Monday, October 30, 2006

அன்புடை தமிழ் நெஞ்சங்களுக்கு,

அன்புடை தமிழ் நெஞ்சங்களுக்கு,
வணக்கம். மும்பையிலிருந்து 'அணி' என்னும் கவிதைக்கான இதழ் வந்து கொண்டிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான். எதிர்வரும் நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வர உள்ளது. தரமான படைப்புகளை அனுப்பி ஆதரவு தருவீர். இந்தக் தகவலை தங்கள் தோழமைகளுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பு. கவிதையும் கவிதை சார்ந்த எந்த படைப்பாயினும் அனுப்பி வையுங்கள்.

இங்ஙனம்,
அன்பாதவன் (09869481106)
மதியழகன் சுப்பையா (09821847464)

மின்னஞ்சல் முகவரி: anikavi@gmail.com
இணைய முகவரி: www.ani.keetru.com
அஞ்சல் முகவரி: Madhiyalagan subbiah,
10/1-B, Trivedi & Desai chawl,
D'monte lane, Orlem,
Malad (w), Mumbai-400064.
Phone: 022- 32580618.

Friday, October 27, 2006

அறை வாழ்க்கை

வெளிச்சம் பார்த்தோடும்
விட்டில் பூச்சியாய்
அறைகளால்
கவரப் பட்டுருக்கிறேன்

சிறிய பெரிய
அகன்ற குறுகிய
வண்ண வண்ண
பருத்த சிறுத்த
பால் வேறுபாடுடைய
பலவகை அறைகள்

சிலந்தி வளையில்
சிக்கிய பூச்சியாய்
அறைகளில் மோதி
அறைக்கறை தாவி
மூச்சுத்திணறுகிறேன்

எத்தகை அறையாயினும்
எவ்வகை அறையாயினும்

கதவினைப் போல்
கரம் திறப்பாய்
காப்பாய் ; மீட்பாய்

நீயே அறையாகிப்
போனாய் இன்று.


சதுர உலகத்திற்குள்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
எறும்புகளை நசுக்குவதும்
ஈக்களை விரட்டுவதும்
கொசுக்களை கொல்வதும்
இப்படியாய்
பராக்கிரமங்களை
பழகிக் கொண்டிருக்கிறேன்

முட்டினால் உடையும்
எக்கினால் தெரியும்
நக்கிக் கொண்டிருக்கிறேன்



கனமாய் ; குணமாய்
கூறாய் ; வாகாய்
யுதங்களும் அடைக்கலமே

உப்பூறும் சுவரையும்
சதுர வானத்தையும்
துணையாய் கொண்டேன்

சுவர் தாண்ட முடியும்
அறை மீள முடியும்
மனம் மீற முடிந்தால்


குளிரென்றால்
கடுங் குளிரே

வெயிலென்றால்
கொடும் வெயிலே

மழையென்றால்
கன மழையே

பருவ மாற்றம்
சாத்தியம்

எளிமையும் ; கடுமையும்
அனைத்திலும் உண்டு

நடுமைதான்
நாம் விரும்புவது

வாய்ப்பதைக் கொண்டு
வாழ வழி தெரியாது
காய்ப்பதெல்லாம்
பழுக்கத்தான் வேண்டுமா?

அறை வாழ்க்கை
குறை வாழ்க்கை

அறை மீட்சி
அமைந்து விட்டால்
நிறை வாழ்க்கை நிச்சயம்

அறை வாழ்க்கை
மதியழகன் சுப்பையா
வெளிச்சம் பார்த்தோடும்
விட்டில் பூச்சியாய்
அறைகளால்
கவரப் பட்டுருக்கிறேன்

சிறிய பெரிய
அகன்ற குறுகிய
வண்ண வண்ண
பருத்த சிறுத்த
பால் வேறுபாடுடைய
பலவகை அறைகள்

சிலந்தி வளையில்
சிக்கிய பூச்சியாய்
அறைகளில் மோதி
அறைக்கறை தாவி
மூச்சுத்திணறுகிறேன்

எத்தகை அறையாயினும்
எவ்வகை அறையாயினும்

கதவினைப் போல்
கரம் திறப்பாய்
காப்பாய் ; மீட்பாய்

நீயே அறையாகிப்
போனாய் இன்று.


சதுர உலகத்திற்குள்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
எறும்புகளை நசுக்குவதும்
ஈக்களை விரட்டுவதும்
கொசுக்களை கொல்வதும்
இப்படியாய்
பராக்கிரமங்களை
பழகிக் கொண்டிருக்கிறேன்

முட்டினால் உடையும்
எக்கினால் தெரியும்
நக்கிக் கொண்டிருக்கிறேன்



கனமாய் ; குணமாய்
கூறாய் ; வாகாய்
யுதங்களும் அடைக்கலமே

உப்பூறும் சுவரையும்
சதுர வானத்தையும்
துணையாய் கொண்டேன்

சுவர் தாண்ட முடியும்
அறை மீள முடியும்
மனம் மீற முடிந்தால்


குளிரென்றால்
கடுங் குளிரே

வெயிலென்றால்
கொடும் வெயிலே

மழையென்றால்
கன மழையே

பருவ மாற்றம்
சாத்தியம்

எளிமையும் ; கடுமையும்
அனைத்திலும் உண்டு

நடுமைதான்
நாம் விரும்புவது

வாய்ப்பதைக் கொண்டு
வாழ வழி தெரியாது
காய்ப்பதெல்லாம்
பழுக்கத்தான் வேண்டுமா?

அறை வாழ்க்கை
குறை வாழ்க்கை

அறை மீட்சி
அமைந்து விட்டால்
நிறை வாழ்க்கை நிச்சயம்


மதியழகன் சுப்பையா

Tuesday, October 24, 2006

தாஜு

இந்தியில்: சேகர் ஜோஷி
தமிழில்: மதியழகன் சுப்பையா

ஜெகதீஷ் பாபு முதல் முறையாக அவனை வலதுபுறம் அந்த பெரிய பெயர்ப் பலகை வைக்கப் பட்டிருக்கும் கேபேயில் தான் பார்த்தார். நல்ல வெள்ளை நிறம், நீல வண்ணத்தில் தெளிவான முட்டைக் கண்கள், அடர்ந்த மென்மையான முடி, அவனது நடையில் ஒரு மாறுபட்ட துள்ளலும் உற்சாகமும் இருந்தது னால் வேகம் இல்லை. தாமரை இலையில் நழுவி ஓடும் நீர்த்துளி போன்ற வேகத்தில் அவன்இயக்கம் இருந்தது. அவனது கண்களின் ஓட்டத்தைக் காணும் போது ஒன்பது பத்து வயது மட்டுமே மதிப்பிடலாம். உண்மையில் அவனுக்கு இந்த வயது தான் இருக்கும்.
பாதிவரை எரிந்த சிகரெட்டை ழமாக இழுத்தபடி ஜெகதீஷ் பாபு கேபேவில் நுழைந்தார். அப்பொழுது அவன் ஒரு டேபளில் இருந்து தட்டை எடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் பக்கத்திலேயே ஒரு மூலையில் உள்ள பெஞ்சில் அமர்ந்தார்கள். அவன் முன்னால் இருந்தான். மணிக் கணக்காக அவர்களின், அந்த இடத்தில் உட்கார்பவர்களின் எதிர் பார்ப்பில் இருந்தவனைப் போல் தெரிந்தான். அவன் எதுவும் பேசவில்லை. தனது பணிவை காட்ட கொஞ்சம் குனிந்து நிமிர்ந்தான். பெரிதாய் புன்னகை நிறைத்து முகம் காட்டினான். அவனது இந்த புன்னகையில் 'மெனு' முழுவதையும் அடக்கியதைப் போல் இருந்தது. ' சிங்கிள் சாயா' என்ற டரை பெற்றவுடன் அவன் மீண்டும் ஒரு முறை புன்னகைத்தான். கண்ணிமைப்பதற்குள் சாயா கொண்டு வரப் பட்டு விட்டது.
மனிதனின் பாவனைகள் பெரும் விசித்திரமானவையாக இருக்கிறது. அரவமற்ற, ஏகாந்த இடங்களில் துணையில்லாமல் இருக்கையில் கூட பல முறை மனிதன் தனிமையை உணர்வதில்லை. ஒருவேளை இந்த தனிமையில் அனைத்தும் மிக அருகில் இருப்பது போலவும் எல்லாம் தனக்கு சொந்தம் போலவும் உணர முடிகிறது. னால் இதற்குமாறாக லட்சக்கணக்கான ண்கள் பெண்கள் என்று சூழ்ந்த ஜனசமுத்திர சூழ்நிலையில் இருந்தும் கடுமையான சூன்யத்தை உணரும்படியாகி விடுகிறது. எவையெல்லாம் சொந்தமில்லை என்று நினைக்கிறோமோ அவனை நமக்கு எத்தனை நெருக்கமானதாக இருந்து விடுகிறது! னால் இவை சாத்தியமானதாகவும் இருப்பதில்லை. எப்பொழுதும் கிடைக்கப் பெறுவதுமில்லை. இந்த தனிமையின் உணர்தல்தான் இவ்வாறு விலகி இருப்பதற்கு மூலமாக இருந்து விடுகிறது, மனக் கவலை மற்றும் சஞ்சலம் பல கதைகளுக்கு கருவாகி விடுகிறது.
ஜெகதீஷ் பாபு தூர தேஷத்தில் இருந்து வந்தவர். தனியாக இருப்பவர். இருப்பிடத்தின் ஓட்டம் பாட்டம், கேபேயின் ராவாரம் கியவைகளில் எதிலும் சுயம் உணரவில்லை. னால் கொஞ்ச நாட்கள் இருந்து பழகிப் போய் விட்ட காரணத்தால் இந்த சூழ்நிலையில் தானும் ஒரு அங்கமாகி விட்டதையும் தனிமை நீங்கியதையும் உணர்கிறார். னால் இன்று இது தனக்கு எவ்வகையிலும் சொந்தமில்லை என்றே உணர்ந்தார். சொந்தம் என்ற எல்லையை விட்டு வெகு தூரம், மிகமிக தூரத்தில் இருப்பதாக உணர்ந்தார். அவரையும் மீறி அவருக்கு தனது ஊரின் மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், அருகில் இருக்கும் நகரத்து கேபே என அனைத்தும் அனாயஷ்யமாக நினைவுக்கு வந்தது.
'' சாஹப்....., சாயா''
ஜெகதீஷ் பாபு சாம்பல் குப்பியில் சிகரெட்டை உதரினார். அவனது பேச்சொலியில் தான் ஏதோ ஒன்று உள்ளது. அதன் வெறுமைதான் தன்னை இவ்வாறு சிந்திக்க வைத்துக் கொண்டிருப்பதாக பட்டது. இவ்வாறு அவர் தனது சந்தேகத்திற்கு சமாதானாம் கொடுத்துக் கொண்டார்.
'' உனது பெயர் என்ன?''
'' மதன்''
'' சரி, மதன்! நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?''
''ஐயா, நான் மலைப் பகுதியைச் சேர்ந்தவன்''
'' பு, டார்ஜிலிங், சிம்லா, அல்மோடா இப்படி எத்தனையோ மலைகள் இருக்கிறது- இதில் உனது ஊர் எந்த மலையில் உள்ளது?''
இந்த முறை அவனுக்கு மலை மற்றும் மாவட்டத்தின் வேறுபாடு தெரிந்து விட்டது போல! புன்னகைத்துக் கொண்டே
''அல்மோடா ஐயா அல்மோடா'' என்றான்.
''அல்மோடாவில் எந்த ஊர் ?'' சரியாக தெரிந்து கொள்ள வேண்டி ஜெகதீஷ் பாபு கேட்டார்.
இந்தக் கேள்வி அவனை தயக்கத்தில் தள்ளி விட்டது. தனது ஊரின் மாறு பட்ட பெயரின் காரணமாக அவன் வெட்கப் பட்டிருக்கலாம் அதனால் அவன் பெயர் சொல்வதை தவிர்த்தபடி '' ஐயா, அது தூரத்தில் இருக்கிறது. அல்மோடாவில் இருந்து பதினைந்து இருபது மைல்களுக்கு அப்பால் இருக்கும்''
'' சரிப்பா, அதற்கு எதாவது பெயர் இருக்கும் இல்லையா?'' ஜெகதீஷ் பாபு கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.
''டோட்யாலோக்'' என்று தயக்கத்துடன் சொன்னான்.
ஜெகதீஷ் பாபுவின் முகத்தில் அப்பியிருந்த தனிமை உணர்வு சட்டென மறைந்தது. அவர் புன்னகைத்துக் கொண்டே தானும் அவனுடைய ஊருக்கு அருகில் ''..........'' என்று ஊரைச் சேர்ந்தவந்தான் என்று மதனிடம் கூறினார். மகிழ்ச்சியில் மதனின் கைகளில் இருந்த 'டிரே' கீழே விழுந்து விடும் போல் இருந்தது. அவன் எவ்வளவொ விரும்பியும் அவனது வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாமல் தவித்தது. தன்னைத் தானே தொலைத்தவனைப் போல் தனக்கு தோழமையான ஒருவரை மீண்டும் மீண்டும் வந்து பார்க்கும் முயற்சியில் இருந்தான்.
ஊர்க்கார தோழர்- ஊர்........ உயர்ந்த மலைகள்...... நதி........ ஈஜா(அம்மா)....... பாபா( அப்பா)......... தீதி(அக்கா)........ முளி (தங்கை)........தாஜு (அண்ணன்)........!
மதனுக்கு ஜெகதீஷ் பாபுவின் தோற்றத்தில் யாருடைய உருவம் பொருத்தமாய் இருந்தது? ஈஜா.....? ....இல்லை.....பாபா?....... இல்லை. தீதி?........முளி?........ ம்ம்ம்ம்ம் தாஜு.....!!!!
இரண்டு-நான்கொரு நாட்களில் மதன் மற்றும் ஜெகதீஷ் பாபு இருவர் இடையிலும் இருந்த அன்னியம் என்னும் ழிப் பிளவு காணாமல் போய் விட்டது. டேபளில் உட்கார்ந்த உடன் மதனின் சத்தம் கேட்டு விடும்.
''தாஜு, நலமா...?''
''தாஜு, இன்றைக்கு குளிர் கொஞ்சம் அதிகமாக உள்ளது''
'' தாஜு, இங்கையும் 'ஹ¤யூம்' (லங்கட்டி) விழுமா?''
'' தாஜு, நேற்று நீங்கள் மிகவும் குறைவாக சாப்பிட்டீர்கள்' என்பான் அதற்குள் 'பாய்' என்று குரல் ஒலிக்கும் அக்குரலின் எதிரொலி வந்து சேரும் முன் அவன் அங்கே ஜராகி விடுவான். ர்டர் வாங்கிக் கொண்டு போகும் போது மீண்டும் ஜெகதீஷ் பாபுவிடம் ''தாஜு, வேற எதாவது வேண்டுமா?''
'' தண்ணீர் கொண்டு வா''
'' கொண்டு வந்திட்டேன், தாஜு'' அடுத்த டேபளில் இருந்து மதனின் குரல் கேட்கும்.
மதன் ''தாஜு'' என்ற வார்த்தையை நீண்ட காலமாக பிரிந்த மகனைப் பார்க்கும் தாய் '' மகனே'' என்று அழைத்து முத்திக் கொள்வது போன்றதொரு உணர்வில் உச்சரிபான்.
கொஞ்ச நாட்களில் ஜெகதீஷ் பாபுவின் தனிமை விலகிப் போய் விட்டது. தற்போது அவருடைய இருப்பிடம், இந்த கேபே மட்டுமல்ல நகரம் முழுவதும் தனக்கு தனக்கு சொந்தம் என்று தோன்றும் வகையில் உறவு வண்ணங்களைப் பூசிக் கொண்டது போல் காட்சியளித்தது. தான் தாஜு என்று அழைக்கப் படுவது கொஞ்சம் பிடிக்கவில்லை தான். னால் இந்த மதன் அடுத்த டேபளில் நின்றபடி கூட ''தாஜு'' என்று பதில் கொடுக்கத் தவறுவதில்லை.
'' மதன்! இங்கே வா''
'' இதோ வருகிறேன் தாஜு''
''தாஜு'' என்ற வார்த்தையில் ஜெகதீஷ் பாபுவின் நடுத்தர வர்க்க பண்பாடு விழித்துக் கொண்டது. சொந்தம் என்ற மெல்லிய நூல் ''ங்'' என்ற கூர்மைக்கு முன்னால் தாக்குப் பிடிக்கவில்லை.
''தாஜு, சாயா கொண்டு வரட்டுமா?''
'' சாயா வேண்டாம், னால் தாஜு -தாஜு என்று ஏன் இப்படி கத்திக் கொண்டு அலைகிறாய். மத்தவங்க 'பிரிஸ்டேஜ்' பற்றி கொஞ்சம் கூட உனக்கு அக்கரையில்லை?''
ஜெகதீஷ் பாபுவின் முகம் கோபத்தால் தக தகத்தது. தனது வார்த்தைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. மதனுக்கு 'பிரிஸ்டேஜ்' என்ற வார்த்தையின் பொருள் தெரியுமா என்று கூட அவனுக்கு கவனம் இல்லை.
'யாராவது மதனுக்கு 'பிரிஸ்டேஜ்' என்ற வார்த்தையின் பொருள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
'பிரிஸ்டேஜ்' என்றால் சுய கவுரவம், பிரிஸ்டேஜ் என்றால் வெள்ளைக் காலர், உழைப்பாளர்களின் கைகளை விட்டு விலகி இருப்பவை, பிரிஸ்டேஜ் என்றால் தன்னலம்.........னால் மதனுக்கு இவற்றை யாரும் விளக்காமலேயே அனைத்தையும் புரிந்து கொண்டான். இந்த இளம் வயதிலேயே உலகத்தைப் புரிந்து கொள்ளும் திறமை பெற்றவனுக்கு இந்த சாதாரண வார்த்தையின் பொருள் புரியாமலா போய்விடும்.?
மதனுக்கு ஜெகதீஷ் பாபுவின் இந்த செயலால் பலத்த மனக் காயம் ஏற்பட்டது. மேனேஜரிடம் தலைவலி என்று சொல்லி விட்டு தனது குடிசையில் வந்து கால் முட்டியில் முகம் புதைத்து ஏங்கியேங்கி அழுது கொண்டிருந்தான். னால் வீட்டையும் ஊரையும் விட்டு இவ்வளவு தொலைவில் மதனுக்கு ஜெகதீஷ் பாபுவின் மேல் அன்பு ஏற்பட்டது இயல்பான விஷயம்தான். அதனால்தான் இன்று இப்படி புலம்பெயர்ந்து வாழும் நிலையில் முதல் முறையாக யாரோ அவனை ஈஜாவின் மடியிலிருந்து, பாபாவின் தோளிலிருந்து மற்றும் தீதியின் அரவணைப்பிலிருந்து பலவந்தமாக இழுத்து விலக்கியது போல் உணர்ந்தான்.
னால் அவன் உணர்ச்சிவசப் பட்டுவிடவில்லை. அழுது முடிக்கும் நிலையில் மனதுள் சுழலும் கவலைகள் கண் வழியாக கண்ணீராக பெருகி வெளியே வந்து விடுகிறது. அதன் பின் மனிதன் முடிவு செய்யும் அனைத்தும் உணர்ச்சியின் பிடி விலகிய நிலையில் விவேக பூர்வமான முடிவுகளாகவே அமைந்து விடுகிறது.
மதன் அமைதியாக வேலை செய்யத் தொடங்கி இருந்தான்.
மறுநாள் கேபே செல்லும் போது ஜெகதீஷ் பாபு தனது பள்ளித் தோழன் ஹேமந்த்தை சந்தித்தார். கேபே போய் சேர்ந்ததும் ஜெகதீஷ் பாபு மதனை சைகையால் அழைத்தார். னால் மதன் அவரை விட்டு விலகி தொலைவில் இருக்கவே முயன்று கொண்டிருந்தது. தெரிந்தது. இரண்டாவது முறை கூப்பிட்டதும் மதன் வந்தான். அவன் முகத்தில் இன்று அந்த புன்னகை இல்லை மேலும் '' என்ன கொண்டு வரட்டும் தாஜு'' என்ற விசாரிப்பும் இல்லை. ஜெகதீஷ் பாபுவே பேசத் துவங்கினார் ''இரண்டு சாயா, இரண்டு ம்லேட்'' என்றார். '' கொண்டு வருகிறேன் தாஜு'' என்று வழக்கமாக சொல்வதை தவிர்த்து '' கொண்டு வருகிறேன் ஐயா'' என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவர்கள் இருவரும் அறிமுகம் இல்லாதவர்களைப் போல் அவன் நடந்து கொண்டான்.
'' மலைஜாதிப் பையனா இருப்பான் போல'' ஹேமந்த் உறுதியில்லாமல் சொன்னான்.
''மாம்'' பிடிக்காமல் பதிலளித்தார் ஜெகதீஷ் பாபு, மேலும் விஷயத்தை மாற்றி வேறு விஷயம் பேசத் துவங்கினார்.
மதன் சாயா கொண்டு வந்திருந்தான்.
'' உன் பெயர் என்ன பையா?'' ஹேமந்த் அவன் மீது பரிதாபமான ஒரு பார்வையை பதித்தபடி கேட்டான்.
கொஞ்ச நேரத்திற்கு டேபளில் ழ்ந்த மௌனம் அப்பியிருந்தது. ஜெகதீஷ் பாபுவின் கண்கள் சாயா கோப்பையிலேயே கவிழ்ந்து கிடந்தது. மதனின் கண்களின் முன்னால் பழைய நினைவுகள் படமாக ஓடிக் கொண்டிருந்தது. ஜெகதீஷ் பாபு இப்படித்தான் ஒருமுறை பெயரைக் கேட்டது....... அப்புறம்....... தாஜு நீங்கள் நேற்று கொஞ்சம் தான் சாப்பிட்டீர்கள்.......இறுதியாக ஒருநாள் ''மத்தவங்க 'பிரிஸ்டேஜ்' பற்றி கொஞ்சம் கூட உனக்கு அக்கரையில்லை.........?'' .என்று சட்டம் சட்டமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஜெகதீஷ் பாபு கண்களை நிமிர்த்து மதனைப் பார்த்தார். அவன் இப்பொழுது எரிமலையாய் வெடிக்கப் போகிறான் என்று அவருக்குப் பட்டது.
ஹேமந்த் வற்புறுத்தும் குரலில் மீண்டும் '' உனது பெயர் என்ன?'' என்று கேட்டான்.
''என்னை ''பாய்'' என்று அழைப்பார்கள் ஐயா'', என்று பதில் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டான். வேஷத்தில் அவனது முகம் இன்னும் சிவந்து போய் அதிக சிகப்பாக காட்சியளித்தது.
'' சரியானா முட்டாளாக இருப்பான் போல, தனது பெயரைக் கூட மறந்து விட்டான்'' என்றபடி ஹெமந்த் சாயாவை உறிஞ்சினான்.
னால் அவன் ''ஐயா'' என்று அழைத்தற்கான காரணம் ஜெகதீஷ் பாபுவுக்கு மட்டுமே புரிந்தது. இந்த வார்த்தையின் உஷ்ணத்தில் அவன் '' நான் 'பாய்''! என்னை 'பாய்' என்று அழையுங்கள்! உங்கள் 'பிரிஸ்டேஜ் மற்றும் சுயகவ்ரவ எல்லைகளுக்கு வெளியே, முற்றிலும் வெளியே நான் ஒரு 'பாய்'....!'' என்று வேஷமாய் கத்தியிருப்பதை உணர முடிந்தது.
-------------------------------------------------------------------------------------


சேகர் ஜோஷி: (பிறப்பு 1932) எழுத்தாளர் சேகர் ஜோஷி இந்திய இலக்கிய உலகில் மாறுபட்ட கதைகளை வழங்கியவர் என்ற சிறப்பிடத்தில் உள்ளார், இவரது கதைகளில் ஒருபுறம் மலைவாழ் மக்களின் வாழ்நினையும் மறுபுறம் தொழிற்சாலையின் வாழ்நிலையும் மிகச் சிறப்பாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
சமூக வாழ்வில் ஏழைகள், பிற்படுத்தப் பட்டோர்கள் மற்றும் தலித் மக்கள் போன்றோர்கள் ஒடுக்கப் படுவதையும் அவர்களின் வாழ்வியல் வதைகளையும் அவமானங்களையும் இயலாமையையும் உணர்வு இம்மி பிசகாமல் அப்படியே பதிவு செய்யும் அபார மொழித் திறமையை பெற்றவர் இவர். இவரது கதைகளில் மனித விழிப்புணர்வுக்கு ஊக்கம் கொட்டிக் கிடக்கும்.
மீண்டெழ நினைக்கும் சமுதாயத்திற்காக தனது கதைகளை அற்பணித்து இருக்கிறார். உயிரும் தசையும் கொண்டு உலவும் மனிதர்களின் கதைகளை இவர் எழுதி உள்ளார், அதனால் அவரது கதைகளில் அந்த உயிரோட்டம் அப்படியே இருக்கிறது.
இவரது படைப்புகள் எதார்த்த மொழியில் மக்களின் பிரச்சனைகளைச் சொன்ன காரணத்தால் இலக்கிய வட்டம் தாண்டி பொது சமூகத்திலும் பிரபலமாக இருந்தது.
பல பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது கதைகளில் ''கோசி கா கட்வார்'' ''சாத் கே லோக்'' ''ஹல்வாஹா'' '' மேரா பஹாட்'' ''நவ ரங்கி பிமார் ஹை'' கிய கதைத் தொகுப்புகள் பிரபலமானவை. மற்றும் '' ஏக் பேட் கி யாத்'' என்ற தொகுப்பு நூலும் பிரபலமானது.
-------------------------------------------------------------------------------------

Friday, October 20, 2006

மொட்டை

இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி
தமிழில்: மதியழகன் சுப்பையா


ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை. அமைச்சர் ஒருவரின் தலை திடீரென மொட்டையாகி விட்டதுதான். நேற்றுவரை அவருடையத் தலையில் நீண்ட சுருள் முடி அடர்ந்து இருந்தது. னால் இரவோடு இரவாக அவை காணாமல் போய் விட்டது. அவர் மொட்டையாகி விட்டார்.
தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு விட்டது. தங்கள் அபிமான அமைச்சருக்கு என்னவாகியிருக்கும் என்று அவர்கள் அறிவுக்கும் விபரத்திற்கும் தகுந்தாற்போல் காரணங்களை சொல்ல துவங்கினார்கள். '' ஒருவேளை மூளையில் சிந்தனைகளை நிரப்ப வேண்டும் என்பதற்காக முடித்திரையை அகற்றி இருக்கக்கூடும் '' என்றான் ஒருவன். மற்றொருவனோ '' இல்லையப்பா அவருடைய குடும்பத்தார் யாராவது மரணமடைந்திருக்கக்கூடும் அதனால் மொட்டையடித்திருக்கலாம்'' என்றான். இன்னொருவனோ '' னால் அமைச்சர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருகிராறே?'' என்றான் குழப்பமாக.
இறுதியில் அவரிடமே கேட்கலாம் என முடிவாகியது. '' தலைவர் பெருமானே! மேன்மை பொருந்திய குடும்பத்தினர் யாராவது காலமாகி விட்டாரா? '' என்றான் தொண்டன் ஒருவன் பணிவாக.
அதற்கு அமைச்சர் '' இல்லை'' என்று பதிலளித்தார். தமது அமைச்சர் யாருக்கு எதிராக அறிக்கை விடுவதாக இருந்தாரோ அவர்கள் செய்த வேலையாய் இருக்குமோ? என தொண்டர்கள் அனைவரும் அதீத கற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
'' தலைவர் பெருந்தகையே! கனம் அமைச்சர் அவர்களுக்குத் தான் மொட்டையடிக்கப் பட்ட விஷயம் தெரியுமா? அப்படித் தெரியும் என்றால் மொட்டையடித்தது யார் என்று சொல்லிவிட முடியுமே!?'' என்றான் தொண்டர்களில் ஒருவன்.
அமைச்சர் அமைதியாகவும் தெளிவாகவும் '' நான் மொட்டையடிக்கப் பட்டுள்ளேனா இல்லையா என என்னால் தீர்மானமாக சொல்ல இயலாது'' என்றார். '' மாம். மொட்டையடிக்கப் பட்டுள்ளீர்கள்! எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது'' என்று தொண்டர்கள் கத்தினார்கள். '' உங்கள் அனைவருக்கும் தெரிவதனால் ஒன்றுமே கிவிடப் போவதில்லை. அரசாங்கத்திற்குத் தெரிய வேண்டும். எனக்கு மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையா என விசாரிக்க தீவிர விசாரணை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்'' என்றார் அமைச்சர் கம்பீரமாக.
'' இப்போதே தெரிந்து விடலாமே! அமைச்சர் அவர்கள் தன் தலைமேல் கையை வைத்துத்தடவினாலே போதுமே'' என்றான் தொண்டன் ஒருவன்.
''இல்லை, நான் ஒருபோதும் என் தலையில் கையை வைத்துத் தடவி தெரிந்து கொள்ளப் போவதில்லை. அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் அவசரப் படாது. னால் நமது அரசு இந்த விஷயத்தில் தீவிரமாய் விசாரணை செய்து சகல தடயங்களையும் சேகரித்து சமர்ப்பிக்கும் என நான் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்'' என்றார் அமைச்சர் சுவாசமாக.
''இதற்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியமென்ன? தலை உங்களுடையது. தன் கையை தனது தலையில் தடவுவதில் அமைச்சருக்கு என்ன இடஞ்சல் வந்துவிடப் போகிறது? '' என்று கத்தினார்கள் தொண்டர்கள்.
'' தொண்டர்களே! உங்கள் பேச்சை நான் ஏற்றுக் கொள்கிறேன். தலை என்னுடையதுதான். கையும் என்னுடையதுதான். னால் நமது கைகள் பண்பாட்டாலும் சட்டத்தாலும் கட்டப்பட்டுள்ளது. எனது தலையில் கையை வைத்துத் தடவி பார்க்கும் சுதந்திரம் எனக்கு இல்லை. அரசாங்கத்தில் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட சட்டமிருக்கும் எதிரணியினரின் வார்த்தைகளைக் கேட்டு நான் சட்டத்தையும் அரசையும் மீற விரும்பவில்லை. நான் சபையில் இது குறித்து விளக்கம் தருகிறேன்'' என்றார் மிகப் பொறுமையோடு.
அன்று மாலை கூடியிருந்த சபையில் அமைச்சர் தனது விளக்கவுரையை ற்றினார். '' தலைவர் பெருந்தகையே! சபையில் எனது தலை மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையாவென ஒரு கேள்வி எழும்பி உள்ளது. அப்படி மொட்டையடிக்கப் பட்டிருந்தால், செய்தது யார்? இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானதாகி விடுகிறது. இந்த விஷயத்தில் அரசு எந்தவிதமான அவசர முடிவும் எடுக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு மொட்டையடிக்கப்பட்டு விட்டதா இல்லையா என என்னாலும் சொல்லவிட முடியாது. முழுமையான ய்வும் விசாரணையும் செய்யப் படும்வரை இது குறித்து அரசாலும் எதுவும் சொல்ல இயலாது. இது தொடர்பாக விசாரணை செய்ய நமது அரசு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்கும். அந்தக் குழு இப்பிரச்சினை குறித்து தீவிர சோதனையும் விசாரணையும் செய்யும். அந்த விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை நான் இந்த சபையில் வாசித்துக் காட்டுவேன்'' என்று அமைச்சர் விளக்கம் தந்து அமர்ந்தார்.
''பல ண்டுகளுக்கு சோதனையும் விசாரணையும் செய்ய இது ஒன்றும் குதுப்மினார் குறித்த விவகாரமில்லையே. இது உங்கள் தலையில் வளர்ந்து உங்களால் வெட்டி எறியப்பட்டு வரும் தலைமுடி குறித்ததுதானே. இது குறித்த முடிவை விரைவில் எடுக்கலாமே?'' என்றார்கள் தொண்டர்கள்.
'' எனது தலைமுடியை குதுப்மினாரோடு ஒப்பிட்டு அவமானப் படுத்த தொண்டர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசாங்கத்தின் விசாரணை முடிவுகள் வரும் வரை தொண்டர்கள் இது குறித்து அதிகம் விவாதிக்கக் கூடாது என்பதுதான் சரி'' என்று பதிலளித்து அமர்ந்தார் அமைச்சர்.
விசாரணைக் குழு பல ண்டுகளாக விசாரணை செய்து கொண்டே இருந்தது. அமைச்சரின் தலையில் முடி வளர்ந்தவண்ணமிருந்தது.
ஒருநாள் அமைச்சர் விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை சபையின் முன்னால் வைத்தார்.
அமைச்சரின் தலை மொட்டையடிக்கப் படவில்லை என விசாரணைக் குழுவின் ரிப்போர்ட் தெரிவித்தது. ளுங்கட்சி உறுப்பினர்கள் இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
னால் சபையின் இன்னொரு பக்கத்திலிருந்து '' வெட்கம்! வெட்கம்! '' என்று சத்தம் கேட்டது. அதிருப்தி கூச்சல்கள் கேட்டது. '' இது பொய். முற்றிலும் பொய். அமைச்சரின் தலை மொட்டையடிக்கப் பட்டிருந்தது'' எனக் கூச்சலிட்டனர்.
அமைச்சர் புன்னகைத்தபடி எழுந்து ''இது உங்களின் கற்பனையாக இருக்கலாம். இப்படி சொல்ல தாரம் வேண்டும். நீங்கள் தாரத்தை காட்டிவிட்டால், நான் உங்கள் பேச்சை ஒத்துக் கொள்கிறேன்'' என்றார் அமைச்சர்.
மேற்படி கூறிவிட்டு தனது தலையில் நீண்டு சுருண்டிருக்கும் முடியை கைகளால் தடவி விட்டார். சபை வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கத்துவங்கிவிட்டது.
-------------------------------------------------------------------------------------

ஹரிசங்கர் பர்சாயி: (1924-1995) இந்தி இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர் ஹரிசங்கர் பர்சாயி மத்தியப் பிரதேசம் ஹொஷங்காபாத்தின் ஜாமியா கிராமத்தில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக் கழகத்திலிருந்து ங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பணியில் இருந்து கொண்டே எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். பின் முழுநேரம் எழுத்தாளராகி விட்டார். இவர் 'வசுடா' என்ற இலக்கிய இதழை நடட்டி வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக பத்திரிக்கையை நிறுட்டி விட்டார்.

இவர் அங்கதம் மற்றும் நகைச்சுவை உணர்வுடன் எழுதுவதற்காக பிரசித்தம் பெற்றிருந்தார். இவர் சுரண்டல் மற்றும் லஞ்சம் கிய இரு விஷயங்கள் குறித்து அதிகமாக நகைப்புணர்வோடு எழுதி வந்தார். இவருடைய ' விக்லாங் ஷரதா கா தாவுர்'' என்ற கட்டுரைப் புத்தகத்திற்காக இவருக்கு சாஹித்ய அகெடமி விருது கிடைத்தது.
இவருடைய '' ஹஸ்தே ஹை, ரோதே ஹை'', ''ஜைஷே உன்கே தின் பிரே'' என்ற கதைத் தொகுப்புகளும் 'வைஸ்னவ் கி பிஸ்லாம்', 'திரிச்சி ரேகாயேன்' 'திடுர்த்தா ஹ¤வா கனதந்திரா' மற்றும் ''விக்லாங் ஷரதா கா தாவுர்'' அகிய கட்டுரைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

Wednesday, October 11, 2006

கோடி

இந்தியில்: பிரேம்சந்த்
தமிழில்: மதியழகன் சுப்பையா

குடிசையின் வாசலில் அப்பா மற்றும் மகன் இருவரும் நீர்த்துப் போன நெருப்புக் கங்குகளுக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றனர். உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வேதனையால் துடித்து புரண்டு கொண்டிருந்தாள். சிறு-சிறு இடைவெளிகளில் இதயத்தை உளுக்கும் படியான சத்தங்களை அவள் எழுப்ப இந்த இருவருக்கும் நொடிகளுக்கு இதயம் நின்று இயங்குகிறது. குளிர்கால இரவு. இயற்கை அமைதியில் மூழ்கிப் போயிருந்தது. ஊர் முழுவதும் இருளில் லயித்துப் போயிருந்தது.
'' பொளைக்க மாட்ட போல தெரியுது. நாள் முழுசும் ஓடியோடிப் பார்த்தாச்சு. போ, போய் பார்த்துட்டு வா'' என்றான் கீசு.
'' சாகனுமுன்னா சீக்கிரம் செத்துத் தொலைய வேண்டியதுதானே? இப்ப பார்த்து என்ன பன்றது?'' என்று சிடுசிடுத்தான் மாதவ்.
'' நீ கொஞ்சம் கூட இரக்கமில்லாதவண்டா! வருசம் முழுதும் அவகிட்ட கொஞ்சிக் குலாவி சந்தோஷப் பட்டுக்கிட்டிருந்த, இப்ப இவ்வளது பெரிய துரோகமா!''
'' அவள் துடிக்கிறதை, கை கால்களை போட்டு உதைக்கிறதை என்னால பார்க்க முடியலை.''
கீசுவின் குடும்பத்தின் பெயர் ஊர் முழுவதும் அவமானப் பட்டுக் கிடந்தது. கீசு ஒரு வேலை செய்தால் இரண்டு நாட்கள் ஓய்வு எடுப்பான். மாதம் சரியான சோம்பேரியாக இருந்தான். அரைமணி நேரம் வேலை பார்த்தால் அரைமணி நேரம் புகைப்பான். இதனால் இவர்களுக்கு எங்கும் வேலை கிடைப்பதில்லை. வீட்டில் கைப்பிடியளக்கும் அரிசி இல்லாமல் போய் விடும் நிலை வந்தால் கீசு மரத்தில் ஏறி கட்டைகள் வெட்டி வருவான் மாதவ் அவற்றை சந்தையில் விற்று வருவான். எப்பொழுது வரை அந்தப் பணம் இருக்குமோ அதுரை இருவரும் அங்கும் இங்கும் அலைந்து திரிவார்கள். ஊரில் வேலைக்கு பஞ்சமில்லைதான். அது விவசாயிகளின் ஊராக இருந்தது. நல்ல உழைப்பாளிக்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலைகள் தயாராய் இருந்தது.
னால் இவர்கள் எப்பொழுது கூப்பிடப் படுவார்கள் என்றால் இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையில் ஒருவர் செய்யும் வேலையாவது முடியுமே என்று சந்தோஷப் படும் நிலை இருந்தால் அல்லது வேறு வழியே இல்லை என்று இருந்தால் மட்டுமே இவர்கள் அழைக்கப் படுவார்கள். இவர்கள் இருவரும் சாதுக்களாக இருந்திருந்தால் சந்தோஷம் தைரியம் மற்றும் காலம் கடமை போன்றவைகளுக்கான அவசியம் சிறிதும் இருந்திருக்காது. இது இவர்களின் இயல்பாக இருந்தது. இவர்களின் வாழ்க்கை விசித்திரமானதாக இருந்தது.
வீட்டில் இரண்டு மூன்று மண் பாத்திரங்களைத் தவிர வேறெந்த சொத்தும் கிடையாது. கிழிந்து போன துணித் துண்டுகளை வைத்து தங்கள் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டு திரிந்தார்கள். உலக வாழ்வின் கவலைகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருந்தார்கள். எக்கச்சக்கமான கடன்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். திட்டு வாங்கிக் கொள்வார்கள், அடி வாங்கிக் கொள்வார்கள். எந்த பாதிப்பும் மாற்றமும் இருக்காது. இவர்களிடமிருந்து எதுவும் திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மக்கள் இவர்களுக்கு எதாவது கடன் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
மற்றவர் வயல்களில் இருந்து பட்டானி மற்றும் உருளைக் கிழங்குகளை திருடி வந்து சுட்டு சாப்பிட்டுக் கொள்வார்கள். அல்லது நான்கைந்து கரும்புகளை பிடுங்கி வந்து வைத்துக் கொண்டு இரவில் அவற்றை சவைத்து உறிஞ்சிக் கொள்வார்கள்.
கீசு இவ்வாறான வானம் பார்த்த வாழ்க்கையை அறுபது வயது வரை கழித்து விட்டான். மாதவ் தந்தை வழி செல்லும் மகன் போல தனது அப்பாவின் அடிச் சுவடுகளை அப்படியே பின்பற்றி வாழ்ந்து வந்தான். அது மட்டுமல்லாமல் தன் அப்பாவின் பெயரை இன்னும் ஒளிரச் செய்து கொண்டிருந்தான். இப்பொழுதும் அவர்கள் ஏதோ வயலில் இருந்து பிடுங்கி வந்திருந்த உருளைக் கிழங்குகளை நெருப்புக்கு முன் உட்கார்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். கீசுவின் மனைவி காலமாகி வெகு நாட்களாகி விட்டது. மாதவ்க்கு திருமணம் கடந்த வருடம்தான் கியிருந்தது. இந்தப் பெண் வந்ததிலிருந்து இந்தக் குடும்பத்தில் வேலைக்கான அடித்தளத்தை போட்டு இருந்தாள். இந்த பொறுப்பற்ற இருவரின் துருத்திகளையும் நிரப்பிக் கொண்டிருந்தாள். அவள் வந்த பின் இவர்கள் இருவரும் இன்னும் சௌகரியமாக வாழத் துவங்கி விட்டனர். மேலும் கொஞ்சம் அதிகாரமும் செய்யத் துவங்கினார்கள். யாராவது வேலைக்குக் கூப்பிட்டால் கூலியை இரண்டு மடங்கு கூட்டிக் கேட்டார்கள். இன்று அந்தப் பெண் பிரசவ வேதனையில் செத்துக் கொண்டிருக்கிறாள். னால் இவர்கள் இருவரும் இதையே எதிர் பார்த்தபடி அவள் செத்துப் போய் விட்டாள் நிம்மதியாக இருக்கும் என்றும் கவலையில்லாமல் தூங்கலாம் என்றும் நினைத்திருந்தார்கள்.
கீசு உருளைக் கிழங்கை எடுத்து உரித்தபடி '' போடா, அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்று பாருடா? ராக்ஷசி செத்துப் போய்ட்டாளா?. இப்பவெல்லாம் வெடியான் ஒரு ரூபாய் கூலி வாங்குறான்.'' என்றான் கீசு பொறுமையாக.
மாதவ்க்கு பயம் தொற்றிக் கொண்டது. அவன் குடிசைக்குள் நுழைந்தால் கீசு உருளைக் கிழங்களின் பெரிய பங்கை முழுங்கி விடக் கூடும். '' எனக்கு அங்க போக பயமாக இருக்கிறது'' என்று மாதவ் சாமார்த்தியமாக மறுத்து விட்டான்.
'' என்னடா பயம்? நான் தான் இங்க இருக்கேன்ல''
'' அப்படின்னா நீயே போய் பார்த்துட்டு வர்றது தான?''
'' என் பொண்டாட்டி செத்தப்போ நான் மூன்று நாள் அவ பக்கத்திலிருந்து நகரவே இல்லை, தெரியுமா? இது வரைக்கும் அவ முகத்தக் கூட பார்காத நான் அவள திறந்த மேனியா எப்படி பார்க்கிறது, எனக்கு வெட்கமா இருக்காது? அது மட்டுமல்லாம அவள் உடம்பு உணர்வில்லாம இருக்கும் இந்த நேரத்தில நான் போனா அவளால சுதந்திரமா கைய கால உதைச்சுக்க முடியாது?'' என்றான் கீசு.
'' எனக்கு கவலை என்னன்னா, ஒரு புள்ளக்குட்டின்னு பொறந்திட்டா என்ன பண்ண? வீட்டில் எண்ணெய், வெள்ளம் இப்படி எதுவுமே இல்லையே?'' மாதவ் கவலைப் பட்டான்.
'' எல்லாம் வந்திடும். கடவுள் கொடுப்பான். இப்ப ஒரு பைசா கூட கொடுக்காதவங்க அப்புறம் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. எனக்கு ஒன்பது பையன்கள் பிறந்தார்கள். வீட்டில் எப்பவும் எதுவும் இருந்ததில்லை. னால் கடவுள் எப்படியாவது எங்களை கரையேத்திட்டார்"'
இந்த சமுதாயத்தில் இரவு பகல் வேலைப் பார்ப்பவர்களின் நிலை இவர்களின் நிலையை விட ஒன்றும் அதிகம் நலமாக இல்லை. விவசாயிகளோடு ஒப்பிடும் போது விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டத் தெரிந்தவர்கள் நல்ல வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். இப்படியான சமூகத்தில் இவ்வாறான எண்ணம் உண்டாவது ஒன்றும் வியப்பான விஷயம் அல்லவே. நாம் சொல்லப் போனால் கீசு விவசாயிகளை விடவும் நன்கு சிந்திப்பவனாக இருந்தான். மேலும் சிந்தனையில் சூன்யமாக இருந்த விவசாயிகளின் சமூகத்தில் கலக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் அரட்டைக் கும்பளில் சென்று கலந்து கொள்வான். னால் அவனிடம் இவ்வகை உட்கார்ந்து உண்பவர்களின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை பின் பற்றும் சக்தியும் சாமர்த்தியமும் கீசுவிடம் இல்லைதான். அதனால் தான் இவன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சிலர் ஊர்த் தலைவராகவும் தலையாரியாகவும் இருந்து வந்தார்கள். ஊரே அவனை விரல் நீட்டிப் பேசினாலும் அவனுக்கு அது அவமானமாகப் படவில்லைதான். அவன் நலிந்து போன நிலையில் இருந்தாலும் மற்ற விவசாயிகளைப் போல் இப்படி மாடாய் உழைக்க வேண்டிய அவசியமில்லையே. மேலும் இவனது வெகுளித்தனத்தையும் ஏமாளித்தனத்தையும் யாரும் தவறாக பயன் படுத்திக் கொள்ள மாட்டார்களே.
இரண்டு உருளைக் கிழங்குகளை எடுத்து சுடச்சுட திண்று கொண்டிருந்தான். நேற்றிலிருந்து எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அவை றிப் போகும் வரை அவனால் பொறுத்திருக்க முடியவில்லை. பல முறை இருவரின் வாயும் வெந்துப் போனது. உறித்தவுடன் உருளைக் கிழங்கின் வெளிப்பாகம் அவ்வளவு சூடாக இருக்கவில்லை னால் வாயில் போட்டுக் கொண்டவுடன் அவை நாக்கு மற்றும் மேல்தாடையை சுட்டு விடும். அந்த சூட்டோடு கிழங்கை வாயில் வைத்திருப்பதை விட அவற்றை உள்ளே செல்ல அனுமதித்து விடலாம்தான். கிழங்கின் சூட்டைத் தணிக்க உள்ளே நிறைய பொருட்கள் இருந்தது. அதனால் இருவரும் வேகமாக விழுங்கிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான முயற்சியின்போதும் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்த போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
கீசுவுக்கு டாக்கூர்ஜியின் வீட்டில் திருமண ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இருபது ண்டுகளுக்கு முன் அவன் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தான். அந்த திருமண விருந்தில் அவனுக்கு ஏற்பட்ட திருப்தி அவனது வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் வைக்கும் படியானதாக இருந்தது. இன்றும் அவனது நினைவு பசுமையாக இருந்தது. அன்று அவன் உண்ட விருந்தை மறக்க முடியாது என்று கூறினான். மேலும் '' அதற்குப் பின் அவன் வயிறு நிறைய அப்படியொரு விருந்தை நான் உண்டதில்லை.பெண் வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் வயிறுமுட்ட பூரிக்களை கொடுத்து இருந்தார்கள். அனைவருக்கும்! சின்னவங்க பெரியவங்க எல்லாரும் பூரிக்களை உண்டார்கள். அவை சுத்தமான நெய்யில் செய்யப் பட்டதாக இருந்தது. அதனுடன் சட்ணி, ராயத்தா,மூன்று வகை கட்டியான கூட்டு, ஒரு காய்கரி பொரியல், தயிர் அப்புறம் மிட்டாய் இப்படி அந்த விருந்தில என்னென்ன சுவைகள் இருந்துச்சுன்னு சொல்லிமாளாது. எந்தவிதமான தடையோ தடுப்போ கிடையாது. என்ன வேண்டுமென்றாலும் கேட்டுக் கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம். மக்களெல்லாம் அப்படிச் சாப்பிட்டாங்க. யாராலும் தண்ணீர் குடிக்கக் கூட முடியவில்லை. பரிமாறுகிறவர்கள் அனைவரின் இலைகளிலும் சுடச்சுட உருண்டை உருண்டையான நல்ல மனக்கும் கச்சோரிகளை வைத்து விடுவார்கள். நாங்களெல்லாம் வேண்டாம் என்று சொன்னாலும் இலையில் கையை வைத்து மறைத்துக் கொண்டு தடுத்தாலும் அவர்கள் அவர்கள் கொடுத்துக் கொண்டே போனார்கள். அனைவரும் கையையும் வாயையும் கழுவிக் கொண்ட பின் இலவங்கமும் வெற்றிலையும் கிடைத்தது. னால் எனக்கு வெற்றிலை வாங்கிக் கொள்ள எங்கே உணர்வு இர்ந்தது. என்னால் நிற்கக் கூட முடியவில்லை. அப்படியே நகர்ந்து வந்து எனது போர்வைக்குள் படுத்துக் கொண்டேன். இப்படி பரந்த இதயம் கொண்டவராக இருந்தார் அந்த டாக்கூர்.
மாதவ் இவற்றையெல்லாம் கேட்டு மனதளவில் மகிழ்ந்து கொண்டிருந்தான் மேலும் ''இப்பவெல்லாம் யாரும் அப்படி விருந்து கொடுப்பதில்லை'' என்று சலித்துக் கொண்டான்.
'' இப்ப எவண்டா அப்படி சாப்பாடு போடுவான். அந்த காலம் வேற. இப்ப எல்லாருக்கும் மிச்சம் பிடிக்கிற சை வந்திடுச்சு. கல்யாணம் கச்சேரிகளில் செலவு செய்யக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார்கள். ஏழைங்க பணத்தை கொள்ளையடிச்சு எங்க வைக்கப் போறாங்கங்கு கேட்கனும்? புடுங்குறதுல கஞ்சத்தனம் காட்டுவதில்லை னா செலவு செய்யிறதுல மட்டும் இப்ப கடும் கஞ்சத்தனம் பண்ணுறாங்க'' என்றான் கீசு சற்றே சிடுசிடுப்புடன்.
'' நீ குறைஞ்சது இருபது இருபத்தோர் பூரிகளை திண்ணுருப்பல்லா? ''
'' இருபதுக்கும் அதிகமா திண்ணேன்'' கீசு
'' நானாயிருந்தா ஐம்பது பூரி திண்ணுருப்பேன்'' மாதவ்
'' நானும் ஐம்பதுக்கு குறைவா திண்ணுறக்க மாட்டேன். நல்ல கட்டுமஸ்தான வாலிபனா இருந்தேன். நீ எனக்கு பாதி கூட இல்லையே.'' என்று பெருமையடித்துக் கொண்டான் கீசு.
உருளைக் கிழங்குகளை திண்று தண்ணீர் குடித்துக் கொண்டார்கள். நெருப்பின் அருகேயே தங்கள் வேஷ்டிகளால் மூடிக் கொண்டு கால்களை வயிற்றில் சொறுகிக் கொண்டு தூங்கிப் போனார்கள். அவர்கள் அங்கனம் படுத்திருந்தது இரண்டு மலைப்பாம்புகள் தங்கள் இரையை விழுங்கி விட்டு அப்படியே சுருண்டு கொண்டது போல் இருந்தது.
புதியா இன்னும் வழி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தாள்.

************************************************************
காலையில் மாதவ் குடிசைக்குள் சென்று பார்த்தான், அவனது மனைவியின் உடல் குளிர்ந்து போயிருந்தது. அவளது முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. நல்ல பெரிய கண்கள் மேலே சொறுகிக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் தூசியால் அழுக்கடைந்து கொண்டிருந்தது. அவளது வயிற்றில் குழந்தை இறந்து விட்டிருந்தது.
மாதவ் வேகமாக ஓடி கீசுவிடம் வந்தான். உடனே இரண்டு பேரும் அய்யோ அய்யோ என்று அலரியபடி மார்பில் அடித்து அழத்துவங்கினார்கள். இந்தக் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள். பழைய வழக்கப்படி இந்த இரு அற்பர்களையும் அவர்கள் சமாதானப் படுத்தினார்கள்.
அப்பனும் மகனும் அழுதுகொண்டே ஜமிந்தாரிடம் ஓடினார்கள். அவர் இந்த இருவரின் முகத்தை கொஞ்சமும் பார்க்க விரும்பாதவர். திருடியதற்காகவும், கொடுத்த வாக்குப் படி வேலைக்கு வராத காரணத்தாலும் பல முறை தனது கையால் இவர்களை பலமாக அடித்தும் உள்ளார். '' என்னடா கீசுவா ஏண்டா அழுகிறாய்? இப்பவெல்லாம் உன்னை பார்க்கவே முடியலை. இந்த ஊர்ல இருக்கவே பிடிக்காத மாதிரி தெரியுது என்ன செய்தி.'' என்று ஜமீன்தார் கேட்டார்.
கீசுவின் கண்கள் பூமியைப் பார்த்தபடி இருந்தது. அவனது கண்களில் கண்ணீர் நிரம்பி வழியத் தயாராய் இருந்தது. ''முதலாளி! இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன். மாதவின் மனைவி நேற்று இரவு செத்துப் போய் விட்டாள். எங்களால் முடிந்த மருந்து மாத்திரைகளை கொடுத்துப் பார்த்தோம், முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்து பார்த்தோம் னால் அவள் எங்களை ஏமாற்றி விட்டுப் போய் விட்டாள். இப்ப எங்களுக்கு ஒரு ரொட்டித் துண்டு கொடுக்கக் கூட ளில்லை ஐய்யா. நாங்கள் எல்லாத்தையும் இழந்துட்டோம் சாமி. எங்க குடும்பம் சிதைஞ்சு போச்சு ஐயா. நாங்க உங்க அடிமை சாமி. உங்களை விட்டா அவளுக்கு மண் அள்ளிப் போட வேற யார் இருக்கிறார்கள்?.எங்க கையில் இருந்த எல்லாம் மருந்து மாத்திரைக்கே சரியாப் போச்சு. முதலாளி தயவு பண்ணினா அவள் பிணத்தை எடுத்திடலாம். உங்களை விட்டால் நான் யார் வாசலில் போய் நிற்பது?'' என்று புலம்பினான் கீசு.
ஜமீன்தார் ஐயா இரக்க சுபாவம் உள்ளவராக இருந்தார். னால் கீசுவுக்கு உதவுவது கருப்பு கம்பளியில் வண்ணம் ஏற்றுவது போன்ற செயலாகும். சீ! போடா இங்கிருந்து என்று சொல்லும்படி மனம் ஊந்தியது. கூப்பிட்டா கூட வரமாட்டன். இப்பொழுது காரியம் க வேண்டும் என்பதனால் வந்து மரியாதை செலுத்துகிறான். நன்றி கெட்டவன். திருட்டுப்பயல்! னால் இது கோபம் கொள்ளவோ தண்டிக்கவோ ஏற்ற நேரமில்லை. மனசுக்குள் திட்டிக் கொண்டே இரண்டு ரூபாயை எடுத்து வீசினார். னால் றுதலாம் ஒரு வார்த்தை கூட அவரது வாயிலிருந்து வரவில்லை. அவன் பக்கம் அவர் திரும்பி கூடப் பார்க்கவில்லை. தலைபாரம் இறங்கியது போல் உணர்ந்தார்.
ஜமீன்தார் இரண்டு ரூபாய் கொடுத்தப் பின் மற்ற வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் என்ன மறுப்பு தெரிவிக்க முடியும். கீசு ஜமீன்தாரின் பெயரைச் சொல்லி தண்டோரா அடிக்கத் தெரிந்தவன் தான். சிலர் இரண்டு அனாக்கள், சிலர் நான்கு அனாக்கள் கொடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் கீசுவிடம் ஐந்து ரூபாய் ரொக்கப் பணமாக ஒரு நல்ல தொகை சேர்ந்து விட்டது. சிலரிடமிருந்து கொஞ்சம் தாணியங்களும் கிடைத்து விட்டது. சில இடங்களில் கட்டைகள் கிடைத்தன. மதியம் கீசுவும் மாதவும் சேர்ந்து சந்தையில் இருந்து கோடித் துணி வாங்கச் சென்றனர். இங்கு மக்கள் அப்படி இப்படி பேசி பொழுதை கழித்தனர்.
ஊரில் இருந்த மென் இதயம் கொண்ட சில பெண்கள் பிணத்தை பார்க்க வந்தார்கள். அவர்கள் கடமைக்கு இரண்டு சொட்டு கண்ணீரை சிந்தி விட்டுப் போய் விட்டார்கள்.
சந்தைக்கு சென்றடைந்தனர் கீசுவும் மாதவும். ''அவளை எரிக்கிற அளவுக்கு கட்டைகள் வந்து சேர்ந்து விட்டது, என்ன மாதவ்?'' என்றான் கீசு
''மாம், கட்டைகள் அதிகமாகவே உள்ளன, இப்பொழுது கோடி வாங்க வேண்டும் அவ்வளவுதான்''
'' அப்ப வா, எதாவது மெல்லியதா ஒரு துணியில கோடி வாங்கிடலாம்''
'' மா, வேறு என்ன செய்வது! பிணத்தை எடுப்பதற்கு எப்படியும் இரவு கி விடும். இரவுல கோடித் துணியை யார் பார்க்கப் போகிறார்கள்?''
'' இது என்ன மோசமான வழக்கம் இது தெரியல. ஒருவர் வாழும் காலத்தில் அவர்கள் உடுக்க துண்டு துணி கூட கிடைப்பதில்லை னால் செத்துப் போய்ட்டா புதுசா கோடி தேவைப் படுது.''
''கோடி பிணத்தோட சேர்த்து எரிஞ்சு போய் விடுகிறது''
'' வேற என்ன இருக்கு? இந்த ஐந்து ரூபாயும் முன்னாடியே கிடைச்சிருந்தா எதாவது மருந்து மாத்திரையாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம்''
இரண்டு பேரும் ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சந்தையில் அங்கும் திரிந்து கொண்டிருந்தனர். இந்தக் கடையில் சிறிது நேரம் அந்தக் கடையில் சிறிது நேரம் என அலைந்து கொண்டிருந்தார்கள். வகை வகையாக பல துணிகளைப் பார்த்தார்கள் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படியே மாலையாகி விட்டது. அந்த இருவருக்கும் எந்த கடவுள் இட்ட கட்டளை என்றுத் தெரியவில்லை இருவரும் மதுக்கடையின் முன்னால் வந்து சேர்ந்தார்கள். ஏது நிச்சயிக்கப் பட்ட செயல் போல அவர்கள் இருவரும் மதுக்கடையின் உள்ளே சென்றனர். உள்ள சிறிது நேரத்திற்கு சலனமில்லாமல் இருவரும் அப்படியே நின்று கொண்டிருந்தனர். பின் கீசு கல்லா அருகில் சென்று ''ஐயா, எங்களுக்கும் ஒரு பாட்டில் கொடுங்க'' என்றான்.
இதன் பின் தொட்டுக் கொள்ள ஏதோ கொடுத்தார்கள். பொறித்த மீன் வந்தது. இருவரும் வராண்டாவில் உட்கார்ந்து அமைதியாக குடித்துக் கொண்டிருந்தனர்.
பல குப்பிகளை வேகவேகமாக குடித்தப் பின் இருவரும் உணர்வுக்கு வந்தார்கள்.
கீசு துவங்கினான் '' கோடித் துணி போர்த்தி விடுறதால என்ன பயன் கிடைக்கப் போவுது? கடைசியில எரிந்துதானே போகப் போவுது. மருமக கூடவா அது போகப் போவுது.
கடவுள்களை தனது பாவமற்ற செயலுக்கு சாட்சியாக்கும் பாவனையில் மாதவ் வானத்தைப் பார்த்தபடி ''பெரிய மனிதர்களிடம் செல்வம் கொட்டிக் கிடக்கு அவங்க அழிச்சிட்டுப் போகட்டும். எங்க கிட்ட என்ன இருக்கு அழிக்க?'' என்றான் தெளிவாக.
'' னால் ஊர் மக்களுக்கு என்ன பதில் சொல்வது. கோடியை எங்கே என்று அவர்கள் கேட்க மாட்டார்களா?''
''அடேய், மடியிலிருந்து பணம் நழுவி விட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். அவர்கள் நம்ப மாட்டார்கள். னால் பின்பு அவர்களே மீண்டும் பணம் தருவார்கள்'' என்றான் கீசு நம்பிக்கையோடு.
தனது இந்த எதிர்பாராத அதிர்ஷ்டத்தை நினைத்து மாதவ் சிரித்தான். '' ரொம்ப நல்லவளா இருந்தாள், பாவம்! செத்தாலும் செத்தா நமக்கு எதாவது சாப்பிடவும் குடிக்கவும் வழி செய்து விட்டுப் போய் இருக்கிறாள்'' என்றான் மாதவ்.
அரை பாட்டிலுக்கும் அதிகமாக குடித்து முடித்து விட்டார்கள். கீசு இரண்டு செட் பூரி வாங்கி வரச் சொன்னான். சட்னி, ஊறுகாய் மற்றும் ஈறல் வாங்கி வரச் சொன்னான். மதுக் கடையின் எதிரிலேயே சாப்பாட்டுக் கடையும் இருந்தது. மாதவ் விரைந்து சென்று இரண்டு இலைகளில் அனைத்தையும் வாங்கி வந்தான். மொத்தம் இரண்டரை ரூபாய் செலவாகி விட்டிருந்தது. இப்பொழுது கொஞ்சம் தான் பணம் மிச்சமிருந்தது.
காட்டில் மிருகம் ஒன்று தனது வேட்டையை ரசித்துத் திண்பது போல் இருவரும் பூரியை ரசித்துத் திண்று கொண்டிருந்தார்கள். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவமானத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இந்த மாதிரியான உணர்வுகளை அவர்கள் என்றைக்கோ தொலைத்து விட்டார்கள்.
கீசு தத்துவார்தமாகவும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் '' நமது த்மா மகிழ்ச்சி அடைகிறது என்றால் அவளுக்கு புண்ணியம் கிடைக்காதா ?''
மாதவ் மெதுமாக தலையை தாழ்த்தி அதனை ஏற்றுக் கொண்டபடி '' நிச்சயமாக கண்டிப்பாக அப்படித்தான் கும். கடவுளே, நீ முக்காலமும் உணர்ந்தவன். அவளை கண்டிப்பாய் வைகுந்தத்திற்கு அழைத்துப் போ. நாங்கள் இருவரும் எங்கள் மனப்பூர்வமான சிர்வாதத்தை வழங்குகிறோம். இன்று எங்களுக்கு கிடைத்த உணவு இந்த யுசுக்கும் இது வரை கிடைக்கவில்லை.
கொஞ்ச நேரத்தில் மாதவ்க்கு சிறிய சந்தேகம் எழுந்தது. '' ஏம்ப்பா, நாமும் என்றைக்காவது ஒரு நாள் அங்கே தானே போவோம்?'' என்று மழலையாய் மொழிந்தான்.
இந்த குழந்தைத் தனமான கேள்விக்கு கீசு எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த மாதிரியான பரலோக விஷயங்களை சிந்தித்து இந்த னந்தத்திற்கு தடை போட விரும்பவில்லை.
'' எனக்கு ஏன் கோடி போடவில்லை என்று அங்கே கேட்டால் என்ன சொல்வது?''
'' உன் தலை என்று சொல்லலாம்''
'' கண்டிப்பாக கேட்பாள்''
''அவளுக்கு கோடி கிடைக்காது என்று எப்படி முடிவு செய்தாய்.? நீ என்ன அப்படிப் பட்ட கழுதைன்னு நினைத்துக் கொண்டாயா? அறுபது வருஷமா நான் இந்த உலகத்தில் புல் புடுங்கிக்கிட்டு இருந்தேனா? அவளுக்கு கோடி கிடைக்கும் ரொம்ப நல்ல கோடி கிடைக்கும்''
மாதவ்க்கு இதில் நம்பிக்கை வரவில்லை. ''யார் கொடுப்பார்கள்? இருந்த பணத்தையெல்லாம் நீ காலிபண்ணிட்ட. அவள் என்னிடம் தான் கேட்பாள். அவளுடைய நெற்றியில் குங்குமம் இட்டவன் நான் தானே.
கீசு சற்றே சூடாகி விட்டான். ''நான் சொல்லுகிறேன் அவளுக்கு கண்டிப்பாய் கோடி கிடைக்கும் நீ ஏன் என்னை நம்ப மாட்டேன் என்கிறாய்?''
'' இப்ப யாரெல்லாம் பணம் கொடுத்தார்களோ அவர்கள் தான் கொடுப்பார்கள். னால் இந்த முறை பணம் நம் கைக்கு வராது அவ்வளவுதான்.''
இருள் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியாகிக் கொண்டே போக நட்சத்திரங்கள் இன்னும் பிரகாசமாய் தெரியத் துவங்கியது. மதுக் கடையின் அழகு மேலும் கூடியது. சிலர் பாடினார்கள். சிலர் தாளம் தட்டினார்கள். சிலர் தங்கள் தோழர்களின் தோல்களைக் கட்டிக் கொண்டார்கள். சிலர் தனது நண்பர்களுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
மதுக்கடையில் சூழ்நிலையில் கண்டிப்பாய் எதோ இருந்தது. காற்றில் போதை இருந்தது. எத்தனையோ பேர் இங்கு வந்து ஒரு குப்பி குடித்தவுடனேயே பறக்கவும் பாசை மாற்றவும் செய்து விடுகிறார்கள். சாராயத்தை விடவும் இங்கு பரவியுள்ள காற்று கடுமையாக போதை ஏற்றியது. வாழ்க்கையின் தடைகளும் கஷ்டங்களும் இவர்களை இங்கு இழுத்து வருகிறது. இங்கு வந்தபின் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லை செத்துப் போய் விட்டார்களா என்று எல்லாம் மறந்து விடுகிறார்கள். இவர்கள் வாழ்வதும் இல்லை செத்துப் போவதுமில்லை இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறார்கள்.
தந்தையும் மகனும் இன்னும் னந்தமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். மதுக்கடையின் அனைவர் பார்வையும் இவர்கள் மேல் பதிந்து இருந்தது. இருவரும் பாக்கியத்திற்கு பலியானவர்கள்தான். இருவருக்கு இடையில் முழு பாட்டில் வைக்கப் பட்டிருந்ததை அனைவரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பிச்சைக்காரன் வெகு நேரமாக மாதவ் சாப்பிடுவதையே பசியான கண்களோடு கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு இலையில் மீந்து போனதை பிச்சைக் காரணுக்கு தூக்கிக் கொடுத்து விட்டான். கொடுப்பதனால் கிடைக்கும் னந்தம், உல்லாசம், பெருமை கியவற்றை தனது வாழ்க்கையில் முதல் முறையாக அனுபவித்தான்.
பிச்சைக்காரனை நோக்கி '' எடுத்துட்டுப் போய் நல்ல சாப்பிடு, சிர்வாதம் கொடு. இதை யார் சம்பாதித்துக் கொடுத்தார்களோ அவள் செத்துப் போய் விட்டாள். னால் உனது சிர்வாதம் அவளை நிச்சயம் சென்று அடையும். பெரிய அளவில் மனம் திறந்து சிர்வாதம் வழங்கு மிகவும் கடினப்பட்டு பைசா பைசாவாக சேர்த்தது'' என்று முடித்தான் கீசு.
மாதவ் வானத்தைப் பார்த்தபடி '' அப்பா, அவள் வைகுந்தம் போவாள். வைகுந்தத்தின் ராணியாக இருப்பாள்''
கீசு எழுந்து நின்று உல்லாசத்தின் அலைகளில் மிதந்தபடி '' மகனே! அவள் வைகுந்தம் கண்டிப்பாய் போவாள். யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. யாரையும் கஷ்டப் படுத்தவில்லை. செத்தப் பிறகும் நமது வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தை வழங்கி விட்டுப் போய் இருக்கிறாள். அவள் வைகுந்தம் போகவில்லை என்றாள் மக்களின் ரத்தங்களை உரிஞ்சும் இந்த தடியர்களும் குண்டர்களுமா போவார்கள்? தங்கள் பாவங்களை கங்கையில் கழுவியும் கோயில்களில் அபிஷேகம் செய்தும் இவர்களால் வைகுந்தம் நிச்சயம் போக முடியாது.''
பக்தியின் இந்த நிறம் உடனேயே வெளுத்து விட்டது. நிலையின்மை என்பதே போதையின் சிறப்பு. துக்கம் மற்றும் நிராசைகள் மாறி மாறி வந்து போனது.
'' னால் அப்பா, அவள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை அனுபவித்து இருக்கிறாள். எத்தனை துக்கங்களை சகித்து செத்துப் போய் இருக்கிறாள்.
அவன் தனது கண்களில் கையை வைத்துக் கொண்டு அழத் துவங்கினான். கூச்சலிட்டு கதரி அழுதான்.
கீசு மாதவை சமாதானப் படுத்தினான். '' மகனே ஏன் அழுகிறாய்? அவள் இந்த மாயாஜாலத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள். அவள் இந்த தொல்லைகளின் வலைப் பின்னலில் இருந்து முக்தி அடைந்து விட்டாள். அவள் பெரும் பாக்கியம் செய்தவள்தான் இத்தனை சீக்கிரமாக இந்த மாயா மோக உலகின் பந்தங்களை உடைத்து விட்டு போய் விட்டாள்'' என்று கீசு மாதவை சுவாசப் படுத்தினான்.
இருவரும் எழுந்து நின்று பாடத் துவங்கினார்கள்.
'அடியே சதிகாரி, கண்களை ஏன் சுலட்டுகிறாய்! அடியே சதிகாரி ''
குடிகாரர்களின் கண்கள் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார்கள். பின் இருவரும் டத் துவங்கினார்கள். துள்ளினார்கள். குதித்தார்கள். விழுந்தார்கள், உருளவும் செய்தார்கள். பாவங்களை காட்டினார்கள், அபினயம் செய்தார்கள். இறுதியாக போதை தலைக்கு ஏறி கிறுகிறுக்க அங்கேயே விழுந்து கிடந்தார்கள்.

பிரேம்சந்த்: ( 1880- 1936) இந்தி இலக்கிய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பிரேம்சந்தின் இயற் பெயர் தன்பத்ராய் கும். இவர் பனாரசின் லம்ஹி கிராமத்தில் பிறந்தார். இவர் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களை எதிர் கொண்டு வாழ்ந்து வந்தார். காந்தியடிகளின் வார்த்தைகளால் ஈர்க்கப் பட்டு அரசுப் பணியை விட்டு விலகினார். பின் தனது இலக்கியம் மூலமாக மக்களிடையே தேசிய உணர்வுகளை வளர்த்தார். மக்களின் பிரச்சனைகளை அதன் இயல்பில் கற்பனை கலக்காமல் எழுதினார்.
பிரேம்சந்த் மனித மனங்களின் ழத்திற்குச் சென்று அவர்களது மன உணர்வுகளையும் பிரச்சனைகளையும் மிகச் சரியாக எடுத்துக் காட்டி உள்ளார். சமூகத்தின் பலவகையான மனித அவலங்களையும் அவர் தனது எழுத்துகளில் பதிவு செய்து உள்ளார். பாரத விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்களின் துயரங்களையும் பிரச்சனைகளையும் அவர் காட்சிப் பதிவுகளாக தனது எழுத்துகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
எந்த பயமும் இல்லாமல் தான் சொல்ல வந்த கருத்தை எடுத்துச் சொல்லும் துணிவை அவரது எழுத்தைப் படிக்கும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அவர் கதைகளினூடாக மெல்லிய நகைச்சுவையோடு சொல்லிவிட்டுப் போவது அவரது சிறப்பு எனலாம்.
இவரது படைப்புகளில் 'பிரேமாஷ்ரம்' 'கர்மபூமி' 'நிர்மலா' 'காயகல்ப்' 'சேவாதன்' 'கபன்' மற்றும் 'கோதன்' போன்ற நாவல்களையும் 'பிரேம்துவாதஷி', 'பிரேம்பச்சாசி' 'மான்சரோவர்' மற்றும் 'கபன்' போன்ற கதைத் தொகுதிகளும் பிரபலமானவை.
சிறுகதையோ அல்லது நாவலோ இரண்டிலும் அவரது கதாபாத்திரங்கள் மிக எதார்த்தமாக நாம் காணும் மக்களே என்பது படிப்பவர்கள் கண்டு கொள்ளும் விஷயம்.
இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பல்வகை மொழியில் இலக்கியம் படைப்பவர்களில் பிரேம்சந்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
இவரது நாவல்கள் மற்றும் சிறுகதைகளை சாகித்திய அகடமி பல்வேறு மொழிகளில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

---------------------------------------------------------------------------------

Monday, October 09, 2006

தேவாவின் அம்மா

இந்தியில்: கம்லேஷ்வர் தமிழில்:மதியழகன்சுப்பையா


தேவாவின் அம்மா கம்பளம் நெய்பவள் னால் அவன் வெட்டியாகத்தாகம் இருந்தான். கம்பளம் நெய்வது ஒன்றும் தொடர்ந்து நடைபெறுவது இல்லை. அதனால் அதனை ஒரு வேலை என்று கூட சொல்ல முடியாது. எப்போதாவது சிலர் தங்கள் தேவைக்காக அல்லது தேவையில்லாமல் கூட நெய்து கொள்வார்கள். அவளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட கொடுத்து விடுவார்கள். அல்லது பழைய போர்வை நைந்து விட்டாலோ, மேல் துணி அல்லது அஸ்தர் கிழிந்து போய் உள்ளே இருக்கும் அழுக்கு வண்ணம் வெளியே பல்லிளிக்க துவங்கினாலோ அவற்றை மீண்டும் பயன் படுத்த வேண்டுமெனில் தேவாவின் அம்மாவிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வது தான் நல்ல வழி. மாதம் இருமாதங்களில் அவற்றை தறியில் நெய்து கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுவாள். அவளின் கூலி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப் பட்டுவரும்.
தேவா தனக்கு நான்கு திசைகளிலும் பார்வையை சுழற்றும் போது இவை அனைத்தும் அவனுக்குப் பிடிபடும். அம்மாவின் ஏமாற்று வேலை அவனுக்குள் தைக்கும். அவள் தறிக்காக நூல் வாங்கும் போது அரைப் பங்கு அதிகமாக வாங்கும் பழக்கத்தை வைத்திருந்தாள். பல முறை இதனை சண்டைப் போட்டு வாங்குவாள். மேலும் தான் வாங்கிய அதிகபடியான நூலை சேர்த்து வைத்து ஒரு பத்து பதினைந்து கம்பளிகள் செய்தற்குப் பின் ஒரு அழகான கம்பளம் ஒன்றை செய்து விற்று விடுவாள். அவன் நாலாபுறமும் பார்க்கும் போது அவனது பார்வையில் படும் அனைவரின் முகத்திலும் வெறுப்பு, அன்பு, பாராட்டு அல்லது வசவு என எந்த உணர்வும் வெளிப் படுவதாக அவன் உணர்ந்தது இல்லை. இது ஒரு மாறுபட்ட ஒருமித்த சூழ்நிலையாக இருந்தது. இவர்களெல்லாம் கடங்கள் சிவனை விடவும் மேலான யோகிகளைப் போல் விஷம் குடித்து விட்டு கண்களை மூடி அசையால் இருப்பது போல் இருந்தார்கள்.
அதனால் அவன் எப்பொழுதும் வீட்டில் தங்குவதே இல்லை. மதியம் னதும் அவன் வீட்டிற்கு வந்தால் அவனது மனது சுருங்கிப் போகும். இவ்வளவு நேரத்தை வீணாக கழித்து விட்டோமே என மனம் வருந்தும். இதைவிட அம்மாவின் வேலைகளில் அவளுக்கு உதவியாக இருந்திருக்கலாமே எனத் தோன்றும். எதுவும் இல்லையென்றால் பஞ்சினை சுத்தப் படுத்தியிருக்கலாம், அதனால் அவற்றை காய வைக்க முடிந்திருக்கும், இல்லையேல் நூல்களை சாயம் பூச தயார் செய்து இருக்கலாம் எதுவுமில்லாமல் போயிற்று. வீட்டிற்கு வந்தான். முற்றமே அலங்காரமாக இருந்தது. நூல்கள் வலையாக பரப்பப் பட்டிருந்தது. சாயம் பூசப் பட்ட நூல்பந்துகள் அங்கும் இங்கும் சிதரி உருண்டுக் கிடந்தன. ராட்டு ஒரு புறம் இருக்க அம்மா உட்கார்ந்தபடி நூல்களை சுற்றிக் கொண்டிருப்பாள் அல்லது பஞ்சினை பதப் படுத்திக் கொண்டிருப்பாள். இவன் வரும் ஓசைக் கேட்டவுடன் அவனை ஏறிட்டுப் பார்க்காமல் எழுந்து குடிசைக்குள் புகுந்து கொள்வாள். பெட்டியிலிருந்து சங்கிலி போட்ட கடிகாரத்தை கையில் எடுப்பாள். கடிகாரத்தை கையில் வைத்து அதனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். கடிகாரத்தின் சங்கிலி தொங்கி ஊஞ்சலாடும்.
அப்போதுதான் தேவாவுக்கு மனது கஷ்டமாக இருக்கும். அவனது பொறுப்பின்மை மற்றும் சோம்பேரித்தனம் குறித்து அதிக கவலை ஏற்படும். அம்மா அங்கு இங்கு என போவதில்லை வருவதில்லை. வீட்டிலேயே கிடக்கிறாள். அவள் மனம் அலையாதா? சோர்ந்து போகாதா. என் மேல் கோபம் வராதா? எப்பொழுதும் எதுவும் சொன்னதில்லை. கேட்டதில்லை. நான் தாமதமாக வந்தால் சத்தம் போடுவதில்லை. திட்டுவதில்லை. ஏன் எதுவும் கேட்பதில்லை. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவளைப் போல் இருக்கிறாள். னால் அவள் கடுமையான வலியுடன் கூடிய மௌனத்தால் அதை கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குப் படும். அவள் குடிசைக்குள் சென்று கடிகாரத்தைப் பார்க்கும் போது 'தேவா இவ்வளவு நேரம் எங்கு இருந்தாய்' என்று கேட்பதாகவே படும். பின் ஊசிகள் மற்றும் நூலில் பார்வையைப் பதித்தபடி 'உங்கள் தேவா எப்படி கெட்டுப் போய் விட்டான் என்று பாருங்கள், எந்த கவனமும் இல்லை, அக்கரையும் இல்லை, இவன் மீதும் நம்பிக்கை இழந்து விடவா? என்று கேட்பதாக உணர்வான்.
அப்பொழுது அவனது கண்கள் ஈரமாகி விடும். எல்லா பிரச்சனைக்கும் தானே காரணம் என நினைத்துக் கொள்வான். அவனுக்கு அப்பாவின் நினைவு வரும். அப்பாவை அவன் பார்த்திருக்கிறான் னால் எப்பொழுதும் உணர்ந்ததே இல்லை.
அம்மா குடிசையிலிருந்து வெளியே வருவாள். இருக்கை விரிப்பாள். உணவு பரிமாறிவிட்டு தேவாவை கூப்பிடுவாள் '' வாப்பா தேபு, ரெண்டு கிளாச் தண்ணி வைச்சுக்கோ....'' என்று மெலிதாய் கத்துவாள்.
அப்பொழுதுதான் அம்மாவும் அதுவரை எதுவும் சாப்பிடாமல் இருக்கிறாள் என்பதை உணர்வான். '' அம்மா, நீ சாப்பிட்டிருக்கலாம் இல்லையா, நான் வாத்தியார் வீடு வரைக்கும் கொஞ்சம் போயிருந்தேன். அவர் கிட்ட எப்பவும் ஐம்பது அறுபது பேருக்கான வேலைக்கான வாய்ப்பு பற்றியத் தகவல் இருக்கிறது. இனி ஸ்கூல் திறக்கும் போது எதாவது செய்தாலும் செய்யலாம். ....'' என்றான். இப்படி பொய் சொல்லும் போது அவனுக்கு எதுவும் தோன்றாது னால் அதற்குப் பின் அம்மாவின் முகம் இருகிப் போய் விடுவது கண்டு அவன் தனக்குள் முடங்கிப் போவான். அம்மா மெதுவாக புன்னகைத்து விட்டு ''ராம்லாலுக்கு ஒரு கம்பளம் செய்ய வேண்டியிருக்கு, நூல் தயாராய் இருக்கிறது. நீ நாளைக்கு அதுக்கு லையில போய் சாயம் மட்டும் பூசிட்டு வந்திடு. சீக்கிரமா அந்த நெஞ்சிடலா....'' என்றாள் அம்மா.
'' அம்மா, வீட்டிலேயே சாயம் பூசிக்கலாம், பாஜாரில் சாயம் பூச செலவு கும்''
''அடர்த்தியான சாயங்களை நான் தயாரித்துக் கொள்வேன் னால் என்னால் அவற்றை அரைக்க முடியவில்லை. மேலும் அரைக்காமல் சாயம் பிடிக்காது. எனக்கு தோள் வழி தாங்காது. இல்லையின்னா.......'' என்றாள் அம்மா.
'' நான் அரைக்கிறேம்மா....... நாளைக்கு நீ எல்லாத்தையும் எடுத்து வை மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்''
இப்படியேத்தான் நாட்களைக் கடத்திக் கொண்டே போவான். இவை எல்லாம் எப்படி நடக்கிறது என்று தேவா எப்பொழுதும் உணர்ந்ததே இல்லை. அம்மா எந்த நினைவுகளில் மூழ்கி இருக்கிறாள் என்றோ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்றோ அவனால் கேட்க முடியாது. அப்படி அவன் கேட்கும் வாய்ப்பு ஏற்படும் போது சாஅந்தக் கடிகாரமும் அதன் தங்கச் சங்கிலியியும் குறுக்கே வந்துவிடும். அம்மா கவலையாகக் காணப் படுவாள் அவனும் தனக்குள் சந்தோஷமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பான்.அப்படியே அவன் முயற்சி செய்தாலும் அவனுக்கு தைரியம் பத்தாமல் போய் விடும். காரணம் அந்தக் கடிகாரத்திலும் அந்தச் சங்கிலியிலும் அவனது அப்பாவின் வரலாறு பிணைந்து இருந்தது. அவன் எங்கோ ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். அவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன் சில மணி நேரங்களுக்காக அம்மாவை பார்க்க வந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருந்தான். அப்பொழுது அவருக்கு இரண்டாம் திருமணம் முடிந்து விட்டிருந்தது. அம்மா யாரிடமோ கடன் வாங்கி சமையல் செய்து இருந்தாள். னால் அவர் சாப்பிடவில்லை. அந்த நேரம் அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாம் சேர்ந்து தனக்கும் மகன் தேவாவுக்கும் ஜீவனாம்சம் என்று எதாவது கேட்டு வாங்கும் படி அம்மாவைத் தூண்டினார்கள். னால் அம்மா அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை. அடிக்கடி கடிகாரத்தின் தேவையாகி விடுவதாக அப்பா சொன்னார். அதைக் கொடுத்து விட்டால் நலமாக இருக்கும் என்று கூறினார். இந்த ஒரு பொருள் தான் நினைவுக்கு என்று இருந்து போனது அது மட்டுமல்லாமல் தேவாவுக்கும் அவனது நேரம் குறித்து தெரிவிக்க உதவியாக இருக்கிறது. வேண்டுமானால் அதில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கச் சங்கிலியை வேண்டுமானால் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தார். இந்த விஷயத்தை துவங்கி விட்ட காரணத்தாலும் கடிகாரத்தை கேட்டது அதில் தொங்கும் தங்கச் சங்கிலிக்காகத்தான் என்று தெரிந்து கொண்டார்களோ என வெட்கத்தாலும் அவர் மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை. அவர் போய் விட்டார்.
அவர் போன பின் பக்கத்து வீட்டுக் கிழவி நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து விசாரிக்க வந்தார். ஏனெனில் அந்த சமயத்தில் எல்லோர் வீட்டிலும் அந்தப் பேச்சாகவே இருந்தது. கூடவே தேவாவின் அம்மாவின் நடத்தைப் பற்றியும் நேர்மையாக விவாதிக்கப் பட்டது. நடத்தையை விடவும் அவளின் நேர்மை குறித்தும் கவலையை விட அதிகமான பொறுமை குறித்தும் அவளின் சந்தோஷம் மற்றும் கஷ்டங்கள் குறித்தும் தீவிரமாக பேசப் பட்டு வந்தது. பக்கத்து வீட்டுக் கிழவி வந்து அங்கேயே உட்கார்ந்து இருந்தாள் பின் '' ஏண்டி, தேவா அம்மா, அவர் பேச்சு பழக்கம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள்.
'' அப்படியேதான் இருந்தது பாட்டி, உண்மையில் கொஞ்சம் கூட மாற்றமில்லை......நான் எப்படி நடந்து கொள்வது என்றுகூட தடுமாற்றமாக இருந்தது. னால் குணம் இன்னும் மாறவில்லை. உடம்பு ரொம்பவே மாறிவிட்டது. நான் அவரை முதல் பார்வையில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இப்பவே அவரது முன்பற்கள் இரண்டை மாற்றிக் கொண்டுள்ளார். போகும் போது என்னிடம் கடிகாரத்தை கேட்டார். னால் எனக்கு கொடுக்க மனசில்லை. என்னமோ தெரியல்ல அந்த கடிகாரத்து மேல அப்படி ஒரு விருப்பமாகி விட்டது.
'' அப்படின்னா அவருடைய அக்கரை கவலை எல்லாம் அந்த கடிகாரத்து மேலதான் இருந்திருக்கு. அதனுடைய சங்கிலி தங்கத்தால் னதுல்ல'' என்று கிழவி தனது தங்கத்தை வெளிப்படுத்தினாள்.
'' அப்படி இல்லை பாட்டி, அப்படி அவருக்கு அதுதான் வேண்டுமென்று வந்திருந்தால் என்னால் தடுத்திருக்க முடியுமா. நான் கூட கேட்டேனே அதில் இருக்கும் தங்கச் சங்கிலியை வேண்டுமென்றால் எடுத்துப் போங்கல் என்று, னால் அதற்குப் பின் அவர் கடிகாரத்தைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே.'' என்றாள் தேவாவின் அம்மா.
'' தைரியம் இருந்திருக்காது, இல்லைன்னா இப்ப உங்க நிலைமை என்னவென்றாவது புரிந்திருப்பான் இல்லையா'' என்றாள் கிழவி.
'' அப்படி இல்லை பாட்டி, நீ சொல்கிற மாதிரி எதுவும் இல்லை''
'' அடியே, இப்படி யோசிச்சா வேலைக்கு காது, சமயத்தில மேலேயும் கிழேயும் பார்த்துக்கனும் தேபு அம்மா! ம்பிள்ளைங்கள இவ்வளவு நேர்மையானவனாக நினைக்கக் கூடாது. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் அசைவுக்குப் பின்னும் அர்த்தம் இருக்கும். நீ உனது ஜீவானாம்பசம் பற்றி பேசியிருக்க வேண்டியதுதானே'' என்று கிழவி தான் பேச இருந்த விஷயத்தின் கம்பியை மீண்டும் பிடித்தபடி கேட்டாள்.
'' அதான் சொன்னேனே..... அப்படி என்னத்தான் பேசிடப் போறேன். நான் தான் திருப்தியா இருக்கேனே. இன்னும் ஒன்று இரண்டு வருடங்கள் தான் அப்புறம் தேபு வேலை வெட்டிக்கு தயார் கி விடுவான். இதுக்கப்புறம் நான் ஏன் அவங்கக்கிட்ட வாய் கொடுக்கப் போறேன் ?'' என்றாள் அம்மா தீர்மானமாக.
அதிலிருந்து அம்மாவின் கவனம், அன்பு மற்றும் அக்கரை என அனைத்தும் தேவாவின் மேல் பதிந்து விட்டது. தனது வயிற்றைக் காயப் போட்டு தேவாவை படிக்க வைத்தாள். னால் இப்பொழுது அவன் படித்து முடித்து வெட்டியாக வீட்டில் இருக்கிறான் இந்த நிலையிலும் அவள் அவன் மீதான அன்பு மாறாமல் அப்படியே இருந்தாள். அவன் அங்கும் இங்கும் அலைவதையும் திரிவதையும் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதெல்லாம் வீட்டிற்கு தாமதமாக வருகிறானோ அப்பொழுதெல்லாம் கண்டிப்பாய் பொய் சொல்லி அவளை ஏமாற்றுவான் அந்தப் பொழுதுகளில் அவள் எப்படி அவனது போலித்தனத்தை உடைத்து உண்மையைக் காட்ட முடியும். இந்த விஷயத்தை அவள் நன்கு அறிவாள்.
ஒரு நாள் அவன் வீடு திரும்புகையில் வழக்கம் போலவே தாமதமாகி விட்டது. அன்று அவனுடன் வேறு ஒரு ள் இருந்தான். அவனது சைக்கிளின் பின்னால் புத்தகக் கட்டுகள் இருந்தது. முன்னால் கைப்பிடியில் தொங்கிக் கொண்டிருந்த பையில் செய்தித்தாள்கள் நிரம்பி இருந்தது. அந்த மனிதனின் கண்களில் ஒரு மாறுபட்ட நம்பிக்கை ஒளி இருந்தது. அவனது முகத்தில் கடின உழைப்பின் குரூரமும் கடுமையும் படிந்து இருந்தது. தேவா வாசலில் நின்றபடி அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்து விட்டு உள்ளே நுழைந்த அவன் பேச்சில் தயக்கமோ சோர்வோ இல்லை. மனதின் கவலையை வெளியே விட்டு வந்தவன் போலும் தனது சுயத்தை உணர்ந்தவனைப் போலும் உற்சாகமாக '' அம்மா, நீ நேரத்துக்கு சாப்பிட்டுக்கோ. என்னை எதிர்பார்த்து உட்கார்ந்து இருக்க வேண்டாம். எனக்குத்தான் கால்கள் முளைத்து விட்டதே...'' என்றான் தேவா.
அவனுடைய இந்த உற்சாகப் பேச்சைக் கேட்கும் போது உடைந்து போன அவளது மனது நிரம்பி வழிந்தது. னால் கொஞ்சம் கவலையும் இருந்தது. இவன் தன்னை விட்டு முற்றிலும் விலகி விடக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டாள். அவன் ஒவ்வொரு நாளும் பகல் முழுவதும் பரதேசிகளைப் போல் அலைகிறான். இரவில் வெகு நேரம் வரை குப்பி விளக்கொளியில் என்னனென்னவோ படித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் அவன் தாமதமாக வீடு திரும்புகையில் அவன் தயங்காமல் இருப்பது அம்மாவின் இதயத்தில் ஊசி குத்தலாக இருந்தது. அவளுக்கு கஷ்டமாகவும் இருந்தது. கவலையாகவும் இருந்தது. னாலும் ஒரு மாறுபட்ட மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்தது. தேவா ஏதோ நல்ல விஷயத்தில் ஈடு பட்டுள்ளதாகவே அவனுக்குப் பட்டது. னால் இப்படி அக்கரையில்லாமல் இருப்பதும் கொஞ்சம் சரியாகப் படவில்லை.
தேவா அரசியல்வாதிகளுடன் பழக்கிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிய வருகிறது. அவர்களுடன் பைகளைத் தோளில் மாட்டிக் கொண்டு அலைந்து திரிகிறான் என்பது தெரிய வருகிறது. இப்பொழுதெல்லாம் அவன் தன்னைப் பற்றியும் தனது வீடு பற்றியும் எந்தக் கவலையும் கொள்வதில்லை. அவனுக்கு அதிக கவலை தருவது தொலைவில் இருப்பவர்கள் அல்லது நகரத்தில் இருப்பவர்கள் பற்றியதுதான். பல முறை இரவுகளிலும் வெளியில் தங்கி விடுவான். தேவா செய்தித்தாள் விற்கிறான் என்று வீடுகளில் பேச்சுகள் பேசப் பட்டது. தாழ்த்தப்பட்டவர்களைப் போல் வீடு வீடாக அலைந்து நாலு பைசாவுக்கு செய்தித்தாள் விற்றுக் கொண்டிருந்தான். கெட்டது பற்றிய விவாதம் நடக்கையில் தேவா மற்றும் அவனது அம்மா பற்றி இன்னும் கடுஞ்சொற்களால் கரி பூசி விடுவார்கள். னால் நல்லது பற்றிய விவாதம் வந்தால் அவர்கள் இருவரின் வாழ்க்கை சக்திக்கு முன்னால் அனைவரும் தலை குணிந்து கொள்வார்கள்.
தேவாவின் அம்மா மனதில் இந்த விஷயம் இன்னும் இருக்க முடியாது என்றாகி விட்டது. கடைசியாக இதற்கெல்லாம் என்னதான் முடிவு. சிந்தித்து சிந்தித்து இந்த விஷயம் அவளது வாயிலிருந்து வெளியே வந்து விட்டது. தேவா செய்தித் தாள்களை விணியோகித்து விட்டு வந்திருந்தான். அவன் சாப்பிடும் போது ''தேபு, நீ இப்படி பத்திரிக்கை விக்கிறது நல்லாயில்லை....''
தேவா அமையாக இருந்தான். அவன் சாப்பிட்டு முடித்ததும் கிளம்புகையில் அம்மா அவனை தடுத்துக் கேட்டாள். '' இதோ இந்த நூல்களை எல்லாம் எடுத்திட்டு எதிரில் போய் எடை போட்டுக் கொண்டு வா, இவற்றை கண்டிப்பாய் சாயம் பூசிக் கொண்டு வா.''
இதனைக் கேட்ட தேவா ஒரு பையில் நூல்களை அள்ளிக் கொண்டான். '' என்ன சாயம் பூச வேண்டும்'' என்று தேவா கேட்டான்.
'' நாலு பங்கு நீலச்சாயம் ஒரு பங்கு மஞ்சள்சாயம் 'பார்டருக்கு'' என்றாள் அம்மா.
நடக்கத் துவங்கியதும் அவனுக்கு திடீரென ஒன்று நினைவுக்கு வந்தது ''அம்மா, எனக்கு நேரம் கிடைக்காது. அதனால் என்னுடைய குர்த்தாவை துவைத்துப் போட்டுவிடு. இச்திரி நான் செய்து கொள்கிறேன். நாளைக்குப் போட்டுக் கொள்ள குர்த்தா எதுவும் இல்லை'' என்றான். அம்மா' ''ஹ¥ம்'' என்றதும் அவன் போய் விட்டான்.
அம்மா அவனது குர்த்தாவை சோப்பு போட்டு துவைத்தாள். அதில் நீலம் மற்றும் கஞ்சி போட்டாள். கம்பியில் பரப்பி வைத்து காத்திருந்தாள். னால் தேவா இன்னும் வரவில்லை. சாப்பாடு சமைத்து முடித்துக் காத்திருந்தாள் னால் தேவா இன்னும் வரவில்லை. இரவு வந்தது போய் விட்டது. னால் தேவாவின் காலடிச் சத்தம் இன்னும் கேட்கவில்லை. துளசி மாடத்தில் மேலாக கட்டப் பட்டுள்ள கொடியில் அவனது குர்த்தா காய்ந்து சுருங்கிப் போய் கிடந்தது. னால் அவன் இன்னும் திரும்பி வரவில்லை. அம்மாவின் கண்களில் இருந்து தூக்கம் பறந்து அவனைத் தேடிக் கொண்டிருந்தது. னால் அவன் அமைதியான அதிகாலைப் பொழுதிலும் அவன் திரும்பி வரவில்லை. அம்மா இதையும் ஏற்றுக் கொண்டாள். கொடியிலிருந்து குர்த்தாவை இறக்கி மடித்து பெட்டியில் வைத்து விட்டாள். எப்பொழுது வந்து அதை கேட்டு நிற்பானோ தெரியவில்லை.
மூன்றாவது நாள் பண்டித் தனது கம்பளம் வாங்க வந்திருந்தார். அப்பொழுது '' று ஏழு நாட்களில் கொடுத்து விடுவேன். தேவாவிடன் சாயம் பூச கொடுத்து அனுப்பி உள்ளேன். எந்த சாயக்காரனிடம் நூல்களை கொடுத்தான் என்றுத் தெரியவில்லை. தேவா நாளை அல்லது நாளை மறுநாள் கண்டிப்பாக வெளியிலிருந்து வந்து விடுவான். இரண்டு - நான்கு நாட்களில் அதை நெய்து நானே கொண்டு வந்து கொடுத்து விடுவேன். நீங்கள் கவலைப் படாதீர்கள்'' என்று அம்மா தெரிவித்தாள்.
'' நாளை அல்லது நாளை மறுநாள் தேவா திரும்பி வந்து விடுவான்? என்று யாரிடம் சொல்லிட்டுப் போயிருக்கிறான்? என்று சிடுசிடுத்தார். அவன் வர ஒரு வருடத்துக்கும் அதிகம் னாலும் கும். அவனை கைது பண்ணியிருக்காங்கன்னா சும்மாவா........?'' என்று பண்டித் முடித்தார்.
''கைதா.......?'' அம்மா திடுக்கிட்டு நின்றாள்.
'' போராட்டம் நடத்தினா தண்டனை அனுபவித்துதான் கனும்..''
இதனைக் கேட்டதும் அம்மா அமைதியாகி விட்டாள். னால் எது எப்படியோ உங்கள் கம்பளம் கிடைத்து விடும் எப்படியானாலும் நான் அதை தந்து விடுகிறேன் என்று மட்டும் அம்மா சொன்னாள்.
தேவா ஜெயிலுக்குப் போன செய்தி தெரு முழுவதும் பரவி விட்டது. அவன் இங்கிலருந்து சிலரோடு சேர்ந்து கர்ஹல் தாசிலுக்கு சென்றுள்ளான். அங்குதான் அவன் கைது செய்யப் பட்டுள்ளான். ஒரு வருடத்திற்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. னால் இருநூறு ரூபாய் அபராதம் கட்டினால் தண்டனைக் காலம் பாதியாக குறைக்கப் பட வாய்ப்பு உள்ளது. னால் அவனது கூட்டாளிகள் யாருக்கும் அபராதம் கட்டுவது சரியெனப் படவில்லை.
தேவா என்ன குற்றம் செய்தான் என்பது பற்றி யாருக்கும் சரியாக தெரியாது. அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை அதனால் அவள் மிகுந்த கவலையில் இருந்தாள். தெருவில் உள்ளவர்கள் யாரும் இந்த விஷயம் பற்றி அம்மாவிடம் பேச வருவதில்லை காரணம் பணத்திற்கான ஏற்பாட்டை அவர்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என பயந்தார்கள். இனி அவள் யாரிடம் தான் சொல்வாள். தனியாக அமர்ந்து யோசிக்கையில் தேவாவின் அப்பா அடிக்கடி நினைவுக்கு வந்து போகிறார்.அவன் தேவா குறித்து மிகுந்த அக்கரை கொள்பவர். அவருக்கு தெரிந்தால் எனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கோபப் பட்டாலும் படுவார். அவன் எனக்கும் மகன் தானே. என்னை விட்டால் அவனுக்கு வேறு யார் செய்வார். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இரத்தம் மற்றும் பாச பந்தம் என்பது முறிந்து போகுமா என்ன? என்று அவர் கண்டிப்பாய் தங்கப் படுவார் என்றும் அம்மா யோசித்தாள்.
அதனால் அம்மா அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அப்பா இருக்கும் பகுதிக்கு ஒருவர் வேலையாக செல்ல நேர்ந்தது அவரிடமே அம்மா கடிதத்தை கொடுத்து அனுப்பினாள். னால் திரும்பி வருகையில் இரண்டு சொல் எழுதிய கடிதம் என்று எதுவும் கொண்டு வரவில்லை.
இதைக் கேட்ட தேவாவின் அம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஒருவேளை சரியில்லாத சந்தர்ப்பத்தில் கடிதம் அவர் கைகளில் கிடைத்திருக்கலாம். அவருடைய மனது எந்த மாதிரியான கவலைகளில் சிக்கிக் கொண்டுள்ளதோ தெரியவில்லை. இதில் இந்த விஷயம் தெரிந்ததும் அவர் மனம் என்ன பாடு பட்டதோ. அமைதியான மன நினையில் அவர் இருந்தால் நிச்சயம் தபாலில் கடிதம் அனுப்புவார். வீட்டு விஷயம் அடுத்தவர் கைகளில் கொடுத்து விடுதல் கூடாது என்ற மனப்பான்மையில் தபாலில் அனுப்பினாலும் அனுப்பியிருக்கலாம்.
னால் ஒரு மாதத்திற்கும் அதிகமாகி விட்டது. னால் இதுவரை கடிதம் எதுவும் வந்தபாடில்லை. அவள் குடிசைக்குள் சென்றாள், கடிகாரத்தை கைகளில் ஏந்தி நின்றாள். அதன் தங்கச் சங்கிலி ஒரு பக்கமாக தொங்கிக் கொண்டிருந்தது. னால் இப்பொழுது யாரும் வந்திருக்கவில்லை. கடிகாரத்தின் முட்கள் மணியை மாற்றிக் கொண்டு நகர்ந்தன. அனால் அந்த அமைதியின் கனங்கள் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தன. தனிமையின் பொழுது நகராமல் நின்று கொண்டிருந்தது. அதன் முட்கள் நகரவே இல்லை. அதை நகர்த்த முடியவும் இல்லை.
மெதுவாய் இருள் பரவியது. வீட்டின் அனைத்து மூலையிலும் இருள் நிரம்பிக் கொண்டிருந்தது. ஒரு ழமான பெரு மூச்சு விட்டபடி அம்மா எழுந்தாள். ராட்டையின் சுழற்சி நின்றவுடன் அமைதி இன்னும் கூர்மையாகி விட்டது.
அவள் இருட்டில் அமர்ந்து இருக்க உண்மை அவள் முன்னால் மலைப்பாம்பு போல் இருக்கத் துவங்கியது. இதுவரை அவள் எந்த நிழல் மீது நம்பிக்கை வைத்திருந்தாலோ........அதான் தேவாவின் அப்பா மீது...... அது எவ்வளவு முட்டாள் தனம். எவ்வளவு பெரிய துரோகத்தை அவர் இத்தனை வருடங்களாக செய்து வந்திருக்கிறார். எவ்வளவு தெளிவாக அனைத்துப் பொறுப்புகளையும் அவர் உதரி விட்டு போய் விட்டார். எவ்வளவு அழகாக அவர் அம்மாவின் பெண்மை மற்றும் அவளின் மனைவி என்ற உறவை திருப்தி படுத்திக் கொண்டிருப்பதாக நினைத்திருக்கிறார். அவள் வேறு எதையுமே சிந்திக்கக் கூடாது என்று க்கி விட்டார். அவர் இதைத் தானே எதிர் பார்த்தார். அவள் நொண்டிக் கொண்டும், நகர்ந்து கொண்டும் இறுதிவரை கணவனின் நிழலில் தன் வாழ்வை மாய்த்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்றுதானே நினைத்துள்ளார். அதைத் தானே பெருமையாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைத்து உள்ளார். அவள் கீழே இறங்கி பூமியை தொட்டு உணரக் கூடாது என்று நினைத்திருக்கிறாரோ?. தேவா உன்னைப் போல் வளர்ந்து விடுவான் என்றும் குறை பட்டுக் கொண்டாரே. இந்த விஷயத்தில் அவளது குணத்தைப் பற்றி எவ்வளவு அவதூராக எண்ணியிருக்கிறார். இப்படியெல்லாம் எண்ணும் போது அவரது கண்களில் என்னமாதிரியான திரை மூடி இருக்கும்? அம்மா அனைத்தையும் நினைத்து குழம்பினாள்.
திடீரென அம்மா அந்த இருள் சூழ்ந்த குடிசையில் இருந்து வெளியே கிளம்பினாள். குங்குமத்தின் டப்பா அவளது கைகளில் இருந்தது. துளசி மாடத்தில் நிலவொளி மின்னிக் கொண்டிருந்தது. நாலாபுரமும் பால் போல் வெளிச்சம் சிந்திக் கிடந்தது. மிக மாறுபட்ட ஒரு அமைதியையும் அழகையும் உணர்ந்தாள். அவள் குங்கும டப்பாவை கையில் வைத்தபடி துளசி செடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே புயலடிப்பது போல் இருந்தது. நடுங்கும் கைகளால் அவள் டப்பாவைத் திறந்தாள். குங்குமத்தை துளசிச் செடியின் நீல இலைகளில் கொட்டி தனது மங்கலத்தை அதற்கு ஒப்படைத்தாள். கண்கள் இமைக்காமல் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். துளசிமாடத்தில் தலை வைத்து வணங்கினாள். அந்த கருத்த இரவில் தனது தனிமையை நினைத்து வெடித்து சிதரி அழுதாள். பயத்தால் துடித்தாள். அவநம்பிக்கையால் நொருங்கிப் போனால். எதோ ஒன்று எங்கிருந்தோ அவளை அழ வைத்துக் கொண்டிருந்தது. அவளை தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள். அவள் கண்களில் கண்ணீர் சாரையாய் வழிந்து கொண்டிருந்தது. கண்ணீர் வரவைத்த காரணம் எங்கிருந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அன்றிலிருந்து தான் சுமங்கலி என்பதற்கு அடையானமாக நெற்றியின் மேல் வகிட்டில் பூசிக் கொள்ளும் குங்குமத்தை அவன் பூசிக் கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் கடிகாரத்தின் தங்கச் சங்கிலியை விற்று நூல் வாங்கிக் கொண்டாள். பண்டித்தின் கம்பளம் நெய்து அவரிடம் கொடுத்து விட்டாள்.
இதோ ஒரு ண்டு முடிந்து விட்ட நிலையில் தேவா அம்மாவின் முன் வந்து நின்றான். அம்மா இன்னும் அந்த ராட்டைதான் சுற்றிக் கொண்டிருந்தாள். அதன் கைப்பிடி கண்ணாடியைப் போல் மின்னிக் கொண்டிருந்தது. அம்மாவின் முகத்தில் அதே இருக்கம் இருந்தது. கடுமையான பக்தி நிலையில் கிடைக்கக் கூடிய ஒரு சாந்தம் அது. நூல்களை வெட்டிக் கொண்டிருக்கையில் ஏற்படும் அமைதி- ராதனையின் போது ஏற்படும் அந்த மவுனம் கியவைகளை உணர முடிந்தது. தேவா அமைதியாக நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு அவனது வெட்க உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. அவளது கண்களில் தாய்மை பொங்கி விட்டது. ''தேபு, நீ வந்திட்டியாப்பா..??'' என்று தழுதழுத்தாள்.
'' அம்மா, ......'' என்று அழைத்து நிறுத்தி விட்டான். '' எனக்கு ரொம்பப் பசிக்கிறது '' என்றான் மழலையாக.
'' பசியா....'' என்றாள் முகத்தை கேள்வி உணர்வாள் நிரப்பினாள்.
'' ஒரு ண்டு காலமாக பசியாகவே இருக்கிறேன். ..... அம்மா, ஒரு ண்டு காலமாக பசி.....''' என்றான் தேவா.
அப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது. எல்லாம் இயல்புக்கு திரும்பி விட்டது. அம்மா உணவு பரிமாறினாள். தேவா தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். அம்மாவும் மகனும் நேரமற்ற நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தார்கள். தேவா வேகமாக சாப்பிட்டுக் கொண்டே '' அப்பா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்'' என்றான்.
'' என்ன யிற்று?'' அம்மாவின் முகத்தில் எல்லா உணர்வு நரம்புகளும் ஒருங்கே புடைத்து நின்றந்து.
'' வண்டியில் எனக்கு பழக்காமான ஒருவர் கிடைத்து விட்டார். என்னை அடையாளம் கண்டு கொண்ட அவர்தான் இந்தத் தகவலை எனக்குச் சொன்னார். அப்பாவுக்கு கடுமையான காய்ச்சலாம். அவருடைய நிலை மிகவும் மோசமாகி அவர் சுமார் இருபத்நான்கு மணி நேரமும் மயக்கத்தில் இருந்தாராம். பின்பு நிலமை கொஞ்சம் தேறி உள்ளது. பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உடல் நிலை பாதிக்கப் பட்டு விட்டதாம். சிறிய மருத்துவமனையில் இருந்து பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்களாம்'' என்றான் தேவா.
'' எப்பொழுதிலிருந்து உடல்நிலை சரியில்லை? '' அம்மா கேட்டாள்.
'' ஒரு மாத காலமாக, நான் வேண்டுமானால் நாளைக்குப் போய் பார்த்து வரவா?'' என்றான் தேவா.
அம்மா அமைதியாக இருந்தாள். இன்னும் நான்கைந்து கவளம் உண்டால். கடகடவென தண்ணீர் குடித்தாள். பின் எழுந்து விட்டாள்.
கண்னிமைத்து திறக்கும் முன் அம்மா நூல் கண்டுகளின் நடுவே ராட்டை அருகில் தலை கவிழ்ந்து உட்கார்திருந்தாள். அன்பு என்னும் இருளுணர்வு அவளைச் சுற்றிச் சூழ்ந்தது. இந்த இருளில் அவள் உணர்வற்றவாளாய் முடங்கிக் கிடந்தாள். வைத்துக் கொள்வதா- விட்டுவிடுவதா என்ற பெரும்குழப்பம் அவளை பிடித்து ட்டியது. னால் அவளால் வைத்துக் கொள்ளவும் முடியாது வெறுத்து ஒதுக்கவும் முடியாது. அவள் எழுந்து விளக்கை அணைத்தாள். தேவாவின் கண்களை மூடி இருந்தான். அம்மா கண்டிபாய் படுத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவன் தூங்கிப் போயிருந்தான்.
காலையில் மெல்லிய குளிர் காரணமாக அவன் சீக்கிரமாகவே எழுந்து விட்டான். சுவற்றில் இருந்த துவாரத்தில் இருந்து வெளிச்சக் கீற்று வந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த இருள் குறைந்து மறைந்து போயிருந்தது. அவனுக்கும் என்னவோ நல்லதாகப் பட்டது. அம்மாவின் கட்டில் வெறுமையாக இருந்தது. அவனது மனதில் எதோ ஒருமாதிரி பட்டது. எழுந்து குடிசையின் முன்புறம் வந்தான்.
வெளியே முற்றத்தில் புனிதம் பொழிந்து கிடந்தது போல் இருந்தது. மெல்லிய குளிரும் மனதின் மென்மையைப் போல் தண்மை ஒளியும் பரவிக் கிடந்தது. முற்றத்தில் துளசிமாடம் ஏதோ ஒரு நம்பிக்கையில் திடமாக நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் மண் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் துளசி செடி தன் நெற்றியில் குங்குமம் பூசி மிக அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இத்தனை அழகான நிறைந்த ஒரு காலைப் பொழுதை தன்னால் கிரகித்துக் கொள்ள இயலாத மன நிலையில் அந்த காலையில் முழுமையை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கண்களை மூடி ஒரு யந்திரத்தைப் போல் கட்டிலில் படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் அவனால் தன் கண்களை திறக்க இயலவில்லை. தான் கண்ட பூர்ணம் கலைந்து போய் விடக் கூடாது என்று பதறுவதாய் பட்டது.
'' தேபு.... தேபு... '' அம்மா அழைத்தாள். '' விடிந்து விட்டது தேபு, எழுந்திரிப்பா....'' என்றால் அம்மா.
எழுந்து அவன் வெளியே முற்றத்திற்கு வந்து விட்டான். அம்மா குடிசையில் இருந்தால். அம்மா வெளியே வந்ததும் '' அம்மா, நாம் இன்றே போய் அப்பாவை பார்த்து வரலாம்'' என்றான்.
அவன் உண்மையிலேயே இப்படித்தான் சொல்கிறானா என்று அம்மா அவனையே பார்த்தாள். அவன் தனக்காக மட்டுமல்லாமல் அவனுக்காகவும் தான் அப்படிச் சொல்கிறானா என்று யோசித்தாள். அம்மாவின் அமைதியைப் பார்த்து '' நீ புரப்படும்மா, நாம் காலை பத்து மணிக்குப் போய் இரவு வண்டிக்கு திரும்பி வந்து விடலாம் '' என்ரான்.
'' நான் வர மாட்டேன்'' என்று அம்மா குடிசைப்பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
'' நீ வரமாட்டாயா"' அவன் அம்மா சொன்னதை புரிந்து கொள்ள வேண்டி மீண்டும் அதையே திருப்பிக் கேட்டான்.
'' இல்லை'' அம்மாவின் குரலில் உறுதி இருந்தது.
'' அப்படின்னா நான் போய்ட்டு வரவா..?'' என்று தேவா இயல்பாக சொல்லி விட்டான்.
'' வேண்டாம்'' அம்மா அதே உறுதியுடன் சொன்னாள். சொல்லிவிட்டு தனது வேலையில் மும்முரமானாள்.

------------------------------------------------------------------------------------
கம்லேஷ்வர்: ( பிறப்பு 1932) பிரபல எழுத்தாளர் கம்லேஷ்வர் இந்தி மொழி இலக்கியத்தில் நவீன கதைகளின் முன்னோடியாகவும் சமகாலக் கதைகளின் துவக்கக்கர்த்தாவாகவும் அறியப் படுகிறார்.
இவரது கதைகள் சாதாரண மனிதனின் வாழ்வியலோடு இரண்டற கலக்கும்படியானது. இயல்பு வாழ்க்கையின் அவலங்களுக்கு புதிய பாதைகளையும் பரிணாமங்களையும் இவரது கதைகள் ஏற்படுத்துகின்றன.
முற்போக்கு எழுத்துகள் துவங்கிய காலக் கட்டத்தில் அவற்றிற்கு புது வேகம் பெறச் செய்ய காரணமாய் இருந்தது கம்லேஷ்வரின் எழுத்துகளின் எனப்படும்.
இவரது கதைகளின் மாந்தர்களும் அதில் பதிவு செய்யப் பட்ட நிகழ்வுகளும் குடும்பச் சூழலை மையமாகவும் யதார்த்த மொழி மற்றும் கதைப் போக்கிலும் காட்சிகளைப் பதிவு செய்யும் ற்றல் இவருக்கேயுரிய தனிச் சிறப்பு எனலாம்.
இவரது கதைகளில் உர்து மற்றும் ங்கில சொற்களின் பிரயோகம் மிகையாக உள்ளதாக் ஒரு குற்றச்சாட்டு உண்டு. னால் தனது மொழி நிகழ் மக்களின் சிதைந்து போனதாக கருத்தப் படும் ஒரு பண்பட்ட யதார்த்த மொழி. எழுத்துக்கும் பேச்சுக்கும் என நான் இரு மொழிகளோடு இயங்க முடியாது. மேலும் மக்களோடு பழகப் பழக அவர்களின் சரள மொழி எனக்கு சவுகரியமாகவும் நான் வளர்த்துக் கொள்ளத்தக்கதாயும் இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை எந்த சிதைவும் இல்லாமல் அதிக புனைவும் இல்லாமல் சொல்ல முடிகிறது. என்று மொழி கலப்பு விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இவரது படைப்புகள் விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளது. இவரது முக்கியப் படைப்புகளில் 'ராஜா நரசிம்யா' , கம்பே கா தாமி' ' மாஸ் கா தரியா' மற்றும் ' ஜிந்தா முர்தா' போன்ற கதைத் தொகுப்புகளும் 'டாக் பங்களா' 'சமுத்ர மேன் கோயா ஹ¤வா தமி' 'காலி ந்தி' கிய நாவல்கள் , 'சாரு லதா' மற்றும் 'அதுரி வாஜ்' என்ற நாடகங்கள், ' கன்டித் யாத்ராயேன்' மற்றும் 'பங்களாதேஷ் கி டயரி' கிய பயணக் கட்டுரைகள் மற்றும் 'நயி கஹானி கி பூமிகா' மற்றும் 'மேரா பன்னா' கிய ய்வுக் கட்டுரைகளும் பிரபலமானவைகள்
---------------------------------------------------------------------------------

Tuesday, October 03, 2006

சைக்கிளை திருடு கொடுத்த சுகம்

இந்தியில்: அசோக் சுக்லா
தமிழில்:மதியழகன் சுப்பையா

முதலில் நானும் சைக்கிளை திருடு கொடுத்து நிற்கும் ஒரு மாறுபட்ட சுகத்திற்கு பரிச்சயமற்றிருந்தேன். னால் அதிர்ஷ்டவசமாக கடந்த நாளொன்றில் என் சைக்கிள் திருடு போகாமல் இருந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் இந்த விசித்திர னந்தத்தை அனுபவிக்காமலேயே போயிருப்பேன். என் சைக்கிளை திருடி எனக்கிந்த தேவ சுகத்தைத் தந்த அந்த மகா புருஷனின் முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உண்மையிலேயே நான் பெரிய பாக்கியசாலி. இல்லையெனில் உலகில் இத்தனை பேரிடம் சைக்கிள் இருக்கையில் என் சைக்கிள் மட்டும் திருடு போவானேன்.? நிச்சயம் இது என் பாக்கியத்தின் பயந்தான்.
தன்னல எண்ணங்களை மீறி பற்றுகளை விட்டு சிந்திக்கையில் எனது சைக்கிள் திருட்டுப் போனதாய் கருதவில்லை. அது இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது எனலாம். மேதைகளும் புரட்சியாளர்களும் நாடு கடத்தப்பட்டதற்கு வருத்தப் படாத நாம் சைக்கிள் இடமாற்றம் பெற்றதற்கு ஏன் கவலைப் பட வேண்டும். நிச்சயம் சைக்கிளை திருடியவனுக்கு அது மிக அவசியமானதாய் இருந்திருக்கலாம். யதார்த்தமாய் சொல்ல வேண்டுமானால் எனது சொத்து நஷ்டமாகியது எனலாம்.
இளைஞன் என்ற காரணத்தினால் காவல்துறை அதிகாரிகளிடம் நிறைய பயப்படுவேன். எப்படி தர்மாத்மாக்கள் கடவுளிடம் பயப்படுவதை விட சாத்தானிடம் பயப்படுவார்களோ அப்படியே திருடர்களை விட காவலாளிகளிடம் பயப்படுதலே இளைஞனின் இயல்பு எனலாம். என் சைக்கிள் திருட்டுப் போனதற்கான புகார் கொடுக்க பயந்து பயந்து காவல் நிலையத்தை அடைந்தேன். நானே சைக்கிளை திருடியவனைப் போல பயந்து போனேன். சைக்கிளின் எண் எனக்கு நினைவில்லை. நான் நிறையவே குழம்பிப் போயிருந்தேன். ஒரு சிப்பாயி ' இப்படி எண்களை மறந்து போவதால்தான் காணமல் போவதாயும்' கருத்து சொன்னார். புகார் எழுதிக் கொண்ட காவலாளியின் கேள்விகள் என் சைக்கிள் திருடு போனதை மட்டும் சந்தேகிக்கவில்லை. என்னிடம் சைக்கிள் இருந்ததா என்பதையே சந்தேகமாய் கேட்டார்.
நான் வீடு திரும்புவதற்குள் சைக்கிள் திருட்டுப்போன செய்தி அப்பகுதி முழுவதும் பரவி இருந்தது. வழியில் கிடைத்தவர்களெல்லாம் என்னை தடுத்து நிறுத்தி சைக்கிள் திருடு போனதைப் பற்றியே விசாரித்தார்கள். வீட்டை வந்தடைவதற்குள் ஒரு நூறு பேருக்காவது பதில் சொல்லியிருப்பேன். அன்றுதான் நான் இவ்வளவு பிரபலமானவன் என்பதையே அறிந்தேன்.
வீட்டிற்கு செய்தி எட்டியிருந்தது. என் மனைவி குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள். அவள் மற்றப் பெண்களோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதில் அலாதி விருப்பமுடையவள். அற்பமான விஷயங்களுக்காகக் கூட மணிக்கணக்கில் அழும் ற்றல் கொண்டவள். அவளைப் போல கண்ணீர் விட்டு அழ வேறு எவரும் எங்கள் எல்லையில் இல்லை என்று அடித்துக் கூறுவேன்.
வீட்டிலிருந்து சற்றுத் தூரத்தில் சிறுவர்களின் கூட்டம் நின்றது. எனது மகன் கர்வத்துடன் சைக்கிள் திருடு போன செய்தியை நேரில் பார்த்தவனைப் போல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு முதல் முதலாக கர்வப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவனைச் சூழ்ந்திருந்த அப்பகுதியின் சிறுவர்கள் பொறாமையோடு அவன் கர்வப்பட்டுக் கொள்வதை பார்த்து நின்றனர். நிச்சயம் அவர்கள் தந்தையர்களின் சைக்கிள் திருட்டுப் போகாதது குறித்து வருத்தப்பட்டு கொண்டிருக்கலாம்.
நான் வந்து திண்ணையில் அமர்ந்தேன். அக்கம்பக்கத்தார் வந்து துக்கம் விசாரிக்க ரம்பித்தார்கள். நமது நாட்டில் துக்கம் விசாரிப்பது மிகப்பெரிய கலையாக உள்ளது. செருப்பு பிய்ந்து போனதை அப்பா செத்துப் போனதற்கான சம கம்பீரத்தோடு துக்கம் விசாரிப்பவர்களையும் காண முடியும். இதில் நிறைய கவனம் வேண்டும். ஏனெனில் வருபவர்கள் அளவுக்கு அதிகமாய் துக்கப் பட்டு நம்மை படுத்தி விடலாம். சிலர் தொடர்ந்து மூன்று நான்கு இடங்களில் துக்கம் விசாரித்த வணணம் இருக்கலாம். னாலும் திருப்தியடைய மாட்டார்கள்.
னால் சைக்கிள் திருடு போன துக்கம் மற்றவற்றை விட மாறுபட்டது. இதற்கான விசாரிப்புகள் இழவு வீட்டு விசாரிப்புகளுக்கு எதிரானவை. யினும் என் சுற்றத்தார் சமாளித்து விட்டனர். சைக்கிள் திருட்டுப் போனதால் நான் ஒன்றும் பெரிதாய் கவலைப் பட வில்லைதான். னால் துக்க விசாரணைக்குப் பின் நானும் கவலைப்படும்படியாகி விட்டேன். என் சுற்றத்தார் இவ்வளவு துக்கப்படாமலிருந்தால் சைக்கிள் திருட்டுப் போனது ஒரு பெரிய சம்பவமாகவே எனக்குப் பட்டிருக்காது.
விசாரிக்க வந்தவர்களின் பேச்சுகள் சற்று விபரீதமானவையே. '' ம்......ம்ம்! சரி எது நடக்கனுமோ அது நடந்துதானே கும். கவலைப்பட்டா எப்படி? எழுந்திருப்பா! போய் குளி! எதாவது சாப்பிடு!'' அல்லது ''நேரமுன்னு ஒன்னு இருக்குல்ல நமக்குன்னு எவ்வளவு நாள் எழுதிருக்கோ அவ்வளவு நாள் தானே இருக்கும். நேரம் வந்திடுச்சி போயிட்டு, எழுந்திருப்பா! போய் வேலைகீலையைப் பாரு!'' அல்லது ''கழுத, போவனுமுன்னு இருந்துச்சு, போச்சு. இப்ப என்ன வாழ்க்கையா போச்சு! வருத்தப்படுற கடவுள் நினைச்சா இது மாதிரி லட்சம் வந்து காலத்தொடும்...'' இதையெல்லாம் நீங்கள் கவனித்துப் பார்த்தால் இது சைக்கிள் திருடு போனதற்கான சமாதானமாகப் படலாம். புதிதாய் யாரேனும் வந்தால் நிச்சயம் என் மனைவி ஓடிப் போனதாய்த்தான் சந்தேகப்படுவார்கள்.
இப்படியாய் மாட்டிக் கொண்டேன். சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவதை பார்த்து நான் அவர்களுக்கு சமாதானம் சொல்லி வைப்பேன். நான் இவர்களை தவிர்த்து வீட்டிற்குள் போய் விடலாம்தான். னாலும் உள்ளே போனால் மனைவி கட்டிப்பிடித்து அழ ரம்பித்து விடுவாள் என்ற பயம். அபிப்ராயம் சொல்லவும் சளைக்கவில்லை சிலர். என் சைக்கிளை இரவல் வாங்கி ஓட்டிய ஒருவர், அதன் வேகத்தைப் பற்றி நிறைய பாராட்டினார். சிலர் அதன் வண்ணத்தையும் தோற்றத்தையும் வியந்து பாராட்டினார்கள். வாரம் சென்றாலும் அதில் காற்று குறையாமலிருந்ததாக பலர் ச்சர்யப் பட்டு பேசினார்கள்.
சிலர் துக்கத்தை குறைத்துக் காட்ட இன்னும் அப்பகுதியில் காணாமல் போன சைக்கிள்களைப் பற்றி பேசத் துவங்கினார்கள். எனக்குத் தெரியும் என் மனைவி என் மனைவி ஓடிப்போயிருந்தால் கூட இவர்கள் ராமன், சுக்ரீவன் கதைகளைச் சொல்லியிருப்பார்கள். ஒரு சிலர் சைக்கிள் கிடைத்துப்போக வாய்ப்பிருப்பதாய் சை வார்த்தைகளைக் கூறினார்கள்.
இன்னும் சிலர் இனி எப்படிப்பட்ட சைக்கிள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றிய லோசனைகளையும் வழங்கினார்கள். அதாவது மனைவி ஓடிப்போனவுடன் புதுப்பித்துக் கொள்ளும் புதிய உறவுகள் போல.
வருகின்ற ஒவ்வொருவருக்கும் சைக்கிள் எப்படித்தான் திருடு போனது என்ற கேள்வி அவசியமாகிப் போனது. நான் நிரம்ப பொறுமையுடன் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே வந்தவர்கள் உதவியால் சிலதை சொல்லிக் கொண்டிருந்தேன். வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் என்னை எட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச கொஞ்சமாய் சைக்கிள் பற்றிய பேச்சு மறைந்து என்னைப் பற்றி பேச ரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ என் சைக்கிள் திருடு போனதாகவே பட்டது. என் நல்ல பல குணங்களைப் பற்றி எல்லோரும் உச்... கொட்டிப் பேசினார்கள். அதைக் கேட்டு இவ்வளவு நற்குணங்கள் என்னிடம் உள்ளதா என வியந்தேன்.
ஓரிரு நாட்கள் சுற்றுப் புரத்தில் சைக்கிள் திருட்டுப் போன சோகம் அப்பியிருந்தது. நான் எங்கே போனாலும் தொடர்ந்திருக்கும் அரட்டைகள் அப்படியே நின்று விடும். எல்லோரும் என்னை அனுதாபப் பார்வை பார்த்து பேச ரம்பித்து விடுவார்கள். இப்படியாய் சாகாமல் செத்துப் போனவனின் நிலையை அனுபவிப்பேன். இறந்தபின் நான் என்னைப் பற்றிய பேச்சுகளை கேட்க இயலாதுதான். னால் சக்கிளை இழந்ததின் காரணமாய் நான் அதை அனுபவித்து விட்டேன். என் சைக்கிளை திருடி எனக்கு இந்த அற்புத சுகத்தின் அனுபவத்தை தந்த அந்த மகராசனை மீண்டும் வணங்கி மண்டியிடுகிறேன்.
------------------------------------------------------------------
அசோக் சுக்லா: (பிறப்பு 1940)
இந்தி இலக்கிய உலகில் எழுத்தாளர் அசோக் சுக்லா மிகவும் பிரபலமானவர். இவருடைய சமூக விமர்சனக் கட்டுரைகளை படிக்க மிகப் பெரிய வாசகர் வட்டம் ஒன்றை ஏற்படுத்தி வைத்துள்ளார்.
இந்தி இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெற்ற சுக்லா விமர்சனங்கள், கட்டுரைகள், கதைகள், புதினங்கள் என பலதரப்பட்ட படைப்பாக்கங்களில் தனது திறமையை வெளிப் படுத்தியுள்ளார். இவருடைய எழுத்தில் உள்ள அங்கதமும், நகைச்சுவையும் யாரையும் கவரக் கூடியது. மிகக் கடினமான விஷயங்களையும் தத்துவங்களையும் பிரச்சனைகளையும் மிக எளிமையான மொழியிலும் நகைச்சுவை கலந்தும் சொல்லி விடுவார். அரசு மற்றும் அரசியல்வாதிகள் சமூக அவலங்கள் என அனைத்தையும் தனது நகைச்சுவை சாட்டையால் விலாசி விடுகிறார்.
கட்டுரையாளராக அதிகம் அறியப் பட்ட இவரின் 'புரொபேசர் புராண்' என்ற நாவல் பிரச்சித்தம். மேலும் ' ஹட்தால் ஹரிகதா' என்ற சிறுகதைத் தொகுப்பும் பரபரப்பாக பேசப் பட்டவை. கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தும் குறிப்பிடத் தக்கது.
தற்போது இந்தி மொழியில் வெளியாகும் முன்னனி பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.