Friday, October 27, 2006

அறை வாழ்க்கை

வெளிச்சம் பார்த்தோடும்
விட்டில் பூச்சியாய்
அறைகளால்
கவரப் பட்டுருக்கிறேன்

சிறிய பெரிய
அகன்ற குறுகிய
வண்ண வண்ண
பருத்த சிறுத்த
பால் வேறுபாடுடைய
பலவகை அறைகள்

சிலந்தி வளையில்
சிக்கிய பூச்சியாய்
அறைகளில் மோதி
அறைக்கறை தாவி
மூச்சுத்திணறுகிறேன்

எத்தகை அறையாயினும்
எவ்வகை அறையாயினும்

கதவினைப் போல்
கரம் திறப்பாய்
காப்பாய் ; மீட்பாய்

நீயே அறையாகிப்
போனாய் இன்று.


சதுர உலகத்திற்குள்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
எறும்புகளை நசுக்குவதும்
ஈக்களை விரட்டுவதும்
கொசுக்களை கொல்வதும்
இப்படியாய்
பராக்கிரமங்களை
பழகிக் கொண்டிருக்கிறேன்

முட்டினால் உடையும்
எக்கினால் தெரியும்
நக்கிக் கொண்டிருக்கிறேன்



கனமாய் ; குணமாய்
கூறாய் ; வாகாய்
யுதங்களும் அடைக்கலமே

உப்பூறும் சுவரையும்
சதுர வானத்தையும்
துணையாய் கொண்டேன்

சுவர் தாண்ட முடியும்
அறை மீள முடியும்
மனம் மீற முடிந்தால்


குளிரென்றால்
கடுங் குளிரே

வெயிலென்றால்
கொடும் வெயிலே

மழையென்றால்
கன மழையே

பருவ மாற்றம்
சாத்தியம்

எளிமையும் ; கடுமையும்
அனைத்திலும் உண்டு

நடுமைதான்
நாம் விரும்புவது

வாய்ப்பதைக் கொண்டு
வாழ வழி தெரியாது
காய்ப்பதெல்லாம்
பழுக்கத்தான் வேண்டுமா?

அறை வாழ்க்கை
குறை வாழ்க்கை

அறை மீட்சி
அமைந்து விட்டால்
நிறை வாழ்க்கை நிச்சயம்

அறை வாழ்க்கை
மதியழகன் சுப்பையா
வெளிச்சம் பார்த்தோடும்
விட்டில் பூச்சியாய்
அறைகளால்
கவரப் பட்டுருக்கிறேன்

சிறிய பெரிய
அகன்ற குறுகிய
வண்ண வண்ண
பருத்த சிறுத்த
பால் வேறுபாடுடைய
பலவகை அறைகள்

சிலந்தி வளையில்
சிக்கிய பூச்சியாய்
அறைகளில் மோதி
அறைக்கறை தாவி
மூச்சுத்திணறுகிறேன்

எத்தகை அறையாயினும்
எவ்வகை அறையாயினும்

கதவினைப் போல்
கரம் திறப்பாய்
காப்பாய் ; மீட்பாய்

நீயே அறையாகிப்
போனாய் இன்று.


சதுர உலகத்திற்குள்
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்
எறும்புகளை நசுக்குவதும்
ஈக்களை விரட்டுவதும்
கொசுக்களை கொல்வதும்
இப்படியாய்
பராக்கிரமங்களை
பழகிக் கொண்டிருக்கிறேன்

முட்டினால் உடையும்
எக்கினால் தெரியும்
நக்கிக் கொண்டிருக்கிறேன்



கனமாய் ; குணமாய்
கூறாய் ; வாகாய்
யுதங்களும் அடைக்கலமே

உப்பூறும் சுவரையும்
சதுர வானத்தையும்
துணையாய் கொண்டேன்

சுவர் தாண்ட முடியும்
அறை மீள முடியும்
மனம் மீற முடிந்தால்


குளிரென்றால்
கடுங் குளிரே

வெயிலென்றால்
கொடும் வெயிலே

மழையென்றால்
கன மழையே

பருவ மாற்றம்
சாத்தியம்

எளிமையும் ; கடுமையும்
அனைத்திலும் உண்டு

நடுமைதான்
நாம் விரும்புவது

வாய்ப்பதைக் கொண்டு
வாழ வழி தெரியாது
காய்ப்பதெல்லாம்
பழுக்கத்தான் வேண்டுமா?

அறை வாழ்க்கை
குறை வாழ்க்கை

அறை மீட்சி
அமைந்து விட்டால்
நிறை வாழ்க்கை நிச்சயம்


மதியழகன் சுப்பையா

No comments: