
விலகிப் போவதின்
விபரம் தெரியவில்லை
புதிய வருகைகளும்
போய்விடுவது புதிர்தான்
உடன்பிறப்பும், உறவுகளும்
தூரம் காக்கின்றன
மிருகங்கள் மட்டும்
முகர்ந்து நக்கும்
சில முகம் சுழிக்கும்
நெருங்குவாரில்லை
நெருங்குகையில்
விலகாதவரில்லை
நாசியற்றவர்களை
நானெங்குத் தேட
நாதியற்றுப் போனேன்
நாற்றத்தால்
போயிருக்கக் கூடாது
நீயும் கூட.
மதியழகன் சுப்பையாமும்பை
No comments:
Post a Comment