Wednesday, April 11, 2007

நீர் வாழ்வு













பளிங்கில் தெரியும்
நீரின் குளிர்ச்சி

ஜன்னல் நுழைகிறது
குளுமைச் சாரல்

வாளி நீர் வழிகிறது
கழுத்து வழி காலுக்கு

உடல்தொடும் நீரால்
உன்னத சுகம்

உடல் பிரியும்
சிறுநீரும் அப்படியே

வெளிநிறையும்
மழை நீர் சிலிர்ப்பு

கடல் தேங்கும்
பெருநீர் வியப்பு

இடம்கொண்ட
தெளிநீர் வாழ்க்கை

மலை பொங்கும்
வளிநீர் மருந்து

மலர் தங்கும்
பொடிநீர் மதுநீர்

விழி ஊறும்
சுடுநீர் வீணே

உடல் நுழையும்
துளிநீர் உயிரே.

மதியழகன் சுப்பையா
மும்பை

No comments: