக்கம் செய்யப்பட்ட பிரேதத்தின் மண்மேட்டிலிருந்து கவிந்து எழும் மலர்களின் வீச்சத்தைப்போல இனம்புரியாத ஓர் உணர்வு ஆட் கொண்டது .

தவிர்த்திடும் எண்ணத்திலேதான் ஆங்காங்கே காதலெனும் மின்மினிகளை பதித்து வைத்திருக்கிறீர்கள் போல அவை கொடுக்கின்ற அளவான வெளிச்சத்திலே தனிமை கவிந்த அறை அற்புதமாய் ஜொலிக்கிறது.

தொகுப்பின் பிரதான நோக்கத்தைப் போலவே கவிதை வடிவமைப்பிலே மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகள் ஈர்க்கின்றன. புதுமைக்கே உரித்தான சிற்சில பலகீனங்கள் ஆங்காங்கே ஊடாடி நின்றாலும் அவையாவும் புதுமையின் அழகையும், கம்பீரத்தையும் அணிசேர்த்திடவே பயன்பட்டிருக்கின்றன.

1. காதலியைத் தடுக்கின்ற தடைகளை காதலன் தாண்ட வேண்டியதன் அவசியம் என்ன?
2. மௌனம் என்பதே ஒரு ரகசியமில்லையா?
3. விடுதலையை சமையலறைச் சாடிக்குள் ஒளிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
4. காம தகனத்துக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் கழுவேற்றம் அவசியந்தானா?
போன்ற இன்னுஞ்சில கேள்விகள் தங்களின் கூர்மையின்பாலும், தைரியத்தின்பாலும் (வார்த்தை சரியில்லாமல்) சிற்சில சலன அலைகளை ஏற்படுத்தினாலும், தொகுப்பெங்கும் விரவிக்கிடக்கின்ற தனிமை எனும் ஆழ் அமைதி அவற்றை கரை தொட அனுமதிப்பதில்லை.

சில கவிதைகளுக்கு வாய்த்திருக்கும் நேரடித் தொனி மிகுந்த வருத்தமடையச் செய்திருக்கிறது. மெல்லிய மேகம் அப்பிய மலைச் சிகரத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி எரிவதுபோல அத்தகைய கவிதைகள் மொத்த அமைதிக்கும் கொள்ளிமூட்டிடுமோ என்னும் அச்சம் தான் அந்த வருத்தத்துக்கு காரணம்.

தமிழ் கவியுலகம் தங்களைப் போன்ற புலம்பெய்ந்து வாழ்வோரிடம் உள்ளடக்கரீதியிலே வித்தியாசமான கவிதைகளை எதிர்பார்த்துப் கொண்டிருக்கும் தருணத்தில் காமக் கடும்புனலில் திளைக்கும் அனேக கவிகளின் தவறுக்கு தாங்களும் ஆட்பட்டிட வேண்டாம் என்பதென் ஆழ் விருப்பு.

வாசித்து முடித்ததும் மெல்லியக்குரலில் ஒலித்திடும் இனம்புரியா கீதமொன்றினை என் செவி விட்டு அகற்றிட அனேக நேரம் பிடித்தது.
சி. பாவெல் 

4. அன்பாதவன் கவிதைகள் ஆழ்மனப்படிமங்கள். கண்ணாடி குடுவையில் பாதி அளவு நீர் நிறைக்கப்பட்டு அதில் ஒரு துண்டு பனிக்கட்டியை மிதக்கவிட்டால் அதன் அடிப்பகுதி நீரில் மறைந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் தான் தெரியும் உளவியலில் இதனை ஆழ்மனப்பதிவுகள் என்பர். இந்த ஆழ்மனப்பதிவு தான் தனிமை கவிந்த அறையாக வெளிப்பட்டிருக்கிறது கவிதையை உணர்ச்சியின் திருப்பு மையம் என்று சொல்லி விட முடியாது. அதற்காக உணர்ச்சியே கவிதை என்றும் கூறிட முடியாது கவிதை வீரியமுள்ள விதை அது மண்ணை கிளரும், அப்படியே உள்ளத்தையும் நையப்புடைக்கும். அன்பாதவனின் படைப்பாளுமை இருள் கிழித்து முளைவிடும் விடியலை போன்றது மழையின் நனைதலில் சிலிர்த்திடும் உணர்வு சார்ந்தது நூலில் கவிதையாகி இருக்கும் காமம் காக்கையின் கூர் அழகானது. தனிமையோடு கை குலுக்கும் வனவாசிகளுக்கு ஜீவ முடிச்சு. தனிமையின் மௌனம் மொழியாகியிருக்கிறது. தமிழ் சமூகங்களில் தனி மனித வாழ்வியல் சார்ந்த படைப்புகளின் அழகியல் கூறுகளில் காமம் மீவியல் தன்மை கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்தலின் அடிப்படையான இணைவும் ஙீ பிரிவும், காதல் ஙீ போர் என்ற கருத்தாக்கமாக விரிகிறது. எந்த ஒரு படைப்பும் உணர்வுக் களத்தின் உக்கிரத்தில் பிறப்பது தான். நேரிடையாக உணர்த்த முடியாத போது படைப்பாக மாற்றுவது சாத்தியமாகிறது. தீராக் காதலும் காமமும் கவிதையாக மாறும் போது நாய் குதறுவது போல படைப்பாளியை (ஆண்/பெண்) தாக்குவது கண்களில் காமலென்ஸ் பொருத்திப் பார்க்கும் காமுகனின் பார்வையாகும். அது அன்பாதவன் கவிதைகளில் நிகழக் கூடும். ஆனால் அப்படியான காமப்பதிவுகள் தனிமை கவிந்த அறையில் இல்லை.
மழைக்கும் உனக்குமான உறவில்
என்னையும் கை சேர்த்துகொள்ளும்
உன்னிலிருந்து பொங்கி / என்னுள் இறங்கிப் பரவி
நனைதலின் சுகமும் / இப்போது இனிக்கின்ற
இன்ப மழை / தவிப்போடும் தகிப்போடும்
அவஸ்த்திக்கும் என் தனிமை / புரியாமல் பொழிகிறது குளிர் மழை.

இப்படியான நுண் உணர்வுகள் பல கவிதைகளில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசிக்கப்பட்ட மிக அருமையான ஒரு கவிதை நூல் தனி மனிதரின் தனிமையை இணைக்கும் பாலம் இந்நூல் மனிதரின் மனதை வாசிக்க தெரிந்திருக்கிறது அன்பாதவனுக்கு.

முனைவர் அரங்க. மல்லிகா. 

தனிமை கவிந்த அறை
அன்பாதவன்
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை 11.


-----------------------------------------------------------
ஹைக்கூ அல்லாத ஹைக்கூ

பெருத்த ஆலமரம்
காற்று உலுக்க
உதிரும் குருவிகளின் சப்தம்

கொடியில் உலரும் துணிகள்
ருசி பார்க்கும்
சூரியன்

கரும்பு சக்கையாய்
பிழிந் தெடுக்கும் வாழ்க்கை
விடியலைத்தேடி தாசிகள்

அகதிகளை சுமந்த படகு
சிதறிக் கிடக்கின்றன
கண்ணீர் துளிகள்

எரியும் குடிசைகள்
விரைந்திடும் தீயனைப்பான்
குளிர்காயும் அரசியல்

கன்னிக்கோயில் ராஜா
---------------------------------------------------------------

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
இன்னுமிருக்கும்
எச்சவெளிச்சங்கள்
இருள் விரட்டி தோற்க
மீண்டும் மொரு முறை
மீட்டெடுக்கும்
முயற்சியாய்
இருள் சூழ் உலகு!

மகேசன்


---------------------------------------------------
குப்பை மலையில்
கோழிகள் உற்சாகமாய்
மேய்ந்து கொண்டிருக்கும்

அன்னப் பறவைகள்
ஆர்ப்பாட்டமாய்
நீச்சல் தொடரும்

குளத்து மீன்கள்
துள்ளிக் குதித்து
வானம் பார்க்கும்

கடற்கரையில் எடுக்கும்
சுதந்திரமாய்
ஓட்டப்பயிற்சி

கூடுகட்டிய குருவிகள்
குடித்தனமிருக்கும்

மௌனமாய் நத்தைகள்
பாதயாத்திரை
சென்று கொண்டிருக்கும்

இவைகளுக்கும்,
நகர்கின்றது நாட்கள்
நலமாய்
மனித தலையிடுயில்லாமல்

எஸ். விஜயன்
-------------------------------------------------------------------------

இணைய இதழ் அறிமுகம்3
பதிவுகள். காம்
மெல்ல இனி தமிழ் சாகும் என்று ஆங்காங்கே சில பஞ்சுத் தலையர்கள் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னைக்கு ஒப்பிடுகையில் தற்போது தமிழ் இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து
உள்ளது. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். தமிழகம் தாண்டி. இந்தியா தாண்டிருப்பவர்கள் அச்சிட்ட இதழ்களை பெற்றுக் கொள்ள இதழ்லையோடு அஞ்சல் விலை பன்மடங்காகிப் போய் விடும் நிலையில் இணையத்தை போல் சவுகரியமான ஒர் ஊடகம் வேறு ஏதுமில்லை என்பது சுத்தமான உண்மை.வலைத் தளங்களும், வலைப் பதிவுகளும் நாளுக்கு நாள் றுக்கமாகிப் கொண்டிருக்கிறது.அச்சில் வெளிவரும் முன்னணி இதழ்களும் இணையத்திலும் தங்கள் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. இணையம் புகுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த ஒரு
மின்னிதழாக "பதிவுகள்' தளத்தை குறிப்பிடலாம். மாத இதழென்ற அறிவிப்போடு அவ்வாறே புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆவார். அரசியல் கவிதை, சிறுதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம், ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தக கையேடு, இலவசவரிவிளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி என பல அடுக்குகளை கொண்டு கனத்துக் கிடக்கிறது இந்தத் தளம்.
உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ளழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்றுகிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை தக்க ஒவியங்கள்/புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின்
ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்கு புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளை பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயம் படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கிய மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப் படுகிறது. நல்ல
திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத் தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்த தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்த தளத்தை திறக்கலாம் தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவர்கள் உடனடியாக இந்த இணைய இதழை காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது. பாராட்டலாம் பார்த்து ருசிக்கலாம்.

இணைய முகவரி
www.pathivugal.com
மின்னஞ்சல் : editor@pathivugal.com
----------------------------------------------------------------------------

நூல் மதிப்புரை மொழியின் சுழலில் நீந்தித் திளைக்கும் கவிதைகள்

உலகமயம் என்கிற ஒற்றைச் சொல் இன்று எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது. எந்தக் கிராமத்துக்குள் நுழைந்தாலும் குடிக்க குளிர்ந்த நீர்தந்த கிராமத்து வெள்ளந்திகள் இன்று வரவேற்பைக் கோலாவில் வழங்குகிறார்கள். மனிதர்கள் சாஷே வாக சுருங்கி விட கிராமம் சிறுநகரம், நகரம், மாநகரம் என மனிதரின் உறைவிடங்கள் யாவுமே தனது சுயமுகத்தினை தொலைத்து விட்டு விளம்பர பெரும் பலகைகளைத் தமது முகங்களாக்கி கொண்டிருக்கின்றன. தோளில் தொட்டழைக்கும் ஏதாவது ஒரு குரலும் நம்மை நிறுத்தி "இதை வாங்கு' "அதை உபயோகி' என வற்புறுத்தும் குரலாகவே இருக்கையில் மாறும் மதிப்பீடுகளை தொலைந்து போன விழுமியங்களை எண்ணி மருகுபவனின் மனம் என்ன பாடுபடும்? அம்மனிதன் படைப்பாளியாக குறிப்பாக உணர்வின் கொநிலையில் கவி படைக்கும் கவிஞனாக இருந்து விட்டால். இலக்குமி குமாரன் ஞான திரவியம் தந்திருக்கும் கவிதைத் தொகுப்பான
"வீட்டிற்கு கிழிருக்கும் கங்கு' பதிலாகிறது.

கவிஞனாக வாழ்வதற்கு மிக அதிகமான விலையைத் தர வேண்டியுள்ளது என விசனப்படும் ஞான திரவியம் தனியார் கல்லூரி யொன்றில் துணை முதல்வர். இது காரும் இரண்டு கவித் தொகுப்புகளை தந்துள்ளவர் முழுக்க முழுக்க கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்குபவரின் மூன்றாம் தொகுப்பு இது. ஞானதிரவியம் "பழமலய்த் தடத்தில்' கவிப் பயணம் மேற்க்கொள்பவர் சுயத்தை இழந்து பரிதவிக்கும் கிராமத்து ஆத்மாவை வார்த்தைகளால் படம்பிடிப்பவர்.
"அறை யெனப் படுவதோர்
ஆடம்பரமென்றிருந்த காலமொன்றில்
வைக்கோற் போர் மறைவிலே தான்
கருவானோம் '
என வேளாண்குடிகளின் வாழ்க்கையை இயல்பாக எவ்வித மனக் கிலேசமுமின்றி கவிதையில் பதிபவர்
கிராமிய விழுமியங்களில் சொந்த நிலமும் வீடும் ஒன்று இரண்டையும் இழக்கிற விவசாயி படுகிற வேதனை சொல்லில் வடிக்க முடியாது மல்லிகை வாசம் வீசும் வீட்டை இழந்தவனின் சோகத்தை காட்சிகளால் கவிஞன் காண்பிக்கையில் வாசிப்பவனுக்கும்
வந்து விடுகிறது இழப்பின் வலி:
"எல்லாம் மூழ்கிய போது
மிதந்த உங்கள் உணர்ச்சிகளற்ற
உடலின் நெஞ்சுக் கறியில்
ஒட்டியிருக்கிறதிந்த வீடு
கண்முன்னே பறிபட்டுப் போன போது
இப்போது சுற்றுச் சுவர்களுக்கும்
மூலையில் நின்று பார்த்தீர்களல்லவா
அந்தப்பார்வை'
"மனம்பருபனையின் கிழங்கு பிளந்தன்ன இனியார்க்குப் புரியும்' என்ற இறுதிக் கேள்விகளோடு ஞானதிரவியம் காட்டும் பனைச் சுவை இந்தத் தலைமுறை அறிய வாய்ப்பேயில்லை பதனீரைப் போன்றதொரு பானமில்லை
பதனீர்ப் பொங்கல் போல்
பொங்கல் இனியில்லை
நுங்குத் தண்ணீர் சுவைத்தறியாமல்
அமுதம் பற்றி அவன்
எழுதியிருக்கவே முடியாது
கழுகிடம் அலகாயிருக்கும் பணியில் சேர நேர்வதும் அசைவற்றுக் கிடக்கும் நிணம் கொத்துவதென்றால் கூட சமாதானமாகி விடும் மனநிலையும் வயிற்றுப்பாட்டின் வாழ்வு முரண்களின்றி வேறென்ன. காலந் தோறும் கவிதையோ பருவம் தோறும் மாறும் பெண் நிலைகுறித்து பரிவோடு பதிவு செய்கிறது.

கிராமியக் குடிசாமிகள் உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை மட்டுமல்ல அவர்களுக்கு மனத்துணை, கூடவே ஆற்றுப்படுத்தும் மையங்கள் கிராமப்பக்தியின் பன்முகப் பதிவினைக் காட்டும் "ஊன்று' ஒரு குறும்படம் பெருகிவரும் நுகர்வு பண்பாட்டினைக் குறித்து மிக எளிய மொழியில் சொல்கிறது ஞான திரவியத்தின் ஒரு காட்சி:
மடியப் புடிச்சு வித்துப்புட்டு
குடுமியப் புடிச்சு வசூல் பண்ணும்
தந்திர யுத்தங்களால்
வீடு முழுதும் வந்து ஒட்டிக்கொள்கின்றன
பல்லி மலத்தைப் போல
வாழ்வதற்குத் தேவையற்ற ஆக்கிரமிப்புகள்.
""செங்கண்மாலும் விடியக்காலை கனவும்'' கவிதையில் குரூரயதார்த்தம் குச்tடிணூஞு ஆக வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஞான திரவியத்தின் குறுங்கவிதைகள்.
"மொழி பெயர்த்ததில்லை
உலகில் எம்மொழியும்
விழியை'
"மலை விளிம்புகள் ஆபத்தானவை
உச்சியிலிருந்து
மகிழ்ச்சி
தொட்டியில் தங்கும் நீரில்
காலைப் பனிக்குள்
சிலிர் முள் முளைத்து விடுகிறது.

கவிதைகளோடு அழகியலும் கலந்து புதிய பொருள்களை வாசகருக்கு ஊட்டிவிடும் வரிகளின் சில அடையாளங்கள் இவை. கிராமத்து மரபுகளையும் பண்டாட்டையும் தன்னுள் வைத்திருக்கும் மொழி கவிதைக்கு தனித்துவத்தைக் கொடுக்கிறது. இதில் வட்டார அடையாளம் அடங்கியிருக்கிறது உலகத் தரத்திற்கான கவிதை யென்பது இந்து வட்டார பழக்கிலிருந்தும் வட்டார மனோபாவத்திலிருந்துமே உருவாவது என்று குறிப்பிடும் கரிகாலனது மதிப்பீடு ஞான திரவியம் படைப்புகளுக்கு மிகக் சரியாய்ப் பொருந்தக் கூடியது.

மாறுவதொன்றே மாறாதது என்கிறது சமூக விஞ்ஞானம் அத்தகைய மாற்றங்களில் நல்ல அம்சங்களே இல்லையா இழப்புகளை மட்டுமே எண்ணி அவஸ்திக்கும் படைப்பாளிகள் நவீன வாழ்வின் நல்ல அம்சங்களை குறிப்படுவதில்லை ஏனோ? ஞானதிரவியமும் இதற்கு விதி விலக்கல்ல மிகச் சிறப்பாக மொழியில் பல கவிதைகளை காட்சிப்படுத்த படிமங்களால் படிப்பவர்க்கு தரும் ஞான திரவியம் சில நேரங்களில் நவீனம் என்கிற மாயச் சுழலில் சிக்கிக் கொண்டு வாசிப்பவனையும் அதன் அடி அழத்துக்குள் இழுத்துவிடுகிறார்
கால காலமாய்
காலம் இருப்பது போல்
கால காலமாய் காலமில்லை.
காலம் மேய்வதாய்
கற்பிதம் உருவாக்கும் காலம்
கால காலமாய்.

எத்தனைக் காலம் இவற்றையெல்லாம் நவீனக்கவிதையென நம்புவது? பொருள் வயின் பிரிவை நாடும் கிராமப்புறங்களின் ஆற்றாமையாக ஒலிக்கிறது ஞான திரவியத்தின் கவிதைக்குரல் மனித இருப்போடு பின்னிக் கிடக்கும் பிற உயிரிகளின் அசைவுகளையும் உள்ளுணர்வுகளையும் தொட்டுத் திரும்புகின்றவையாக இருக்கின்றன இவரது கவிதைகள் நள்ளிரவில் சலனமற்று கிடக்கும் சிற்வுரின் ஆன்மாவைப் போன்று அமைதியும், ஆற்றலும், அழகும் கூடிய ஞானதிரவியத்தின் படைப்புகள் என மதிப்பிடும் கரிகாலனின் (நவீனத் தமிழ்க்கவிதையில் போக்குகள் பக்கம் 38) மதிப்பீடுகளையும் தாண்டும் வீட்டிற்கும் கீழிருக்கும் கங்கு வாசிப்பவர் மனதில் வனத்தீயாய் எரியும்.

அன்பாதவன்

வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு
கவிதைகள்
இலக்குமிகுமாரன் ஞான திரவியம்
அகரம் வெளியீடு



நூல் மதிப்புரை காதலின் பன்முக தரிசனம்

பொதுவாக காதல் கவிதைகள் எனில் ஆண்களை மையமாகக் கொண்டே எழுதப்படுவது தான் இதுகாறும் வரலாறு.
ஆனால் இது வரலாறுகளை புரட்டிப்போடும் நூற்றாண்டு. இதுவரையில் மூலையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த தலித், பெண்கள் ஆகிய நிராகரிக்கப்பட்டவர்களின் குரல்கள் ஒளிக்கும் காலமிது.
தமிழில் பெண் படைப்பாளிகள் பெருகி வரும் சூழலில் புலம் பெயர்ந்த கவிஞரான நளாயினி காதலின் பன்முக தரிசனம் காட்டும் கவிதைகளைத் தொடுத்து நங்கூரம் எனும் நூலாக்கி தந்துள்ளார்.
""நங்கூரம் கவிதைத் தொகுதி பலவகையான காதலைச் சொல்லிச் செல்கிறது எழுத்துலக சித்தாந்தங்கள் எல்லாம், காதல் மொழிகள் ஆண்களுக்கே உரியதாக அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக அதனை மாற்றும் பயனாகவே எனது காதல் கவிதைகள் ஆரம்பமானது எனலாம் என முன்னுரையில் தனது கவிதைகளின் ஊற்றுக் கண்களை பதிவு செய்யும் நளாயினியின் கவிதைகள் யாவும் மெல்லிய மொழியில் பேசுகின்றன.
ஒவ்வொரு கவிதையும் காதலின் வேறு வேறு பிரச்சனைகளை விவாதிக்கினறன. தனிமைத் துயரம் முதல் தற்கொலை முடிவு, இனப்பிரச்சனை பிரிவின் வேதனை என்கிற பாலின ஈர்ப்பு என பல்வேறுத் தளங்களில் நங்கூரமிடுகின்றன நளாயினியின் கவிதைகள்.
அழகிய சொல்லாட்சியும் வர்ணனைகளும் வாசிப்பவரை உற்சாகங் கொள்ளச் செய்யும்.
காதலுக்கான புதிய வரையறைகளை பதிவு செய்கின்றன இந்த வரிகள்:
""காதல் என்றால்
என்னவென்று தெரியுமா
உனக்கு ?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்
""காதல் போயின் சாதல்'' என்பது பழைய வரலாறு.
""காதல் போயினும் வாழ்தல்'' என்பது புதிய வாழ்வு முறை. "இவர்கள் யார் தடுக்க' கவிதை இதைத்தான் பதிவு செய்கிறது. சமூக எதிர்ப்பு கண்டு தற்கொலைக்குத் தூண்டு காதலனுக்கு மன தைரியமூட்டி வாழச் சொல்கிறாள் ஒரு காதலி
""இந்த இயற்கை எல்லாம்
நம்மை வாழ்ச் சொல்லும் போது
இவர்கள் யார் தடுக்க''
நூல் முழுக்க பெண் மையப் பார்வையில் புல்யைப் பட்டிருப்பதில் காதல் குறித்த கவிதை வெளிப்பாடுகளில் புதிய சிந்தனைகள் விரவிக் கிடக்கினறன.
காதல் எப்போது அரும்பும் ? யாருக்கு தெரியும் அது ஒரு மாயச்சூழல்
""நீகுளித்து விட்டு
தலைமுடியை உதறிய
நீர்த்துளியில் பூத்ததுதான்
உன் மீதானக் காதல்''
"என்னைக் கைது செய்யப் போகிறாய்' கவிதையாயில்லாமல் ஒரு பாடலாய் மலர்ந்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
வேறு வேறு பருவங்களின் காதலின் உணர்வுகள் காட்டும் புதிய அனுபவங்களை மிக அருமையாக பதிவு செய்திருக்கும் இந்நூலில் சில குறைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
பக்கம் 16ல் வெளியாகி உள்ள "காத்திருப்புகள்' கவிதை பக்கம் 30ல் "இன்ப வலியாக' வெளியாகி உள்ளது.
அதே போல் பக் 29ல் "பூஜிக்கத் தொடங்கி விட்டேன்' கவிதை மீண்டும் பக் 63ல் "உதடுகளுக்கு காதல் கடிதம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.
தரமான படைப்புகளுக்கு உத்தரவாதம் கூறும் உயிர்மையின் தயாரிப்பு தானா இது...?
சில கவிதைகளில் வசன நெடி வீசினாலும் ஈழப் போராட்ட பின்னணியில் எழுதப்பட்ட "தேதி ஒன்று குறிங்கையா' மற்றும் "காத்திருப்போம்' கவிதைகள் ஈழத் தமிழில் எழுதப்பட்டுள்ளது நலம்.
கவிதையும் வாசிப்ப வரை ஈர்ப்பவை. படிப்பவர் மனதில் நங்கூரம் பாய்ச்சி நிற்குமிந்த "நங்கூரம்'.

அன்பாதவன்

நங்கூரம்
கவிதைகள்
நளாயினி தாமரைச் செல்வன்
வெளியீடு : இமேஜ் இம்ப்ரெஷன்
11/29 சுப்ரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை 18.
விலை ரூ. 40/

------------------------------------------------

பிரியாணி பொட்டலத்துக்கு
படுத்துக் கொள்கிறாள்
ஒருத்தி

பெருஞ் செல்வத்தை விட்டு
நொண்டிப் பயலோடு
ஒடிப் போகிறாள்
ஒருத்தி

ஒரு புள்ளையும் தன்
புருசனுக்கு பெறவில்லையாம்
ஒருத்தி

ஊருறாய் மேய்ந்தாலும்
வீடு வந்து அடைகிறாள்
ஒருத்தி

பிள்ளைகள் பசியாற
பசி மறக்கிறாள்
ஒருத்தி

சத்துக்கு ஒருத்தனோடு
சம்போகம் செய்கிறாள்
ஒருத்தி

மற்றொருத்தியை
பிடிப்பதில்லை
ஒருத்திக்கு.


