Monday, April 03, 2006

அறிவிப்பு அறிவிப்பு

தமிழுக்கினிய கவிஞர்களே...

தமிழுக்கினிய கவிஞர்களே...தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில் கவிதை, மொழிபெயர்ப்பு, ஹைகூ, லிமரைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கவிதை குறித்தக் கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் என கவிதை சார்ந்த அனைத்தையும் தாங்கி மும்பையிலிருந்து " அணி'' என்னும் இலக்கிய இதழ் வெளிவர உள்ளது. தங்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் தரமான படைப்புகளையும் இயன்ற நன்கொடையையும் எதிர்பார்க்கிறோம்.
நன்கொடைக்கு ஈடான பிரதிகள் அனுப்பப் படும்.


ஆதரவு தாருங்கள்.....
நன்றி.

அன்பாதவன்
மதியழகன் சுப்பையா
ஆசிரியர் குழு- அணி


முகவரி:
MADHIYALAGAN SUBBIAH,
10/1-B, TRIVEDI & DESAI CHAWL,
D' MONTE LANE, ORLEM,
MALAD (W), MUMBAI-400064.
M: 09821847464 R: (022) 32580618
E-mail: anikavi@gmail.com

நி னை வு ப ந் து க ள்

1)
வளர்பிறை காலம்
வருமென்ற
நம்பிக்கையில்
தேய்கிறது மதி
தினந்தோறும்

2)
இருள் வெளியில்
எரிந்த பந்தை
எடுத்துத் திரும்ப
காத்திருக்கின்றன
நாய்கள்
காற்றைப் பிதுக்கி
கடாசியவைகள் பல
மிதிபடுகிறது
கைபடுகிறது
காணாமல்
போவதில்லை நாளும்.
வெற்றிடங்கள் எல்லாம்
விழுந்து நிறைகின்றன பந்துகள்
மறுபந்தை
உதைக்கையில்திரும்பி
வந்து மோதுகிறது முதல் பந்து
வீசியெறிந்தும்
உதைத்துத் தள்ளியும்
சோர்ந்து விழுகிறேன்
பந்துகளின் மேல்
இறுதியாய் அமுக்குகிறேன்
நீருக்குள்
நினைவு
பந்துகளை.

கேட்டால் தெரியுமா?


என்ன
வேண்டுமென்கிறாய்
எப்பொழுதும்
எதாவது பேசச் சொல்கிறாய்
தனிமை வாய்ப்புகளில்
அப்படியிப்படி செய்யச்
சொல்கிறாய், அடிக்கடி
யாரைப் பிடிக்குமென்கிறாய்
நாள் தோறும்
வினவிக்கொண்டிருப்பாய்
வாழ்வு முழுமையும்
நிச்சயம் புரிந்துணர மாட்டாய்
ஜன்மங்களுக்கும்
ஜன்மங்களுக்கும்.