Saturday, September 09, 2006

கனவுகளே...

---------------
'கவனமாய்ப் போடா' என
வழக்கத்திற்கும் அதிகமாய்
அன்பு காட்டுவாள்
கனவு கண்ட அம்மா.
-----------------------------------------------

அவளைப் புணர்ந்தது போல்
கனவு கண்டதாய்
பொய்யுரைப்பான்
கனவை
நனவாக்க.

------------------------------------------
உழைப்பாளிக்கும்
சோம்பேரிகளுக்கும்
கனவுகள் வருவதில்லை.
------------------------------------------
கனவுகள் பற்றி
கதைகள் பல

மூளையின் ழப் பதிவுகளே
மெல்லிய காட்சியாய்
கனவோடுகிறது என்று
அறிவியல் சொல்கிறது
யிரம்

கலைத்துத் தூங்கும் தம்பி
கெட்டவார்த்தை சொல்லி
உடல் நெலித்து
உளருவான்

திடுக்கிட்டு எழுந்து
டை சரி செய்து
படித்துக் கொண்டிருக்கும் என்னை
சந்தேகப் பார்வை பார்த்து
தூங்க முயலுவாள்
வயது வந்த தங்கை

குரட்டை சத்தம்
ஓங்க தூங்கும் அப்பா
சலனமில்லாது கிடப்பார்

ரத்த உறவுகளுடனான
புணர்ச்சியில்
ஸ்லிகிதம் ஏற்பட
பிசுபிசுப்பாய்
கனவுநெடி வீசும் காலையில்.

----------------------------------------------------

No comments: