Wednesday, July 11, 2007

நிழல் நினைவுகள்


---------------------
1
தூங்கி எழுந்து போ
முகம் உப்பியிருக்கும்

கழிம்பு தடவி
பவுடர் பூசிக்கோ
எடுப்பாயிருக்கும்

வண்ணப் படமா
இதை மாட்டு

முழுப்படமா
இது வேண்டாம்

மார்பளவா
இதுதான் சரி

தலைத் தூக்கு
லேசா அப்படி
லேசா இப்படி
கிளிக்
-----------------------------------------------------


2.
வான் கூர்ந்து
சிந்திப்பது போல்

கன்னத்தில் கைவைத்து
புன்னகைத்து

கால் சட்டையில்
கைநுழைத்து
எங்கோ பார்ப்பது போல்

அறைமுகத்தில்
ஒளிபூசியபடி
மெழுகு வெளிச்சத்தில்
சட்டையில்லாமல்

பூங்காவில்
பூ பறித்தபடி
மரம் சாய்ந்தபடி
படியமர்ந்து
நிஜம் சிதைய
நிழல் பதிவுகள்
------------------------------------


3.
அதிகம் எடுக்கப்படாது
யுசு குறைஞ்சிடும்

சேர்ந்து எடுத்தா
பிரிஞ்சு போயிடுவோம்

எதிர்மறை எண்ணம்
எல்லாவற்றிலும்.
---------------------------------------------
மதியழகன் சுப்பையா
மும்பை

1 comment:

Unknown said...

அருமையான பதிவுகள்!
வாழ்த்துகள்!

அன்புடன்
கே.எஸ்.செண்பகவள்ளி