Tuesday, April 24, 2007

' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்'

அன்புள்ள எழுத்தாள நண்பர்களுக்கு,
வணக்கத்துடன் பாண்டித்துரை நான் பல்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே கேள்வி கேட்டு அதன் பதிலை அறிந்து தொகுப்பாக வெளியிடும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களிடமிருந்தும் பதிலை எதிர்நோக்குகிறேன்.

கேள்வி
1. நவின இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?
2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?
3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யுனிகோடு வடிவில் எமுதிடவும்உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்இந்த சிறுவனின் முயற்சிக்கு உங்கள் பேனாவும் செவிசாய்க்கும் எனும் நம்பிக்கையில்
ப்ரியமுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
006597345497
------------------------------------------------------------------------------
அன்பு சிறுவன் பாண்டித்துரைக்கு,
வணக்கம். உங்களின் ஆர்வமும் பணிவும் பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதில்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.திருப்தியாயின் மகிழ்வேன்.

1. நவீன இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?

நவீன இலக்கியம் என்று எதைக் குறிப்பிடலாம். இல்லக்கண மரபுப் படி செய்யுள்கள் இயற்றப் பட்டு வந்த கால கட்டத்தில் புதுக் கவிதைகள் நவீன எழுத்து வடிவமாக கருத்தப் பட்டது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நம் அனைவரின் கண்கூடு. தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை அல்லது தான் சொல்ல வந்த விஷயத்தை தனக்கான மொழியில் பதிவு செய்து விடுதல் படைப்பாகி விடுகிறது. கவிதை என்று தலைப்பிட்டு இரண்டு வார்த்தைகள் வீதம் வரிகளை ஒன்றுக்கு கீழ் ஒன்றாக அமைத்து விட்டாள் அது கவிதை. பத்தியாக்கி விட்டாள் கட்டுரை. சிறிய இடைவெளிகளில் வசனம் எழுதி விட்டால் சிறுகதை எதுமை மோனை போட்டு விட்டால் பாட்டு இப்படி படிப்புகள் வடிவம் கொள்கிறது. ஆனால் அவை நவீன இலக்கியம் நவீன படைப்பு என்று அடையாளம் காண்பது எப்படி? புரியாமல் ஒரு படைப்பை படைத்து விட்டு இதை புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் பக்குவப் படவில்லை என்று பதில் சொல்லிக் கொள்வது நவீன படைப்பின் அடையாளமா? வெள்ளைத்தாளில் ஓவியர் ஒருவர் ஒரு கரும்பொட்டு வைத்து அதை சட்டமிட்ட கண்காட்சியில் வைத்து விடுகிறார். என்னப்பா ஒரு கருப்பு பொட்டு மட்டும் வச்சிருக்க, இதுவா ஓவியம் என்று கேட்டால். உங்களுக்கு கருப்பு பொட்டாகத் தெரிகிறது எனக்கு அது வானத்தில் பறக்கும் காக்கையாகத் தெரிகிறது அவருக்கு வேறு எதுவாகவும் தெரியலாம் என விளக்கம் தருகிறான். என்ன செய்ய? இது தான் நவீன படைப்பு அவரவர் அறிவிக்கு தகுந்த படி புரிந்து கொள்ள வேண்டியதுதான். இது இன்னும் எதை நோக்கிப் பயணப் படும் என்பது குறித்து நீங்களே முடிவுக்கு வரலாம். மாங்காய் புளிக்கும்
மரகதம் ஜொலிக்கும்
பலூனில் தண்ணீர்
சொட்டுகிறது.
பறக்கிறான் மனிதன்

இது ஒரு நவீன கவிதை.
யார் எழுதினார்கள் என்பது வேண்டாம். ஆனால் படித்து முடித்தவுடன். இதை ஏன் எழுதினார் என்று தான் கேட்கத் தோன்றியது. எழுதியவரிடம் கேட்டால். பீயை பார்ப்பது போல் பார்ப்பார். விளக்கமா தருவார். இன்று தமிழ் இலக்கியத்தின் நவீன படைப்பாளிகள் இப்படித்தான். நவீன படைப்புகளும் இப்படித்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் :

நவீன இலக்கியங்கள் எண்ணிக்கையில் முந்த ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நல்ல படைப்பு என்று குறிப்பிட நூற்றாண்டுகளுக்கும் ஒன்றும் இல்லாமல் போகும் நிலையை உருவாக்கப் போய் கொண்டிருக்கின்றன.

2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?

பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளின் வருகை மிகச் சிறப்பானது, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆதிக்க ஆண் வர்க்கம் அதனை பிரபலமாகமல் தனது பலத்தால் தடுத்து வருகின்றன. மிக நுணுக்கமான விஷயங்களை எளிமையாக குழப்பமில்லாமல் சொல்லும் ஆற்றல் பெண்களுக்கு இயல்பாக உள்ளது. எங்கே இவர்கள் நம்பை முந்தி விடுவார்களோ என்ற பேரச்சத்தின் காரணமாக ஆண் வர்க்கம் அதை முடக்கி வைத்து உள்ளது. பெண்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கும் அமைப்புகள் முன் வந்தால் பெண்ணெழுத்து ஒரு புதிய சாதனைப் பாதையை உண்டாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கேள்விக்கு பதில்:

மிக மோசமாக வரவேற்கப் பட்டு. முடிக்கி வைக்கப் பட்டுள்ளது.

3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யார் சொன்ன தகவல் இது. மிகக் கசப்பான உண்மை. இன்று பாரதியையும் பாரதிதாசனையும் மிஞ்சும் அளவுக்கு சமூக எழுச்சித் தரக்கூடிய கவிஞர்கள் படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் யார் ஏற்றுக் கொள்வது. இவர்களின் கவிதைகளை போகட்டுமே! என்று தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வரும் சிறு பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இந்தப் பத்திரிக்கைகளை படிப்பது யார். ஒரு சிறு வட்டம். அந்த வட்டமும் இவர் மீதான் அன்பு மிகுதியால் இவரை படைப்புகளை மேலோட்டமாகப் பார்த்து பாரட்டி விட்டு விலகி விடுகின்றன. அல்லது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். சரக்கு உள்ளே வேலை செய்யும் வரை ' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்' இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் நிறைய குட்டிப் பாரதிகள் உள்ளனர். இவர்களின் படைப்புகள் அந்தந்த வட்டத்தில் சிறப்பானதாக கொள்ளப் படுகிறது. ஒரு வட்டம் இன்னொரு வட்டத்திற்கு வாசகராகவும் இல்லை ஒரு வட்டத்தில் உள்ளவர் இன்னொரு வட்டத்தவரை மதித்து ஏற்றுக் கொள்வதும் இல்லை.


உங்கள் கேள்விக்குப் பதில்:

பாரதியும், பாரதிதாசனையும் விடவும் சமூக அக்கரை கொண்டு எழுச்சி மிக்க படைப்புகளைத் தரும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். வாருங்கள் அவர்களை நேரில் காட்டுகிறேன்.

No comments: