
பளிங்கில் தெரியும்
நீரின் குளிர்ச்சி
ஜன்னல் நுழைகிறது
குளுமைச் சாரல்
வாளி நீர் வழிகிறது
கழுத்து வழி காலுக்கு
உடல்தொடும் நீரால்
உன்னத சுகம்
உடல் பிரியும்
சிறுநீரும் அப்படியே
வெளிநிறையும்
மழை நீர் சிலிர்ப்பு
கடல் தேங்கும்
பெருநீர் வியப்பு
இடம்கொண்ட
தெளிநீர் வாழ்க்கை
மலை பொங்கும்
வளிநீர் மருந்து
மலர் தங்கும்
பொடிநீர் மதுநீர்
விழி ஊறும்
சுடுநீர் வீணே
உடல் நுழையும்
துளிநீர் உயிரே.
மதியழகன் சுப்பையா
மும்பை
No comments:
Post a Comment