Thursday, April 05, 2007

ரஷாபிஷேகம்












மிளகுரசம் இல்லையென்றால்
சாப்பிடமாட்டாய்

குறைதலும் மிகுதலும்
குற்றமே உன்னகராதியில்

அடுப்பு தெய்வத்தை
அன்றாடம் வேண்டியே
சமைக்கத் துவங்குவேன்

குறைசொல்லிக் கொண்டே
கும்பி நிறைக்கிறாய்
கையை நக்குகிறாய்

ரசம் தெளித்து
வசை மொழிவாய்
தினம் தினம்

ஊறுகாய் தொட்டு
உண்டு படுக்குமென்
கால் நக்கி களிப்பாய்

மதியழகன் சுப்பையா
மும்பை

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு . புரியாத மாதிரியும் இருக்கு :) பின் நவீனத்துவக் கவிதையா :)