Thursday, December 07, 2006

சிட்டுக் குருவி

இந்தியில்: ரவிந்திர காலியா
தமிழில்: மதியழகன் சுப்பையா


கோடை காலத்தின் பிகாஷமான மதியப் பொழுது. இலை கூட அசையவில்லை. வெயிலின் கடுமை, அடர்ந்த காடுகளையும் தாண்டி உடலில் நெருப்பு நாக்குகளால் நக்கிக் கொண்டிருந்தது. இந்த கொடுமையான சீதோஷ்ணநிலையில் றுதலான விஷயம் சிட்டுக் குருவியின் மதூரமான குரல் மட்டும்தான். மதியத்தின் இந்த பேரமைதியில் அதன் குரல் மரம், செடி- கொடிகள் மீது பட்டாம்பூச்சியாய் தாவிக் கொண்டிருந்தது.
அந்தக் குரலின் இனிமையை பற்றிக் கொண்டே நான் வெளியில் தோட்டத்திற்கு கிளம்பினேன். மரத்திற்கு கீழே போடப் பட்டிருந்த கட்டிலில் படர்ந்தேன். குருவி அமைதியாகி விட்டாள், சுற்றுசூழல் கொழுந்து விட்டு எரிவது போல் இருக்கும். இப்பொழுது எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். குருவி பேசியது என்றால் பிரலயம் இன்னும் வெகு தூரம் இருப்பது போல் இருக்கும். பூமியில் வாழ்வின் சின்னம் மிச்சமிருக்கிறது.
குருவி என்ன சொல்கிறாள் என்று எப்பொழுதும் ஒரு தெளிவின்மை இருந்து கொண்டே இருக்கும். பூமியில் உள்ள மற்ற ஜீவராசிகளைப் போல் குருவி ஏன் ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்? அவள் சொல்வதை எழுத்து வடிவமாக்க நினைத்திருதேன். னால் எழுத்தேட்டில் இவற்றை எழுத எழுத்துகள் இல்லை. நீண்ட காலமாக இந்த முயற்சியில் இருந்தேன். னால் எதுவும் காது என்று தெரிந்ததும் இந்த முயற்சியை கை விட்டு விட்டேன். னால் அவள் என்ன சொல்கிறாள் என்பது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன். குருவி 'ஹர் ஹர் மகாதேவ்' என்று சொல்கிறது என்றும் காயத்திரி மந்திரத்தை பாடிக் கொண்டிருக்கிறது என்றும் வேத நூலின் ஏதோ ஒரு பாடலை படிக்கிறது என்றும் நான் விளங்கிக் கொண்டேன். இல்லை இது வெறும்பேச்சு உனக்கு உள்ளே இருக்கும் இந்துத்துவம் உன்னை இவ்வாறு சொல்ல வைக்கிறது. னால் குருவி 'அல்லா- ஓ- அக்பர், ' ஹே குதா-ரஹிம்' என்றல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறது. குருவி அல்லா, அல்லா என்றுதானே முனங்கிக் கொண்டிருக்கிறது? இல்லை குருவி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இல்லை காலிஸ்தானுக்கு தனியாட்சி கேட்கிறது. இப்படியெல்லாம் சொல்வது நிஜத்தை திசை திருப்பும் வேலையாகும்.
உண்மையில் அது தனது காதலனின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவனை ஒவ்வொரு ஒவ்வொரு இலையிலும் கிளையிலும் தேடித் தேடி கலைத்துப் போய் விட்டது. மிகுந்த மனக் கஷ்ட்டத்துடன் மரத்தின் ஏதோ ஒரு கிளையில் அமர்ந்தபடி அவனை அழைத்துக் கொண்டிருக்கிறது. எதாவது சாப்பிட்டதா என்று தெரியாது. ஒருவேளை இந்த குருவி பசியுடன் இருக்கிறதோ? காத்திருக்கா அமர்ந்தவள் பட்டினிப் போராட்டத்தை துவங்கி விட்டதோ? அவள் தற்கொலை முயற்சியில் ஏதும் இருக்கிறதோ என்னவோ? கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே இங்கே பறந்து கொண்டிருக்கும் போது கள்ளப்பருந்தின் பெயரைக் கேட்டுக் கொண்டாதோ? மனிதனின் மனதில் பலப்பல குழப்பங்கள் எழும்போது மரம், செடி பறவை பூச்சிகள் கியவை அதை விட்டு எப்படி விலக்கி வைக்க முடியும்? இவைகளும் இந்த சுற்றுச் சூழலின் அங்கம் தானே. சூறாவளியை விடவும் வேகமாய் சுழன்று அழிக்கிறது கலாச்சார சூழல். ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கடைகளின் வாசலிலும் பண்பாட்டுச் சின்னங்கள் பறந்து கொண்டிருந்தது. சம்பிரதாயங்கள் சுவரொட்டிகளைப் போல் சுவற்றில் ஒட்டப் பட்டு விட்டன. இப்படிப் பட்ட விஷமயமான உலகச் சூழலில் இந்தச் சிறிய சிட்டுக் குருவி மட்டும் எப்படி கலங்கம் இல்லாமல் இருக்க முடியும். அதனுடைய குரலைக் கேட்கும் போது அது இவ்விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறது என்றே படுகிறது.
கொஞ்ச நேரத்திற்கு குருவியின் குரல் கேட்கவில்லை. உடனே எனது பார்வை மரத்தின் உச்சிக்குப் போனது. குருவியைத் தேடியது. னால் குருவி கீழே கிளையில் அமர்ந்து இருந்தது. பாவம் அது மிக நீண்ட காலமாக ஒரு கூடு கட்டிவிட முழு முயற்சியில் இருக்கிறது. இந்த நேரம் கூட அதன் வாயில் ஒரு காய்ந்த புல் இருந்தது.
அது புல் அல்ல, அது ராமக்கல். அது கட்டப் போவது கூடு அல்ல ராமர் கோயில். ராமனின் மகிமை உலகம் அறிந்த ஒன்றாகும். திடீரென மசூதியிலிருந்து பாடல் ஒலி கேட்டதும் எனது கவனம் கலைந்தது. நானும் கற்பனையில் என்னென்னமோ எண்ணி விட்டேன். எனக்கு நினைவு இருக்கிறது இந்த கட்டிடத்தின் மிகச் சரியாகப் பின்னால் மசூதி இருக்கிறது. அதற்கு முன்னால் லமரத்தடியில் ஹனுமான் கோயில் இருக்கிறது. இந்நேரம் நான் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருந்து பார்க்கையில், கோயிலின் மேல் கலசமும் அதன் பின்னால் மசூதியின் கூம்பு வடிவக் கூறையும் தெரிந்தது. நான் கிழக்கு நோக்கி முகம் காட்டி அமர்ந்து விட்டாள் வலதுபுறம் கோயிலும் இடதுபுறம் மசூதியும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியும். இவைகளுக்கு இடையில்தான் எனது வீடு இருக்கிறது.
குருவி தனது அறிவினை வெளிப் படுத்தும் வகையில் கோயிலுக்கும் மசூதிக்கும் இடையில் தனது கூட்டினை கட்ட இடம் தேர்ந்து இருந்தது. கோயிலின் ஒரு பொந்தில் தனது கூட்டினை கட்டுவதிலிருந்தும் மசூதியின் கலைவேலைபாட்டு ஜன்னல்களிலும் று இன்ச் இடத்தில் தனது கூட்டினை கட்டிக்கொள்வதிலிருந்தும் குருவியை யார் தடுத்திருக்க முடியும். னால் குருவி இவ்வாறான மத விஷயங்களில் விழுந்துவிட விரும்பவில்லை.
குருவி தனது கூட்டை கட்டும் கடும் முயற்சியினை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது புல்-மெல்லி குச்சிகளை தேடிக் கொண்டுவரும். சிறிது நேரம் இளைப்பாரும். இரண்டு மூன்று முறை தனது குயில் போன்ற குரலால் அங்கு உரைந்திருக்கும் அமைதியை உடைக்கும். பின் மெல்லிய குச்சிகள் தேடி மாயமாகி விடும். இந்தக் குருவி எதற்காக இத்தனை அழகான ஒரு கூட்டினை கட்டுகிறது என்றுத் தெரியுமா? இதற்கு முன் இந்தக் குருவி எங்கே இருந்திருக்கும். தனக்காக ஒரு இல்லம் அமைத்துக் கொள்ளப் போகிறதா? இல்லைதான் தங்கிக் கொள்ள ஒரு இடம் அமைத்துக் கொள்ளப் போகிறதா? இப்படியாக பலக் கேள்விகள் என்னுள் எழுந்தது.
மறுநாள் காலையில் பார்த்தேன். கூடு முழுமையடைந்து இருந்தது. இதோ அந்தக் குருவி இந்தக் கூட்டின் அங்கத்தினர் கி விட்டது. குருவிக்கு முகவரி கிடைத்து விட்டது. எனது முகவரியும் குருவியின் முகவரியும் ஒன்றாகவே இருந்தது. இனி குருவி தனது காதலனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். தனக்கு ரேஷன்கார்டு செய்து கொள்ளலாம். தனக்காக ஓட்டுரிமை பெற்றுக் கொள்ளலாம். தனது அடையாள அட்டைக் கூட செய்து கொள்ள முடியும்.
கொஞ்ச நாட்களிலேயே எனக்கும் குருவிக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டது. ஒருநாள் வீட்டின் ஒலித்துளையில் வந்து அமர்ந்து கொண்டு என்னோடு வினா விடை பழகிக் கொண்டிருந்தது. இன்று ஏன் நீங்கள் வெளியில் வரவில்லை? கேட்டது குருவி. எனக்கு முன்னால் உட்கார்ந்தபடி சிகரெட் புகைக்கவில்லையே ஏன்? கேள்விகள் அடுக்கப் பட்டது.
''வருகிறேன்! வருகிறேன். நீ உனது ராகத்தினை துவங்கு நான் வந்து விடுகிறேன்'' என்றேன்.
அதனுடன் நட்பு உண்டானதிலிருந்து எனது பொழுது மிக நன்றாக கழிகிறது. இந்த ஒரு வார நட்பின் ழத்தில் குருவியானது பைரவி ராகத்திலிருந்து ஜை ஜைவந்தி ராகம் வரை எல்லாவகை ராகங்களையும் பாடிக் காட்டி விட்டது.
குருவியின் ஊர் சுற்றல் கொஞ்சம் குறைந்து போயிருந்ததை நான் உணர்ந்தேன். எப்பொழுதும் தனது கூட்டிலேயே காணப் பட்டது. ஒருநாள் காலை நான் மகிழ்ச்சியால் பைய்த்தியமாகி விட்டேன். அதன் அக்கம்பக்கத்தில் மேலும் இரண்டு சின்னச் சின்னக் குருவிகள் உட்கார்ந்து இருந்தது. புதிய அங்கத்திருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. வீடு மகிழ்ச்சிப் பாடல் பாடத் துவங்கியது. புதியக் குருவிகள் மிகப் பாதுகாப்பாக வளர்க்கப் பட்டது. அவைகளின் மிகச் சின்னச் சின்ன அசைவுகள் குறித்தும் வெகு நேரம் விவாதிக்கப் பட்டது.
ஒருநாள் திடேரென குருவியைக் காணவில்லை. குஞ்சிக் குருவிகள் தனியாகக் கிடக்கிறது. மதியம் வெளியில் வந்து பார்த்தபோதும் குருவியைக் காணவில்லை.
குஞ்சிக் குருவிகள் இரண்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அவை தனது தாய் குறித்து என்னிடம் புகார் சொல்வது போல் இருந்தது. நான் அவைகளுக்கு உதவலாம் என்று எண்ணினேன். னால் இந்த நேரம் அவர்களுக்கு என்னத் தேவையாக இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாதே. மாலையாகி விட்டது குருவி இன்னும் திரும்பவில்லை. எனது கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்தக் சின்னக் குருவிகளின் நிலை என்னவாகும்?. இந்தக் குருவிகளுக்கு யார் உணவு கொடுப்பார்கள்? இவைகள் இன்னும் ஒழுங்காய் பறக்கப் பழகிக் கொள்ளவில்லையே. நல்ல விஷயம் என்னவென்றால் குருவி தனது கூட்டை மரத்தின் உச்சிக் கிளையில் கட்டியிருந்தது. இல்லையெனில் இதற்குள் பூனை அந்தக் குருவிக் குஞ்சுகளை ஏப்பம் விட்டிருக்கும். பலமுறை அந்தப் பூனை குருவிக் குஞ்சுகளை எச்சில் ஊறியபடி ஏக்கப் பார்வை பார்ப்பதை நான் பாத்திருக்கிறேன். பூனௌ கொஞ்ச நேரத்திற்கு அங்குமிங்கும் துள்ளிக் குதித்து வெறிகொண்டு உற்சாகமாகும். னால் குருவிக் குஞ்சுகள் பூனைக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. கலைத்துப் போய் பூனை திரும்பி விடும்.
குருவி இன்னும் திரும்பவில்லை, திரும்பக் கூடாது என இருக்கிறதோ. நான் இரவில் டார்ச் எரித்து பார்த்தேன். இரண்டு குஞ்சுகளும் அமைதியாய் உட்கார்ந்திருந்தன. தனது அம்மா எங்கே இருக்கிறாளோ? வழி தவறி விட்டாளோ? அவை எவ்வளவு நேரம்தான் பசியோடு இருக்கும்? அந்தக் குஞ்சுகள் பாவம் என்ன நினைத்துக் கொண்டிருக்குமோ?
நேற்று வரை எனக்கு குருவியின் மீது நிறைய அன்பு இருந்தது. னால் இன்று நான் அதன் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நான் அதனை ஒரு தாய்மை நிறைந்த தாயகத்தான் கண்டு உணர்ந்திருக்கிறேன். தனது இந்தக் பிஞ்சுக் குழந்தைகளுடன் அது இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ளும் என்று கற்பனைக் கூட செய்ததில்லை. நான் இருந்த கோபத்திற்கு அது மட்டும் என் முன்னால் வந்து நின்றால் ஓங்கி நான்கைந்து அரைகள் விட்டிருப்பேன். சமாதானப் படுத்திக் கொண்டு குஞ்சுக் குருவிகளை அழைத்தேன். இருளில் இருந்து வந்த அழைப்பொலியைக் கேட்டுக் குஞ்சுகள் இரண்டும் தனது இறக்கைகளை படபடத்தது. நான் கொண்டு வந்திருந்த கடலைகளை கூட்டில் எரிந்து விட்டு கனத்த மனதுடன் வந்து படுத்துக் கொண்டேன்.
''இப்பொழுது பேசாமல் படுத்துத் தூங்குங்கள். ஒரு குருவிப் பின்னால் இப்படியா பைய்த்தியம் பிடித்து அலைவது'' மனைவி கடிந்து கொண்டாள். ''ஒருவேளை அது இடையில் எப்பொழுதாவது வந்து தனது குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து விட்டுப் போயிருக்கலாம் இல்லையா'' என்று என்னை சமாதானப் படுத்தினாள்.
''இல்லை, அது வரவேயில்லை. குஞ்சுகள் இரண்டும் பட்டினியால் வாடிக் கிடக்கின்றன. கூட்டில் கடலைகளை போட்டுவிட்டு வந்திருக்கிறேன் கொறித்துக் கொள்ளட்டும்'' என்று மனைவிக்கு பதிலளித்தேன்.
'' போங்க, போய் பாட்டிலில் பால் நிரப்பி கொடுத்து விட்டு வாருங்கள்'' மனைவி விஷமமாகச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
''பெண்கள் அனைவரும் சுயநலக்காரர்கள். அந்தக் குருவியைப் போல'' நான் அனலாகி பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டேன்.
காலையில் தூக்கம் கலைந்ததும் எரிகின்ற கண்களை கசக்கிக் கொண்டு கூட்டினைப் பார்த்தேன். குருவியைக் கூண்டில் பார்த்து மகிழ்ச்சி கரைபுரண்டது. தாய்க் குருவி தனது இரண்டு குஞ்சுக் குருவிகளுக்கு நடுவில் கர்வமும் புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தாயைப் போல் அமர்ந்திருந்தது. பிள்ளைகளுக்கு தனது அலகால் மாறிமாறி எதையோ ஊட்டிக் கொண்டிருந்தது. நானும் நாற்காளியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். தாய் பிள்ளைகளின் பாசப் பரிமாறல்களையும் கொஞ்சல்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். மதியம் னதும் குருவி பரபரத்தது. அந்த தோட்டத்தையே தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டது போல் கம்பீரமானது. மதியத்திற்குப் பின் வேறு ஒரு செய்தி கிடைக்கப் போகிறது என்று நான் கொஞ்சமும் உணரவில்லை.
மாலையில் வெளியில் வந்ததும் கூண்டில் குருவி மட்டுமல்ல குஞ்சுகளில் ஒன்றைக் காணவில்லை. ஒரேயொரு குஞ்சு மட்டும் தனியாக இருந்தது. ஒருவேளை பருந்து எதாவது ஒரு குருவிக் குஞ்சை தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? என்று எனக்கு அச்சமாக இருந்தது. னால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. கூட்டுக்கு மேலு பாதுகாப்பு கவசம் இருக்கிறதே. பருந்தின் பார்வை இந்தக் கூட்டில் பட வாய்ப்பே இல்லையே. அப்படியானால் தாய்க் குருவியும் ஒரு குஞ்சுக் குருவியும் எங்கே போய் விட்டன. நான் அதிக நேரம் கவலைப் படும்படியாக இல்லை. சின்னக் குருவி ரப்பர் மரச்செடியின் கீழ் உட்கார்ந்திருந்தது. நான் அதை நோக்கிப் போகையில் அது பறந்தோடி அடுத்த கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து பறந்து சீதாப்பழ மரக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தாவித் தாவிப் பறந்தது. அது பறக்கும் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாய் விளங்கியது. தனது முயற்சியைக் கண்டு தானே புலங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை பறக்கும் போது ஒரு சிறிய தொலைவை நிச்சயித்து கடந்து வெற்றிக் காண்கிறது. பின் அது குருவிகள் கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டது. அவைகளின் மத்தியில் அது ராஜகுமாரியைப் போல் காணப் பட்டது. குருவிகள் அனைத்தும் இரை பொறுக்கிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு மத்தியில் இந்தச் சின்னக் குருவி தனது கழுத்தை நிமிர்த்தி மிக கம்பீரமாக உட்கார்ந்திருந்தது. மற்றக் குருவிகள் அதன் பாதுகாவலர்களைப் போலும் சேவகர்களைப் போலும் காட்சியத்தன.
''நீயும் எதையாவது பொறுக்கிக் கொள். உனக்கு உணவு பொறுக்கத் தெரியாதா?'' நான் கேட்டேன். மேலும் '' நீயும் சாப்பிட்டுக் கொள் உனது தங்கைக்கும் கொண்டு கொடு'' என்றேன்.
குருவி எனது பேச்சைக் கேட்கவில்லை. கூட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. இப்பொழுது இரண்டு குஞ்சுக் குருவிகளும் கூட்டில் உட்கார்ந்து ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தது. பெரியக் குருவி தனது முதல் பறத்தல் அனுபவத்தை ஒப்புவித்துக் கொண்டிருந்தது. பறக்கக் கற்றுக் கொண்ட பிறகு கூட்டிலா தங்கும் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டது. இப்பொழுதும் தாயையும் மகளையும் காணவில்லை. நான் நீண்ட நேரம் அவர்கள் இருவருக்காக காத்திருந்தேன் னால் அவர்கள் திரும்பவில்லை.
''ஊர் சுற்றிங்க ரெண்டும் கிளம்பிட்டுங்க'' என்று கூட்டில் தனியாக இருந்த குஞ்சுக் குருவியிடம் சொன்னேன். '' உன்னுடைய தாயும் சகோதரியும் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார்கள். அவர்களுக்கு யார் குறித்தும் எந்த பயமும் இல்லை. அவர்கள் திரும்பி வந்தால் அவர்களுடன் பேசாதே. அவர்களுடன் 'கா' விட்டு விடு. அவர்களை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்'' என்று குருவியை சமாதானப் படுத்தினேன்.
இரவு வெகு நேரம்வரை அவை இரண்டும் திரும்பவேயில்லை. மனைவியையும் பிள்ளையையும் காணாது தவிப்பதைப் போல் நான் தவிப்பும் கவலையும் கொண்டேன். தாய் குருவியின் இந்த பொறுப்பற்ற ஊர்சுற்றல் விவகாரம் ஒரு நாள் முன்னமே தெரிந்து போன விஷயம்தான். அந்த சின்னக் குருவியின் இவ்வாறான செயலால் தான் நான் இத்தனை கோபமும் கவலையும் கொண்டுள்ளேன். பிறந்து இன்னும் நான்கு நாட்கள் கூட கவில்லை அதற்குள்.......
''இதுக்கு பெயர்தான் இறக்கை முளைப்பது என்பது. புதிதாக முளைத்திருக்கிறது இல்லையா அதனால் தான் இப்படி அலைகிறது'' நான் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் வெளியில் போய் சின்னக் குருவியைக் கூட பார்க்கவில்லை. சிட்டுக் குருவியின் குடும்பத்துடன் எனக்கு உறவு அறுந்து போனது.
மறுநாள் காலைக்குள் மீதமிருந்த அந்தக் குருவிக்கும் இறக்கை முளைத்து விட்டது. அது தனது தனிமையின் காரணமாக கவலை கொண்டதாக தெரியவில்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தது போலவே பட்டது. அது மீண்டும் மீண்டும் கூட்டிலிருந்து பறந்து தாவி ரப்பர் மரச் செடியின் இலையில் அமர்ந்து போகும். அவ்வாறு அமரும் போது இலை தாழ்ந்து போகவே கீழே வழுக்கி விழும். ஒவ்வொரு முறையும் அது விழுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும். கொஞ்ச நேரத்திற்கு கூட்டில் அமைதியாக இளைப்பாரும் பின் மீண்டும் இந்த விளையாட்டிற்கு சென்று விடும்.
'' அட முட்டாளே! இலையில் இல்லை. கிளையில் உட்கார்.'' நான் கத்தினேன். குருவி எனது எச்சரிக்கையையும் அக்கரையையும் கண்டு கொள்ளாது வழுக்கி விழும் விளைட்டை தொடர்ந்தது. மதியத்திற்குள் இந்த சின்னக் குருவியும் கொஞ்சம் தேறி விட்டது.
'' போச்சுடா, இதற்கும் இறக்கை முளைத்து விட்டது போல'' என்றேன் நான்.
அந்தக் சின்னக் குருவி அங்குமிங்கும் பறந்து மரத்தின் அடிக்கு வந்து போவது எனக்குள் பயத்தை ஏற்படுத்தியது. இது நிச்சயமாய் பூனைக்கு இரையாகிப் போகப் போகிறது. நான் மிக நீண்ட நேரமாக அதற்கு காவலாய் இருந்தேன். இந்தக் குருவிக்கு தன்னைப் பற்றியக் கவலை இல்லை. இதன் தாய் மற்றும் சகோதரி குருவிக்கு இதனை பற்றியக் கவலை இல்லை. இந்தக் குருவிகளுக்குத்தான் இலவசமாக காவல்காரன் கிடைத்து உள்ளானே. நான் முனுமுனுத்துக் கொண்டேன். அது கூட்டுக்கு வரும் வரை நான் தோட்டத்திலேயே உட்கார்ந்து இருந்தேன்.
மிகக் கடுமையான அதிருப்தியுடன் இனி இந்தக் குருவிகளுக்காக நான் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன். குழந்தைத்தனமும் துரோகமும் இவைகளின் உடலெங்கும் நிறைந்து உள்ளது. முதலில் இவைகள் தன் இனிமையான குரலால் வசப் படுத்தும், வேடிக்கையான செயல்களால் கவர்ந்து கொள்ளும் பின் இறக்கை முளைத்தவுடன் பறந்து காணாமல் போய் விடும். நான் இனி மதிய நேரத்தில் தோட்டத்திற்குப் போக மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
மாலையில் நான் உற்சாகமாக புன்னகைத்துக் கொண்டே வெளியில் வந்தேன். கூட்டைப் பார்த்தேன் கூடு வெறுமையாகக் கிடந்தது. அதில் யாரும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளமும் இல்லை. நான் அங்கிருந்த அனைத்து மரங்களின் கிளைகள் இலைகள் என்று எனது பார்வையை படபடவென ஓட விட்டேன். னால் குருவிக் குடும்பத்தின் ஒரு சின்ன அடையாளமும் அங்கு தென் படவில்லை. எனக்கு பெரிதாக அதிர்ச்சி ஏற்படவில்லைதான் காரணம் நான் என்னை இந்த நிலைக்காக கொஞ்ச கொஞ்சமாக தயாராகி விட்டிருந்தேன். எனக்குத் தெரியும் இந்த கடைசிக் குருவியும் என்னை விட்டு போய் விடும் என்பது நிச்சயமாகத் தெரியும்.
நான் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பசும் இலைகளிலும் வண்ணப் பூக்களிலும் தாவிக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளின் நடனத்தை கண்டு ரசிக்கலானேன். இதற்கிடையில் மரக் கிளைகளில் எங்காவது குருவிகள் என்னுடன் கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எனது பார்வை கோயில் கலசத்தில் பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன். குருவியின் குடும்பம் அங்கு உட்கார்ந்திருந்தது. கவலையில்லாமல், வருத்தமில்லாமல், மிக்க மகிழ்ச்சியாக. சின்னச் சின்ன இடைவேளையில் குருவிகளின் அலகுகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் பின் பிரிந்து விடும். அவைகளின் சுதந்திரத்தை கண்டு நான் மிகு மகிழ்ச்சி கொண்டேன். அவை மூன்றும் அங்கு உல்லாசமாய் சுற்றுலாப் பிரயாணிகளைப் போல் மகிழ்ந்து கொண்டிருந்தன.
மனைவி எனக்கு மிக அருகில் இருந்து நகர்ந்த அவளை நிறுத்தினேன். '' அங்கே பார். சின்னக் குடும்பம் மகிழ்வான குடும்பம். அவை மூன்றும் எத்தனை உல்லாசமாகவும் மகிழ்ச்சியாகவும் கோயில் கலசத்தில் உட்கார்ந்து இருக்கின்றன'' நான் மனைவியை பார்க்கச் செய்தேன்.
''அவை மூன்றையும் ஒன்றாகப் பார்ப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. அவை கோயில் கலசத்தில் ஏன் உட்கார்ந்து இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா?'' நான் கேட்டேன்.
''ஏன் அப்படி உட்கார்ந்து இருக்கின்றன?'' மனைவி கேட்டாள்.
'' ஏனென்றால் இவை அனைத்தும் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்து உள்ளன. சில பழக்கங்களுக்கு பிறப்பு காரணமாக இருக்கிறது. அவை ஓய்வு எடுத்துக் கொள்ளத்தான் கோயில் கலசத்தில் உட்கார்ந்து இருக்கின்றன என்பது சும்மா விஷயம்.'' என்றேன் நான்.
''உங்க மூளையில் அழுக்கு படிந்து போய் விட்டது'' மனைவி சிடுசிடுத்தாள். ''கொஞ்ச நேரம் முந்தான் அவைகள் மசூதியின் உச்சியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தேன். மசூதியில் தொழுகை அழைப்புப் பாடல் சத்தம் கேட்டதும் அவைப் பறந்து வந்து கோயில் கலசத்தில் உட்கார்ந்து கொண்டன. இதெல்லாம் ஒலிப்பெருக்கியின் வேலைதான் வேறொன்றுமில்லை'' என்றாள் மனைவி.
நான் உடைந்து போய் விட்டேன். கோயிலில் ரத்தி பூசை துவங்கியதும். அவை மூன்றும் வெவ்வேறு திசைகளில் பறக்கத் துவங்கியது. கொஞ்ச நேரத்தில் அவை மூன்றும் தோட்டத்தில் வந்து இறங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை அவை கூட்டைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
உண்மை என்னவென்றாள். குருவி என்னை முற்றிலும் மறந்தே போனது. பகலில் எப்போதாவது தோட்டத்தில் காணப் படும். தனித்தனியாக அல்லது மொத்தம் மூன்றுமாக. பிறந்த இடத்தின் ஈர்ப்பு இவர்களை இங்கு இழுத்து வருகிறதோ என்று நினைத்துக் கொள்வேன். பிறப்பிடம் என்ற வார்த்தையையே நான் வெறுக்கத் துவங்கினேன். னால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக என்னால் சொல்லவும் முடியும். ஏனென்றால் இங்கு ஒரு குருவிதான் பிறந்தது, கடவுள் இல்லை.
------------------------------------------------------------------------------
ரவிந்திர காலியா: இவர் இந்தி இலக்கிய உலகில் மிகவும் அறியப் பட்ட எழுத்தாளர். இவரது மனைவி மம்தா காலியாவும் இந்தி இலக்கிய உலகில் பிரபலமான நாவல் எழுத்தாளர் மற்றும் கதாசிரியர். ரவிந்திர காலியா மிகவும் உயிர்ப்பான மனிதர். தனது எழுத்தில் எப்பவும் ஜீவனை வைத்து எழுதுபவர்.
இவர் கடந்த ண்டுகளில் தனது படைப்புகள் மூலம் இலக்கிய உலகில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் கடும் விவாதங்களையும் துவக்கி வைத்தார்.
இவரது எழுத்தில் புதுமையும் புரட்சி எண்ணங்களும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் தைரியமும் அடங்கி உள்ளது. இவரது கதைகள் முதுகெழும்போடு நிமிர்ந்து நிற்கிறது. விவாதங்களை துவக்கி வைக்கிறது.
கதைகளில் மட்டுமல்ல தனது சொந்த வாழ்க்கையிலும் ரவிந்திர காலிய ஏற்ற இறக்கங்களையும் பல வண்ண மாற்றங்களையும் கண்டு கடந்து உள்ளார்.
இவர் இதுவரை சுமார் இருபத்நான்கு புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது 'குதா கி சலாமத்'' என்ற நாவல் குறிப்பிடும்படியானது. ''நவ் சால் கி சோட்டி பத்னி', 'காலா ரஜிஸ்டர்', ' கரிபி ஹட்டாவோ', 'பாங்கே லால்'' 'கலி-கூச்'', 'சகை யா நீம்'' மற்றும் 'சத்தாயிஸ் சால் கி உமர் தக்'' போன்ற புத்தகங்கள் குறிப்பிடும் படியானவை.

No comments: