Monday, April 23, 2007

பதிவாகும் தாராவி வணச் சித்திரம்

உலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின் சொத்து எனலாம். வணங்கள் ஒரு நாட்டின் காலப் பதிவுகள் எனலாம். அவை மிகச் சிறப்பாக செய்யப் படவேண்டும். செய்யப் பட்டும் வருகின்றன.
னால் இன்று வணப் படுத்துதலில் ஈடு பட்டுள்ளவர்கள் அரசு அமைப்புகள் , அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள். இதில் அரசு தனக்கு சாதகமானவற்றை செய்கின்றன அல்லது அரசு சார்பாக நியமிக்கப் பட்டவர் தனக்கு சவுகரியமானவற்றை வணப் படுத்துகிறார். தனியார் அமைப்புகள் அவர்களுக்கு நிதி திரட்டும் எண்ணத்தில் அதற்கு தகுந்தார்போல் செய்கின்றன. விதிவிலக்குகளும் உண்டு. இறுதியாக தனி நபர்கள் பெயரும்-புகழும் பணமும் பெறவேண்டி வணப் படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் உண்மைகள் பதிவு செய்யப் படாமல் போய் விடுகின்றன. மேலும் நல்ல பல விஷயங்கள் சரியாக பதிவு செய்யப் படாமல் இருக்கின்றன. மேல் நாட்டு வணப் பட உத்திகளை பார்த்து காப்பி அடித்து இங்கு செய்யப் பட்டு வருவது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். மேலும் இந்திய நாட்டின் மிக முக்கிய விஷயங்கள் குறித்த பல வணப் படங்களை வெளிநாட்டவர்கள் உருவாக்கி உள்ளனர். வெளிநாட்டவர்களின் படக்குழு இங்குள்ள சுற்றுலா கைடுகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் கொடுக்கும் விபரங்களை கொண்டு வணப் படங்களை தயாரித்து இதுதான் இந்தியாவின் நிலை பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி.
தாராவி குடிசைப் பகுதி குறித்தும் இவ்வாறு பல வணப் படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. னால் அவை அனைத்தும் தாராவியின் உண்மை நிலையை வெளிக்காட்டவில்லை.
மும்பை மாநகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதி தாராவி என்று அறிமுகப் படுத்த அவசியமில்லை. இந்தக் குடிசை பகுதி குறித்து பலருக்கும் பலவிதமான தனித்தனி கருத்துகள் உண்டு. னால் இங்கு வாழும் மக்களுக்குத்தான் தாராவியின் உண்மையான உருவம் தெரியும். மும்பையின் பிற எந்த குடிசைப் பகுதியிலும் இல்லாத பல விஷயங்கள் இங்கு உண்டு. பதினைந்து நிமிடங்கள் தொலைவில் மும்பையின் முக்கிய மூன்று ரயில்பாதையின் ரயில் நிலையங்களான மாஹிம், சயான், குருதேக்பஹாதூர், கிங் சர்கிள், மாட்டுங்கா மற்றும் பாந்திரா கிய ரயில் நிலையங்களை அடையலாம்.
குடிசைப் பகுதி வாழ்க்கை குறித்தும் அங்கு வாழும் மக்கள் குறித்தும் குறை மதிப்பீடு செய்து விட முடியாது. குடிசைப் பகுதியில் இருக்கும் பல கொண்டாட்டங்கள் வேறு எந்த மக்கள் இருப்பிட அமைப்பிலும் காண முடியாது. தாராவி குடிசை பகுதி தனித்துவம் மிக்கது. மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. பல்வேறு வகை மக்கள் விரவிய சமுதாயத்தை உடையது. பெரிய அளவில் நடக்கும் வியாபாரங்களுக்கான உற்பத்தி பொருட்கள் தயாராகும் சிறு தொழில் நகரமாகும்.
புறாக் கூண்டுகளில் மனித வாழ்க்கை சாத்தியம் என நிறுபிக்க தாராவி மக்களின் வீடுகளைக் காட்ட முடியும். துணிமணிகளை மட்டுமல்ல சமையல் பாத்திரங்கள் அடுப்பு முதலியன உட்பட அனைத்தையும் மேலே தொங்க விடுவதனால் வீட்டின் உட்பகுதியில் உண்டாகும் பரப்பில் படுத்துக் கொள்ளும் மக்களின் வாழ்க்கை முறை புதுமை அல்ல. அதுவே அவர்களின் நாகரீகமாகி விட்டது.
அப்பளங்கள் உருட்டுவது, ஈக்கம் மாறுகள், பூ விளக்குமாறுகள் செய்வது, பூசணி விதைகள் உடைப்பது, வளையல்கள், காதணிகள், கழுத்துச் சங்கிலிகள். ஸ்டிக்கர் பொட்டுகள் கியவைகளில் வண்ணம் நிரப்புவது (மீனா), சேலைகளுக்கு பால் தைப்பது, ரெடிமேட் டைகளுக்கு பட்டன் தைப்பது, ஜிகினா தைப்பது ஊறுகாய் தயாரிப்பது, இப்படி சிறு பணிகள் பலவற்றை வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்கள் மதிய வேளைகளில் செய்து கொண்டிருப்பதை குறுகிய தாராவி குடிசைப் பகுதியின் முடுக்குகளில் (கல்லி) காண முடியும்.
இவை தவிர பயந்தர் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஸ்டீல் வீட்டு உபயோகப் பொருட்களை பளபளப்பாக்க பாலீஸ் செய்ய பயன் படும் துணி சக்கரங்கள் (ப·ப்) தாராவி குடிசைகளில் தான் தயாராகின்றன. இன்று மும்பை மட்டுமல்லாது உலகெங்கும் இருக்கும் மால் எனப்படும் நவீன அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப் படும் உயர்ரக யத்த டைகள் (ரெடிமேட்) தயாராவது தாராவியின் தகர வீடுகளில் தான். கம்யூட்டரின் மிக நுண்ணிய பாகங்களையும் மொபைல் போன்ற நவீன தொலைபேசி சாதங்களிலும் பயன் படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஜப்பான் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு கண்டெய்னர்களில் நிரப்பி கழிவு பிளாஸ்டிக்களை அனுப்புவது தாராவியின் குப்பை வியாபாரிகள் தான்.
அறுபது ண்டுகளுக்கும் முன்னதாக குஜராத் மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த பானைகள் மற்றும் மண் பாண்டங்கள் செய்யும் 'கும்பார்' எனப் படும் இனத்தினர் மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து தோல் பதனிடும் லைகளை நிறுவிய முஸ்லீம் மக்களும் இப்பகுதியின் பூர்வகுடி மக்களான கோலி எனப் படும் மீனவ இன மக்களும் தாராவியின் பல வண்ண மாற்றங்களைக் கண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நவநாகரீக யுகத்தின் இளைஞர்கள் கொஞ்சமும் சலித்துக் கொள்ளாது தங்களின் பிறப்பிடங்களை விட்டு விலக எண்ணாமல் இங்கிருந்தபடியே மேதமைப் படிப்புகளைப் படித்தும் தாங்கள் வசிப்பது அழுக்கும் சாக்கடையும் புடை சூழ்ந்த ஒரு மாபெரும் குடிசைப் பகுதி என்ற கூச்சமோ தாழ்வுமனப்பாண்மையோ இல்லாது வாழ்ந்து வருவதும் வியக்கத்தக்கது. இங்கு இருந்து கொண்டு மேன்மைக் கனவுகளை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கு தலைமை அலுவலகங்களும் தமிழகத்தின் அனைத்து பொருட்களையும் கிடைக்கும் படி வசதி செய்யப் பட்டு ஒரு குட்டி தமிழ்நாடு போலவே காட்சியும் அளிக்கிறது. தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பை வருபவர்கள் குறைந்த செலவில் தங்கி உண்டு உறங்க வசதியாக பொங்கள் வீடுகள் என்ற பெயரில் இயங்கி வருபவற்றை என்ன வென்று சொல்வது. மும்பையில் தமிழர்களைத் தவிர வேறு எந்த மொழியினரும் ஏற்படுத்தாத ஒரு சேவை இது.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என விரவி கிடக்கும் தாராவியில் கூடவே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பின்னித்தான் கிடக்கிறது. இந்து மதத்தினர் ஊர்வலம் வருகையில் தங்கள் கடைகளின் வெளியில் இருக்கும் அசைவ உணவுகளை மூடி வைக்கும் முஸ்லீம்களின் நாகரீகத்தை தாராவியில் காணலாம்.
வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட சர்ச்கள், மசூதிகள் மற்றும் கோயில்களையும் காணலாம்.
இவ்வாறான கொண்டாட்டங்களை படச்சுருளில் பதிவு செய்யப் பட வேண்டும். இதற்கு முன் பலரும் தாராவியை பல்வேறு வகையில் வணப் படுத்த முயற்சி செய்துள்ளனர். னால் யாரும் தாராவியை முழுமையாக வணப் படுத்த வில்லை. பல திரைப்படங்களில் தாராவியின் குடிசை அமைப்புகள் காட்டப் பட்டுள்ளதே தவிர மக்களின் வாழ்நிலை காட்டப் படவில்லை.
இங்குள்ள மக்கள் அழுக்கானவர்கள் என்றும் சாக்கடைகளில் வசிப்பவர்கள் என்று மட்டுமே வெளியுலகுக்கு காட்டப் பட்டுள்ளது. இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் தான் னால் உழைப்பாளிகள். குடிசைகளில் வாழ்பவர்கள்தான் னால் வாழ்வை கொண்டாடுபவர்கள். இவர்களின் உண்மையான வாழ்வையும் பிரச்சனைகளையும் பதிவு செய்ய வேண்டியது அதியவசியமானது.
இவ்வாறு இன்னும் ஏராளமாக எழுதி குவிக்கலாம். இவற்றை மிகுந்த அக்கரையோடு வணப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மதியழகன் சுப்பையா மற்றும் இதன் தயாரிப்பாளர் முருகானந்தம் கியோர் ஈடு பட்டுள்ளனர்.
மும்பையின் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் அடுக்குமாடிக் கட்டிடங்களாக கி வருகிறது. குடிசை வாழ் மக்களின் சையும் அதுதான். னால் அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்து கொண்டு இப்பொழுது கிடைக்கும் வருமானம் கொண்டு இந்த மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தி விட முடியும். சாலையில் கூறு வைக்கப் பட்ட காய்கறிகளை வாங்கி வந்து சமைத்து உண்ணும் மக்கள் அடுக்கு மாடி கட்டிடங்கள் கி விட்டால் செலவுகளை எங்கனம் சமாளிப்பார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டியது அவசியம் தான் னால் அதனுடன் அவர்களின் பொறுளாதார நிலையும் உயர்ந்தால் மட்டுமே இது சாத்தியம் இல்லையெனில் மீண்டும் இந்த மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்து புதிய தாராவி ஒன்றை உருவாக்க நேரிடும்.
'தாராவி- எ சிட்டி வித்தின் எ சிட்டி' என்ற பெயரில் உருவாகும் இந்த வணப் படத்தின் மூலம் மக்களின் வாழ்நிலையும் தாராவியின் உண்மையான வண்ணமும் காட்சி படுத்தப் படும் என்று இப்படத்தின் இயக்குனர் தெரிவித்து உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச்-25 முதல் துவங்கியது. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். இப்படத்திற்கு மக்களின் தவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. னால் இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது. னால் தாராவி குறித்து மிகச் சரியான வணப் படம் ஒன்று அவசியம் அதற்காகவேனும் நாம் இந்த படக்குழுவினருடன் கை குளுக்கி அவர்களுக்கு தேவையான விபரங்களை கொடுத்து தரவளிக்கலாம்.

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பதிவில் ஆ என்ற எழுத்து வரும் இடங்களில் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது !!