Saturday, December 27, 2003

அவளும் மல்லிகையும்


வாங்கிச் சென்ற
மல்லிகைப் பூவை
வேண்டாம் என்ற போது

ஏன் ? என்று கேட்க வில்லை

வீசி எறிந்து
கோபப் படவில்லை

கசங்காமல் வீட்டிற்கு
எடுத்து செல்வது பற்றி
சிந்தித்திருந்தேன்

அடுத்த சந்திப்பின் போதும்
மல்லிகையுடன் வருவேன்.