மதியழகன் சுப்பையா
-------------------------------------------------------


இந்தியக் கவிஞர் வரிசை குல்ஜார்
இந்தி மட்டுமல்ல இந்திய கவிதை உலகிலும் மிகவும் நேசிக்கப்படும் ஒரு அற்புதக் கவிஞர் குல்ஜார். தற்போது பாகிஸ்தானில் இருக்கும் தீனா பகுதியில் ஆகஸ்டு மாதம் 1934ம் ஆண்டு பிறந்தார். பிரிவினைக்குப் பின் குல்ஜார் இந்தியா வந்தார். அகா சம்பூரன் சிங் என்ற இயற் பெயரை குல்ஜார் என்று மாற்றிக் கொண்டார். திரைப்பட மேதை பிமல் ராய்க்கு உதவியாளராக தனது பயணத்தை துவங்கினார். மற்றும் இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜியின் துவக்க காலத்தில் அவருடனும் குல்ஜார் பணியாற்றினார். பிமல் ராயின் "பந்தினி' படத்தில் "மோரா கோரா அங் லாயி லே'' என்ற பாடல் இவரது முதல் பாடலாகும். "பந்தினி'யை தொடர்ந்து "கபுலிவாலா', "சன்னாட்டா' "பிவி அவுர் குலாம்' "து துனி சார்' "காமோஷி' ஆகிய படங்களுக்குப் பாட்டெழுதி படிப்படியாக ஏறி வெற்றி சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். இதுவரை இன்னும் இறங்கவில்லை.
சிறந்த திரைப்படப் பாடலாசிரியராக அங்கிகரிக்கப்பட்ட குல்ஜார் திரைப்படங்களுக்கு கதை வசனங்கள் எழுதத் துவங்கினார். 1971ல் "மேரே அப்னே' என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் பரிணாமம் அடைந்தார். அதிலிருந்து அழகும், மென்மையும், நகைச்சுவையும் கலந்த பல திரைக் காவியங்களை தந்துள்ளார். சுமார் அறுபது படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி உள்ளார். பதினேழு படங்களுக்கும் மேல் இயக்கியும் உள்ளார்.
1987 முதல் 1996 இடையில் குல்ஜாரின் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விட்டது. இந்த பத்தாண்டு கால கட்டத்தில் இவர் ஏழு படங்களில் பாடலும் 2 படங்களை இயக்கியும் இருந்தார். ஆனால் இந்த கால கட்டங்களில் அவர் முழு அற்பணிப்புடன் கவி மிர்ஜா காலிப்பின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராகவும் பணியில் முழுமையாய் ஈடு பட்டு விட்டார். நடிகர் நஷிர்தின் ஷா இந்த தொடரில் காலிப்பாக நடித்து இருந்தார்.
1996ல் குல்ஜார் இளைய தலைமுறையுடன் கைகோர்த்து தீவிரவாதத்தை மையமாக வைத்து ""மாச்சீஸ்'' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தேசிய விருது பெற்றது. பின் இவர் " தில் சே' படத்துக்கு எழுதிய பாடல்கள் மந்திரமாக இந்தியா முழுவதும் பாடப்பட்டது. குல்ஜாருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது. அரசியலை விமர்சித்து குல்ஜார் இயக்கிய "" ஹூ து து'' படம் இந்திய மக்களிடையே சலனத்தை ஏற்படுத்தியது.
பாடலாசிரியருக்கான அனைத்து விருதுகளையும் சிறப்புகளையம் குல்ஜார் பெற்று விட்டார். சமீபமாக இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்தின் கதைகளை மையமாகக் கொண்டு "தெஹரிர்... முன்ஷி பிரேம்சந்த் கி'' என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கி உள்ளார்.
குல்ஜார் திரைப்படப் பணிகளில் தீவிரமாக இயங்கினாலும் தனது கவிதைப் பணிகளை புதிய காதலைப் போல் காத்து வந்தார். ""எக் பூந்த் சாந்த்'' என்ற கவிதைத் தொகுதி 1962ல் வெளியானது. சமீபமாக ""திரிவேணி'' ""ராத் சாந்த் அவுர் மெய்ன்'' ""ராத் பாஷ்மைன் கி'' ஆகிய கவிதை தொகுதிகள் சமீபத்தில் வெளியாகின.
மேலும் ""மேரா குச் சாமான்'' மற்றும் "'சைய்யா சைய்யா'' என அவர் இதுவரை எழுதிய திரைப்பட பாடல்கள் தொகுப்பும் வெளியிடப் பட்டுள்ளது.
சமீபமாக பல சோதனை முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இவரது சிறுகதைகளை மையமாகக் கொண்டு சலிம் அரிப் ""கராஷேன்'' என்ற நாடகத்தை உருவாக்கினார். இசை கோர்ப்பாளர் அபிஷேக் ராயுடன் சேர்ந்து "" உதாஸ் பானி'' என்ற இசை ஆல்பத்தை தனது கவிதைகள் மூலம் அலங்கரித்தார். மேலும் ஓவியர் அஜய் குமார் சமிர் "பொயட்ரி ஆன் கான்வாஸ்' என்ற ஓவியங்களை வரைந்தார். இவ்வாறு பலதரப்பட்ட புது வடிவங்களில் தனது கவிதையை வெளிப்படுத்தினார் குல்ஜார்.
குல்ஜார் ஐந்து தேசிய விருதுகளையும் 18 பிலிம்பேர் விருதுகளையும் வாங்கி உள்ளார். இவருடைய ""துவான்'' என்ற சிறுகதைகளை தொகுப்பு நூலுக்காக 2003ம் ஆண்டிற்கான சாஹித்திய அகடமி விருது பெற்றுளார். பிலிம்பேரின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு பத்மபூஷன் விருதும் வழங்கி இவரை கௌரவித்து உள்ளது.

1.
சிறுவர்களாய் இருந்தோம்,
அம்மா வரட்டித் தட்டுவாள்
கண்கள் வைத்து காது செய்து
மூக்கு அலங்கரித்து
வரட்டியில் முகம் வரைவோம்
முண்டாசுகார தொப்பிக்கார
எனது வரட்டி உனது வரட்டி
நாங்கள் அறிந்த தெரிந்த
பெயர்கள் கூவி வரட்டி தட்டுவோம்.

பாடி சிரித்தோடி வரும் பகலவன்
சாண வரட்டிகளில் விளையாடுவான்
இரவில் எரிகையில் அடுப்பை சுற்றியிருந்து
எந்த வரட்டி எரிகிறது
யாருடைய வரட்டி சாம்பலாகியது
பார்த்திருப்போம்
அது பண்டித் அது முன்னா
அது தஷாரத் ஆண்டுகள் கழித்து
சுடுகாட்டில் அமர்ந்து
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இன்று இரவு எரிந்து
கொண்டிருக்கும் அடுப்பில்
மேலும் ஒரு நண்பனின் வரட்டி.

2.
வழக்கமாய் கொடுத்தாய் வாக்குறுதி
வழக்கமாய் நானும் காத்திருந்தேன்

உனது பாதையில் கால் கடுக்க நின்று
நான் எனக்காக காத்திருந்தேன்

இனி வாழ்க்கையோ வரமோ கேட்க மாட்டேன்
அந்தக் குற்றத்தை ஒருமுறை செய்து விட்டேன்

3.
கண்களை எரிக்கிறது அணையாத புகை
திரண்டு கருக்கிறது மேகம்போல்
பொழிவதேயில்லை புகை

அடுப்பு எரிக்கவில்லை
சேரியே எரிந்து போனது
கொஞ்ச நாட்களாக
கிளம்புவதில்லை புகை

கண்களிடம் கேட்டபோது
கிடைத்தது அதன் முகவரி
முகத்தை திருப்பிக் கொள்வதால்
மறைந்து போகாது புகை

கண்களுக்கும் கண்ணீருக்கும்
உறவு அதிபழசு
விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தாலும்
மறைந்து கொள்வதில்லை இந்தப் புகை.

4.
சேரிகளின் முடுக்குகளில் பரதேசிகளின் கூட்டத்தில்
வாருங்கள் திரியலாம் நாற்சந்தி காணலாம்

காலம் அவர்களை உறிஞ்சி கொண்டு
பாதையில் எறிந்து விட்டதாக
பாடம் சொன்னார்கள்
இவர்கள் அனைவரும் சேரியில்
சேகாரமடைந்து விட்டார்கள்
இவர்கள் வாழ்க்கையின்
தோல் உரிக்கப்பட்டு வீசப்பட்டவர்கள்
இவர்களின் வியர்வை உறிஞ்சப் பட்டு
விஷம் ஏற்றப் படுகிறார்கள்.

தமிழில் : ஆனந்த செல்வி

-----------------------------------------------------------
பச்சோந்தி :
கைஃபி ஆஜ்மி

ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள்
ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள்
ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய்
அதனின்று வெளிச்சம் வராது
அதனின்று வெளிச்சம் போகாது

எந்தக் கரு பை பெற்றெடுத்ததோ இதனை
எந்த வீட்டில் வளர்ந்ததோ இது
எந்த வீட்டில் திரிந்தோ இது
எல்லா மொழியையும் பேசுகிறது
ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை
இதயத்திடம் சொல்கிறது கதையை
உனது மதம்; உனது உன்னத கடவுள்
உனது பண்பாட்டின் அடையாளத்தை
இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது
இவற்றை பின்தொடர்கிறது பேரிருள்

உறைந்து போகிறதென் குருதி
முடிக்கொள்கிறதென் திறந்த விழி
உலகின் அனைவருமென் எதிரிகள்
இப்படியே உணர்கிறேன்
தோழர்களாக எவருமில்லை
என்னை உயிருடன்
விழுங்கிக் கொண்டிருக்கிறது பூமி

இந்தியிலிருந்து தமிழில் : ஆனந்த செல்வி


---------------------------------------------------------
விடியலை
நேரம் உணர்த்தினாலும்
பனிதூறும் காலத்தில்
சூரியன் வருவதில்லை.

வளமையான
உடல் நிறைய விட
ஆறு ஏழு கிலோவால்
என் நிறை உடை வடிவில்
என்னைத் துரத்தும்.

தொட்டிலுக்குள்
பார்த்தால்
எட்டு மாத செல்ல மகள்
கையால் முகம் போர்த்து
பஞ்சுக்குஞ்சாய்
துயிலும் அழக.

மெல்ல அணைத்து
ஓசையின்றி முத்தமிட்டு
காப்பக காரியிடம்
கொடுத்துவிட்டு
வேலையில் முழ்கிற போது
திடுக்கிடும் என் மனசு.

ஓ.. என் செல்ல மகள்
என்னைத் தேடுவாளோ?

உடலில் உள்ள
உரோமம் எல்லாம் சேர்ந்து
ஒருவித சிலிர்ப்பைத் தந்து
விழிவழியே உப்பு நீரை
வரவழைக்கும்.

நளாயினி தாரைச்செல்வன்
சுவிட்சர்லாந்து

--------------------------------------------------------------------

பெண் நிலை


நீலப் புடவையில்
வெள்ளித் தட்டு
நகரும் மேகங்கள்
வானவில்லை உமிழ
மௌனமாய் அழுகிறது
மழைகாலத்தில் வானம்...

எதையோ நிரூபிக்க
உத்தியோகத்தை நினைக்க
எரிச்சல்கள் பளுவாய்
உண்மை இலக்கு இடையே
வார்த்தையாய் பாலமிட
மன ஊஞ்சல் தகர்த்தப்படும்
போதெல்லாம்
மௌனத்தின் மொழி
நா காத்து நம்மை காக்கிறது.

நா.சுப்புலட்சுமி


----------------------------------------------

உள்ளூருக்குள்ள
செவிபடு வாத்தினு
சொல்லு வானுவ

வேல பாத்த
வெளியூர் பள்ளி கொடத்துல
சக வாத்தியாருங்க
கிடாரக் குளத்தானம் பாங்க

கூடுன சாதி பயலுவல
இனங் கண்டு
அடிப்பாரு.

இல மற காயா
பேசஆரம்பிச்சவனுவ
முன்னால நின்னு பேசினானுவ
சாதியப் பத்தி

ஒய்வு பெறும் வயசுல
நல்லாசிரியர் விருது
கொடுத்துச்சு அரசாங்கம்
போங்கடா மயிராண்டிகளானு
விருத வாங்கவே யில்லஅந்த
ஆறாப்பு வாத்தியாரு.

சோலை சீனிவாசன்.

---------------------------------------------------------------
நூல் சுழன்று
காற்றில் அலைய
சிக்குண்டு தவிப்பது
கண்டு மனம் பதறாது
பின் சுழன்றாடும் காற்றில்
தவிப்பது மனங்கள்
அறுபடும் நூல்
காலச் சுழற்றியாய்
கண்ட பூ கோளபடங்கள்
பின் நூல் காற்றாகும்
பட்டத்தில் ஒட்டிசுழலும்
காகிதத்தில் ஒட்டாது
உருமும் பூமி உருண்டையால்
சில கால தவிப்புக்கள்

குமாரராஜன்

----------------------------------------------------------------
மலக்கிடங்கில் மடியும் மழலைகள்

கனத்த நீர் சுமந்து
பெருங்குடமாய் உப்பி
நீண்டுக்கிடந்தன
முனை சிறுத்த பலூன்கள்,
அடைப்பெருத்த
மலம் விழுங்கும் குழாய்க்குள்

சேர்ந்தும் சேராமல்
குறியில் உறை.

கிரிவலம் வர யத்தினித்த
பொழுதொன்றில் பார்க்க நேர்ந்தது
நடப்போரற்ற வீதியொன்றின்
பழுத்த குழலொளியில்
பெருத்த பலவித பலூன் குவியலை.

தெரித்து உரசி
வழியவிட்டோடும்
அப்பன்கள் கொலையுண்டு
அனாதையாய் ஒழுகும்
உயிர்கள் சுவரில் பிணவறையாக
கட்டண கழிப்பறை மலங்கழிக்கையில்
ஏளனமாய் சிரிக்கின்றனர்
சுவரில் புணர்ந்தபடியே பலரும்

பளபளப்பு பலவித வாகனங்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தொழிற்சாலைகள்
நெரிசல் இரைச்சல் வண்ணப் பெண்கள்
காட்சி பொருட்கள் பணப்புழக்கம்
பலருக்கும் பிழைப்பு
கற்புக்காக்க பாதுகாப்பாக
மலக்கிடங்குகளில் மடியும் மழலைகள்.

செந்தில்பாலா.

-------------------------------------------------
மனக் காகங்கள்


எண்ணங்களின் பித்ருக்களாய்
ஞாபக வெளியில்
அலையும் கருமைகள்
ஒற்றைக் கண்சாய்த்து
கள்வம் எட்டிப் பார்க்க
கவனம் பிசகும் சமயம்
உணர் உணவைக்
கவ்வி
கரைந்தழைத்துப்
பகிர்தல் மறந்து
வாயில் வடை பதுக்கி
பாடச் சொல்லும் நரியிடம் ஊமையென
நடித்து
காம எச்சங்களால்
இரவுகளை வெளுப்பாக்கி
நான்கைந்து சேர்ந்து தினம்
நாறும் எலி உடலாய்
பிறன் குறை குத்திக் கிழிக்க
எங்கிருந்தோ வீழும்
ஏமாற்றுக் கற்களில்
விருட்டென எம்பிப் பறக்கும்
மனக் காகங்ங்கள்

              
பொ செந்திலரசு


-----------------------------------------------------
லிமரைக்கூ


குடும்பத் தலைவர் மரணம்
பிள்ளைகளுக்கு வந்து விட்டது
பொறுப்பேற்கும் தருணம்.

குழந்தைக்கு விடுமுறை
எப்போதும் உழைக்கும் அம்மாவிற்கு
எந்நாளுமில்லை ஒருமுறை

வியர்வைச் சிந்தி உழுதான்
விளைந்த பயிர் வாடியது கண்டு
கண்ணீர் விட்டு அழுதான்.

காட்டில் குயில் பாடியது
கேட்டு மயங்கி மயில்லொன்று
தன்னை மறந்து ஆடியது.

கூட்டை விட்டு வெளியே
பறந்து சென்றுத் இரையைத் தேடிடும்
இறகு முளைத்த கிளியே

துக்கம் விசாரிக்கப் போனான்
இழவு வீட்டை அடையு முன்னே
விபத்தில் பலி ஆனான்

பொன்குமார்
---------------------------------------------
நமக்கான வெற்றி
மோசமான ஒர் இடத்திலிருந்து
நம் ஒட்டத்தைத் துவக்குகிறோம்
நம் சிப்பாய்கள்
எங்கும் சிதறிக் கிடக்கின்றன
ஜோடிக் குதிரையில்
ஒன்று வீழ்த்தப்பட்டுவிட்டது
பிஷப்புகள்
நகர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளன
நாளையின் இடமோ பாதுகாப்பற்றது
எந்நேரமும்
வெட்டுப்பட்டு விடலாம்
என்ற நிலையில்
யானைகள்
எதிராளியின் முகத்தில்
ஒரு கேலிப் புன்னகை
தீர்க்கமான
ஒரு முடிவுக்குப் பின்
ஒரு காயை நகர்த்துகிறோம்
இன்னும்
ஒரு சில நகர்த்தல்களுக்குப் பின்
ஆட்டம் முடியப் போகிறது

தபசி
------------------------------------------------------
காலை கமகமத்து துவங்கும்
வணக்கப் பரிமாறல்களில்

அழைத்தாயா? என்று
கேட்போம் அழைத்து

நினைத்தாயா? என்று
கேட்க நினைவிருப்பதில்லை

பார்ப்போமா?என்று
கேட்க பயமாயிருக்கிறது

கோபமா? என்று
கேட்கிறோம் குலைந்தபடி

சாப்பிட்டாயா? என்று
கேட்கவே பசிக்கிறது

பத்திரம்டா! என்று
சொல்லத் தவறுவதில்லை

மன்னித்திடு! என்று
கூற மறப்பதில்லை

நன்றி! என்று
சொல்லாமல் முடிவதில்லை

புள்ளிகளால்
நிறைகிறது கோடு

அந்தியில்
சிவக்கிறது வானம்.

மதியழகன் சுப்பையா
-------------------------------------------