Saturday, May 12, 2007

மேதமை கடந்த கவிஞன்- விந்தா



மராட்டி இலக்கிய உலகில் 1947ம் ண்டு பா.சி. மண்டேகரின் ' காஹி கவிதா' என்ற தொகுதி புதுக் கவிதையின் துவக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுக் கவிதைகள் அசூர வேகத்தில் எழுதப் பட்டு வந்திருக்கிறது. புதுக் கவிதையின் வேக வளர்ச்சியும் அது கடந்து வந்த காலத்தையும் கவனத்தில் கொள்கையில் அதனை புதுக் கவிதை என விழித்தல் தகுமா என்பது விவாதிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. புதுக்கவிதையின் இன்றைய வயது மூன்று தலைமுறையாகி விட்டது. னால் இந்த தலைமுறைக் கவிதைகள் புதிய இலக்கு தேடி வேகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பலமுறை தேக்க நிலையும் கண்டிருக்கிறது. இடையிடையே நித்திய பிரவாகமாகவும் பாய்ந்திருக்கிறது. இந்த ஓட்டங்கள் க்கமான திசைகள் நோக்கியும் பல இதற்கு நேர் எதிர் திசையை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்தது. இலக்கிய மற்றும் சமூகத்தில் இந்த புதுக் கவிதைகளுக்கு தரவும் வெறுப்பும் சமமாகவே இருந்தது. மராட்டி புதுக் கவிதைகள் துவக்கக் காலத்தில் அழமான அடித்தளம் அமைத்துக் கொண்ட காரணத்தால் இன்று அவை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெற்று நிற்கின்றன. மராட்டி புதுக் கவிதைகளின் முதல் தலைமுறைக் கவிஞர்களில் விந்தா கர்ந்திகர் சிறப்பிடம் பிடித்தவர். கோவிந்த் வினாயக் கரந்திகர் என்ற தனது பெயரில் கோவிந்த் மற்றும் வினாயக் என்ற சொற்களை பொதுப்படையாக கருதாத காரணத்தால் 'விந்தா' என்று சுறுக்கிக் கொண்டார். மேலும் இப்பெயர் பெண்பாலாக ஓலிப்பது இவருக்கு அதிகம் பிடித்திருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். விந்தா மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பகுதியில் சிந்துதுர்கா மாவட்டத்தின் கால்வான் கிராமத்தில் கஸ்டு 23ல், 1918ம் ண்டு பிறந்தார். வறுமையான சூழலில் பல தடைகளை மீறி கல்வி கற்றார். இயல்பாகவே அவருக்குள் இருந்த அறிவு தாகம் அவரைத் தேடிப் படிக்கச் செய்தது. 1949 முதல் 1981 வரையிலான காலக் கட்டம் விந்தாவின் படைப்புகள் உச்சத்தில் இருந்த காலக் கட்டமாகும். ஸ்வேத்கங்கா (1949), மிருதகந்த் (1954), துருப்பத் (1959), ஜாதக் (1968) மற்றும் விருபிக்கா(1981) கியவைகள் இவரது கவிதைத் தொகுதிகளாகும். இவை மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கான கவிதைகளையும், சிறுகதைகளையும் மற்றும் ய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளார். மேலும் 'அரிஸ்ட்டடால் காவ்யசாஸ்த்ர' கோத்தேயின் 'பாவுஸ்ட்' மற்றும் ஷேக்ஸ்பியரின் 'ராஜா லியர்'' கிய மொழி பெயர்ப்புகளையும் செய்து உள்ளார். விந்தா தனது கவிதைகளையும் ங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு இவரது இலக்கியப் பணி விதவிதமாக அலங்காரப் பட்டிருக்கிறது. ஞானபீட விருது பெற்றிருக்கும் விந்தா கராந்திகர் 87 வயதில் அனுபவச் சுறுக்கங்களை உடல் முழுவதும் பெற்றிருக்கும் மேதை. அவரை மராட்டி மொழி கவிஞராகவும் எழுத்தாளராகவும் மட்டுமே குறிப்பிடுவது சிறப்பாக இருக்காது. உலக இலக்கியத்தில் இடம் பிடித்த மராட்டிக் கவிஞன் என்று கூறுவது மிகையாக இருக்காது. இலக்கியத்தில் இலக்கு இதுவென நிர்ணயிக்காமல் மொழியையும் நாட்டையும் தாண்டி பயணப் படுபவனை இலக்கியவாதி என்று குறிப்பிட்டுக் கொள்ளலாம். கவிதையாகவோ உரைநடையாகவோ தான் சார்ந்த மக்களின் வாழ்நிலையை பதிவு செய்யும் படைப்பாளியை மொழி மற்றும் மாகாண எல்லைகளால் தடுத்து நிறுத்த முடியாது. விந்தா கரந்திகர் இந்த இலக்கை தொட்ட கவிஞன் என்பது ய்வின் முடிவு. அவரது படைப்பூக்கம், உலக வாழ்வின் போராட்டங்கள் மற்றும் தனித்துவத்தை அடைய முனையும் உழைப்பு கியன மொழி மற்றும் நாடு என்ற சிறிய வட்டத்தில் அவரை அடைத்து வைக்க முடியவில்லை. மும்பையின் புறநகர் பாந்திராவின் மேற்குப் பகுதியில் சாஹித்திய வாசாகத் அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். விந்தா கரந்திகர் வயோதிகம் காரணமாக மிக மெதுவாக நடக்கும் கம்பீரக் கவிஞன். தினமும் காலையில் காய்கறி மற்றும் பழங்களை வாங்க தனது மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி வருகிறார். இதுவரை தனது காய்கறிப் பையை எவரையும் தூக்கிக் கொள்ள அனுமதித்ததில்லை. சிக்கனமாகவும் எளிமையாகவும் வாழும் விந்தா கரந்திகர் லட்சக்கணக்கான ரூபாய்களை பொதுநலத்திற்காக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இளையவர்கள் காலில் விழுந்து சி பெற முனைந்தால் கடுமையாக மறுத்து விடும் இவர் சமவுடமைக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தவர். தனது வாழ்வில் வணக்கத்திற்குறியவர்களாக சானே குருஜி, சேனாபதி பாபட் மற்றும் பாபா அம்டே கியோரைக் குறிப்பிடும் இவர் இதுவரை எவர் காலிலும் விழுந்ததில்லை. மேற் குறிப்பிட்டவர்களில் முதல் இருவர் காலமாகி விட்டனர். பாபா அம்டே தனது இறுதிகாலங்களை நாக்பூர் அருகில் கழித்து வருகிறார். னால் விந்தா கரந்திகருடன் தொடர்பில் இல்லை. வறுமைச் சூழலில் வளர்ந்த விந்தா மும்பையின் ருயியா கல்லூரி மற்றும் ஐஏஇஎஸ் கல்லூரியில் ங்கில இலக்கியப் பேராசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எப்பொழுதும் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருக்கும் இவர், வீட்டில் தச்சுப் பணிகளையும் செருப்பு தைத்தலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார். தற்போது ங்கில இலக்கிய பேராசிரியராக பணியாற்றி வரும் அவரது மாணவர்களில் ஒருவர் '' விந்தா மிகச் சிறந்த சிரியராகவும் தெளிவான சிந்தனையாளராகவும் இருந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். ''அவர் எங்களுக்கு ஷேக்ஸ்பியரின் 'மெர்சன்ட்ஸ் ப் வெனிஸ்' மற்றும் 'மேக்பெத்' நாடகங்களை நடத்தினார். அந்த நாடகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டது போல் இருக்கும் அவர் பாடம் நடத்துகையில்'' என்று நினைவு கூர்கிறார். சிகாகோ பல்கலைக் கழகத்திலும் சிறிது காலம் பணியாற்றி உள்ளார். இந்த காலக் கட்டதில்தான் ங்கிலதிலிருந்து மராட்டியில் மொழி பெயர்ப்புகளையும் செய்தார். 'விந்தாவின் கவிதைகள்' என்றும் 'இன்னும் கொஞ்சம் கவிதைகள்-விந்தா' என்றும் தனது கவிதைகளை ங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுதியை ஏ.கே ராமானுஜத்திற்கு அற்பணம் செய்துள்ளார். சிகாகோவில் இருக்கும் போது ஏ,கே ராமானுஜரின் தமிழ் மற்றும் கன்னட பழங்கவிதை மொழி பெயர்ப்புகளால் பெரிதும் கவரப் பட்டார். மழலைகளுக்காக மிகச் சிறந்த மராட்டி 'ரைம்களையும்' எழுதியுள்ளார். தனது தாய் மொழியின் இனிமையை மராட்டி குழந்தைகள் பால்ய வயதிலேயே உணர வேண்டும் என்பதற்காகவும் மொழியின் வளர்ச்சியில் எங்கும் இடைவெளி விழுந்து விடக் கூடாது என்பதற்காகவும் அவர் கடுமையாக போராடினார். குழந்தைகளையும் சிறுவர்களையும் கண்டால் குதூகலம் அடையும் விந்தா மிகச் சமீபம் வரை தனது மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் பட்டம் விட்டு விளையாடியிருக்கிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் பொதுநலப் பணிகளையும் செய்து உள்ளார். குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் தடுப்பு போன்ற பணிகளுக்காக நிதி உதவியும் தரவும் தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் நிஜாமின் ட்சியின் போது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப் பட்டு நான்கு மாதங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார். தனது முப்பதாவது வயதில் எழுதத் துவங்கிய விந்தா கரந்திகர் தனது கவிதைகளில் மார்க்ஸிச சிந்தனைகளை கலந்து எழுதினார். தனது கவிதைகளில் சமூக அநீதிக்கு எதிரான கோபத்தையும் எதிர்ப்புகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தினார். மராட்டி கவிதைகளில் புதுமையையும் சோதனைகளையும் அறிமுகப் படுத்தினார். கவிஞராக, கட்டுரையாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக அவர் இயங்கி உள்ளார். கவிதைகளில் தனி முத்திரைப் பதித்த கரந்திகர் தற்போது வெளிவராத ''சத்யகதா' என்ற இதழில் 1973ம் ண்டு 'வக்ரகுண்ட மகாகாய'' என்ற தலைப்பில் கடவுள் கணபதியின் துந்திக்கையை ண்குறியாக கண்டு அதன் மேல் சைப் படுவது போல் கவிதை எழுதியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது, மராட்டி இலக்கிய கூட்டங்களில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இவரது 'ஸ்வேத்கங்கா'' 'தொழிலாளர்களின் வியர்வை கங்கை' என்ற பொருள் படும் தலைப்பில் வெளியிடப் பட்ட முதல் கவிதைத் தொகுதியின் கவிதைகள் அதிகம் கொண்டாடப் பட்டவை. மராட்டிய பாட்டாளிக் கவிஞன், மில் தொழிலாளி, சாலை வாசகன் என்று அறியப்பட்ட நாராயண் சுர்வே கரந்திகரின் கவிதைகள் தனக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளாதாக தெரிவித்து உள்ளார். முற்போக்கு கவிதைகளை எழுதிய வசந்த் பாபட் மற்றும் மங்கேஷ் பட்காங்கர் கியோருடன் மூன்றாவது மூர்த்தியாக விந்தா கரந்திகரும் இணைந்து கொண்டார். முற்போக்கு எழுத்தில் இந்த மூம்மூர்த்திகள் நீக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். யிரக்கணக்கான கவிதை பிரியர்களுக்கு பல ண்டுகள் இந்த மூவரும் கவிதை விருந்து படைத்தவர்கள். மதங்களை கடுமையாக வெறுக்கும் கரந்திகர் அயோதயாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அப்பொழுது சத்தாரா மாவட்டத்தில் நடந்த மராட்டி சாஹித்ய சம்மேளன மாநாட்டில் மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஒரே கவிஞர் கரந்திகர்தான். மாநாட்டுக் கூட்டத்தில் வேறு எவரும் இவருக்கு தரவு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. அது ஊமைகளும் செவிடர்களும் கலந்து கொண்ட மாநாடு என்று கவிஞர் சுரேஷ் பாட் பின்னர் தெரிவித்து உள்ளார். இவ்வாறான இலக்கியக் கூட்டங்களில் எந்த முன்னேற்றத்தையும் இன்றவும் காணாத அவர் மராட்டி சாஹித்ய சம்மேளனத்தின் தலைமை பொறுப்பு கொடுக்கப் பட்டபோது மறுத்ததோடு அல்லாமல் மாநாட்டிற்கு செல்வதையும் தவிர்த்தார். கரந்திகர் வசிக்கும் இலக்கியவாதிகள் குடியிருப்பு கட்டிடம் அருகில் கலா நகரில் ஓவியர்களும் கலைஞர்களும் இருக்கும் இடத்தில் சிவ சேனா தலைவர் பால்தாக்ரேவின் வீடு இருந்தது. (பால் தாக்ரே பத்திரிக்கையில் அரசியல் கார்டூனிஸ்டாக இருந்தவர்). கட்சி துவங்கி கோஷங்களுடன் கரந்திகரின் வீடு கடக்கையில் மாடியிலிருந்து '' டேய் பாலா, என்னடா சத்தம்? உன் அரசியல் பிரச்சாரத்தை காம்பவுண்டை தாண்டி வைத்துக் கொள். மனுஷன நிம்மதியா இருக்கவிடு'' என்ற அதட்டலில் மௌன ஊர்வலம் நடத்தி உள்ளார் சிவசேனாவின் சிங்கம் பால்தாக்ரே. அந்த அளவுக்கு கம்பீரமும் தைரியமும் உள்ள கவிஞர் கரந்திகர். இவர் சிவசேனா மற்றும் ர் எஸ் எஸ் போன்ற பாசிச கொள்கை அமைப்புகளுக்கு எதிராக இருந்தவர். சமூகத்தை சீர் கெடுக்கும் கொள்கைகளையும் அதனை ஏற்று நடக்கும் அமைப்புகளையும் வெறுத்தார் னால் மனிதர்களை வெறுக்கவில்லை. மராட்டி நாடக உலகின் உச்ச நட்சத்திரம் விஜய் டெண்டுல்கர் சிவசேனா கட்சியின் கொள்கைகள் பிடிக்காமல் அப்பொது முதல்வராக இருந்த மனோகர் ஜோஷியின் கைகளால் விருது பெறுவதை தவிர்த்தார். னால் கரந்திகருக்கு ஞானபீட விருது வழங்கப் பட்டதும் மனோகர் ஜோஷியின் கைகளால் பூங்கொத்து வாங்குவது போல் த டைம்ஸ் ப் இந்தியா நாளிதழ் புகைப் படம் வெளியிட்டது. இதற்கு '' தேடி வந்த விருதை எப்படி மறுக்க முடியவில்லையோ அப்படியே வீடு தேடி வந்து வாழ்த்துபவர்களை விரட்டவும் முடியவில்லை'' என்று மட்டும் சொல்லி வைத்தார். கரந்திகர் கேஷவ்சுத் பரிசு, சோவித் நாட்டின் நேரு இலக்கிய விருது, கபீர் சம்மான் விருது மற்றும் இந்திய சாஹித்ய அகதமியின் சீனியர் பெல்லோசிப் விருது கிய அவர் பெற்ற பல விருதுகளுள் குறிப்பிடத்தக்கவை. விருதுகளில் பெரிய விருது வாசகர்களின் அன்புதான் மற்றவைகள் எல்லாம் சம்பிரதாயமானவைகள் என தெரிவித்து உள்ளார். இலக்கியவாதி வி.எஸ் காண்டேகர், மற்றும் 'குசுமக்ராஜ்' என்று அழைக்கப் பட்ட கவிஞர் வி.வி ஷிர்வாட்கர் கியோர் வரிசையில் விந்தா கரந்திகருக்கும் ஞானபீட விருது வழங்கப் பட்டுள்ளது. சமீபமாக விந்தாவின் நினைவு மங்கி வருவதாகவும் யாருக்கும் பேட்டியளிப்பதில்லை எனவும் சந்தித்தவர்கள் தெரிவிக்கிறார்கள். னால் தனக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டதும் '' இந்த விருது எனக்கு சொந்தமாக இருக்காது. இது மராட்டி மொழிக்கும் கவிதைக்கும் வழங்கப் பட்டது. இந்த விருது மராட்டி மண்ணை பெருமை படுத்துவது. இதனை எனக்கு வழங்கப் பட்டதாக குறிப்பிடாதீர்கள்'' என்று வாய்மொழிந்துள்ளார்.


மதியழகன் சுப்பையா

No comments: