Tuesday, April 03, 2007

புழுக்கம்




அக்குள் வாடையில்
முகம் புதைக்கச் சொல்கிறாய்

எச்சில் சுவைத்து
மெய்மறக்கச் சொல்கிறாய்

உடலால் உடல் தடவி
ஒத்தடம் கொடுக்கச் சொல்கிறாய்

மூச்சுத் திணறுகிறேன்
மோகச் சுவாசம் என
தப்பாய் புரிகிறாய்

வார்த்தைகளால் நிலை
சொன்னேன் புரியவில்லை
உணர்வாயென்பது பொய்

கதவடைத்துப் போகிறாய்
வந்ததும் கதவடைக்கிறாய்

வீடெங்கும் மனக்கூடெங்கும்
புழுக்கம் புழுக்கம் புழுக்கம்

மதியழகன் சுப்பையா
மும்பை

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்ப் பதிவுலகத் தரத்துக்கு இது கனமான கவிதை ;) நல்லா இருக்கு.