Saturday, September 09, 2006

வயதுகளோடு......

-------------

வயதுகளோடு
மறைந்து விடுகிறது எல்லாம்

படுக்கையில்
மூத்திரம் கழிந்தது

உமாவோடு
ஒட்டிப் படுத்தது

ஐந்து வயதில்
அப்பா இறந்து போனது

முதல் முகச் சவரத்தில்
முகம் பற்றி எரிந்தது

அக்காவை
அவனுடன் பார்த்து
த்திரப் பட்டது

ஒரு தலையாய்
காதலித்தது

கதவிடுக்கு வழியாய்
குளிப்பதைப் பார்த்தது

முதலிரவில்
முரட்டுத்தனமாய்
இயங்கியது

மகனின் முகத்தை
உற்றுப் பார்த்து
உறுதிப் படுத்துக் கொண்டது

அவளின் சாவு

மருமகளின்
பிச்சையாய் உணவு

பேரனின்
கிண்டல்

வயதுகளோடு
மறைந்து விடுகிறது
எல்லாம்

1 comment:

கார்த்திக் பிரபு said...

nalla kavidhai ..indha madhiri kavidhiagalukku enna peyar sir..fisrs line marubadiyum last line agag varradhu??


spelling mitakes corret apnnidunga a..appdiye indha font color i mathirunga ..padikka kastama iruku