Thursday, August 16, 2007

ஒருத்தர் கூடவா இல்லை??? என்ன கொடுமைடா இது.......?

அன்புத் தோழர்களுக்கு,
வணக்கம்.
இன்னும் சிவாஜி திரைப்படம் குறித்தும் காசு பெறாத விஷயங்கள் குறித்தும் மயிர் பிழக்கும் விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொடரட்டும். மன்னிப்புகளுடன் சிறு அறிவிப்பு. மும்பையிலிருந்து ''அணி'' என்றப் பெயரில் கவிதைக்கான இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. நன்கொடைகள், சந்தாக்கள் கேட்டகவில்லை படைப்புகள் தாருங்கள். அடுத்த இதழ் தயாரிப்பு ஆயத்தமாகி விட்டது. ஏற்கனவே அறிவித்தபடி இந்த இதழ் ''விமர்சன சிறப்பிதழ்'' நூல் விமர்சனங்கள்., விமர்சனங்கள் குறித்த கட்டுரைகள் அவசியப் படுகின்றன. கவிதைகளும் கவிதைச் சார்ந்த கட்டுரைகளும் தொடர்ந்து அனுப்புங்கள். அல்லது இதில் ஈடுபாடுடையவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.
ஆர்வமானவர்கள் அனுப்பி வையுங்கள். விபரமானவர்கள் விரைந்து செயல் படுங்கள். புரிந்து கொண்டவர்களுக்கு இத்தனை போதுமானது.
மேலும் ''அணி'' இதழ் சார்பாக குழந்தைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்ட சிறுகதைகளை தொகுக்கும் முயற்சியும் உள்ளது. பங்குத் தொகையாக எதுவுமில்லை. படைப்புகளை மட்டும் தாருங்கள்.
மாதிரி இதழுக்கு எழுதுங்கள்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
MADHIYALAGAN SUBBIAH,
10/1-B, TRIVEDI & DESAI CHAWL,
D'MONTE LANE, MALAD (W),
MUMBAI-400064.

PHONE: 09323306677
E-mail: madhiyalagan@rediffmail.com

1 comment:

மாதங்கி said...

முகவரியைக் குறித்துக்கொண்டுள்ளேன். உடனே அனுப்பி வைக்கிறேன்

மாதங்கி