Monday, April 23, 2007

என்னுள்

இருக்கை அபகரித்தவனை
திட்டித் தீர்க்கிறேன்
உரசிச் செல்பவனை
ஓங்கி அரையத் துடிக்கிறேன்
சிறப்பு வாகன ஏற்பாடு
குறித்துப் பேசுகிறேன்
டை மறைக்காத
வயிற்றிலும்
விம்மி புடைத்த
மார்பிலும்
பதிந்த கண்களை
பறித்துவிட துடிக்கிறேன்
இத்தனையும்
நிகழ்ந்து விடுகிறது
எதிர் நிற்பவளின்
புட்டம் உரச
நீளும் முழங்கையை
கட்டுப் படுத்த முடியாத
என்னுள்.


மதியழகன் சுப்பையா,மும்பை

No comments: